ஆதிநாதர் ஒருபா ஒருபது.
பா வகை ; வெண்பா
உட்பிரிவு : இன்னிசை வெண்பா.
அயோத்தி யரச னரசர்க்கு வேந்தனாம்
நாபியின் தேவி மருதேவி மைந்தன்
அகமிந்த்ர தேவ னவதாரம் கொண்டார்
அயோத்தி நிலமே மணந்து : 1
மணந்தது மண்ணுலகு வந்தார் வானுலகோர்
வைத்தார் பெயரினை ஆதியென அன்புடனே
கூடியே நீராட்டி பாடி மகிழ்ந்தனர்
நாடியே வானுலகு சென்று 2
சென்றபின் மக்க ளழைத்தன ராதியென
பந்துக ளாடி பிறையாய் வளர்ந்தார்
கலைக ளனைத்தும் தினமும் தெளிந்தார்
இளைஞன் பருவ மடைந்து. 3
அடைந்தார் வாழ்க்கையில் தேவியர் பாங்காய்
சுனந்தையும் யஸ்யஸ் வதியு மிணைந்தனர்
கல்வியும் செல்வமும் கண்னென சேர்ந்ததால்
பொங்கியே பூத்தது வாங்கு . 4
ஆங்கவர் பெற்றோர் மணிமுடி சூட்டினர்
மன்னர்கள் வந்த வரடியை தொட்டனர்
பொன்பொருள் வைத்து பணிவில் வணங்கினர்
பூமகனை வாழ்த்தியே நின்று 5
நின்றவர் ஐங்குலம் கண்டு வழங்கினார்
இட்சவா குக்கு யரசனா யானாரே
ஆறு தொழில்க ளவனிக்குத் தந்தார்
நிறைகுண வாட்சி நிறைந்து 6
நிறைந்த சபையினில் நீலாஞ்ச னையாட
நெஞ்சமே பொங்கிட மன்னன் மகிழ்ந்திட
மங்கையி னாட்ட மிடையினில் நிற்க
கொடியென வீழ்ந்தா ளணங்கு. 7
அணங்கி னிறப்பு நிலையாமை காட்டிட
ஆதியின் நெஞ்சி லெழுந்தது ஊற்று
துறவெனும் பற்று தொடர்ந்தது நெஞ்சில்
மனமுட லேற்றத் துறவு. 8
துறவினில் தோன்றி துவங்கிய வாழ்க்கை
கைலாயம் சென்று முடிந்தது வெந்தவத்தில்
ஊணினைப் பெறவும் வீதியில் வந்தார்
மலர்ந்தது நல்திரிதி யாங்கு 9
ஆங்கவ ராயிர மாண்டுக ளத்தவத்தில்
ஆதியின் யாக்கையும் நிர்மலம் பூத்திட
தூயநல் லான்மா துறந்தது மண்ணை
அருகர் பதவியை யணைத்து 10
No comments:
Post a Comment