Dwajasthambam - துவஜஸ்தம்பம்

 

துவஜ மரம் 




 

கொடிமரம்


ஆலயக் கொடிமரம் : என்பது கோவில்களில் பலிபீடத்திற்கு அருகே அமைக்கப்பெறுகின்ற திருவிழாக்கொடி ஏற்றப்படுகின்ற மரமாகும். இதற்கு துவஜஸ்தம்பம் என்ற சமஸ்கிருதப் பெயரும் உண்டு. மரத்திலுள்ள கொடிஅமைப்பு  மூலவரை நோக்கியே அமைக்கப்படுகின்றன. இம்மரத்தில் தான் திருவிழாப் பருவத்தை கொடியேற்றி துவங்கி வைப்பார்கள். அதில் தர்ப்பை, மற்றும் துணிக்கொடியை அம்மரத்தை சுற்றியபடி மேல்நோக்கி உயர்த்தி சுற்றியிருப்பார்கள்.

 

அதாவது நமது கீழான உயிர்ச்சக்தி உணர்விலிருந்து மேலான உயிர்ச்சக்தி உணர்வு நிலைக்குச் செல்ல வேண்டும் என்ற நியதியை தெரிவிப்பதற்காக இம்மரத்தில் கொடியேற்றம் நடைபெறுகின்றன. அது பாம்பைப்போன்று சுற்றியபடி மேல்நோக்கிச் செல்லும் ஆற்றல் பெற்றது. அதாவது மூலாதாரச் சக்கரத்திலிருந்து தண்டுவடத்தை சுற்றியபடி சகஸ்ரஹார சக்கரத்திற்கு உயர்ச்சக்தி உயர்வு பெறும் யோகசாஸ்திர முறையை தெரிவிப்பதாக  இது நிறுவப்பட்டுள்ளது.. அதனால் அதனை கீழிருந்து மேல்நோக்கி வணங்கி செல்வதே முறையாக கூறப்படுகிறது.

 

தர்ப்பை கொடி

 

தர்ப்பை புல் ஒரு புனிதமான தாவரம், இது சமண மதத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது பல பூஜைகள் மற்றும் சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது.

 

அதனால் கொடிமரத்தில் தர்ப்பை புல் அல்லது தர்ப்பைக் கயிறு பயன்படுத்துவது, அந்த கொடிமரம் மற்றும் விழாவை மேலும் புனிதமாக்குகிறது.

 

தர்ப்பை கொடி, இறைவனுக்கும், பக்தர்களுக்கும் இடையே ஒரு பாலமாக பார்க்கப்படுகிறது. இது பக்தர்களின் ஆன்மீகப் பயணத்தின் ஒரு அடையாளமாக விளங்குகிறது.

 

திருவிழாக்களின் போது கொடிமரத்தில் தர்ப்பை கொடி ஏற்றுவது, அந்த விழாவின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.

 

 

துணிக் கொடி - வஸ்திரக் கொடி:

 

சமவசரணத்தை நினைவூட்டும் முகமாக நிருமானிக்கப்பட்ட சமணராயலங்களில் (ஜினாலயங்களில்) திருவிழாக்காலங்களில் துவஜமரத்தில் துணிக்கொடி, வஸ்திரக்கொடி யேற்றும் மரபு நீண்ட காலமாக உள்ளது.

 

முதலில் துணியில் செளதர்மேந்திரன் தலைக்கும் மேல் அறவாழியைச் சுமந்தபடி ஐராவத யானை  மீது அமர்ந்துள்ளது போன்ற சித்திரத்தை வரைந்து அதனை வீதியுலாவாக எழும்பச் செய்வார்கள். அதன் பின்னர் அக்கொடித்துணையை துவஜமரத்தின் மீது நல்ல நேரத்தில் ஏற்றி வைப்பது பன்னெடுங்காலமாக தொடர்ந்து நடைபெறும் சடங்காகும்.  அதன் பின்னர் உற்சவ தினங்களில் தினமும் மூலவர் அல்லது ஜினரின் உலோகப்பிரதிமை கண்ணாடி அலங்காரச் சட்டத்தினால் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடைபெறும். கடைசி நாளன்று அவரோகணமாக அந்த துணிக்கொடி இறக்கபட்டு மூலவரின் உற்சவத்தை நிறைவு செய்வது வழக்கம்.

மன்னார்குடி போன்ற சில ஜினாலயங்களில் அதன் பின் சாசன தேவியின் வீதியுலா விடையாற்றி உற்சவமாக நடைபெறும் வழக்கமும் உள்ளது.

 


No comments:

Post a Comment