Sunday, December 29, 2019

GOMMATAGIRI - கோமட்டகிரி

Bhagawan Bahubali -  பகவான் பாகுபலி





Gommatagiri:


Gps coordinates is (12.37062, 76.48741)

Bettadur, Between Mysuru and Madikeri route, at 15 take diversion for 4.5 km spot.


கோமடகிரி:

தலைக்காவிரியிலிருந்து மைசூர்சாலையில் 15 கிமீ. முன்னர் இடதுபுறச்சாலையில் திரும்பி 4.5 கிமீ. பயணித்ததும் கோமடகிரி குன்றின் மீதுள்ள பகவான் பாகுபலியை, நிரந்தர அபிஷேக சாரக்கட்டமைப்பிற்கு முன் கண்டோம்.


அத்தலம் சென்றபோது மிகவும் அமைதி, எங்கும் சந்தடியே இல்லாத காலை 11 மணி. சிறிய குன்றின்மீது நல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது. சற்றொப்ப 70 படிகள் உயர்ந்ததும், உயரத்தோற்றத்துடன் நின்ற பகவான் பாகுபலியின் திவ்ய தரிசனம் கிட்டியது.


ஸ்ரவணபெலகொலா, வேனூர், கார்காளா, தர்மஸ்தலா போன்று குன்றின் மீது தியானக் கோலத்தில் தனித்து நின்று கொண்டிருக்கும் பாகுபலியை கோமடகிரியிலும் கண்டபோது கைகள் இரண்டும்  தாமாகவே கூப்பி வணங்கத்துவங்கின.  


அதே  உருட்டையான கம்பீர சரீரம், புற்றிலிருந்து வெளியேறிய பாம்புக்களுக்கிடையே நிற்கும் கால்கள், மாதவிக்கொடிகள் படர்ந்த புஜங்கள், அமைதி தவழும் முகம், மன்மதனும் மயங்கும் அழகுத் தோற்றம், வசீகரிக்கும் பாகுபலியை இங்கு வணங்கினாலும் நம்மை நாம் மறப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. மிகச் சிறியோனாகிய நாம் அந்த பிரம்மாண்டத்தைக் கண்டு வணங்குவதைத்தவிர வேறென்ன செய்ய முடியும்.


சற்று நேரம் அவருக்கெதிரே நின்று கண்களை மூடி தியானம் (என்று ஏதோ) செய்து விட்டு கீழே இறங்கும் போது, வலது புறம் சம்மேதகிரி பாத கூடங்களும், இடது புறம் சமவசரணக் கோவிலும் தென்பட்டன. எதிரில் பிரம்மஸ்தம்பமும், சாலையைக்கடந்து தங்குமிடமும் தென்பட்டன. (அங்கும் யாருமே இல்லை. ஸ்தலத்திற்கு கூட்டத்துடன் செல்லவும்…)



----------------------------------


















In Karnataka, Shravanabelagola is one of the most famous Jain sacred centres. However, there are many Jain religious places which have an interesting history. Gommatagiri in Mysore is one of the Jain religious places in Karnataka known for its history.
We visited this temple on the way from Madikeri to Mysore.
Temple is situated nearly 25 kms from Mysuru. On the national highway it is situated at 4.5 kms distance inside.

Gommatagiri is famous for the statue of Bahubali (Gommateshwara) which is located on a hillock named 'Shravana Gudda'. This 700-year-old granite statue of Gommateshwara belongs to the early Vijayanagara style of architecture.

The Gommateshwara looks similar to the statue in Shravanabelagola. However, this figure of Gommatagiri is much smaller in size when compared to the other. Therefore, Gommatagiri serves as one of the prominent Jain religious places in Karnataka.

The annual Mahamastakabhishekha is also celebrated at Gommatagiri. A structure will be fixed behind the statue where priests will stand and perform the Abhishekha (holy bath) to the idol. Although, it is not as famous as the Shravanabelagola's Mahamastakabhisheka which happens every 12 years. This is one of the big events at Gommatagiri and many people around the state come here to witness this festival. You can see many Jain pilgrims coming here to seek the blessings from Bahubali.



















Actually, there are a few similarities between Gommatagiri and Shravanabelagola. One has to climb a hillock at Shravanabelagola and here also the visitors have to climb up to visit the temple.


The granite statue of Bahubali looks similar to Gommateshwara at Shravanabelagola. However, this statue is small, yet splendid. Unfortunately, this heritage is threatened due to lack of preservation and illegal land activities happening in the area.


Tourists have to climb several stairs to reach the summit. A footprint of Bahubali can be seen up the hill before the temple. As you climb, the statue of Gommateshwara becomes clearer to the vision. He is in the standing posture and emanates a rustic charm. Except for the time of the festival, this place is really calm and peaceful. So, you can enjoy a heritage surrounded by greenery and spend a quality time at this hill.


A Model of Sammed shigari also built with 24+ Tonks with Jinar and saints footprints on scattered granite rocks made the surrounding more sacred divinity. Apart from a Samavasaran miniature structure also constructed here.


Gommatagiri is around 15km from Mysore city. It is situated in a place called Bilikere Hobli at Hunsur Taluk. It is better to go in private vehicle from Mysore




















கர்நாடகாவில் சுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்ட பல சமண மத ஸ்தலங்களும் உள்ளன. மைசூரில் உள்ள கோமதகிரி(கோமடகிரி) கர்நாடகாவின் சமண புனித ஸ்தலங்களில் ஒன்றாகும்.


கோமதகிரி மைசூர் நகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது. 'ஷ்ரவணா குடா' என்ற குன்றின் மீது அமைந்துள்ள பாகுபலி (கோமதேஸ்வரா) சிலை மிகவும் பிரபலமானது. 700 ஆண்டுகள் பழமையான இந்த கோமடேஸ்வராவின் கிரானைட் சிலை ஆரம்பகால விஜயநகர பாணி கட்டிடக்கலைக்கு சான்றாக உள்ளது.


கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இப்பகுதியில் நிறைய ஜைனக் குடும்பங்கள் வாழ்ந்துள்ள தாக தெரிகிறது. சென்ற நூற்றாண்டில் (1948 ல்) தான் இந்த குன்றில் மீது பல செடிகளுக்கும், முட்புதர்களுக்குமிடையே கோமதீஸ்வரரின் அழகான உருவம் தரிசனத்திற்கு கிட்டியுள்ளது.


16 அடி உயரமுள்ள ஸ்ரீ கோமதீஸ்வரர், ஒற்றைப் சிலைக்கு புகழ் பெற்றது. இந்த கிரானைட் சிலை ஸ்ரவணபெலகோலாவில் உள்ள கோமட்ட சாமுண்டராயன் வடித்த சிலைக்கு ஒத்ததாக காட்டியளிக்கிறது. இருப்பினும், இந்த கோமதகிரி பாகுபலி சிலை மற்றவற்றுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியதாக இருக்கிறது.


சிலையின் இருபுறமும் புற்றுக்களிலிருந்து வெளிவந்த பாம்புகள் மிகவும் கவர்ச்சிகரமானவை மற்றும் மாதவிக்கொடிகள் தோள்கள் வரை படந்திருப்பது தனித்துவமானவை. இங்கு காணப்படும் கோமதீஸ்வர சிலையின் தொன்மையைப் பற்றிய விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், செங்கல்வராயன் மற்றும் கொங்கல்வராயன் காலத்தில் இந்த புனித ஸ்தலம் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.


பாஹுபலியின் கிரானைட் சிலை ஸ்ரவனபெலகோலாவில் உள்ள 58 அடியுயர கோமதேஸ்வராவைப் போலவே, 16(/18) அடியுயர இந்த சிலை சிறியதானாலும் அற்புதமானது. துரதிர்ஷ்டவசமாக, இந்த பாரம்பரியம் பாதுகாப்பின்மை மற்றும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாக அச்சுறுத்தலில் உள்ளதாக தெரிகிறது.


உச்சிமுகட்டை அடைய சுற்றுலா பயணிகள் 72 படிக்கட்டுகளில் ஏற வேண்டும். பாஹுபலியின் பாதம் கோயிலுக்கு முன்னால் மலையின் மேலே காணப்படுகிறது. அவர் நிற்கும் தோரணையில் நின்று ஒரு பழமையான கவர்ச்சியை வெளிப்படுத்துகிறார். திருவிழாவின் நேரத்தைத் தவிர, மற்ற வேளையில் இந்த இடம் உண்மையில் அமைதியாக இருக்கிறது. எனவே, நீங்கள் பசுமையால் சூழப்பட்ட ஒரு பாரம்பரியத்தை அனுபவிக்க முடிகிறது. ஆம் இந்த மலையில் தனிமையில் ஒரு ரம்மியமான நேரத்தை செலவிடலாம்.




















அதன் அடிவாரத்தில் இடதுபுறம் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களின் பாதகூடங்கள் சம்மேத கிரியை நினைவுகூறுவது போன்றளவில் மாதிரி வடிவம் ஒன்றை இயற்கையாய் இறைந்துள்ள பாறைகளில் அமைத்துள்ளனர். இது மேலும் கூடுதல் அழகை தருகிறது. அந்த டோங்குகளில் உள்ள பாதங்களை ஏற்ற இறக்கத்தில் நடந்து சென்று தரிசிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது பெரும் பாக்கியமே.


அருகில் பாவாபுரி ஜலமந்திர் போன்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். மேலும் வலதுபுறம் சமவசரணக் கோவில் ஒன்றும் உருவாக்கியுள்ளனர். அந்த கோமதீஸ்வரர் சிலைக்குன்றிற்கு எதிரில் ஒரு பிரம்ம ஸ்தமபமும் 20 அடியுயரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.


முதல் மஹாமஸ்தாபிஷேகம் 1950 ம் ஆண்டு நடைபெற்றுள்ளது. சென்ற ஆண்டு இச்சிலைக்கு வழமைபோல் மஹாமஸ்தாபிஷேகம் நிறைவேறியுள்ளதை செய்திகள் மூலம் அறிந்திருக்கலாம். இந்த கோமதகிரியைப் பொருத்த மட்டில் இது ஒரு பெரிய நிகழ்வாகும், இந்த விழாவைக் காண பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் பலர் இங்கு வந்து குவிகிறார்கள். பாகுபலியிடமிருந்து அருளைப் பெற்று மனநிறைவுடன் செல்கிறார்கள்.


இங்குள்ள யாத்ரி நிவாஸ் சரியாக பராமரிப்பில் இல்லாததால், அருகில் 23 கிமீ. தொலைவிலுள்ள மைசூரில் தங்கிச் சென்று தரிசனம் செய்யலாம்.