Tuesday, December 30, 2014

ARANIPALAIYAM - ஆரணிப்பாளையம்


Shri ADHINATHAR  JAIN TEMPLE  --  ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம்



Location:

lies on the map in the coordination of (12.67917, 79.2945)ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click ARANIPALAIYAM
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  ஆரணிப்பாளையம் கிளிக் செய்யவும் (தமிழ்நாடு / கேரளா )



ROUTE:-



Tindivanam → Vandavasi → Arni → Aranipalaiyam = 78 kms.



Kanchipuram → Arcot → Arani → Aranipalaiyam = 72 kms.



Vellore  → Arni → Aranipalaiyam = 31 kms.



Villupuram → Gingee → Chetpet → Arni → Aranipalaiyam = 93 kms.



Tiruvannamalai  → Polur → Arni → Aranipalaiyam = 60 kms.


Vandavasi → Arni → Aranipalaiyam = 44 kms.



செல்வழி:-



திண்டிவனம் → வந்தவாசி  → ஆரணி → ஆரணிப்பாளையம் = 78 கி.மீ.



காஞ்சிபுரம் → ஆற்காடு → ஆரணி → ஆரணிப்பாளையம் = 72 கி.மீ.



வேலூர் → ஆரணி → ஆரணிப்பாளையம் = 31 கி.மீ.



விழுப்புரம் → செஞ்சி →  சேத்பட் → ஆரணி → ஆரணிப்பாளையம் = 93 கி.மீ.



திருவண்ணாமலை  → போளுர் →  ஆரணி → ஆரணிப்பாளையம் = 60 கி.மீ.


வந்தவாசி → ஆரணி → ஆரணிப்பாளையம் = 44 கி.மீ.




 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



Aranipalaiyam is a part area of Arani town. There is an ancient temple in the Dharmaraja Street but the huge one is in degenerated and depreciated condition. So the natives had been decided to construct a new Jinalaya in less maintenance in the same lane. But it has all essential aspects of Jain temples.

Inside the sanctum Shri Adhinathar, rectangular granite plate carving with all features of Jinar, was established on a plinth. The fine polished statue has a beautiful viman on the top. The viman has four thirthankars, in the sitting posture, seated on each direction and also shikhara with kalash on the peak. ....


ஆரணி நகரின் பாளையம் என்ற பகுதியில் தர்மராஜா தெருவில் ஒரு பழமையான ஜிநாலயம் உள்ளது. அவ்வாலயம் பல ஆண்டுளாய் தேய்ந்தும்சிதிலமடைந்த நிலையில் இருந்ததால் அங்குள்ள சமண குடும்பத்தினர்கள்கச்சிதமான அளவில் அனைத்து அம்சங்களுடன்,  புதிய ஜிநாலயம் ஒன்றை அதே தெருவில் கட்டியுள்ளனர்.

அதன் கருவறையில் ஸ்ரீஆதிநாதரின் நீள்சதுர கருங்கல்லில் சமவ சரண ஜிநரின் எட்டு அம்சங்களுடன் செதுக்கப்பட்டு மெருகேற்றப்பட்ட சிலை வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது. அதன் மேற்புறம் அழகான சிறிய விமானம் நான்கு திசைகளிலும் தீர்த்தங்கரர் சிலைகளுடன் சிகர கலசங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. ...



Next to sanctum, metal idols of Thirthankars, Yaksha, Yakshi are arranged on a platform along the passage. In the front porch have two curved box structure with Shri Brahmadevar and Shri Kooshmandini, stone idols are established. The whole block is secured tightly by iron grills.

And a separate shrine was constructed for Shri Padmavathy in the open corridor. An altar is also in the corridor. North entranceway was attached with alround wall.
The compact and nice Jinalaya was well maintained and all the Jain poojas and rituals are conducted in the appropriate times. 


Contact No. Shri Nagaraj  -  +91 9442424001

=========

கருவறைக்கு அடுத்துள்ள வழிநடையில் உள்ள மேடையில் உலோகச் சிலைகளான தீர்த்தங்கரர்கள், யக்ஷ, யக்ஷிகள் அனைத்தும் அமர்த்தப்பட்டுள்ளனர். முன் மண்டபத்தில் இரு வளைவு மாடங்கள் அமைத்து அதனுள் ஸ்ரீபிரம்மதேவர் மற்றும் ஸ்ரீதர்மதேவியின் கற்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.  அவை அனைத்தும் இரும்புக் கதவுகளுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆலய திருச்சுற்றில் ஸ்ரீபத்மாவதி அம்மன் சன்னதி ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. பலிபீடத்துடன் உள்ள திருச்சுற்று வடதிசை நோக்கிய நுழைவு வாயிலும் சுற்றுச் சுவருடன் பாதுகாக்கப்பட்டுள்ளது.

அவ்வழகிய ஜிநாலயத்தில் சமணர்களின் அனைத்து பூஜைகளும், விழாக்களும் அந்தந்த வேளைகளில் நடைபெற்று வருகிறது. 

தொடர்புக்கு: ஸ்ரீநாகராஜ் - +91 9442424001

Monday, December 29, 2014

PUDHUKAMUR - புதுகாமூர்


Shri MAHAVEERAR  JAIN TEMPLE -  ஸ்ரீ மஹாவீரர்  ஜிநாலயம்



Location:

lies on the map in the coordination of (12.68118, 79.29116)ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click PUDHUKAMUR
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  புதுக்காமூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


ROUTE:-

Tindivanam → Vandavasi → Arni → Pudukamur = 78 kms.

Kanchipuram → Arcot → Arani → Pudukamur = 72 kms.

Vellore  → Arni → Pudukamur = 31 kms.

Villupuram → Gingee → Chetpet → Arni → Pudukamur = 93 kms.

Tiruvannamalai  → Polur → Arni → Pudukamur = 60 kms.


Vandavasi → Arni → Pudukamur = 44 kms.



செல்வழி:-

திண்டிவனம் → வந்தவாசி  → ஆரணி → புதுக்காமூர் = 78 கி.மீ.

காஞ்சிபுரம் → ஆற்காடு → ஆரணி → புதுக்காமூர் = 72 கி.மீ.

வேலூர் → ஆரணி → புதுக்காமூர் = 31 கி.மீ.

விழுப்புரம் → செஞ்சி →  சேத்பட் → ஆரணி → புதுக்காமூர் = 93 கி.மீ.

திருவண்ணாமலை  → போளுர் → ஆரணி → புதுக்காமூர் = 60 கி.மீ.

வந்தவாசி → ஆரணி → புதுக்காமூர் = 44 கி.மீ.







 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!





A Jinalaya was dedicated to Shri Mahaveerar by the native jains of surrounding at Pudhkamur, a locality in Arani town. It resembles like a north-india Jains’ temple. (esp. as Madhya Pradesh temple) Two octagon shaped structures are unified by line walls and a staircase. One chamber is used as prayer pavilion and another has two tiers of Garbagrihas. The bottom one has Shri Mahaveerar statue and top one has Shri Santhinatha Jinar statue is closed upon by prism shaped Viman and a Kalash on the peak. North facing entrance gate was enclosed by alround wall structure. One side of the open corridor has garden with plants.

The Mahaveerar statue is made of black marble stone of absolute carving in the meditating (sitting) posture. The beautiful polished idol was established on a plinch, is also associated with metal idols of some important Thirthankars, Siddha model, Nandheeswara dheepa model, Navadevatha, Panchaparameshti.

On the top chamber has Shri Santhinathar, white marble stone of absolute carving in standing posture, is on a platform.

All poojas and rituals are conducted as per Jain customs and procedures.  We should have a visit while we are travelling on the enroute. 


ஆரணி நகரின் ஒரு பகுதியான புதுக்காமூரில் வசிக்கும் சமண இல்லறத்தார்கள் ஸ்ரீமகாவீரருக்காக ஒரு ஜிநாலயத்தை கட்டி அர்ப்பணித்துள்ளனர்.  வட இந்திய ஜிநாலய கலையம்சத்துடன் (மத்திய பிரதேச ஜிநாலய வடிவம் போல்) கட்டப்பட்டுள்ளது.  எண்கோண வடிவ இரு கட்டமைப்புகளை ஒன்றாக இணைத்து அதன் நடுப்பகுதியில்  மாடிப்படிகள் அமைத்துள்ளனர். முன்  பகுதியை வழிபாட்டு மண்டபமாகவும், பின் பகுதியை இரண்டு தள கருப்பக்கிருஹங்களாகவும்  பாவிக்கப்பட்டுள்ளது.  கீழ் தளம் ஸ்ரீமகாவீரருக்காகவும், மேல் தளம் ஸ்ரீசாந்திநாதருக்காவும் அமைத்து அவற்றின் மீது கூம்பு பட்டை வடிவ விமானமும், அதன் உச்சியில் கலசமும் வைக்கப் பட்டுள்ளது.  வடக்கு நோக்கிய வாசலுடன் ஆலய சுற்றுச் சுவர்கள் இணைக்கப்பட்டுள்ளது.  ஆலய திருச்சுற்றின் மேற்கு பகுதியில் நந்தவனமும் உள்ளது.

அடித்தள கருப்பக் கிருஹத்தில் ஸ்ரீமகாவீரரின் சிலை, அமர்ந்த தியான நிலையில், கருமை நிற பளிங்கு கல்லால் முழுவடிவ சிற்பமாக செதுக்கப் பட்டு வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் உலோகச் சிலைகளான முக்கிய தீர்த்தங்கரர் வடிவங்களும், நவதேவதை, பஞ்சபரமேட்டிகள், சித்த பகவான், நந்தீஸ்வர தீப மாதிரி வடிவம் போன்றவைகளும் அலங்கரிக்கின்றன. 

மேல்தள கருப்பக் கிருஹத்தில் ஸ்ரீசாந்திநாதர், நின்ற நிலையில், வெண் பளிங்கு கல்லால்  முழுவடிவ சிற்பமாக செதுக்கப்பட்டு  மேடையில் நிறுவப்பட்டுள்ளார்.

இவ்வாலயத்திலும் மற்ற ஜிநாலயங்களில் நடைபெறும் அனைத்து பூஜைகளும், பண்டிகைகளும் சமண ஆகம விதிமுறைப்படி அந்தந்த பருவத்தில் நடைபெறுகிறது.



Sunday, December 28, 2014

ANANTHAPURAM (ARNI) - அனந்தபுரம் (ஆரணி)


Shri ANANTHANATHAR  JAIN TEMPLE -  ஸ்ரீஅனந்தநாதர் ஜிநாலயம்




Location:


lies on the map in the coordination of 12.66649, 79.27131ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click SAIDAPET
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  சைதாப்பேட்டை கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )



ROUTE:-

Tindivanam → Vandavasi → Arni → Ananthapuram (saidapet) = 78 kms.

Kanchipuram → Arcot → Arani → Ananthapuram (saidapet) = 72 kms.

Vellore  → Arni → Ananthapuram (saidapet) = 31 kms.

Villupuram → Gingee → Chetpet → Arni → Ananthapuram (saidapet) = 93 kms.

Tiruvannamalai  → Polur → Arni → Ananthapuram (saidapet) = 60 kms.

Vandavasi → Arni → Ananthapuram (saidapet) = 44 kms.

செல்வழி:-

திண்டிவனம் → வந்தவாசி  → ஆரணி → அனந்தபுரம் (சைதாப்பேட்டை) = 78 கி.மீ.

காஞ்சிபுரம் → ஆற்காடு → ஆரணி → அனந்தபுரம் (சைதாப்பேட்டை) = 72 கி.மீ.

வேலூர் → ஆரணி → அனந்தபுரம் (சைதாப்பேட்டை) = 31 கி.மீ.

விழுப்புரம் → செஞ்சி →  சேத்பட் → ஆரணி → அனந்தபுரம் (சைதாப்பேட்டை) = 93 கி.மீ.

திருவண்ணாமலை  → போளுர் →  ஆரணி → அனந்தபுரம் (சைதாப்பேட்டை) = 60 கி.மீ.

வந்தவாசி → ஆரணி → அனந்தபுரம் (சைதாப்பேட்டை) = 44 கி.மீ.




 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ அனந்த தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து சிம்மசேன மஹாராஜாவிற்கும், ஜயஸ்யாமா மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 50 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 30 லக்ஷம் வருடம் ஆயுள் உடையவரும், வல்லூகம் (கரடி) லாஞ்சனத்தை உடையவரும், பாதாள யக்ஷ்ன், அனந்தமதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் ஜெயராதி முதலிய 50  கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் சைத்ர அமாவாசை  திதியில் 96 கோடா கோடி 70 லட்சத்து 70 ஆயிரத்து 700 முனிவர்களுடன் ஸ்வயம்பிரப கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீஅனந்த தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!




Ananthapuram is a part of Arni town near saidapet locality. An old Jinalaya, unpredictable age, was dedicated to Shri Anandhanatha Jinar and maintained by the native descendants of Jains. The locality also called in the name of the Moolavar. Regular repair and renovations might conceal the antiques of the temple. 

It got Gharbahriha, Arthamandap and other aspects of Dravidian temple art design. North facing Jinalayas’ entranceway is attached with the alround compound wall and also an altar placed in front of the vedi-block alongside of the open corridor.

A black granite stone, totally etched, statue was installed on the plinch. The pedestal, Prabha back-circle are also incised along with the stone. It has a lid with two tiers Viman having four Jinar idols in each stages. Next to the gharbahriha, the chamber has metal idol of important pantheons placed on either side platforms. .....

ஆரணியில் அமைந்துள்ள சைதாப்பேட்டை பகுதிக்கு அருகில் அனந்தபுரம் என்ற இடத்தில் ஸ்ரீஅனந்தநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஸ்ரீஜிநாலயம் ஒன்று உள்ளது. அவ்வாலயம் அங்குள்ள சமண வழிக் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.  பல சீரமைப்புகளைக் கண்டதால் அவ்வாலயத்தின் தொன்மைக்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளது. 

வடதிசை நோக்கிய அவ்வாலயத்தின் நுழைவு வாயிலுடன் அதன் சுற்றுச் சுவர்கள் இணைக்கப்பட்டுள்ளன.  மேலும் திராவிட பாரம்பரிய கலைஅம்சங்களான கருப்பக் கிருஹம்,  அர்த்தமண்டபம், திறந்த திருச்சுற்று, பலிபீடம்  போன்றவற்றுடன் விளங்குகிறது. 

ஜிநாலய கர்ப்பக்கிருஹ வேதிகையில் ஸ்ரீஅனந்த நாதரின் முழுஉருவ கருங்கற் சிலை பீடம், பிரபை வட்டத்துடன் செதுக்கப்பட்டு ஆகம விதிப்படி நிறுவப்பட்டுள்ளது. அதன் மேற்புறம் துவிதள விமானத்துடன், ஒவ்வொரு தளத்தின் நாற்திசையிலும் தீர்த்தங்கரர் சிலைகளும், சிகர கலசங்களுடன் அமைக்கப் பட்டுள்ளன. கர்ப்பக்கிருஹத்தின் அடுத்த பகுதியில் இருபுறமும் உள்ள மேடைகளில் ஆலய தெய்வங்களின் முக்கிய உலோகச் சிலைகளை அமர்த்தியுள்ளனர். ....


The prayer pavilion has a platform at the center for placing daily pooja idols as usual. On either side platform consists of stone carved statues of Old Moolavar, Shri Anandhanathar, Shri Brahmadevar were established. Another platform has Shri Kooshmandini, Shri Padmavathy, Shri Jwalamalini are installed. A beautiful cement mortar statue of Shri Padmavathy also placed as separate shrine.

The old Moolavar might be 600 years old sculpture art. It has samavasaran Jinars' eight aspects in its carving. Also some portions are defacing due to depreciation. Now painting work is going on vigorously. 


All Jain poojas and rituals are conducted and festivals are celebrated regularly. Have a visit when we are travelling on the enroute. 

Contact No. Shri Nagaraj +91 9442424001

-------------


வழிபாட்டு மண்டபத்தின் நடுவில் தின பூஜைக்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது.  அதன் இருமருங்கிலும் உள்ள மேடைகளில் பழைய மூலவரான ஸ்ரீஅனந்தநாதர் சிலையும், ஸ்ரீபிரம்மதேவர் சிலையும் அமர்த்தப் பட்டுள்ளன. மேலும் தனி மேடையில் ஸ்ரீதர்மதேவி, ஸ்ரீபத்மாவதி தேவி, ஸ்ரீஜ்வாலாமாலினி தேவி யர்களின் கற்சிலைகள் அலங்கரிக்கின்றன.  மேலும் ஸ்ரீபத்மாவதி தேவியின் சுதைச் சிற்பம் தனி சன்னதியாக நிறுவப்பட்டுள்ளது. 

பழைய மூலவர் சிலை மிகவும் தொன்மையானதாகும். அதன் கலையம்சங்கள் 600 ஆண்டுகளை கடந்துள்ளதாக தெரிகிறது. மேலும் அதன் சில பகுதிகள்  தேய்வடைந்தும் காணப்படுகிறது. தற்போது ஆலயத்தில் வண்ணப்பூச்சு வேலை நடைபெற்று வருகிறது.


அனைத்து சமணர் ஆலயங்களிலும் நடைபெறும் தினபூஜை, காலாண்டிற் கொருமுறை வரும் பூஜைகள், ஆண்டிற்கொரு முறை வரும் விசேஷங்கள், சடங்குகள் அனைத்தும் வளமைபோல் இந்த ஜிநாலயத்திலும் நடைபெறுகிறது. ஆரணிக்கு அருகில் செல்லும் அன்பர்கள் அனைவரும் அவ்வாலயத்திற்கும் சென்று தரிசித்தால் நலமுண்டாகும்.

தொடர்புக்கு: ஸ்ரீநாகராஜ் - +91 9442424001