Tuesday, March 24, 2015

TINDIVANAM - திண்டிவனம்


Shri PARSHWANATHAR  JAIN TEMPLE  -   பார்ஸ்வநாதர்  ஜிநாலயம்


Location:

lies on the Google map in the coordination of (12.2341, 79.64845) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click  TINDIVANAM
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : திண்டிவனம் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )




ROUTE:-

Tamharam →Tindivanam  = 100 kms.

Vandavasi → Tindivanam= 37 kms.

Villupuram → Tindivanam  = 39 kms.


Tiruvannamalai  → Gingee → Tindivanam  = 67 kms.



செல்வழி:-

தாம்பரம் →திண்டிவனம் = 100 கி.மீ.

விழுப்புரம் → திண்டிவனம் = 39 கி.மீ.

திருவண்ணாமலை  → செஞ்சி →  திண்டிவனம் = 67 கி.மீ.

வந்தவாசி → திண்டிவனம்  = 37 கி.மீ. 






 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 

ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காசி நாட்டு வாரணாசி நகரத்து உக்ர வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும், பிராமி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், கரும் பச்சை வண்ணரும் 9 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 100 வருடம் ஆயுள் உடையவரும், ஸர்ப லாஞ்சனத்தை உடையவரும், தரணேந்திர யக்ஷ்ன், பத்மாவதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 18 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஸ்ராவண சுக்ல சப்தமி திதியில் 82 கோடி 84 லட்சத்து 41 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஸ்வர்ண பத்ர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீபார்ஸ்வ  தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!







திண்டிவனம் அழகிய ஜிநாலயம் உள்ள நகரம் ஆகும். மேலும் பல சமண ஜிநாலயங்கள், மற்றும் வாழ்விடங்கள் உள்ள பிரதேசத்தின் கிழக்கு வாயிலாகவும் உள்ளது. அத்தலை வாசலில் பன்நெடுங்காலமாக சமணர்கள் வாழ்ந்து வருகின்றனர். அதனால் முற் காலத்தில் பழைய ஜிநாலயம் ஒன்று இருந்துள்ளது. அதற்கு அத்தாட்சியாக சென்னை அருங்காட்சியகத்தில் கி.பி. 12, 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீஆதிநாதர் மற்றும் ஸ்ரீபத்மப்பிரப ஜிநர்களின் உலோகச் சிலைகள் உள்ளன.  இருப்பினும் சென்ற நூற்றாண்டில் கட்டப்பட்ட நூதன ஜிநாலயம் ஒன்று ஸ்ரீபார்ஸ்வ ஜிநருக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. தென் தமிழக ஜிநாலயங்களில் உள்ளதைப் போன்று கருவறை, வழிபாட்டு மண்டபம், கூரையிடப்பட்ட திருச்சுற்று, முன்னர் மனத்தூய்மைக் கம்பம், பலி பீடம் ஆகிய அம்சங்களுடன் விளங்குகிறது.


மூலவர் ஸ்ரீபார்ஸ்வ நாதரின் வெண்பளிங்குச் சிலை சிரசின் மேல் ஒன்பது தலை நாகம் ஒன்று படம் விரித்த நிலையில், தியானக் கோலத்தில் அமர்ந்த நிலையில் வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது. அவருக்கு தனியாக அழகிய விமானம் ஒன்றும் அதன் இருபுறமும் அழகிய சாமரை தாரிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவரருகே வெண்பளிங்குக் கல்லால் முழுவதுமாக செதுக்கப்பட்ட ஸ்ரீசந்திரப்பிரப ஜிநரின் சிலையும் அமர்த்தப்பட்டுள்ளது.

Tindivanam is a town which has a beautiful Jinalaya. And also it is the east gateway of major Jinalayas and Jain hamlets region in Tamil nadu. Since many centuries more jains has been living here. There is a Jain temple in ancient time. In the Chennai Museum a twelth Century metal idol Shri Adinathar and a fifteenth century idol Shri Padmapraba Jinar are exhibit, which prove the existence of temple in yesteryears at this town. By the by a new Jain temple was constructed and dedicated to Shri Parshwanathar in the last Century. It has features of sanctum sanctorum, prayer pavilion, corridor, Manasthamp pillar and an altar, like other temples in Tamil zone.

   Moolavar Shri parshwanathar, white marble stone made, absolute carving with nine headed dilated snake canopy and meditative sitting posture was installed upon a plinth. A beautiful Viman supported by four columns with kalash on top and two whisk maids on both sides. Shri Chandrapraba nathar white marble absolute carving in sitting posture also seated at front.




மூலவருக்கு வலது புறம் ஸ்ரீதரணேந்திர யக்ஷனும் இடது புறம் ஸ்ரீபத்மாவதி யக்ஷனும் தலை மீது ஜந்து தலை நாகத்துடன் வெண்பளிங்கு கல்லால் செய்யப்பட்ட அழகிய சிலைகளை நிறுவியுள்ளனர். மற்றும் தின பூஜைக்கான சிலைகளும் முக்கிய வழிபாட்டிற்கு உரிய ஜினபிம்பங்களும், மற்றும் யக்ஷ, யக்ஷியர்களும் அப்பகுதி மேடையை அலங்கரிக்கின்றன. அனைத்தும் இரும்புக் கதவுகள் இட்டு பாதுகாக்கப் படுகின்றன. அடுத்த பகுதியான வழிபாட்டு மண்டப பகுதியில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. அதனைச் சுற்றி மேற்தளத்துடன் உள்ள திருச்சுற்றின் தென்கிழக்கு மூலையில் பத்மாவதிக்கான தனிசன்னதி யொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. வடமேற்கு மூலையில் க்ஷேத்ரபாலகருக்கான சன்னதியும் உள்ளது. ஆலத்தின் முன் உள்ள செங்கல், சிமெண்டினால் கட்டப்பட்ட உயர மனத்தூய்மைக் கம்பத்தின் கீழ்ப் பகுதியில் நான்கு திசையில் பளிங்கு கல்லால் ஆன ஜிநர்களின் சிலைகள் அமர்ந்த நிலையிலும், மேற் பகுதியிலும் நான்கு திசையில் சுதையினால் ஆன ஜிநர்களின் சிலைகள் அமர்ந்த நிலையில் அழகிய விமானத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக சிறிய மேடையில் பலிபீடமும் உள்ளது.

அனைத்து ஜிநாலயங்களில் நடைபெறும் தினபூஜைகள், விசேஷகால பூஜைகள், பண்டிகை கால வழிபாடுகள் அனைத்தும் செவ்வனே அந்நகர மக்களால் சிறப்பாக நடக்கிறது. அவ்வழியே செல்லும் அன்பர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஸ்தலமாகும்.

அருகில்  தர்மசாலை ஒன்றும் முற்காலத்திலிருந்து சிறப்பாக செயல்படுகிறது. அதில் ஸ்ரீசந்திரப்பிரபர் கருங்கல் சிலை ஒன்று கற்பலகையில் மூன்று அடிக்கு குறையாமல் சமவசரண ஜிநரின் சிறப்பு அம்சங்கள் அடங்கிய சிற்பங்களுடன் அழகாக வடிக்கப்பட்டுள்ளது. அது 300 ஆண்டுகளுக்கு முன் உள்ள கலை நயத்துடன் வடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: B. அபராஜிதன் அருச்சகர்  -  +919842012766



On right and left sides of the sanctum plinth Shri Dharanendra Yaksha and Shri Padmavathy madha were established with five headed snake canopy. Some important Jinars idols and other Yakshas, Yakshies for daily and special pooja purposes also exhibits on platforms in the chamber. All are secured well by iron gates. Next the prayer hall got beautiful spiritual paintings were drawn on both side walls. In the top-closed corridor, at northwest has a separate shrine of Shri Padmavathy Devi, granite idol on a podium and north east corner Shri Kshetrabalagar shrine also constructed for worship. Two Dwarabalagar stone statues erect on podiums were on both side of vedi block entrance. The Manasthamp pillar got four Marble made Jinars at the bottom and a mini viman on the top has cement mortar idols of four Jinars inside it. An altar on a small podium lies at front.

All poojas, rituals and festivals are conducted and celebrated recurrently at the relevant times. A definite visit by the passersby might safeguard the treasure for future.

There is a choultry also in the town opposite to the temple. In the rest house a shrine room also contructed and dedicate to Shri Chandraprbha nathar, 300 years old legend, granite plate carving with samavasaran Jinar’s eight features gravens.

Contact No. B. Abarajithan Upathiyayar - +919842012766






தர்மசாலை    ஸ்ரீசந்திரபிரப நாதர்

Sunday, March 22, 2015

ANANDAMANGALAM - அனந்தமங்கலம்


Anandhamangalam Rock  Relief Temple  -  அனந்தமங்கலம் பாறை சிற்பக்கோவில் 




Location:

lies on the Google map in the coordination of (12.32445, 79.66669) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click  ANANDAMANGALAM
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் 
(தமிழ்நாடு / கேரளா )


ROUTE:-

Tindivanam → Chennai road → Bye pass turn → Orathi road → Anandamangalam = 15 kms.

Gingee → (Vandavasi road)-Bye pass turn → Orathi road → Anandamangalam = 53 kms.

Vandavasi → Tindivanam road →  Kodiyam turn → Vairapuram → Anandamangalam = 38 kms.

Tiruvannamalai  → Gingee → (Vandavasi road)-Bye pass turn → Orathi road → Anandamangalam = 76 kms.

chennai → (Before Tindivanam) Thozhipedu right turn → Orathi road → Tindivanam-Orathi road → Anandamangalam = 143 kms.



செல்வழி:-

திண்டிவனம் → சென்னை சாலை → பை பாஸ் சாலை → ஓரத்தி சாலை → அனந்தமங்கலம் = 15 கி.மீ.

செஞ்சி → வந்தவாசி சாலை → பை பாஸ் சாலை → ஓரத்தி சாலை → அனந்தமங்கலம் = 53 கி.மீ.

சென்னை → தொழிப்பேடு, திண்டிவனம் பை பாஸ் சாலை → ஓரத்தி சாலை → திண்டிவனம்-ஓரத்தி சாலை → அனந்தமங்கலம் = 143 கி.மீ.

திருவண்ணாமலை  → செஞ்சி → வந்தவாசி சாலை → பை பாஸ் சாலை → ஓரத்தி சாலை → அனந்தமங்கலம் = 76 கி.மீ.


வந்தவாசி  → திண்டிவனம் சாலை → கொடிலம் திருப்பம் → வைரபுரம் → அனந்தமங்கலம் = 38 கி.மீ.






யேமீசம் ப்ரதிகால பவ்ய ஜநதா
திருஷ்ட்வா மரேந்த்ரைர் முதா
கல்யாணே வ்ர­பாதயோ ஜினவரான்
சம்பூஜிதா ஸ்தாநிஹ
த்ரைலோக்யாதிபதி ந்யஜா ம்யதிசயோ
மேதான் சதுர்விமசதிம்
சாந்த்யர்த்தம் ஜகதாம் சராசரகுரும்
திர்த்தங்கரான் சாம்ப்ரதம்.
----

   நிலவுல கெழுந்த  நீதியினை அளித்த  
  அலகில் பெருங்குணத்து ஆதிஇடபன்  
  விஜயவீரன் அஜித பட்டாரகன்  
  அம்பவழ மேனிச் சம்பவநாதன்  
  அரத்தகு சேவடி அபிநந்தநனும்  
  உரைத்தகு மேனி உத்தமசரீரன்  
  தொலையா வாய்மைச் சுமதி பட்டாரகன்  
  பரம மூர்த்தி பத்மபிரபனும்  
  ஏர்பெறு காட்சி சுபாரீசநாதன்  
  சந்திரவீறொளி சந்திரபிரபன்  
  புரையறு தவத்துப் புஷ்பதந்தன்  
  சிங்கம்ஏந்து அணைச் சீதளநாதன்  
  திருமறு மார்பிற் திகழ் சிரேயாம்சன்  
  மலர்மிசை நடந்த வாசுபூஜ்சியன்  
  மேமல் மேனி விமலபட்டாரகன்  
  அருள்நெறி யளித்த அனந்த சித்தன்  
  தருமலை உடைய தருமபட்டாரகன்  
  தவநெறி யளித்த சாந்திபட்டாரகன்  
  கொந்தார்மலர்மழை குந்து பட்டாரகன்  
  அந்தர வினையின் அரபட்டாரகன்  
  தொல்லை வினை கெடுத்த மல்லிபட்டாரகன்  
  முகடுபெற  வுயர்ந்த முனிசுவிரதர்  
  அரிட்ட நெறியின் நமிபட்டாரகர்  
  அஷ்டவினை கெடுத்த அரிட்ட நேமி  
  பட்ட வினைபகல் பாரிஸநாதன்  
  சித்தர்கள் ஏத்தும் ஸ்ரீவர்த்தமானன்  
  என்றிவர் இருபத்து நால்வரையும்  
  நாளும் நாளும் நலம் புகழ்ந்தேத்த  
  மீளா உலகம் வேண்டுதற் பொருட்டே!!  





திண்டிவனத்திலிருந்து  ஒரத்தி சாலையில் 15 கி.மீ. தொலைவில்  உள்ளது அனந்தமங்கலம் என்னும் பாறைச்சிற்ப கோவில் உள்ள கிராமம். கி.பி. 910ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  சிறிய அளவிளான மலை ஒன்றின் மீது உள்ள பாறையில் கிழக்கு நோக்கி நான்கு புடைப்பு சிற்பத்தொகுப்பும், அதன் கீழ் சிறிய குகைத் தளம் ஒன்றும்,  அருகில் மற்றொரு பாறைமீது வடதிசை நோக்கி ஸ்ரீபார்ஸ்வ ஜிநரின் நின்ற நிலை புடைப்புச் சிற்பமும், மேலேறிச் செல்லும் வழியில் கல்வெட்டு சாசனம் ஒன்றும் உள்ளன. (செல்லும் வழிகள் முட்புதர்களுடன் காணப்படுகிறது.)


பராந்தக சோழனது காலத்தில் (கி.பி.942) உள்ள சாசனமாக குறிப்பிடுகின்றனர். அதில்  வினையபாசுர குரவடிகளின் சீடரான ஸ்ரீவர்த்தமாப் பெரியடிகள் என்பவர் இந்த ஜினகிரி பள்ளியில் தினமும் ஒரு அடியார்க்கு உணவளிக்க சில பொற்காசுகள் வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  ............

Anandhamangalam, a rock temple Jain heritage, is situated 15 Kms from Tindivanam towards Orathi road (near Vairapuram village). A hillock clustered by rock has Jain bas-reliefs which belong to 9-10th Century AD. After reaching a moderate height (with strains because no step cuttings) a big boulder has group of carvings facing east and Shri Parswana Jinar relief toward north. One rock inscription also itched on the way to rise.

The inscriptions belong to King.Paranthaga Cholan period (ie 942 AD). It indicates that some gold coins were donated to Holiness.Vardhamana Periyadigal, the disciple of Shri Vinayapasura kuravadigal, the chief ascetic of Jinagiri Palli (Jain hillock school) for the purpose of meals-feeding to a devotee daily. 



நான்கு சிற்பத்தொகுப்பில்,  முதற் சிற்பமான ஸ்ரீகூஷ்மாண்டினி யக்ஷியின் உருவம் அழகாக ஆபரணங்களுடனும், அருகில் பணிப்பெண்ணைத் தொட்டவாறும், சிங்கத்தின் மீது நின்றநிலையிலும் தனது இரு குழந்தைகளுடனும், மேல் புறம், இரு சாமரைகள், கமுகு மரத்துடன் காட்சி யளிக்கிறது.  அதற்கடுத்து அமர்ந்த  நிலையில் சற்று பெரியதாக தீர்த்தங்கரர் உருவம் உள்ளது. சிங்காதனமும், சாமரை தாரிகளுடன், கந்தர்வர்களுடன், தலைக்கு பின்புறம் பிரபா வட்டமும், மேற்புறம் முக்குடையுடன் திகழும் அவர் ஸ்ரீஅனந்தநாதர் என அவ்வூரின் பெயரை வைத்துக் குறிப்பிடுகின்றனர். அடுத்துள்ள தீர்த்தங்கரர் வடிவம் தாமரை மலர் மீது நின்ற நிலையில் தலைக்கு பின்புறம் பிரபை வட்டமும், மேல் முக்குடையும் இருபுறம் சாமரைகள் மட்டும் உள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதர்மதேவி சிலையிருப்பதால் அவரை நேமிநாதர் என்றே குறிப்பிடலாம். அடுத்துள்ள ஸ்ரீபார்ஸ்வ நாதர் பனாமுடியுடன்  நின்ற நிலையிலுள்ள வடிவத்தில் பாம்பு கால் வரை நீண்டு தெரியும் வண்ணமும், மலர் மேல்  நின்ற கோலத்திலும் வடிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்துள்ள தனி சிற்பமான ஸ்ரீபார்ஸ்வ ஜிநரின் சிற்பம் பனாமுடியுடன் அருகில் தரணேந்திர யக்ஷன் நின்ற நிலையிலும் மற்றும் ஸ்ரீபத்மாவதி யக்ஷி அமர்ந்து வணங்கிய நிலையில் காணப்படுகிறது. மேலும் பாம்பின் வால்பகுதி கால்வரை சென்றும், தாமரை மலர் மீது அப்பெருமான் நிற்பதைப் போன்று செதுக்கப்பட்டுள்ளது நன்கு தெரிகிறது.


அருகிலுள்ள சமணர்கள் சில முக்கிய தினங்களில் வந்து வழிபாடு செய்து வருகின்றனர். தொலைவில் உள்ளவர்களும் ஆண்டுக் கொருமுறையேனும் சென்று தரிசித்து வந்தால் அக்கலைப் பொக்கிஷ­ம் அழியாமல் நீண்ட காலம் பாதுகாப்பாக இருக்கும்.


The east facing reliefs cluster exhibits Shri Dharmadevi with essential ornamental work, standing on a lion, a maid, two girl children, two whisks on either side and a arecanut tree on the back of overhead. Next is Shri Anandhanatha Jinar sitting on a throne in the meditative posture, Praba circle, Mukudai canopy and whisk maids itches deeply. Subsequently Shri Neminatha Jinar standing on a lotus, praba circle, tri-umbralla canopy carvings. Last one is bravely indicates Shri Parswa Jinar with five headed snake canopy which crawling end at the foot of the Lord, standing on a lotus podium.

The north facing relief Shri Parshwanathar also having five headed snake dilated canopy, which end to the feet of the Lord on a lotus podium. Also Shri Dharanendran standing on right and Shri Padmavathy Devi bowed posture to the Lord.


Both reliefs are not severly corroded but it should be preserved for the future generation. Otherwise nearby quarry lessee may destroy the identities. Our frequent visit to the treasure might prevent the havoc.