Showing posts with label Jansi DT. Show all posts
Showing posts with label Jansi DT. Show all posts

Monday, September 3, 2018

Dharmasthala Jain temple


Shri Bhagawan Bahubali Jinalayaஸ்ரீ பகவான் பாகுபலி  ஜினாலயம்



It lies on the google map with coordination of (12.95264, 75.37911) 





12.15 மணியளவில் தர்மஸ்தலா வந்தடைந்தோம்.
தெய்வ நம்பிக்கைகள் சங்கமிக்கும் தர்ம உறைவிடம் தர்மஸ்தலமாகும். பல்லாண்டுகளாக பக்தி மரபினை வளர்த்து வரும் பூமியாகும். 

பல பக்தர்கள் பேருந்து, கார், வேன் என பல வாகனங்களில் வந்து சென்றவண்ணம் இருந்தனர்.

சிறிய குன்றின் மீதிருந்த பாகுபலி நாதரை தரிசிக்க வான் மேலேறியது. மேற் சென்றதும், சில ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வந்ததால் சிறிய வளைவு, நுழைவாயில் கூடம் நடைபாதை ஒழுங்கு போன்றவை புதியதாக காட்சியளித்தன. அவற்றை நின்று காணம் போதே நெடிய 39 அடி உச்சிவரை தெரியும் ஒரே கல்லினால் ஆன பாகுபலி பகவானின் தோற்றத்தின் அருகே அழைத்துச் சென்று கொண்டிருந்தது.


பெரிய பீடத்தின் மீது ஏறிச் செல்ல இரு யானைச் சிலைகள் படிக்கட்டுகளுடன் அழைத்தது. மேற்சென்றால் 13 அடிமேடையில் பாகுபலிநாதர் வேனுர் சிலையின் அதேவகைக் கல்லால் ஆனது போன்ற வண்ணத்தில், ரேகையில் சற்று உருவ  அமைப்பில் மாற்றத்துடன் காணப்பட்டது.


சரவண பெளிகுளம், கார்காளா, வேனூர், தர்மஸ்தலா (கோமட்டகிரி செல்லவில்லை) பாகுபலி பகவானின் உருவச்சிலைகள் இருந்தாலும் ஒன்றிலிருந்து மற்றொன்று தனித்துவமாக அமைக்கப்பட்டிருப்பதை மனம் வேறுபடுத்திக்  காட்டத்தான் செய்கிறது. என்ன இருந்தாலும் கோமட்டன் உருவாக்கிய சிலை, முன்னனி வசிப்பதற்கான கூறுகளை வித்தியாசப்படுத்தி மனம் காட்டினாலும்; நான்கு சிலைகளிடத்திலுமுள்ள பேரழகு, பிரம்மாண்டம் இவற்றை வியந்து அண்ணாந்து பார்க்கும்போது நம் அனைவரின் படிப்பு, பலம், பெருமை, புகழ், உயர்வு, அழகு, அதிகாரம், ஆர்ப்பாட்டம் அனைத்தையும் சற்று நேரத்தில் மறக்கடித்து கைகூப்பி வணங்க வைத்து விடுவதென்னவோ உண்மைதான். அவ்விடத்திலேயே நின்று கொண்டேயிருந்தால் அவை முழுவதும் அற்றுப் போய்விடும் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.


சற்று நேர தரிசனத்திற்கு பின் அடுத்த ஸ்தலம் நினைவுக்கு வர அவரைவிட்டு பிரியும் வேளை வந்தது.  இக்குன்றிலிருந்து மாற்றுப்பாதையில் இறங்கியதும் ஸ்ரீ மஞ்சுநாதர்  ஆலய வழிக்கு இணையான சாலையில் பயணிக்கும் போது ஸ்ரீ சந்திரநாத ஸ்வாமி பஸ்தி என்ற அடையாள குறியீட்டு பலகையைக் கண்டு, அத்திசையில் 1 கி.மீ. பயணித்ததும் அவ்வாலயத்தை சென்றடைந்தோம்.






 The confluence of faiths makes Dharmasthala, the abode of dharma, a unique legacy entrenched over the years. The centuries old Shri Chandranatha Swamy Basadi at Dharmasthala has been maintained in the pristine condition and is amongst the one of the most revered and celebrated Digambara shrines in South India.


The growing fame of Dharmasthala Shri Manjunatha Swamy temple has often obscured the fact that for centuries that Dharmasthala is also a revered Jain Basadi. With the novel thought of protecting the Jain legacy, a pious and methodical renovation of the temple in May 2001 by Shri Veerendra Heggade has made Shri Chandranatha Swamy Basadi, one of the most beautiful edifices in Dharmasthala and the south of India. Standing against the azure blue sky and the lush foliage around it, this temple clad in white marble is a sight to behold and to cherish, imbibe and nurture the teachings about our mortal life by Shri Chandranatha Swamy, Jain Theerthankara Mahaveer and his disciples.
----------------------------------------------- 
In 1973 a statue of Lord Bahubali, carved out of a single rock, was installed at Dharmasthala on a low hill near the Manjunatha temple. It is about 39 feet high with a pedestal of 13 feet and weighs about 175 tonnes. This is one of the five stone statues of Bahubali in Karnataka.

Shri Bhagwan Bahubali Digambar Jain Statue is installed in many places across India(there are 5 monolithic Gommateshwara statue in Karnataka measuring more than 6 m (20 feet) in height), Dharmasthala, being one of them. Dharmasthala is an Indian temple town, known for its religious tolerance and justice. Among the piety and frolic of this beautiful temple town, the statue stands on a low hill, at a kilometer from the Lord Shiva temple, also known as the Manjunath temple. This 39 feet(12 m) statue was sculpted in 1973, by the famed sculptor Renjala Gopalkrishna Shenoy under the aegis of Shri Ratnavarma Heggade. After Shri Ratnavarma Heggade died, the statue was then positioned atop the Ratnagiri Hill in February 1982 by Dr.D.Veerendra Heggade. The Gomateshwara Bahubali Statue is a monolith structure, and is one of the five stone statues of Bahubali located in Karnataka.

********************************

Shri Chandranathaswamy Jinalaya - ஸ்ரீ சந்திரநாத ஸ்வாமி ஜினாலயம்







It lies on the google map with coordination of  (12.94761, 75.38326) 


ஜினாயவளாகம் என்பதை அங்குள்ள அமைதி, ஆரவாரமற்ற தன்மை, ஜன நெருக்கடியற்ற பாதை, படிகள் அனைத்தும் ஒருங்கே சுட்டிக் காட்டி விடுகின்றன. ஏனெனில் மூலவரின் முகம் அமைதியும், சாந்தமும், புன்னகையும் நிறைந்த வடிவமாயிற்றே; அதனை அச்சூழலும் நிரூபித்துக் கொண்டிருப்பதை எத்தலத்திலும் உணரலாம்.

அப்புனிதபூமியில் நூற்றாண்டினைக் கடந்து நிற்கும் ஸ்ரீ சந்திரநாத பஸ்தி அசையாமல் தங்கியுள்ளது. நீலவண்ண வானமும், தழைத்து நிற்கும் பசுமைகளுக்கிடையே ஜைன திகம்பர மரபினை வளர்த்து வருவதற்காக இஜ்ஜினாலயத்தினை கவனமுடன் பாதுகாத்து வருகின்றனர்.

புகழ்பெருகி வளர்ந்து வரும் ஸ்ரீமஞ்சுநாதஸ்வாமி ஆலயத்திற்கிடையே பல நூற்றாண்டுகளாக இந்த ஜைன பஸ்தியும் வளர்ச்சியடைந்து தான் வந்திருக்கிறது. மே மாதம் 2001 ம் ஆண்டு தர்மாதிகாரி ஸ்ரீ வீரேந்திர ஹெக்டே அவர்களால் ஜைன மரபும், பக்திமார்க்கமும் பெருகும் வகையில் ஸ்ரீ சந்திரநாதஸ்வாமி ஜினாலயத்தை அழகான கட்டமைப்பாக மாற்றம் செய்து புனருத்தாரணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவிலுள்ள பல அழகிய ஜினாலய கட்டமைப்புகளில் ஒன்றான தோற்றத்தினைக் கொண்டுள்ளது. அனைத்தும் சரியான அளவில், பொலிவான தோற்றத்தில் இருந்தாலும், இவ்வாலத்தினை புகைப்படம் எடுக்க அனுமதி யில்லை.

வெள்ளைச் சலவைக்கல்லால் உருவாக்கப்பட்ட இக்கட்டமைப்பு வரும் பக்தர்களின் மனதிற்குள் ஸ்ரீ சந்திரப்ரபு ஜினரின் போதனைகளை நுழைத்து, வளரச் செய்து நல்வாழ்வுக்கான வழிகாட்டுதல்களை வழங்குவதே இவ்வாலத்தின் நோக்கமாக இருக்கும் என்றால் மிகையாகாது.

மஹாவீரரின் தென்னக விஜயத்திற்கு பின்னர் ஜைனம் வளர்ந்து மேனிலை அடைவதை இத்தலத்தின் ஜினாலயம் நிரூபித்து நிற்கிறது.

மூலவராக ஸ்ரீ சந்திரப்ரபு ஜினரின் சலவைக்கல் சிலை பிரதிஷ்டை  செய்யப்பட்டு, சுகநாசியில் பல உலோகச்சிலைகள் அமர்த்தப்பட்டிருப்பதை, நவரங்க  மண்டபத்திலிருந்து கண்டு தரிசனம் செய்ய வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. முக மண்டபம் சற்று நீண்ட ஆளோடியுடன் இணைக்கப்பட்டு அதன் தூண்களில் பல சமவசரண தேவதேவியரின் சிற்பங்களைச் செதுக்கி வைத்திருப்பது கலைப்பொக்கிஷமாக காட்சி யளிக்கிறது. சற்று நேரம் அமர்ந்து செல்ல எண்ணும் படியான சூழலை ஏற்படுத்தியிருப்பது இவ்வாலய வரைபட, கட்டுமானத்தின் சிறப்பாகும்.
----------------------------------------------- 
அங்கு ஜைன போஜன் சாலைக்கான வழிமாற்றம் புரியவில்லை. மதிய சாப்பாட்டு  நேரம் கடந்து பசிபெருகி காதை அடைக்க துவங்கியதால், அன்னபுரணி போஜன் சாலையில் தாவர உணவுதான் என கூறியதால்,  அங்கு நின்ற வரிசையில்  சென்று தரைமேடையில் அமர்ந்தோம்.

சில நொடியில் தையிலை, நீர், இனிப்பு, சாதம், ரசம், சாப்பிட்டு  முடிப்பதற்குள் சாம்பார் (மாறித்தான் வந்தது), நீர், சாதம், மோர் என உடனுக்குடன் வந்து திணற வைத்தனர். ஏழு நிமிடத்தில் முடிக்க வைத்தது விந்தையாக இருந்தது. (இலையில் பெற்றுக் கொள்ள தாமதமானால் வாயில் திணித்து விடுவார்கள் போலிருந்தது.)  வேறு வழியில்லை பல்லாயிரக்கணக்கான ஜனக்கூட்டம் தரிசன வரிசைவேலிக்குள்ளும், உணவருந்தும் கூடத்திலும் வந்தவண்ணம் இருந்தனர். தனிக்கவனிப்புக்கு நொடிப்பொழுதுகூட ஒதுக்க வழியில்லை.

வயிறு நிரம்பியதில் மகிழ்ச்சியே..

திடீரென அங்கிருந்து மைசூர் சென்று கனககிரி தரிசனம் காணலாம் என மேலும் ஒரு ஸ்தலத்தை பயணத்திட்டத்தில் நுழைத்தோம்.

சுப்ரமண்யா சென்று,  மைசூர் சாலையில் பயணத்தபோது, நிலச்சரிவினால் அச்சாலை அடைபட்டது  என்றனர். மாற்று வழி ஷக்லேஷ்வர், ஹாசன், மைசூர் என பயண நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டபோது  தெரிந்தது.  இந்த 16 கி.மீ. பயணம் வீண், வேறு வழியில்லாமல் மைசூர் பயணம் சுற்றுப்பாதையில் தொடர்ந்தது.


ஹாசனுக்கு முன்பே வலதுபுறம் திரும்பிச் புறவழிச்சாலையில் சென்றதால் எங்கும் சிற்றுண்டிச்சாலையே தென்படவில்லை.  அப்படியே இருந்தாலும் மாமிசஉணவுச்சாலை பெயர்ப்பலகைகள்.  மைசூர் புறநகருக்கருகே வந்தடைந்து விட்டோம். இரவு 10.15 மணி, வெஜ்  ஹோட்டல் என்ற ஆங்கில பெயர்ப்பலகை தென்பட்டது.  அந்த அகால நேரத்திலும், விரும்பிக்கேட்ட டிபன் உணவு  கிடைத்தது.  மனமார்ந்த நன்றியை ஊழியருக்கு  தெரிவித்து  விட்டு, மைசூர் எல்லையில் ஒரு தங்கும் விடுதியில்  இரு  அறைகள் எடுத்து உறங்க துவங்கும்  போது நடுஇரவு 11.45 மணி….























The confluence of faiths makes Dharmasthala, the abode of dharma, a unique legacy entrenched over the years. The centuries old Shri Chandranatha Swamy Basadi at Dharmasthala has been maintained in the pristine condition and is amongst the one of the most revered and celebrated Digambara shrines in South India.



The growing fame of Dharmasthala Shri Manjunatha Swamy temple has often obscured the fact that for centuries that Dharmasthala is also a revered Jain Basadi. With the novel thought of protecting the Jain legacy, a pious and methodical renovation of the temple in May 2001 by Shri Veerendra Heggade has made Shri Chandranatha Swamy Basadi, one of the most beautiful edifices in Dharmasthala and the south of India. Standing against the azure blue sky and the lush foliage around it, this temple clad in white marble is a sight to behold and to cherish, imbibe and nurture the teachings about our mortal life by Shri Chandranatha Swamy, Jain Theerthankara Mahaveer and his disciples.



Friday, August 31, 2018

VENUR - வேனூர்


BAGHAWAN BAHUBALI  -  பகவான் பாகுபலி  




It lies on the Google map in  coordination of (13.0134, 75.14381)


-------------------------------------------------------

வினைகளை வென்று விடுதலைப் பேற்றை பெற்ற தீர்த்தங்கரர்கள் அறுநால்வரில் கடைசி ஆப்தர் மஹாவீரர் தென்பாரதம் நோக்கி வந்த போது ஜைனம் கர்நாடகத்தில் முளை விட்டிருந்தது. பின்னர் தீர்க்கத்தரிசி மஹாதுறவி ஆச்சார்ய பத்ரபாகு, சந்திரகுப்தருடன் வடதேச பஞ்சத்தினை கருத்தில் கொண்டு,  தென்னகம் வந்து சரவணபெளிகுளத்தில்  தங்கியதால் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில்  தழைத்தோங்கி வளர்ந்தது.

பிற்காலத்தில் இந்து சமயத்தின் தாக்கம் அதிகரிக்கும் போது குறைந்து பட்டாலும் பெரும்பாலான புனித ஜைன க்ஷேத்ரங்கள் அப்படியே இன்றளவும் வளர்ந்து வருவதை காணலாம்.

அதில் வேனூர் சமணத்தலமும் ஒன்றாகும்…

----------------------------------------------- 

வேனூர்

ஞாயிறு காலை 10.15 மணியளவில்; மூடுபத்திரையில் சில ஜினாலயங்கள் மூடியிருந்தது நீங்கலாக மற்றவற்றை தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து வேனூர் நோக்கி பயணித்தோம்.


தக்ஷிண கன்னடா ஜில்லா, பெல்தங்காடி தாலுக்காவில் அமைந்துள்ள வேனூர் எனும் ஜைனத்தலம் தர்மஸ்தலா சாலையில் 22 கி.மீ பயணித்தை கடக்கும் போது வந்தடைந்தது. பிரதான சாலையிலிருந்து இடது புறம் திரும்பி 100 மீ.  சென்றதும் பகவான் பாகுபலியில் நெடிய சிலையின் தலைப்பகுதி  தெரிந்ததும் வேனை நிறுத்திவிட்டு இறங்கினோம்.


முன் வாசல் வழியாக நுழைந்த போது 38 அடியுயர கோமதீஸ்வரர் சிலை பிரம்மாண்டமாக,  தனிக்கல்லில் செதுக்கப்பட்டு கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. மானஸ்தம்பத்தை கண்டபோது மான கஷாயம் நீங்குவது போல அவரைப் பார்த்த போது நானே பெரியவன் என்ற உணர்வு காணாமல் போயிருந்தது. அதனால் தானோ இவர் ஆலயங்களுக்கு மானஸ்தம்பம் எழுப்பாமல் பிரம்ம ஸ்தம்பம் நிறுத்தி வருகின்றனர்.


பால்குனி நதிக்கரையில் அமைந்த இந்த வேனூர், முற்காலத்தில் அஜிலப் பேரரசின் தலைநகராக இருந்துள்ளதென வரலாறு பகர்கின்றது. இம்மன்னர்களில் மிகப் பிரபல்யமானவரும், சாமுண்டராயரின் நேரடி பரம்பரையில் வந்தவருமான  திம்மண்ணா பேரரசர், ஒரே கல்லில் செதுக்கி பேருருவாக நிற்கும் பகவான் பாகுபலியை 1604 AD ல் பிரதிஷ்டை செய்ததாக கல்வெட்டு கூறுகிறது.


அஜிலப் பேரரசு 1154 -1786 வரை இப்பகுதி முழுவதையும் ஆண்ட போது சரவணபெளிகுளா, கார்காளா, வேனூர் போன்ற இடங்களில் பகவான் பாகுபலியின் பேருருக்களை அடுத்தடுத்து கட்டியதில்  இவ்வூர் பாகுபலி உருவமே சற்று சிறியதாகும். இதன் பின்னர் தர்மஸ்தலாவில் இருப்பவர் இன்னும் சிறிய உருவத்தைக் கொண்டிருந்தாலும் இரண்டும் ஒரே கல்வகையைச் சார்ந்தது  என்பதை பார்த்தாலே புரிந்து விடும். இப்போதும் அவர் வம்சத்தினரான டாக்டர் பத்மபிரசாத் அஜிலா என்பவர் அத்தலத்தில் வாழ்ந்து வருகிறார்.


38 அடியுயர பாகுபலி சிலையை ஒரே கல்லில் செதுக்கி நிறுவியவர் அமரசிற்பி ஜகநாச்சாரி என்ற கலைஞர் ஆவார். அவ்வரலாறு நிகழ்வை அங்குள்ள கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது. சுற்றுக் சுவருக்கு நடுவே உயரமான மேடையில் கம்பீரமாக பகவான் கார்காளாபோன்றே காட்சி தருகிறார். சாம்பல் பழுப்பு நிறத்தில் நீண்ட பட்டையான ரேகைகளைக் கொண்ட ஒரே கருங்கல்லில் உருவாக்கப்பட்ட இச்சிலைக்கு மஹாமஸ்தகாபிஷேகம் பிப்ரவரி  மாதம் 2012ல் நடைந்தேறியுள்ளது. அடுத்து பன்னிராண்டில் நடைபெறும் என்பது முற்காலத்திலிருந்து தொடர்ந்து வரும் வரலாற்றுக் குறிப்பு பகர்கின்றது.

வெளியே பிரம்மஸ்தம்பம் உச்சியில் ஸ்ரீ பிரம்மதேவர் சிலையுடன் அழகாக காட்சியளிக்கிறது.  

























Venur
is a small town in Dakshina Kannada District of Karnataka state situated on the bank of river Phalguni. Venur though a small town was once a great seat of Jainism. It was the capital of the Ajila Dynasty and one of the most prominent Kings of them Thimmanna Ajila built a colossus of Gommateshwara 38 feet high in 1604 AD. He was a direct descendant of Chamundaraya, who built one at Shravanabelagola. The Kings of Ajila Dynasty ruled here from 1154 AD to 1786 AD. The current descendant of the Ajila Dynasty is Thimmnnarasa Dr. Padmaprasad Ajila.

Bhagawan Bahubali also known as Lord Gomateshwara. The single rock statue is 38 feet in height is supposed to have been sculptured by Amarashilpi Jakanachari. The statue stands facing westward on a high platform on the banks of the river Phalguni. This statue of Bahubali is one of the five giant monoliths (of the same Jain monk) found in Karnataka, which are more than 20 feet in height.[4] (the others being at Shravanabelagola, Karkala and Dharmasthala and Gommatagiri). It also stands in an enclosure, on the same pattern as that of Shravanabelagola.

The last mahamastakabhisheka or the head anointing ceremony of the statue (typical of all the four Bahubali statues) was held in the year 2000. The second mahamastakabhisheka of this century held from 28 January 2012 to 5 February 2012 under the guidance of Acharya Vidyananda. It was inaugurated by D.V.Sadananda Gowda, the then Chief Minister of Karnataka.

-----------------------------------------------------------------

நுழைவாயிலின் உட்புறம் இருபுறமும் இரண்டு ஸ்ரீ சாந்திநாதர் சிற்றாலயங்கள்  உள்ளன.

வலதுபுறத்தில் உலோகத்தினாலான 3 அடி உயர ஸ்ரீ சாந்திநாத  ஜினரின் சிலை வெண்கல பிரபாவளி மற்றும் குமிழ் படிச்சட்டகளுக்கிடையே நிறுவப்பட்டுள்ளன. மேலும் கீழேயுள்ள மேடையில் 24 ஜினர்கள் தொகுப்பும், பார்ஸ்வ ஜினரின் உலோகம் மற்றும் கருங்கல் சிலையும், ஸ்ரீ பத்மாவதி மாதா உலோகச்சிலை அலங்காரத்துடனும் காணப்படுகின்றன.

இவ்வாலயம் அஜிலா மன்னனின் மஹாராணி அக்கன்களா என்பரால் சமகாலத்தில் கட்டப்பட்டது.

மேலும் அதே சமயத்தில் பின்னானி எனும் மற்றொரு மஹாராணியரால் இடதுபுறம் கட்டப்பட்ட சிற்றாலயத்தில் வெளிர்சிவந்த சலவைக்கல்லால் ஆன ஸ்ரீ சாந்திநாதரின் 2.5 அடியுயர சிலை வெண்கல பிரபாவளியுடன் காட்சியளிக்கிறது.

----------------------------------------------- 











Seven beautiful temples are here to be viewed with the 35 feet high colossus of Gommateshwara Bahubali. Two out of them were completed simultaneously with the Gommateshwara by the Queens of King Ajila known as Akkangala Basadi and Binnani Basadi.

There is an attractive idol of Lord Chandraprabhu carved in flat rock installed in Akkangala Basadi and in Binnani Basadi a very beautiful bronze idol of Lord Shantinath Swami is worth being seen. Both the temples are situated in either sides of Gommateshwara.

*****************************************************

Shri Parshwanathar basadi  -  ஸ்ரீ பார்ஸ்வநாதர் பஸ்தி

பகவான் பாகுபலி நெடிய சிலையின் பின்புறம் ஸ்ரீபார்ஸ்வநாதரின்  பஸ்தி ஒன்று அழகாக கட்டப்பட்டு நல்ல பராமரிப்பிலும் உள்ளது.

குடவரை, முகமண்டபம், நவரங்க, சுகநாசி மற்றும் கர்ப்பகுடியுடன் காணப்படும் இவ்வாலத்தில் பஞ்சலோகத்தினால் ஆன 3.5 அடியுயர பார்ஸ்வநாதர் சிலை 9 தலை பனாமுடி பாம்புடனும், குமிழ் குமிழான படிச்சட்டத்துடனும் காணப்படுகிறது.

மேலும் சுகநாசி மேடையில் ஸ்ருதஸ்கந்தம், சித்தபரமேஷ்டி, 24 தீர்த்தங்கரர்கள் தொகுதி, பாகுபலி பகவான், விருஷபநாதர் போன்ற சிலைகளுடன் ஸ்ரீ பத்மாவதி தேவியின் சிலை அலங்காரத்துடன் காட்சியளிக்கிறது.

வெளியே முகமண்டபத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் சிலை  கருங்கல்லில் அழகாக செதுக்கப்பட்டு கண்ணைக் கவரும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது.

திருச்சுற்றில் ஸ்ரீபிரம்மதேவரின் குதிரை வாகனத்துடனான கருங்கற்சிலையும், கீழே நாகாவும் தனிச்சன்னதியாக கட்டப்பட்டுள்ளன.

அங்குள்ள திருச்சுற்றை சுற்றும் போது பாகுபலிநாதரின் பின்புற தரிசனம் அழகாக கிடைக்கிறது.

தங்கும் வசதிகள் இருந்தாலும், தேநீர் அருந்தியதும் அத்தலத்தை விட்டு 11.30 மணியளவில் தர்மஸ்தலா நோக்கி புறப்பட்டோம்.

----------------------------------------------- 























 





Near situated in a separate enclosure with the principal deity Lord Parsvanath, a beautiful bronze idol of 4 feet high is installed. It has prabavali arch on its back. In the platform of suganasi Sruthaskanth, Siddha idol, 24 jinar cluster and parswanathar also seated. Shri Padmavathy matha  bronze idol in full decoration also  seated along with these idols.  


This temple was reconstructed by Poojya Bhattarakaji of Moodbidri. 

------------------------------------

யாத்ரி நாவாஸ் -  Yatri nivas