1. சுரமஞ்சரியார் இலம்பகம்.
நாளிரண்டு கழிந்த
பின்பு தோளிரண்டை ஒத்த தோழர்கள்
சீவகன் திருவடி
வணங்கி திருமணம் செய்த பெண்களின்
பெயர்களைக் கூறச் சொல்ல துறவியும்
மயங்கிச் சாயும்
சுந்தரி விமலை என்று நண்பர்கட்கு
நம்பி சொன்னான் 648
புத்திசேனன் புன்னகைத்தான்
சீவகனை நோக்கி சொன்னான்
நீர்
சென்ற ஊரிலெல்லாம் தேன் சிந்தும் மாலை அணிந்த
தேவியரை மணந்து
முடித்து காமனென வலம் வருகிறாய்
முழுமதி போல் ஒரு மங்கை இந்நகரில் உள்ளாள்
என்றான் 649
ஆடவர் பெயரைக்
கேட்டாள் அதிர்ந்திடும் அழகிய உடல்
ஆண்கள் அவள் வீதியில் சென்றால்
ஆவியைப் பிரிவேன் என்றாள்
காமனே தன் எதிர்
வந்தாலும் காணேன் அவன் உருவம் என்றாள்
நீ
அவளை மணம் முடித்தால்
காமத்திலகன் என்றழைப்போம் 650
வண்டு தேனும்
வில்லின் நாணாய் மலர்களை அம்பாய்
கொண்ட
காமனின் கோட்டம்
சென்று மறைந்திரு சிலைக்குப்
பின்னே
சுரமஞ்சரி மனதின்
உள்ளே மணங்கொள் ஆண் பெயர் பொறித்து
காதலில் மயங்கச்
செய்வேன் காத்திரு தோழர்காள்
என்றான் 651
அந்தணக் கிழவன்
வடிவில் கோலுடன் வடிவம்
கொண்டான்
தாங்கொணா பசியினோடு
தள்ளாடி அவள் மனைசென்றான்
தடுத்தனர்
காவலர் அங்கு தன் பசிஎடுத்துச் சொன்னான்
காவலர் உள்ளே அனுப்ப கன்னிமாடம்
வாயில் வந்தான் 652
காத்திடும் கன்னியர்கள்
கூடி கடுஞ்சொல்லில் அவனைச்
சூழ
கண்டனர் அவன் நிலையை கருணையால்
பேசலுற்றார்
சோர்ந்த இம்முதிய
அந்தணர் தொட்டாலே இறப்பார்
போலும்
நங்கையிடம் நாம் உரைப்போம் நடப்பதை
அவளுரைப்பாள் 653
தோழிகள் சொல்லக்
கேட்டு தோகை மயில் சுரமஞ்சரியும்
பொன்மாடம் விட்டிறங்கி
மென்னடி எடுத்து வைத்தாள்
சிற்றடி சிலம்பு
சிணுங்க செவ்விடை மேகலை குலுங்க
பொன்மலரடி குழய நடந்து மறையோனை
காண வந்தாள்
654
வேதியனை நோக்கிக்
கேட்டாள் வேண்டி வந்த காரியந் தனை
நெஞ்சம் வருத்தும்
நீருடைய குமரியில் நீராட வந்தேன்
வருங்காலம் முன்னே
வந்து வாட்டிடும் இந்த முதுமை
என்னை விட்டு
அகலும் என்றான் எழில் உடைய சீவக நம்பி 655
குமரி ஆடி இளமைப்
பெறும் குறுக்கு வழி செல்லும் இவர்
சித்தம் பெரிதும்
பேதலித்த பித்தன் என என்று எண்ணி
இவன் உற்றபசி
போக்கிடுவோம் உணவு சமைத்து
வருக என
பணிப்பெண்களை பணித்தாள்
பால் மொழியாள் சுரமஞ்சரி 656
நறுமண நெய் மேனியில் பூசி நன்னீரில் நீராடச்
செய்து
தூய
நல்ல ஆடைகள் தந்து துலங்கும் பொன் பூணூல் தந்து
செம்பொன் கலத்தினிலே
செங்கர மகளீர் உணவு தர
அறுசுவை கொண்ட உணவை அகமகிழ்வில்
உண்டான் அவன் 657
உணவுண்ட களைப்பினையும்
உடன் வரும் நித்திரையையும்
மஞ்சரிக்கு காட்ட எண்ணி மென் மொழியில் கூறலானான்
கால்கள் மிக வலிக்கின்றன கண்கள்
துயில துடிக்கின்றன என்றிட
கட்டிலின் படுக்கை மேலே கண்ணுறங்கு என்றாள்
மஞ்சரி 658
மென் மலர் மஞ்சத்தின் மேல் மெல்லவே சாய்ந்த
நம்பி
காந்தர்வ மணத்தினை மனம் கடிதில் முடிக்க எண்ணியதால்
தேவர்களும் நாடி கேட்கும் தேவாமிர்த
கானம் ஒன்றை
தன்
உருவத்தை மறைத்து தென்றலென
பாடலானான் 659
இசைக் கேட்ட இளங்கன்னியர் மன்மதனின்
குரெலென்றார் சிலர்
சுரமஞ்சரி மனதில்
வாழும் சீவகனின் குரலென்றார்
சிலர்
தேனிசை மழையென
பொழியும் தேவலோகமே உருகும்
இசையில்
மஞ்சரியும் மயங்கி
விட்டாள் மனம் இசையில் ஆழ்ந்ததாலே
660
ஆடவரை இவள் அறவே வெறுத்தாள்
அமைந்து விட்ட நிகழ்ச்சி
கேட்டு
சுண்ணத்தை சீவகன்
பழித்தான் துறந்து விட்டாள்
ஆடவர்களை
தீமை இவளுக்கு
செய்த சீவகன் செத்து
விட்டான் என்று எண்ண
தத்தை சொன்ன மொழியினில் தலைவன் உள்ளான் என்றறிந்தாள் 661
உம் திருமுகத்தைக்
கண்ட மஞ்சரி சினம் தணிந்த முகம் கொண்டாள்
நங்கையர்கள் நயந்து
கேட்டனர் நல்லிசை ஒன்று பாடச் சொல்லி
மஞ்சரியின் மாசற்ற
முகம் நோக்கி மது தளும்பும்
இனிமையுடன்
மகரயாழ் இருகையில் எடுத்து மதுரகானம் பொழியலானான் 662
சுதஞ்சணன் சொல்லித்
தந்த சொர்க இசையை அவனிசைக்க
வளையணிந்த மங்கையர்கள்
வசமிழந்த மயிலை ஒத்தர்
ஆடகச் செம்பொற்பாவை
அந்தணனை மிகப் புகழ்ந்து
காமன் கோயில் வழிபாட்டில்
சீவகன் வரம் கேட்பேன் என்றாள் 663
பொன்மணி மாலை அணிந்து பிறைநூதலில்
பட்டம் சூட்டி
எருதினை வண்டியில்
பூட்டி ஏந்திழையாள் கோலுடன்
ஓட்ட
சுரமஞ்சரி
தன் தோழியருடன் சீவகனை
பெறம் வரம் கேட்க
காமனின் கோட்டம்
தன்னில் காலினை பதித்து
நின்றாள் 664
காமனின் சிலையின்
முன்னே கரங்களை கூப்பி வணங்கி
காளையாம் சீவக நம்பியை கரம் பற்ற வைத்தாயாகில்
கன்னலின் வில்லும்
அம்பும் கவர்ந்திடும் மகரக் கொடியும்
தேருடன் ஊரையும்
சேர்த்து திருவிழா செய்வேன்
என்றாள் 665
சிலை பின்னால்
வீற்றிருந்த சீவகன் நண்பன்
புத்திசேனன்
நின்
மனதின் விருப்பம் போல நீ
விரைவினில் அடைவாய் எனறான்
தெய்வமே திருவாய் மலர்ந்து
செப்பிய அருளாய் எண்ணி
மங்கையும் மனம் மகிழ்ந்து
மனையது
திரும்பி வந்தாள் 666
செவ்வடியில் கழல் பொருந்த செவியினில்
குண்டலம் ஒளிர
மாலையும் மண்டிய
குழலுமாய் மதிமுகம் ஒளியில்
சிவக்க
மணவறையில் வீற்றிருந்த
மதன் ஒத்த சீவக நம்பியை
மாவடு கடைக்கண்ணால் நோக்கி மருண்டிட்டாள்
மானைப் போல 667
மன்மதன் மலர் அம்பு பொழிய மங்கையோ நாணித்
தெளிய
தெய்வமாய் உன்னை ஏற்றேன் செவ்வடி
பணிய வந்தேன்
அன்புடன் உம்அருளைப்
புரிந்து அணைத்து என்னை ஏற்க என்றாள்
சீவகன் அவளை அணைத்தான் திருமார்பின் மாலை குழைந்தது 668
காந்தர்வ மணம் புரிந்தனர் கன்னியும் காளையும் அங்கு
குங்கும குழம்பு
மார்புடன் குவிந்த மென் தனங்கள் இணைய
மேகலை ஒலியுடன்
ஒதுங்க மென்னடி சிலம்புகள்
ஒலிக்க
தமிழ் அகப் பொருள் கூறும்
தன்மையில் புணர்ந்தனர் இருவரும் 669
நண்பரை நாடிச்
சென்றான் நமது காமத்திலகன்
நம்பி
மஞ்சரியை திருமணம்
பேச தக்காரை அனுப்பி
வைத்தான்
வெம்மைத்
தேனை வாயில் கொண்டு விழுங்கவும் உமிழவும் இயலாமல்
மறுக்கவோ ஏற்கவோ மனமின்றி மயங்கி நின்றான்
குபேரதத்தன் 670
சுரமஞ்சரி எண்ணம்
என்றும் சீவக நம்பியை
மணப்பதாகும் -என
செவிலித்தாய் எடுத்துரைத்தாள் பெற்ற நற்றாயான சுமதிக்கு
சுண்ணத்தில் நேர்ந்த
நிலையால் சுரமஞ்சரி கன்னிமாடம்
சென்றாள்
இந்த
நிலை நமக்கு என்றும்
பாற்கடலில் தேன் மழை என்றாள் 671
குபேரதத்தன் மனமது மகிழ்ந்து சுற்றத்தார்க்கு மணவோலை
அனுப்பி
பொன்னோடு பொருள்கள்
அள்ளி யாவர்க்கும் மகிழ்ந்து
அளித்து
மங்கல ஒலிகள்
இசைக்க மக்கள் எல்லாம்
வாழ்த்து கூற
சுரமஞ்சரியை சீவகனுக்கு
திருமணம் செய்து வைத்தான் 672
நூற்றெட்டு நுண்ணிடை
மாதரும் ஒன்றரை கோடி செம்பொன்னும்
வளம்
தரும் மூன்று ஊரும் மஞ்சரிக்கு சீதனம்
தந்தான்
மேரு ஒத்த சீவக நம்பியும்
மெல்லிடையால் சுரமஞ்சரியும்
அன்புடன் இல்லறக்
கடலில் அமிழ்ந்தமிழ்ந்து முத்தெடுத்தனர் 673
நங்கையைப் பிரிய எண்ணி நயம்பட
நம்பி சொன்னான்
நின்னை நான் பிரிவேன் சிலநாள்
பிரிவினில் அன்பு பெருகும்
மன்னனே உன் விருப்பம் என்றும்
மனைவி என் விருப்பம்
ஆகும் - என
சுரமஞ்சரி சொல்லுதிர்க்க
சீவகன் சென்றான் தன் இல்லம் 674
அரசன் ஒற்றன்
அறியா வண்ணம் அசைவினால் செய்தி
சொல்ல
சுற்றமும் நட்பும்
சூழ்ந்து சீவகனை காண வந்தனர்
தத்தையும் மகிழ்சி
கொண்டாள் குணமாலையை காணச் சொன்னாள்
நம்பியும் அங்கு சென்று நங்கையை
மகிழச் செய்தான் 675
குணவதி குணமாலையுடன்
கூடியே நல்துயில் கொண்டான்
சுநந்தையும் அகம் மகிழ்ந்தாள் சுந்தர
மகன் வருகையால்
அடுத்து நடக்கும்
செயல்களை தந்தைக்கு எடுத்து
சொல்லி
குதிரை வணிகன்
வேடம் ஏற்று தோழர் சூழ நகர் நீங்கினான் 676
சுரமஞ்சரி
இலம்பகம் முற்றிற்று.
10 . மண்மகள் இலம்பகம்.
குடம் ஒத்த பால் மடியும்
குறுந்தடி போல் காம்புகளும்
குவளைமலர் மேயும்
வாயும் கொடி படரும்
கொம்பும் கொண்ட
எருமைகள் சொரியும்
பால் இளந்தாமரை இலையில்
நிற்க
நாரைக் குஞ்சுகள் உண்ணும் நன் மருதம் கடந்து சென்றனர் 677
நீரையும் பாலையும்
பிரிக்கும் நெடு ஆற்றல்
கொண்ட அன்னம்
சஞ்சலம் சங்கினைத்
தான் பெடையென தழுவச்
செல்ல
சங்கென அறிந்த பின்பு தன் சஞ்சலத்தில்
குழம்பித் திரும்பும்
நெய்தலின் நிறை எழிலை நெஞ்சினில்
பருகி சென்றனர் 678
வான் தொடும்
கொன்றை மரங்கள் வழங்கிடும்
குளிர் நிழலில்
கொம்புடை ஆண் பெண் மான்கள்
குலவியே துயில் கொண்டிருக்க
இளமகளீர் எழிலைப்பாடும்
இளம்பரிதி ஒத்த ஆடவர் போல்
முல்லையை மொய்க்கும்
வண்டுடை முல்லை நிலம் கடந்தனர் 679
நிறை மூங்கில்
நெருங்கி வளர்ந்து நீர் கொட்டும் மலைச்சாரலில்
நீள் கொம்பு யானைக்
கூட்டம் நின்று நீர் ஆட்டம் போடும்
சந்தன மரங்கள்
நிறைந்து நறுமணம் கமழ்ந்து
வீசும்
குறத்தியர் தினைபுனம் கொண்ட குறிஞ்சியை
பிரிந்து சென்றனர் 680
காலத்தில் பெய்திடும்
மழையால் கன்னல் கமுகு கதளியும் பெருகி
சிறுமுக மந்திகள்
இருகையால் செங்கனிகளை எறிந்து ஆடும்
அருவிகள் நீரால்
ஆறுகள் நிறைந்து காடென செழித்த பொழில்கள்
நிறைந்திட்ட விதேக நாட்டுக்கு நண்பருடன்
வந்தான் நம்பி 681
வெண்மணல் வீதியில்
பரப்பி வீட்டினில் தோரணம்
கட்டி
கமுகொடு தெங்கின்
குலைகள் செவ்வனே வரிசைப்
படுத்தி
வனம் கடல் தந்த பொருள்களை
வழிதோரும் குவியலாக்கி
வளைக்கரங்கள் மலரைத்தூவி
வரவேற்றனர் சீவக நம்பியை 682
பேரழகு மகளீர்
அணிந்த பிறை நூதல் பட்டம் ஒளிர
கரங்களில் மழலைகள்
ஏந்தி காரிகைகள் கால் சிலம்பொலிக
இளந்தளிர் எழிலுடை
மாந்தர் இடை அணி மேகலை சிணுங்க
இளமாறன் சீவகனைக்
காண திரண்டது மகளீர்
கூட்டம் 683
தேன் சிந்தும்
மலர்மாலை சூடிய திருநிறைச்
செல்வா வருக
மின்னலுடை மேகம் தங்கும் மலை பிளந்த முருகா
வருக
காதி கர்மங்கள்
வென்ற கற்பகத் தேவனே வருக
கண்கவர் எழிலுடை ஏறே காமனின்
உருவே வருக என்றனர் 684
மங்கல முரசுகள்
ஒலிக்க வளைந்த நல் கொம்புகள் ஊத
பைங்கொடி பணிமகளீர்
சேர்ந்து பல மலர்கள் தூவி நிற்க
பட்டத்து அரசிகள்
நம்பியை பாசத்தில் விழியால்
அணைக்க
மாமனின் மாளிகை
உள்ளே மதகளிறு போல் நடந்தான் 685
மலர்ந்த மலர்களில்
இருந்து மகரந்தப் பொடிகள்
சிந்த
ஒடிந்திடும் இடையின்
மேலே ஒளிர்ந்திடும் மேகலை மின்ன
செம்பருத்தி குழம்பு
தோய்ந்த சிற்றடி மண் ஊன்றி நின்று
மாணிக்க கொத்தாய்
அங்கு இலக்கணை தாதியுடன்
நின்றாள் 686
அண்ணலும் அவனை நோக்கினான் அவளும்
அவனை நோக்கினாள்
அடங்கொண்ட விழிகள்
நான்கும் அவர்களை மதிக்கவில்லை
அவன் உள்ளேஅவள்
நுழைந்தாள் அவள் நெஞ்சில்
அவன் விழுந்தான்
ஐங்கணையான் தன் ஆடலை அங்கேயே
துவங்கி விட்டான் 687
வீரக்கழல் அணிந்த
மாமன் கோவிந்தன் தாள் பணிந்தான்
அண்ணலை ஆரத்தழுவி
அணைத்து ஆனந்த கண்ணீர்
கொண்டான்
மன்னனின் கண்ணீர்
கண்டு மாளிகை வாழ் மக்களெல்லாம்
மலையில் அழும் மயில் கூடமாய்
மயங்கியே கண்ணீர் சிந்தினர் 688
மாமனும் மருமகனும்
கூடி மற்ற நல் அமைச்சர்களுடன்
மேற்கொண்டு ஆய்தல்
பற்றி மந்திர ஆலோசனை
செய்ய
கட்டியங்காரன் அனுப்பிய
முத்திரை இட்ட ஓலையை
விரிசிகனைப் படிக்கச்
சொல்லி செவியுற இருந்தனர்
அங்கு 689
விரிசிகன் படிக்கலானான்
விதேக நாட்டு வீரவேந்தனே
சச்சந்தனை கொன்றேன்
என்ற சதிப் பழி என்
மேல் விழுந்தது
மதங்கொண்ட அசணிவேகத்தை
மன்னன் சச்சந்தன் அடக்க
மதக்களிறு மார்பைப்
பிளக்க மாய்ந்திட்டன் மன்னன்
அன்று 690
விதேகத்தின் வேந்தே
கோவிந்தா உனக்காக உயிரை விடுவேன்
நீ
இங்கு வந்தாயாகில் என் பழி என்னை விட்டு அகலும்
இனி ஏமாங்கத
நாட்டு அரசன் கோவிந்தன்
நீ என அறிவிக்கின்றேன்
தாமதம் இன்றி வரவேண்டும் என தந்திர வார்த்தையில்
முடித்தான் 691
சீவகன் உட்பொருளை அறிந்து சிந்தையில்
நகைத்துச் சொன்னான்
காலனே கட்டியங்காரனை
கை அசைத்து கூப்பிடுகின்றான்
அரசநூல் கல்வியில்
தேர்ந்த அவையோரே அமைச்சர்களே
இவனை நாம் கொல்வதற்கு இதைவிட தருணமில்லை
என்றான் 692
கள்ளத்தால் நம்மைக்
கொல்ல கருதிய கட்டியங்காரனை
வஞ்சத்தால் வைத்துக்
கொல்வோம் வெளியினில் கூற வேண்டாம்
கட்டியங்காரனோடு கனிந்தது
நம் நெருங்கிய நட்பு என்று
முழங்கட்டும் முப்பெரும் முரசு கூடட்டும் நம் படைகளென்றான் 693
கட்டியங்காரன் நட்பால்
துண்டித்த வணிகம் தொடரும்
நீரொடு நெல்லும்
பொன்னும் இருநாடும் வழங்கிக் கொள்ளும்
விளைவினை வதந்தி
ஆக்கினால் வெட்டுறும் வீணர்கள்
நாக்கு
வள்ளுவன் முரசு அறைந்தான் விதேகத்தின் நாடு நெடுகவும் 694
சினந்து சீறும்
யானைப் படையும் சிறந்த
கொடியுடை தேர்ந்த தேர்களும்
வாயுவென பறக்கும் பரிகளும்
வலக்கை வாள் ஏந்திய வீரர்களும்
சங்கொடு மத்தளம்
முரசொலிக்க சமுத்திரமே நாணும்
வண்ணம்
நிலமகள் நெளிந்து
வருந்த நால்படை திரண்டது
நகரில் 695
சிறிய வெண்சங்குகள்
ஒலிக்க திண்ணிய முரசுகள்
முழங்க
நல்லதோர் நிமித்தம் பார்த்து நிறைகுடத்தோடு
பறவைகள் ஒலிக்க
அரசனின் வலக்கண்
துடிக்க அலையொலியாய் படையொலி
எழும்ப
ஏமாங்கத நாட்டை
நோக்கி எழுச்சியில் நகர்ந்தது படைகள் 696
அவனை எமன் தேடிவந்ததை
அறியாத அரசன் கட்டியங்காரன்
வெண்கொம்பு வேழம் இருநூறும் விரைந்திடும்
தேர்கள் நூறும்
புயல் ஒத்த பரிகள் ஆயிரம்
பொன்மணி அணிகலங்களோடு
விதேகத்து வெற்றி
வேந்தனை வரவேற்க அனுப்பிவைத்தான் 697
வரிமணானன் என்னும்
வேழத்தையும் விசயம் எனும் பெயருடை தேரையும்
பவணவேகம் என்னும்
பரியையும் பொன்மணி மாலைகளோடு
களித்திடும் உள்ளத்துடனே
கட்டியங்காரன் மனம் மகிழ
இருமடங்கு சிறப்புகள்
செய்து எதிரிக்கு அனுப்பினான் விதேகன் 698
குணம் கொண்ட கோவிந்தராசன் குணமகள்
இலக்கணைக்கு
கணவனைத் தேர்ந்தெடுக்க
கடும் வில் போட்டி
வைத்தான்
சுழன்றிடும்திரிபன்றிகள்தனை
துள்ளியமாய் ஓர் அம்பு கொண்டு
வீழ்த்தும்
ஒப்பற்ற ஓர் வீரனுக்கு இலக்கணை மனைவியென அறிவித்தான் 699
வட்டமிடும் பொறி பன்றியை வனித நாட்டை ஆளும் அரசன்
கூர்நோக்கில் அம்பை எறிய குறிதவறி
பறந்தது அம்பு
அஸ்தினாபுரத்து அரசனும்
காம்பிலி நாட்டு காவலனும்
கோசல
நாட்டு வேந்தனுடன் குனிந்தனர் தலை தோல்வியாலே 700
அவந்தி நாட்டு
மன்னன் வந்து அம்பு எய்து தோல்வி
கண்டான்
மகத
நாட்டு மன்னன் அம்பும்
பொறி தொட்டு பொடித்து விழுந்தது
கலிங்க ராஜன் தொடுத்த அம்பு கடந்தது பொறியைத்
தாண்டி
காசி
வேந்தன் விட்ட அம்பு கடைசியில் வீழ்ந்தது
மண்ணில் 701
இன்னும் பல மன்னர்கள் முயன்று
இறுதியில் அடைந்தனர் தோல்வி
சென்றன நாட்கள்
ஆறு ஜெயித்தவர் யாரும்
இல்லை
வெற்றிவேல் உடைய சீவகன் வேழத்தில்
ஏறி அமர்ந்தான்
பொறியுடை பொன்பன்றியை
பொறி விட்டு அகற்ற சென்றான் 702
சீவகனை கண்ட கட்டியங்காரன் சிந்தையில்
அஞ்சம் கொண்டான்
சுற்றிடும் மூன்று
பன்றிகளும் சேர்ந்திடும் நேரம் கணிக்க
இரண்டு நாழிகை நேரம் நோக்கி இதயத்தால்
அளந்து கொண்டு
சீவகன் விரைந்து
சென்றான் சுழன்றிடும் சக்கரம்
அருகில் 703
முறிந்திடாத கொம்பில்
கட்டிய அறுந்திடாத நாணைப்
பற்றி
தருமநெறிகள் காத்து
நிற்கும் தவத்தோர்கள் உள்ளம்
போன்று
அம்பினை வில்லில்
பொருத்தி ஆழ்ந்து ஆராய்ந்து
குறியுடனே
அம்பினை எய்தான்
சீவகன் அறுபட்டு வீழ்ந்தது
பன்றிகள் 704
பன்றிகள் மூன்றும்
வீழ்ந்தன படை முரசுகள்
அதிர்ந்து முழங்கின
சீவகன் என்னும்
சிங்கம் கட்டியங்காரன் என்ற களிறை
அழித்திட்டு தன் குலம் காத்து
அரியனை பெறுவான் என்று
வானிலே தோன்றிய
இயக்கன் வாய்மொழி பகர்ந்தான்
அங்கு 705
கட்டியங்காரன் படையும்
சீவக நம்பியின் படையும்
இருகடல் கலக்கும்
நீர் போல் இணைந்தன
போர் களத்தில்
செங்குருதி ஆறாய் ஓட சிரங்கள்
பனங்காய்களாய் உருள
நரிகளும் நாயும்
கழுகும் நாடின பிணங்களின் ஊடே 706
விசயனின் வாளின்
வீச்சால் மதனின் தலை மண்ணில் வீழ
அவனிளவல் மன்மதன்
பாய அவனை வீழ்த்திட்டான் வேழத்தாலே
நான்மறையோன் புத்திசேனன்
திரிபுரம் எரித்த சிவனாய்
மாறி
அரசர்கள் சிரங்களைக்
கொய்து ஆழிசூழ் புயலாய்
நின்றான் 707
மகதநாட்டு மன்னன்
படை மாய்ந்தது தேவதத்தன்
வீச்சால்
கலிங்கத்து அரசன் படை கலைந்தது
சீதத்தன் செயலால்
உலோகபாலன் விட்ட அம்பு உடைத்தது
காம்பிலி மன்னன் மார்பை
பதுமுகன் வெட்டி சாய்த்தான் படைத்தலைவன்
காமுகன் தலைய 708
கட்டியங்காரன் மைந்தர்கள்
சீவகன் அம்பால் மாய்ந்தனர்
கட்டியங்காரன் வந்தான்
கர்வத்தின் சீற்றங்கொண்டு
சீவகன் நாண் தொடுத்தான் கட்டியங்காரன்
உயிர் எடுத்தான்
கொட்டியது வெற்றியின்
முரசு குளிர்ந்தது விசையை
மனது 709
மண்மகள்
இலம்பகம் முற்றிற்று.
11. பூமகள் இலம்பகம்.
செவ்விழிகள் கொண்ட சீவகன் சிந்திடும்
அருள் நோக்காலே
உள்ளத்தைக் கவர்ந்து
வென்று போர்களத்தை வலம் வந்து
வண்டுகள் மொய்க்கும்
மலரால் மாலைகள் தொங்க விட்ட
ராசமாபுரத்தில் நுழைந்தான்
நன்மக்கள் கை கூப்பி வணங்க 710
கூண்டில்
அடைபட்ட புலியும் குகையில் வாழ்சிங்கமும்
போன்ற
பகைவர்களை அழித்து
வென்று பவனி வரும் சீவகனைக் காண
முத்துமணி மாலைகளோடு
மலர்ந்த மலர் மாலைகள்
கொண்ட
மகளீர்கள் வெண் மாடங்களில் மயில் கூட்டம் போல் நின்றனர் 711
குணமாலையை மணந்ததனால்
கொடுந்துன்பம் உற்றான் நம்பி – என்ற
பழியது நீங்கியது
இன்று என பகர்வோர்கள்
பலரும் உண்டு
பட்டத்து யானை அம்பாரி மேல் பவனி வரும் சீவக
நம்பி மேல்
பாவையர்கள் தூவும் மலர்கள் தேவர்கள் பூமழையாய் நின்றது 712
ஆர்த்திடும் முரசொலி
கொம்புடன் அரண்மனை நுழைந்தான்
நம்பி
இள ஞாயிறு கண்ட ஆம்பலாய் இருண்டன
மகளீர் முகங்கள்
கட்டியங்காரனைச் சார்ந்த
மகளீர் கடுஞ்சேனை நுழைவைக்
கண்டு
கதறினர் மனதுக்குள்ளே
கண்ணீரை கொட்டி நின்றனர் 713
மலரணை பதித்தல்
இன்றி மண்ணினை அறியா பாதம்
தரையினில் பதிந்ததாலே
சிவந்தன சிறிய அடிகள்
கலங்கின மை கொண்ட விழிகள்
கரித்தன கண்ணீர் வாயில்
தெரித்திடும் துக்கத்தாலே
சேர்ந்தனர் அரண்மனை வாயில் 714
சீவகன் நயந்து
கேட்டான் சிறந்த தன் ஏவலரை நோக்கி
கட்டியங்காரன் தேவி இக்கூட்டத்தில் யாருளர்
என்று
மன்னனும் அவன் மைந்தர்களும் மாய்ந்தனர்
களத்தில் என்றான்
மாது
அவள் அதனைக்கேட்டு மயங்கித் தன்
உயிரை நீத்தாள் 715
நம்பியே நங்கைகட்குச்
சொன்னான் நஞ்சென முதலில் கொதித்தேன்
வெஞ்சினம் அணைவதற்கு
விழ்த்தினேன் கட்டியங்காரனை
கருநிற நாகப்பாம்பு
ஒன்று கருடன் வயப்பட்டது
என்று
கலங்கிட வேண்டாம்
உங்களை காப்பது என் கடமை என்றான் 716
இனியொரு நாளும்
நீங்கள் இன்னல் என்னால் படமாட்டீர்கள்
மன்னனால் பெற்ற பொருள்கள் மறுபடியும்
நீங்கள் பெறுவீர்
மனமது இந்நாட்டில்
என்றால் மகிழ்ச்சியுடன் தொடரட்டும்
வாழ்வு
வேறிடம் செல்ல நினைத்தால் வேந்தனாய் அனுப்பவேன்
என்றான் 717
பொன்மதில் சூழ்ந்த
மனையை கை விளக்கு ஏந்திய வீரர்கள்
கருவூல அறையைச்
சேர்த்து கண்டனர் பிற இடங்களையும்
நன்றென அறிந்து
ஆய்ந்து மனமது தெளிந்த
பின்னே
சீவகன் அரண்மனை
உள்ளே செவ்வடிகள் எடுத்து
வைத்தான் 718
வெண்பட்டாடைகள் அணிந்து
பொன்மணி மாலைகள் பூட்டி
காமனே மயங்கும்
வண்ணம் களிறை கொன்ற சிங்கம் போல
அயல் நாட்டு
மன்னர்கள் சூழ அரியணையில்
சீவகன் இருக்க
தோழர்கள் தம்பிகள்
மாமனும் கந்துக்கடனுடன் வந்தனர்
அங்கு 719
சுதஞ்சணதேவன் வந்தான்
சூழ்ந்திடும் தன் தேவியருடன்
வித்யாதர நகரில்
இருந்து வந்தன முடிசூட்ட பொருள்கள்
பாற்கடல்
நன்னீர் கொண்டு நூற்றெட்டு பொற்குடங்களால்
மன்னனுக்கு நன்னீராட்டி மணிமுடி
கிரீடம் சூட்டினர் 720
வின்னவர் இச்செய்தி
அறிய முழங்கின தேவதுந்துபிகள்
மகர
யாழ் ஒலிக்கு ஏற்ப மங்கையர் ஆடி மகிழ்ந்தனர்
வாய்ப்பாடின் மென்னொலியோடு
வாசிக்கும் வாத்திய ஒலியுடன்
காணிக்கை மன்னர்கள் வழங்க கடிகையர் மங்கலம்
பாடினர் 721
சிறியவன்
தம்பி நந்தட்டனிடம் சிறைகளை
இடிக்கச் சொன்னான்
ஈரெட்டு ஆண்டு காலம் வரியினை
விலக்கச் சொன்னான்
இறையிலி நிலத்தை
எல்லாம் உடையோர்க்கு ஈந்தச்
சொன்னான்
பசி
பிணி பொருந்தாப் பகை ஏமாங்கத்தில் இல்லை என்றான் 722
விழிவழி நோக்காதோர்க்கும் நோயால்
உடல் தளர்ந்தவர்க்கும்
பரத்தையின் மோகத்தாலே
கைவிட்ட பத்தினியோர்க்கும்
வாழுவதற்கு வீடும் பொருளும் வழங்குக
தடையின்றி என்று
சீவகன் மனம் ஆணை இட சீரியது முரசுகள்
நாட்டில் 723
பூமகள் இலம்பகம் முற்றிற்று
12 . இலக்கணையார் இலம்பகம்.
தம்பியரை அழைத்தான் நம்பி
தன் தேவியரை அழைத்துவரச் சொன்னான்
வெள்ளருவி வனம் மலை கடந்து
விரைந்தனர் அவர்கள் நாட்டுக்கு
அண்ணியரை அழைத்துக்
கொண்டு அழகு இராசமாபுரம் திரும்பினர்
அழகிய மயில்கள் கூட்டமாய் அரண்மனைக்கு
வந்து சேர்ந்தனர் 724
பிரிந்ததில் மெலிந்த
மேனியுடனும் சேர்ந்ததில் ஆனந்த கண்ணீருடனும்
சீவகன் செவ்வடிகள்
இரண்டையும் ஒரு சேர வீழ்ந்து வணங்கினர்
அன்புடனன் அவர்களை அணைத்து அருளுடன்
தழுவிக் கொள்ள
கலங்கிய கயல்விழி
நீரோ காதுகள் வரை நீண்டு ஓடின 725
சேடியர்கள் ஒன்றாய்
கூடி திருத்தினர் அரசியர்
அழகை
மேனியில் சந்தனம்
பூசி மணிமலர் மாலைகள்
சூடி
காதினில் குண்டலம்
பொருத்தி கை இடையில்
மேகலை கட்டி
காமனாம் சீவகன் கண்டு காமுற்று மகிழச் செய்தனர் 726
மாமன் மகள் இலக்கணையை மணம் முடிக்க
நாள் குறிக்க
சிவிகையுடன் வேழத்தையும்
சிறப்பினால் பெற்ற சோதிடன்
நல்ல நாள் நல் ஓரையோடு நல்ஊழ்வினையும் சேர ஆய்ந்து
நம்பிக்கு நாட்கள்
தன்னை நயமுடன் விளக்கிச்
சொன்னான் 727
சிறந்த ஒரு மங்கல நாளைசீவகனும்
ஆய்ந்து அறிந்த பின்
முரசுகள் வேழம் முதுகில் முறையுடன்
பொதிந்து கட்டி
மேனியில் சந்தனம்
பூசி மென்முத்து மாலைகள்
அணிந்து
முரசறைவோர் யானை ஏறி முழங்கிட வீதியில் சென்றார்கள் 728
மக்களே மகிழ்ந்து
கேளுங்கள் மன்னனின் திருமணநாள்
ஏழு
நாட்கள் இன்புற நடக்கும்
எழில்பெற வேண்டும் நாடு நகரம்
வீதிகள்தோறும் செம்மணல்
பரப்பி கமுகொடு கதலி மரங்கள் கட்டி
விண்தொடும் கொடிகள்
நாட்டி வீதியை அழகு செய்யுங்கள் 729
பிறையொத்த சிறு நூதலில் பெரிய பட்டம் அணிந்திடுங்கள்
பொன்மணி மாலைகள்
கொண்டு மென்மேனி அலங்கரியுங்கள்
பசும்பால் சோற்றைத்
தவிர பிற உணவு உண்ணாதீர்கள்
பட்டாடை உடல் அணிந்து பகட்டுடன்
நாளும் களித்திடுங்கள் 730
முரசறைவோன் அறிவித்த
பின் மூவிரு நாட்கள்
கடந்தன
யாழுடன் குழலும்
இணைந்து ஒலித்தன அரங்குகள்
தோறும்
வீட்டினை சுத்தம்
செய்து வெண் சாந்து
நிலம் மெழுகி
இல்லுறையும் தெய்வத்திற்கு
இதயத்தால் பூப்பலி செய்தனர் 731
பசுக்களின் பால் உலை பொங்க பறந்திடும் ஆவியினாலே
வெண்ணாடை போர்த்தியது போல் விளங்கின மாடங்கள்
எல்லாம்
பைங்கொடி மகளீர்
பாதம் பதிந்திட்ட செங்குழம்பாலே
செவ்வானம் மண் வந்தது போல் சிவந்தது
தரையின் தன்மை 732
வீதிகளில் வாயில்
தோறும் வித வித தோரணங்கள் தொங்க
மணிக்குடங்கள் வரிசையாலே
மாடங்கள் ஒளிர்ந்தன எங்கும்
ஆடிடும் மகளீர்
ஒலியும் அதற்கிசை பண்ணும்
பாட்டும்
ஆழியாய் ஒலியினை எழுப்ப அழகுடன் மிளிர்ந்தது
ராசமாபுரம் 733
அரண்மனை வாயில் எல்லாம் துகில் கொடி தென்றலாய் அசைய
மடல்
விரிந்த கமுகினோடு மண் தாழ்ந்த
கதலி குலையும்
பட்டுத்துகில் உரையினோடு
போர்த்திய பெருங்கண்ணாடியும்
பொன் பூரண கும்பம்
போல பொளிர்ந்தன இருபக்கமும் 734
பொற்காசு குவியல்
ஒருபுறம் வெண்முத்துக் கூடைகள்
ஒருபுறம்
அட்டமங்கலங்கள் ஒருபுறம் ஐமுக விளக்குகள் ஒருபுறம்
நறுமண புகைகள்
ஒருபுறம் நங்கைகள் கை கவரிகள் ஒருபுறம்
மங்கல வாழ்த்து
முழங்க சீவகன் இருக்கையிலிருந்தான் 735
ஆயிரத்தெட்டு யானை மதநீரால் நிலம் நனைந்து சேறாய் குழம்ப
திருமஞ்சண தண்ணீர்
கொணர திரண்டு அவை வரிசை கட்ட
முரசும் முழவும்
கொம்பும் எண்திசையும் ஒலி எழுப்ப
பொற்குடங்கள் நீர் முகர்ந்து பொன்குடை
நிழலில் வந்தன 736
திருமஞ்சண நீரைக்
கொண்டு சீவகன் நம்பி நன்னீர் ஆடி
சந்தனமும் புனுகும்
கொண்டு தன் மேனி எல்லாம் படரவிட்டு
பட்டாடை உடல் அணிந்து பலமணிகள்
அணிகலன் பூண்டு
மணமகனின் முழுக்கோலம்
மன்னனுக்கு முழுமை பெற்றது 737
அரசியற் கலை வல்ல
மகளீர் ஆரணங்கு இலக்கணையை
மலை
விளைந்த பசும்பொன்னே பாற்கடலில்
பிறந்த அமுதே
வலம்புரி சங்கு ஈன்ற முத்தே
கோவிந்தரின் குலக்கொடியே என
போற்றிப் புகழ்ந்த
படியே பணி செய்ய சூழ்ந்தனர் அங்கு 738
பொன்குடம் கொண்ட நன்னீரல் பூவையை
நீராட்டினார்கள்
சந்தனமும் குங்குமம்
கொண்டு செம்மேனி தான்னில் பூசினார்கள்
அகிற்புகைக் கொண்டு
அவள் கருங்குழலை ஆற்றினார்கள்
பஞ்சொத்த வெண்பட்டு
கொண்டு பாவை மேனி சாற்றினார்கள் 739
கையில் வளைகள்
பூட்டினார்கள் கண்களில் மை எழுதினார்கள்
பிறையொத்த சிறு நூதலில் பொன் பட்டம் பொருத்தினார்கள்
ஒடிந்துவிடும் மென்னிடையில்
ஒளிரும் மேகலைக் கட்டினார்கள்
ஒப்பனை நூல்கள்
சொல்லும் அத்தனையும் செய்திட்டார்கள் 740
வேதிகை மேடையின்
மேல் வெண்மணலை சீராய்
பரப்பி
சமிதைகளை கிழக்கு
நீக்கி மற்ற மூன்று
திசையில் வைத்து
மணியக்கல் ஒன்றில்
நெய்யும் மணியக்கல் இரண்டில்
நீரும்
பொன்
அகலில் தூபம் நிரப்பி
முறைப்படி வைத்தனர் அங்கு 741
நல்வினைப் பயன் இருந்தால் நஞ்சுண்டாலும்
கேடில்லை
தவப்பயன் அற்றுப்
போனால் தன் அழிவு தானே
தேடி வரும்
நல்வினை கொண்ட சீவகன் ராசமாபுர
அரசன் ஆனான்
கட்டியங்காரன் அழிந்தான் கடும்வினை சேர்ந்ததாலே 742
நகர் வலம் வந்தான் நம்பி நகரத்தோர் மகிழ்ந்து
வாழ்த்த
அசோகமர நிழலில்
அமர்ந்த அருகனின் கோயில்
வந்தான்
மணியிழைத்த கோயில்
கதவுகள் மலர்ந்தன மன்னன்
வரவால்
வேழத்தை விட்டு
இறங்கி வலம் வந்தான்
ஜினாலயத்தை 743
பிறப்பிலா பெருமை
கொண்ட பெருமானே போற்றி
போற்றி
முக்குடை நிழல் அமர்ந்த மூலவா போற்றி போற்றி
காதிவினைகள் அறுத்த
கர்த்தாவே போற்றி போற்றி
எண்குணம் நிறையப் பெற்ற
எம்மானே போற்றி போற்றி 744
முக்காலம் முழுதும்
உணர்ந்த முதல்நிலை இறைவா போற்றி
எண்வினை எல்லாம்
அழித்த என் ஞானத் தலைவா
போற்றி
அழிவிலா நல்லறம் அளித்து
ஆன்மனை வென்றாய் போற்றி
அந்நிலை நானும்
பெற்றிட அருளுவாய் என தொழுதான் 745
அணைந்திடா விளக்குகள்
எரிய நாலு கோடி பொன் கொடுத்தான்
அருகனின் வழிபாட்டிற்கு
நூறு பழம் பதிகள்
தந்தான்
நூறு மதயானைகளையும்
நூறு கொடியுடை தேர்களையும்
பொன்மணி மாலைகளோடு
பெருமானின் திருவடி சேர்த்தான் 746
அரன்மணை திரும்பிய
மன்னன் அரியணையில் வீற்றிருந்தான்
சுநந்தையாம் தன் அன்னைக்கு பெருந்தேவி
பட்டம் தந்தான்
தன் இளவல் நந்தட்டனை நாட்டின்
இளவரசன் ஆக்கினான்
வளம்
செழித்து ஓங்கிய நாட்டை
வழங்கினான் தம்பிக்கு நம்பி 747
நபுல விபுல தம்பிகளுக்கு மன்னர்
மகளை மணக்க வைத்தான்
பதுமுகன் முதலிய
நண்பர்களை பல நாட்டு அரசனாக்கினான்
ஏனாதி மோதிரத்தையும்
செம்பொன் பட்டயத்தையும்
நன்மணி பொருள்கள்
பிறவும் நன்றியுடன் மகிழ்ந்து
தந்தான் 748
உலோகபாலன் விசயனுக்கு
உயர்ந்த பல சிறப்புகள்
செய்தான்
குதிரைகள் பூட்டிய
தேர்களும் பரிகளும் கரிகளும்
தந்தான்
தன் மாமன் கோவிந்தனுக்கு கட்டியங்காரன்
உடமைகள் தந்தான்
அமுதசுரபி வழங்குதல்
போல அனைவருக்கும் வழங்கி நின்றான் 749
பார்புகழ்
அரசியர் பட்டம் பத்தினி எண்மரும் பெற்றனர்
அரசியர் ஒவ்வொருவர்க்கும் ஐந்தரை கோடி
பொன் கொடுத்தான்
சாந்துக்கும் உணவுக்குமாக தினம் ஆயிரம்
பொன் கிடைக்கும்
அருகினில் உள்ள நிலங்களை அளித்திட்டான்
தானமாக 750
சுதஞ்சண நல் தேவனுக்கு சுந்தர
கோயில் அமைத்தான்
பசும்பொன்னால் உருவம்
செய்து குடமுழக்கு செய்து
வைத்தான்
கோயில் சேவைக்கு
மான்யமாக பல ஊர்கள் தானம் தந்து
அவன்
வரலாற்றை நாடகமாக நாடெங்கும்
நடக்கச் செய்தான் 751
ஒளிவிடும் பொற்கலம்
ஒன்றில் நெற்பொறி நிரையச்
செய்து
அம்மியும் அக்கலின்
மேலே ஆவின் பால் நெய்யும் வைத்து
சிறுவிரல் தருப்பை
அணிந்து தருப்பையால் நெய் மந்திரித்து
ஓமத்தீயை வளர்ப்பதற்கு
உரியன செய்தனர் அங்கு 752
சமிதைகளில் நெய்யைப்
பெய்ய தீத் தெய்வம்
செழித்தோங்க
ஆழி
மேல் வியாழன் தோன்ற முரசு
முழவொடு சங்கு முழங்க
வேற்படை மன்னர்கள்
எல்லாம் வேந்தனை மகிழ்ச்சியில் வாழ்த்த
அரசருக்கு அரசரான
சீவகன் கலசநீரை ஓமத்திலிட்டான் 753
இருகரங்கள் மூடிய முகத்தை இலக்கணை
தோழியர் பிரித்தனர்
இளந்தளிர் போன்ற கைகளை இதமாக மெல்ல விடுத்தனர்
வளைகொண்ட இடக்கரத்தை
வாள்வேந்தன் சீவகன் பற்றி
ஓமத்தை வலம் கொண்டு வந்து அமர்ந்தனர் பொன்னாசனத்தில் 754
பொன்கடைந்த கால்கள்
நிறுத்தி பொன்மணி முத்து விமானம் வேய்ந்து
தேன்நிறை மலர்மாலைகளும்
தென்றல் மணப் புகையும் சாற்றி
அன்னத்தின் இறகு போன்ற அடர்பஞ்சு
மணவறை மஞ்சில்
நம்பியும் நாயகியும்
சேர்ந்து நாகம் போல் பிணைந்தனர் அங்கு 755
மன்னன் செய்த அறத்தினாலே மாதம் மும்மாரி பெய்ய
நாடெல்லாம் விளைவு
பெருக நல்ல செழிப்பில்
மக்கள் வாழ
போகபூமி உத்திரகுருவும் பொன்னுலகான
தேவலோகமும்
நாணின தத்தம்
நிலையில் நலிந்தது அதனதன் பெருமையை 756
வளைஞரின் வாயில் முன்னே
வாளைமீன்கள் மகிழ்ந்து துள்ள
வேடனின் சிறிய குடிசையில்
வெண்புள்ளி மான்கள் ஆடி நிற்க
கொலை களவு பேராசை நீங்கி
கலியுகத்தின் தன்மையை மாற்றி
திரேதாயுகத்தைப் போல சீவகன் ஆட்சி செய்தான் 757
இலக்கணையார் இலம்பகம் முடிவுற்றது.
13 . முக்தி இலம்பகம்.
1. விசயை துறவு :
எண்வினைகள் முற்றும்
அறுத்த எண்குணங்கள் எய்தப்
பெற்ற
அருகபெருமானின் ஆலயம் அசோக மரச் சோலையிலே
வான் தவழும் முகில்
பிளந்து விண் பரிதி மதி சுடர் கடந்து
சீவக
நம்பி ஆணையாலே சிறப்புடன்
அமைக்கப்பட்டது 758
சச்சந்தனின் அழகு மனைவி தவநெறியாள்
விசையை தேவி
அரிசியும் கீரையும்
காயும் அருங்கனிகள் கிழங்கும்
தந்து
பசியினைப் போக்கிக்
காத்து பரிவுடன் தன்னை காத்து வந்த
துறவிகட்கு தன் புண்ணியத்தை தானமாய்
தந்தாள் தேவி 759
சுடுகாட்டில் மெல்ல வீழ்ந்து
சொல்லொன்னா துன்பம் தூய்த்து
தவப்பள்ளி ஒன்றில்
சேர்ந்து தன் வாழ்வை
உய்யச் செய்த
சண்பகமாலை தெய்வத்திற்கு
சுடுகாட்டில் கோயில் கட்டி
மயில்பொறி வடிவந்தன்னை
மாடத்தே ஓவியம் ஆக்கினாள் 760
சீவகன் பிறந்த
சுடுகாட்டை சிறந்த அறச்சாலையாக்கி
ஐநூற்று ஐந்து மழலைகள் அன்றாடம்
பால் நெய் கலந்த
அறுசுவை உணவு உண்டு அரும்பசி
தீர்த்துக் கொள்ள
கோவிந்தன் உதவிகொண்டு கோதையவள் செய்து முடித்தாள் 761
சீவகனை வளர்த்த சுநந்தையை சிரசினில்
வைத்துப் போற்றி
மாமகனைப் பெற்ற தாயே என மகிழ்ச்சியில்
தழுவிக்கொண்டாள்
மருமகள்கள் எண்மரும்
வந்து அவள் மலரடி விழுந்து பணிய
அரும்பெரும் மக்களைப்
பெற்று அருகன் அறம் காக்க என்றாள் 762
மன்னனை அன்னை அழைத்தாள் மென்னடியை
மலரால் தொழுதான்
உள்ளமும் உடலும்
நடுங்க உரையுங்கள் தாயே என்றான்
உன் தந்தைக்கு
நேர்ந்த தீங்கை ஊரார் கூற நீ அறிவாய்
உனைபெற்றவள் நான் உனக்கு உரைத்திடுவேன் கேட்பாயென்றாள் 763
மங்கை இன்பத்தில்
இருந்து மீண்டு வாரா நிலையினாலும்
மற்றவர் இழிமொழிகட்கு
மனம் நாணாத நெஞ்சத்தாலும்
நல் அமைச்சர்
அறிவுரைகளை நகைத்திட்ட இறுமாப்பாலும்
மதம் பிடித்த களிறாய் மன்னன் மன்மதனின்
பிடியில் இருந்தான் 764
மதிகொண்ட மந்திரிகள் எல்லாம்
மன்னனை விட்டு அகன்றனர்
சுற்றமும் நண்பர்கள்
கூட சொல்லாமல் விலகி சென்றனர்
தீவினை விதைத்து
விட்டால் நல்வினையா பயனாய்
கிட்டும்
அரசன் துணை யாருமின்றி அரண்மனையில்
தனியனானான் 765
பகையரசர்கள் அனைவரையும்
துணையரசர் ஆக்கிக் கொண்டான்
கட்டியங்காரன் ஒருநாள்
கடும் போரால் சூழ்ந்துக் கொண்டான்
மயில்போறி ஒன்றில்
ஏற்றி மனைவியும் நீயும்
பிழைக்க அனுப்பி
மாவீர மன்னனாய்
போரிட்டு மடிந்திட்டார் உனது தந்தை 766
காமத்தின் சுகத்தால்
நீயும் உன் தந்தையை
போல் மூழ்கிடாதே
தாயான நானும் இனி என்றும் துறவினை
ஏற்றுச் செல்வேன்
அன்னையின் சொல்லைக்
கேட்டான் ஆண்சிங்கம் போன்ற சீவகன்
மனமது மயக்கம்
கொள்ள மயங்கியே மண்ணில்
சாய்ந்தான் 767
பிறந்த இம்மண்ணில்
நாம் பிழைத்திருக்கும் காலம் அறியோம்
நிரந்தரமாய் வாழ்வோம்
என்ற நிறையாசையில் நீந்துகின்றோம்
கூற்றுவன் நம் வாழ்நாளை பறித்துண்ணும்
போது நாம்
கண்கள் மூடி அழுதலின்றி கழிந்த
நாட்கள் மீட்களாகுமோ 768
காற்றினால் சிதறும்
முகில்போல் தீவினைத் தாக்கப்
பிரிவோம்
கன்னியர் மேல் ஆசையாலே காமத்தை
விட்டு அகல்வாய்
காமமாம் பெரும் கள்ளை
நீக்கி அருகன் நெறி அறிந்து வாழ்ந்து
கருங்கூந்தல் நரைக்கும்
முன்னே தானமும் தவமும்
செய்வாய் 769
உடம்பென்னும் வண்டி ஓட்டி உருதொழில்
செய்யும் மக்களே
உயிர் என்னும்
அச்சி இற்றால் உடன் வேறு
அச்சி இணையுமோ
பிறந்திட்டோம் மனிதகதியில்
மெய் பொருள் காண விழைவோம்
தவத்தினை ஏற்று காக்க என்னை துறவுக்கு விடுவீர் என்றாள் 770
நிலையற்ற செல்வம்
தன்னை நிலையானது என்று எண்ணி
அறுசுவை உணவுகளை
தட்டில் அனுதினமும் உண்டோரெல்லாம்
தீவினை திரண்டு
வந்து உறுத்த திரண்ட
மாசெல்வம் தொலைய
ஒருவேளை சோற்றுக்காக
ஓடிடும் நிலையும் உண்டு என்றாள் 771
கார்கூந்தலில் மலர்கள்
சூடி கண்ணிரண்டில் கருமை எழுதி
மென்மேனியில் சுண்ணம்
பூசி மெய்யினில் இளமைக்
காத்தோர்
ஈளைக்கட்டி இருமல்
தாக்கி வெண்ணை போல் கோழை உமிழ்ந்து
முதுமையாம் கோலை ஊன்ற இளமையும்
நீங்கும் உணர்க 772
விசயையும் சுநந்தையும்
இணந்து துறவினை மனதில்
கொண்டனர்
சுற்றமும் உறவும்
கண்ணீர் சிந்த பல்லக்கில்
ஏறி சென்றனர்
பண்போடு புகழும்
கொண்ட பம்மை என்னும்
தவச்செல்வியின்
பள்ளியை அடைந்த
இருவரும் பல்லக்கை விட்டு
இறங்கினர் 773
பம்மையை பணிந்து
தொழுது துறவறம் வேண்டி
கேட்க
விறகிலே பற்றும்
தீ போல் தவத்தினை
ஏற்றல் எளிதல்ல
ஐம்பொறி வென்ற நிலத்தில் அறதானமாம்
விதை விதைத்து
நல்லொழுக்க நீர் பாய்ச்சினால் நாடெலாம் போகபூமி என்றாள் 774
அறிவுரை பின்னர்
கேட்போம் அளியுங்கள் துறவென
வேண்ட
பாலினால் சிற்றடிகள்
கழுவி பைந்துகிலால் மார்பைக்
கட்டி
பொன் அணி மாலைகள் நீக்கி
பொதிந்த கருங் கூந்தல்
போக்கி
அருகனின் ஆகம நெறியுடன் அரிய தவம் ஏற்றனர்
இருவரும் 775
புங்கவன் பயந்த ஆகமப் பொருளினை
உணர்ந்த மனதால்
போற்றலின் மகிழ்ச்சியுமின்றி தூற்றலின்
இகழ்ச்சியுமின்றி
உயிர்களுக்கு நேரும்
துன்பம் தன் உயிரின்
துன்பம் ஆக்கி
கலங்கமில்லா சிந்தையராகி
காத்தனர் தவநெறி தருமம் 776
2. நீர் விளையாட்டு :
சீவகன் உள்ளமும்
உடலும் துறவறம் நாடும்
என அஞ்சிய
கன்னியர் இன்பந்தன்னில்
கலந்து தூய்க்க வேண்டுமென
குளத்தினில் சந்தனம்
சுண்ணம் கலந்திட நன்நீரைப்
நிரப்பி
அமைச்சர்கள் அமைத்தனர்
அரசன் நீர்விளையாட்டைத் தொடர 777
நீராடும் தெப்பத் துறையில் நின்றாடும்
மெல்லிய தெப்பங்கள்
மலர்மாலை சந்தனம் சுண்ணம் மழையென பீச்சும் குழாய்கள்
மன்னனுக்கும் மகளீர்களுக்கும்
மனம் போல வகுத்து வைத்து
மன்னனே தெப்பவிழாவில் மகிழ்ந்திடு என்றனர் மந்திரிகள் 778
கழலுவேகன் மகள் தத்தை கட்டியங்காரனாய்
மாறி
பருத்ததன பைங்கொடிகள் பகை வீரர்களாய் நிற்க
மாலையால் மகளீரைத் தாக்கி
பீச்சிடும் குழாயால் நீர் பெய்ய
மதனநீர் விளையாட்டை மகிழ்ச்சியுடன் தொடங்கினார்கள் 779
தத்தையின் பீச்சுக்குழல்
நீரை தாங்கொணா தாதியர் எல்லாம்
தலைவனாம் சீவகன் பின்னே தங்கள் உருவம் மறைத்து நிற்க
கன்னியர் துயரம் தாளா மன்னன் கார்மழை போல் நீரைப் பீச்சி
காந்தருவதத்தை மகளீரை கலக்கினான் காமத்திலகன் 780
அண்ணலின் நீர் மழையால் அஞ்சி ஓடிய ஆரணங்குகள்
ஆடையை நீரில் இழந்ததாலே அவிழ்ந்த குழலால் மேனியை மூடி
தத்தையின் படை மகளீர் சிலர்
வெண் நுரையை ஆடையாக்கி
மன்னன் தங்கள் அழகை நுகர மயக்கத்தில் நின்றார் அங்கே 781
தான் பீச்சும் நீர்தாரைகள் தத்தையை வருத்தும் என்று
அஞ்சிய மன்னன்
அங்கு அசைவற்று சிலையாய்
நிற்க
தத்தைத் தன் குழலை மாலையாக்கி
தலைவனின் கைகளைக் கட்டி
கொம்பினைத் தழுவும் கொடியாய் கொற்றவன் மேல் படர்ந்திட்டாள் 782
3. இருது நுகர்வு
:
( முதுவேனில். )
முதுவேனல் பருவம்
தரும் முழுவெம்மை தாங்கா
மன்னன்
சந்தனக் குழம்பில்
உலவி தணியாத காம சுகத்தால்
பாட்டையும் கூத்தையும்
கண்டு பன்மணி கொடி மகளீரை
மருவியே தாகம் தணிந்து முழுவேனில்
பருவம் கழித்தான் 783
( கார் )
கருமுகில் அலைந்து
மோத கடும் இடி முழங்கி ஒலிக்க
நடுங்கிய மெல்லிடை
நங்கையர் நம்பியை நாகமாய்
தழுவ
சிணிங்கின சிலம்புகள்
காலில் சிரித்தன மேகலை இடையில்
கார்கால மழையைப்
போல காமத்தில் கழிந்தது கார்பருவம் 784
( கூதிர் )
கார்காலம் கடந்த பின்னர் தொடர்ந்து
கூதிர் பருவம்
குணமாலை முன் ஊடல் கொண்டாள்
சீவகனை பின் கூடி மகிழ
நங்கையே உன் முகவொலியால் நாணியது
வான் நிலவு அங்கே – என
அவள்
ஊடலை முழுதும் நீக்கி
கூடியே கூதிர் காலம் கடந்தான் 785
( முன்பனி காலம் )
கூந்தலில் அகிற்புகை
ஊட்டினர் பச்சிலை மாலைகள் அணிந்தனர்
எலுமிச்சை இஞ்சி இணைந்த
அவல்பொரி மதுவினை உண்டனர்
சிவந்த சண்பகமலரை
நீக்கி மல்லிகை மலரை சூடிய மகளீர்
மன்னனை மருவி அணைத்து முன்பனி
காலம் போக்கினர்
786
( பின்பனி
காலம் )
செந்துகில் அணிந்த
மகளீர் சிறந்த மணிமாலைகள்
அணிந்து
நெருப்புண்ணும் எலியின்முடியால் நெய்திட்ட கம்பளி
ஆடையணிந்து
தேனிசை வாய்ப்
பாடலோடு யாழோடு குழலிசை
சேர்ந்திட
நம்பியை தழுவி மகிழ்ந்ததில் நகர்ந்தது
பின்பனி பருவம் 787
( இளவேனில் )
குரவமலர் கொட்டும் தேனுண்டு
குளிர் சங்கின் தூசிகள்
சிதற
மரவமலர் மதுவை உண்டு வாடைக்
காற்றும் விரைந்து விலக
தென்றலை தூதுவிடும்
காமனை தன் விருந்தாய்
ஏற்றுக் கொள்ள
துளிர் தழைத்து
மலர்ந்திடும் தூய இளவேனில்
வந்தது 788
யாழிசையாய் வண்டொலிக்க குழலோசையாய்
தும்பி பாட
குயில்பாட்டு முழவொலியாக
குளிர்சோலை அரங்கங்களாக
கணவனைப் பிரிந்த
மகளீர் கனியுடல் பசலைக்
கொண்டதை
பாணன் மகரயாழ்
இசைக்க இளவேனில் எழுந்து
ஆடியது 789
மெல்லிடை பாரம் கொள்ளா மெந்தனங்கள் கொண்ட மகளீர்
மேகலையை வளைத்து
கட்டி மென்னடியில் சிலம்புகள் பூட்டி
மன்மதன் தவழும்
மார்பில் மணிமுத்து மாலைகள்
அணிந்து
வாசனை சந்தன சுண்ணத்தோடு வரவேற்றனர்
இளவேனிலை 790
வில்லொத்த புருவத்தின்
கீழ் வீழ்த்திடும் விழிகள்
கொண்டு
சிற்றடிகள் சிலம்பொலிக்க
சின்னயிடை கொடியென துவள
இடையணி மேகலை நாதமும்
இள மேனியில் ஐந்து வாசத்துடனும்
மயில் கூட்டம்
போல மாதர்கள் மலர் பொழிலில் மகிழ்ந்தனர் 791
4. புதல்வர் பேறு :
சீவகன் மனைவியர்
எண்மரும் சேர்ந்து மகிழ்ந்த
காலத்தில்
நம்பியின் நல் ஆற்றலுடன் நல்லதோர்
மகவு வேண்டினர்
இளவயிற்றில் கருவது
தங்க இலை வயிறு பருத்து
திரள
தோள் மெலிந்து முகம் வெளிற பஞ்சணை
கொண்டனர் எண்மரும் 792
அஞ்சுகம் போன்ற எண்மரும் அழகிய வலம்புரிச் சங்காய்
ஈன்றனர் எட்டு மகவுகள் இன்பத்தில்
வீழ்ந்தது இராசமாபுரம்
மங்கல முரசுகள்
முழங்கின மன்னனும் மகிழ்ச்சியில்
ஆழ்ந்தான்
பொன்
பொருள்களை தானமாக வரையின்றி வாரி வழங்கினான் 793
யாழ் குழல் கொம்பு முழவுகள்
இசைத்தன அரங்குகள் எல்லாம்
சுதஞ்சண தேவன் வந்தான் நம்பி கதையை நாடகமாக்கினான்
சோதிடர்கள் ஒன்றாய் சேர்ந்து
கோள் குறித்து ஜாதகம் எழுதினர்
ஈராறு நாட்களில் தொட்டிலிட்டு எண்மருக்கும் பெயர்கள்
எழுதினர்794
சச்சந்தன், சுதஞ்சணன்,
தரணி, கந்துக்கடன், விசயன், தத்தன்
பரதன், கோவிந்தன் என வரிசையில்
பெயர்களை வைத்தனர்
அரசியல் அறநெறிகளோடு
படைக்கல பயிற்சி பெற்றனர்
களிரென எண்மரும்
வளர கழிந்தன ஐயாறு ஆண்டுகள் 795
5. சோலை நுகர்வு
மந்தளிர் நிற மேனி அழகில்
மல்லிகைமாலை என்னும் தோழி
மன்னனும் மகளீரும்
இருக்க மன்னனை வாழ்த்திச்
சொன்னாள்
இளமாறன் மலர்க் கணைகளுடன் இருக்கின்றான்
பூம்பொழிலில்
காமனே உன் கிழத்திகளுடன் காண்பாய்
அவனை அவ்விடத்தில் 796
வண்டுகள்
தும்பிகளுடன் சேர்ந்து வடிகின்ற
தேன் உண்டு துயில
மாசிலா மலர் படுக்கை விட்டு
மயில்கள் துயில் நீங்கி
எழ
வெண்துகில் சிறகைக்
கொண்ட பெண் அன்னங்கள் விலகி ஓட
சீவகன் தன் தேவியருடன் செம்பொழிலை
வந்தடைந்தான் 797
ஊஞ்சலை மரத்தில்
கட்டி காற்றினில் மிதந்து
ஆடி
வேடுவ மகளீர்
போன்று வித விதமாய் மலர்கள்
கொய்து
குன்றுகள் பலவற்றில்
ஏறி குரலொலி எதிரொலியாய் கூவ
எண்மரும் பிரிந்து
சென்று இயற்கையின் இன்பம்
தூய்த்தனர் 798
இன்னிசையாய் யாழை மீட்டி இதயத்தின்
வேட்கையை பாடி
சீவகன் செவியினை அடைந்து சேர்ந்திட
வருவான் என்று
ஏங்கிடும் மனதுடை
மாந்தர் எண்ணத்தில் மனமது சோர
மலரினை நாடும்
வண்டாய் மங்கையரை அணைத்தான்
நம்பி 799
கலவியின் இன்பம்
தூய்த்து காளை போல் சென்றான் மன்னன்
களவொழுக்கம் நாடிய கடுவன் காதலி மந்தியை அழைத்து
கனி ஒன்று அதற்குத் தர காவலன் கடுவன்
மந்தியை விரட்டி
அக்கனியினை உண்டு மகிழும் காட்சியை கண்டான் அரசன் 800
( கடுவன் : ஆண் குரங்கு, மந்தி
: பெண் குரங்கு )
கைப் பழத்தை
இழந்த மந்தி கட்டியங்காரனுக்கு ஒப்ப
கனியினை உண்ணும்
காவலன் தன்னிலைக்கு ஒப்பான்
என்றும்
நினைவினில் எண்ணிய
வேந்தன் நிலையற்ற வாழ்வை
நீக்கி
துறவறத்தை ஏற்றோமானால்
துன்பங்கள் நீங்கும் என்றான் 801
எளியவர்கள் செல்வம்
தன்னை வலியவர்கள் வேரோடு
கொள்ளல்
வரம்பினை மீறிச்
செய்யும் குறும்பினை பிறவியில் காண்டோம்
ஐம்புலன்கள் அடக்கி
ஆண்டு அறநெறி ஒழுக்கம்
காத்து
தவநெறியை ஏற்றுக்
கொண்டு வீடுபேறடைய எண்ணினான் 802
காமமாம் கொடிய கள்ளினை கண்மூடி
பருகிய எனக்கு
இக்காரிருள் நீங்கும்
படி காட்டிய கடுவன்
மந்தியும்
தேவர்களாய் காட்சி
தந்து தேர்ந்த நல் வழியில் செல்ல
நல் ஞானத்தை மீட்டுத்
தந்து துறவினைக் காட்டியதென்றான் 803
6. அறிவர் சிறப்பு
:
நறுமண எண்ணைய்
பூசி நன்னீரில் குளியல்
ஆடி
அகிற்புகை மணத்தை
ஊட்டி ஆடை அணிகலங்கள்
அணிந்து
அவிழ்ந்திட்ட கூந்தல்
திருத்தி அழகிய மங்கையர்கள்
சூழ
அருகனின் கோயில் சென்றான் அரசற்கரசன்
சீவகன் நம்பி 804
முக்குடை நிழலில்
அமர்ந்த முக்காலம் அறிந்தவன்
அடியை
மும்மையில் பற்றி பணிந்தோர் இம்மையில்
இனிதே வாழவர்
எண்வினைகள் அறவே அறுத்து எண்குணம் கொண்ட நாதனின்
மலரடி வணங்குகின்றேன் மறுபிறவி
நீக்கென வேண்டினான் 805
வீட்டினை விரும்பி
கேட்கும் வேட்கையில் சீவக மன்னன்
நறுமண பல் மலர்களாலும் நல்ல சுண்ணப் பொடிகளாலும்
சந்தன குங்குமக்
குழம்பினாலும் அகிற் புகை தூபத்தாலும்
அருகனுக்கு அர்ச்சனை செய்து அவனடி வணங்கி தொழுதான் 806
7. அறவுரை :
விண்ணிலிருந்து இறங்கி
வந்து வீங்கெழில் கொண்ட நாதனை
வலம்
வந்து வணங்கி தொழுது வண்ண பளிங்கு கல்லில்
நின்ற
சாரணர்கள் இருவரைக்
கண்ட சச்சந்த மாமன்னன்
மகன்
எதிர்வந்து வாழ்த்தி
வணங்கி எளிமையாய் நின்றான்
சீவகன் 807
(சாரணர் : சமண முனிவர். தல சாரணர்,
ஜல சாரணர், பல சாரணர், பஷ்ப சாரணர்,
தந்து சாரணர், சதுரங்குல சாரணர், சங்க சாரணர்,
ஆகாச சாரணர் என எட்டு வகையினர். இருவர்
இருவராக சேர்ந்து தர்மோபதேசம் செய்வர்.
)
இம்மண்ணினை ஆளும் நெறி மனதினில்
இன்பமா என்று
சாரணர் சீவகனைக் கேட்க தன் துறவெண்ணம்
அறிந்ததை வியந்து
பிறப்பு அறும் வழியை அறியேன்
பெருந்தீவினை விலக தவம் ஏற்று
மும்மணிகள் அடையும் நெறியை எனக்கு நீவீர்
அளியுமென்றான் 808
நிலையற்ற உடலின் அழிவையும் நாற்கதி உழலும் துன்பத்தையும்
உயிரினது இயல்பு தன்மையும் உள்ளத்து ஒழுக்க நிலையையும்
நுண்ணிய நல் அறங்களையும் நற்காட்சி பெரும் பயனையும்
நாங்கள் உனக்கு சொல்வோம் நல்வினை உடையோய் கேளென்றனர் 809
8. பெறுதற்கு அருமை
:
தென்கடலில் இட்ட கழி கடல் அலையில் மிதந்து சென்று
வடகடலில் இட்ட நுகத்தடியின் துளையினில் பொருந்துதல் போல்
பல நூறு ஆண்டுகளில்
பலப் பிறவிகள் எடுத்து தப்பி
மனித பிறவி எடுத்ததாகும் மன்னவா
நீ அறிவாய் என்றார் 810
ஊனையே உணவாய் கொள்ளும் காட்டில்
வாழ் வேடர்களும்
கடுங்குளிரில் உடல் நடுங்கும் பனிநிலத்து குறும்பர்களும்
கயல்களே தங்கள் உணவென்று கடலலை வாழும்
பரதவர் கூட
மனிதனாய் பிறந்திட்டாலும் மண்ணில் இழிகுல பிறப்புதனே 811
கூன் குருடு செவிடு நீங்கி குற்றமற்ற உடலுடனும்
நன்னிலமும் நற்குலமும் நல்லறமும்
நற்செல்வத்துடனும்
அறநெறிகள் சிறிதும்
பிறழா அருகனின் ஆகமம் அறியும்
மனிதபிறவி எடுப்பதென்பது மலைதோண்டி எலி பிடித்தலாகும் 812
9. நிலையாமை :
பெறற்கரிய பிறவி பெறினும்
நிறைந்த ஆயுள் கதி என்பது
தணலில் இட்ட வெண்ணெய்யாகும் தண்ணீர்
மேல் குமிழியாகும்
கருவுற்றும் கலையும் உயிர் கைமகவில்
மறையும் நிலை
பெயர் சூட்டும் காலத்திலும் போன உயிர் போனது தான் 813
எழில் மலர்போல்
வளர்ந்து எழுத்தோலை பிடிக்கும்
கால்
எமன் வந்து அழைத்திடலாம் ஈன்றோர்கள்
கதறிடலாம்
மணங்கொண்டு மங்கையோடு
மணவாழ்க்கை புகும்போது
காத்திருந்து இறப்பு வரும்
கருத்தினில் கொள் நல்வேந்தே 814
கைபிடித்த மனைவியுடன் காலங்கள்
பல வாழ்ந்து
மனைவி மக்கள் தினம் சூழ்ந்து மங்கலமாய் வாழ்கையிலே
கடல் மிதக்கும் கப்பலிலே
கடும் வெள்ளம் பாய்வது போல்
நோய் என்னும் புலி பாய்ந்து
நொந்து அழியும் இந்த உடல் 815
காமத்தின் நுகர்ச்சி அற்று கருத்தினில்
லட்சியம் இற்று
ஊமைபோல் குறிப்பு சொல்லி ஒன்பது வாயில் வளம் இழந்து
தூய்மை அற்ற உடம்பாகி சுற்றத்தார்
புறக்கணிக்க
சுடுகாட்டு ஈமத்தீயில்
சுடும் சாம்பல் ஆவது உண்மை 816
மண்ணுலகில் வீரம் காட்டி விண்ணுலகில் பகை வென்று
மாபெரும் செல்வம் பெற்று மாரியை போல் வாரித் தந்து
மன்னர்களுக்கு மன்னராகி
ஆண்டிட்ட அரசரெல்லாம்
மண்ணுலகில் இன்று இல்லை நிலையாமையை உணர்க என்றார் 817
10. நரககதி துன்பம்
:
வெவ்வினைகள் உயிரில் சேர உடல் விட்டு உயிர் பிரிய
தீந்தணல் நரகம் தன்னில் தலைகீழாய் விழுந்து உழல
செய்திட்ட தீவினைகட்கு ஏற்ப கிடைத்திடும்
துன்பம் தன்னை
நினைத்தால் நெஞ்சம் நடுங்கும் நிலையினை
உனக்கு சொல்வேன் 818
ஐம்பொறிகள் அடக்கம் இன்றி எண்வினைகள் புரிந்த நரகர்
ஈட்டியும் வேலும் வாளும் எரிந்திடும் பெரும் தீயுமுள்ள
இடத்தினில் குப்புற விழ உடல் தசைகள் எட்டாய் சிதற
எண்திசையும் பரவி கிடக்க
எல்லையற்ற துன்பம் தூய்ப்பர் 819
ஊன்களை உண்டு வாழ்ந்து உயிரினை வளர்த்தோர் எல்லாம்
பைந்கொடி மகளீர் ஆடும்
பந்து போல் பொங்கி எழுந்து
தீயினில் வீழ்ந்து மீண்டும் அத்தீயினில்
விழுந்து விழுந்து
உடல் உடைந்து உருகிடுவர் உள்ளத்தில் கொள்
மன்னா என்றார் 820
பிறவுயிரை வதைத்து கொன்று பெரும் பிழை செய்தோரெல்லாம்
பெருமுனைகள் கூரிய முள்ளை
உடலெல்லாம் பொருந்த செய்து
முள்ளிலவ மரத்தில் ஏற்றி மூட்டுவார்
பெரும் நெருப்பை
வதைபட்ட உயிர் முடிகொன்றாய் தசை அறுந்து தீயில் வீழும் 821
உடும்பு இன ஊனைத் தின்றோரை
வேட்டைநாய் கடித்து குதறும்
வாளைமீன் ஊனை உண்டோர் வாயது நிறையும்உருக்கிய
செம்பால்
பிறன்மனை தூய்த்தோர் எல்லாம்
வெந்தணல் பாவையை அணைப்பர்
உயிர்களை வதைத்து வாழ்ந்தோரை உடல்கருக
இட்டு வறுப்பர் 822
நரகினில் வீழ்ந்தோர்க்கெல்லாம் நஞ்சது உணவாய் அமையும்
எந்திர ஊஞ்சலில் ஏற்றி எரிநெருப்பின் மேல் எறிவர்
செக்கினில் உடலை சிதைப்பர் சிலரது
மார்பை பிளப்பர்
தடியினை கையில் ஏந்தி சினங்கொண்டு நையப்புடைப்பர் 823
11. விலங்குகதி துன்பம்
:
கொடும் நரகில்
துன்பமுறும் தீவினை நரகர் போல
விலங்குகதி பெற்ற உயிர் வேதனையுறும்
அப்பிறவியில்
வெம்புலியின் முழக்கம்
கேட்டு மான்கள் கொள்ளும் மாறத் துன்பம்
பகைவேந்தர் உன்னைக் கண்டு
பட்ட துன்பம் போல ஆகும் 824
தண்ணீரில் குளிப்பாட்டி
தலை முழுதும் மஞ்சள்
பூசி
கழுத்தினில் மாலையிட்டு
கடவுளுக்கு பலியாகும் ஆடும்
கடலில் வாழும்
வாளை மீனை கறியுணவு
சமைத்து உண்ண
கத்தியியால் வெட்டும்
போது கதறும் வினை யாரைச் சேரும் 825
கடல் பாதுகாவல்
அற்று காடு பாது காவல் இன்றி
குடல் பாது காவல் நீங்கி
குன்று மலை காவல் போக்க
முற்பிறப்பின் தீவினையால்
இப்பிறப்பில் விலங்கான உயிர்கள்
படுந்துயரம் அத்தனையும் பதைபதைத்து
மனம் வேகும் 826
பெரும் சுமை இழுக்கும் எருதுகள்
புண்களில் புழுக்கள் நெலிய
காக்கையும் கொத்தித்
திண்ணும் கவனிப்பார் யாரும்
இன்றி
மதயானைகள் சிங்கத்தாலே
மாண்டிடும் தம் உயிரை விட்டு
மாபெரும் தீ சூழ்ந்த வனத்தில் மறித்திடும் விலங்குகள் உயிர் 827
பெருமுனியை இகழ்ந்தோர்
பலரும் பிறர் காண உண்ணும் பாவிகளும்
பரத்தையாய் வாழும்
பெண்களும் விலங்கினத்தில் பிறப்பெடுத்து
விலங்கினை விலங்குகள்
தாக்க வேல் கொண்டு
மனிதர்கள் தாக்க
அதனதன் பசியைப் போக்க அடுத்த உயிரை கொன்று
புசிக்கும் 828
12. மக்கட்கதி
துன்பம் :
தன் வயிற்று
கருப்பையுள்ளே துளிர்விடும் உறுப்புகள்
நாளில்
ஈரலாம் தசையை மூடிய போர்வையை
புழுக்கள் மொய்க்க
நீர் நிறை சகதியின் வழியே வெளிவந்த மக்கள்
தம் உடலை
நிலையென எண்ணிப் பார்த்து நித்தமும் வியப்பினைக்
கொள்வர் 829
நங்கையர் மேல் கொண்ட ஆசையால்
நெஞ்சிலே மயக்கம் கொண்டு
களவினை நாடிச்
செய்து கழுமரத்தில் ஏற்றப்பட்டு
மரக்கலம் கடலில்
மூழ்கி மக்கள் படும் துன்பம் எல்லாம்
நரகத்தின் கொடுமையை
விட நால் மடங்கு
பெரியதாகும் 830
பகைநாட்டின் செல்வர்
பொருளை பெறுவதற்கு அரசன் முன்னே
இருகரங்கள் கட்டப்பட்டு
புகையெரி நெருப்பில் சுட்டு
தோல் வாரால்
அடிக்கப்பட்டு தோண்டப்பட்ட கண்களோடு
மனிதர்கள் தூய்க்கும்
துன்பம் நரகத்தை விடவும்
கொடிது 831
மன்னனாய் ஆளும் போது போர் செய்தல் மிகவும்
துன்பம்
வென்றிட்ட நாட்டை
ஆளல் வெந்தணலுக்கு ஒப்ப துன்பம்
பிணியது உடலைத்
தாக்க பொங்கிடும் பொருந்தாத்
துன்பம்
மங்கையரால் மகிழும்
இன்பம் மறுமைக்கு மாபெரும்
துன்பம் 832
விரும்பிடும் ஆசைகள்
எல்லாம் விலகிடும் போது துன்பம்
விரும்பிய மனைவி மக்கள் பிரிந்திடும்
போது துன்பம்
துள்ளிடும் இளமை நீங்கி தளர்ந்திடும்
முதுமை துன்பம்
எழுத்தறிவு இல்லா போது இகழ்படுதல்
துன்பமோ துன்பம் 833
13. தேவகதித்
துன்பம் :
கருவினில் பிறவா பேறும் கால் நிலம் தொடா நிலையும்
மேனியில் வாடா மாலையும் பரிதியின்
ஒளிகொள் மேனியும்
ஓவியமாய் எழுதா அழகும் ஒளி வீசும் மணிமுடியும்
வானவில் போல விளங்கும் தேவகதி
எடுத்த உயிர்கள் 834
அழகிய மூங்கில்
தோள்கள் அனிச்சைப் பூ மெல்லிய
அடிகள்
செவ்வரி படர்ந்த
கண்கள் தேன் சொட்டும்
பவள இதழ்கள்
சிந்திடும் முத்துப்
புன்னகை சிறுயிடை தாங்கா
தனங்கள்
தேவரின் தேவியர்
அழகை திருமகளும் நாணிப்
பார்ப்பாள் 835
புருவத்தை வில்லாய் கொண்டு பொன் விழிகள் அம்பைப்
பொழிய
பொன்னணி அணிந்த மேனியில் புனுகுடன்
சுண்ணம் மணக்க
தேவியரைக் கண்ட தேவர்கள்
சிறுயிடை நெலிந்து குழைய
கைக்கொண்டு இறுகத்
தழுவி காமமாம் கடலைக்
கடப்பர் 836
இன்னிசைக் கருவிகள்
முழங்க இடைகொண்ட மேகலை சிரிக்க
செவ்வாழைக் கால்களில்
தவழும் சிலம்புகள் சிளிர்த்து ஒலிக்க
கயல்விழி கண்கள்
காதலால் காதோடு மோதித்
திரும்ப
தேவியர்கள் ஆடும்
ஆடலைத் தேவர்கள் கண்டு களிப்பர் 837
தேவகதி நீங்கும்
காலம் மூவைந்து நாட்கள்
முன்னே
விழிகளின்
இமைகள் இமைக்கும் எழில் அணி மாலைகள் வாடும்
நஞ்சுற்ற அமிர்தம்
உண்டு நாட்களைக் கழித்தோம்
என்று
துன்பத்தில் ஆழ்ந்து
உழலும் துன்பமும் தேவர்க்கு
உண்டு 838
தேவராகப் பிறந்திட்டாலும் பிற தேவரால்
சபிக்கப்பட்டு
அவர்கள் இடும் ஏவல் கேட்டு
அதற்கஞ்சியே பணிபுரிந்தும்
வாகன தேவதைகளாகி
வணங்கியே சுமந்து சென்றும்
வருந்துவதும் துன்பம்
ஆகும் தேவகதி அடைந்த
பின்னும் 839
14. நற்காட்சி :
புனிதமரம் அசோகம்
நிழலில் பொன் சிம்மாசனம் அமர்ந்த
இளாம்பரிதி எழில் கொண்டு இருள் விலக வீற்றிருக்கும்
எம்பெருமான் அருகதேவனை
தேவர்களும் வாழ்த்திப் போற்ற
அத்தேவன் திருவடியை
யான் என் சிரமேற்கொண்டேனென்றார் 840
ஒளிர் பொன் மதில்கள் மூன்றும்
பொன்முத்துக் குடைகள் மூன்றும்
வலம் வந்து மலர்கள்
தூவி வணங்கிடும் உலகம் மூன்றும்
வினை அறுக்கும்
படைகள் மூன்றும் கலங்கா உயர்
அதிசயம் மூன்றும்
ஆகமங்கள் மூன்றும்
தந்த அருகன் நம்மை ஆட்கொள்வார் 841
( 3 மதில் : உதயதரம், பிரீதிதரம்,
கல்யாணதரம். 3 குடை : சந்ராதித்யம், நித்ய
வினோதம், சகலபாசனம். 3உலகம் :நாகலோகம்,பூலோகம், சுவர்க்கலோகம்.
3 படை : நற்காட்சி, நல்
ஞானம், நல் ஒழுக்கம். 3 அதிசயம் : சககாதிசயம், கர்மஷாயதிசயம், தெய்விகாதிசயம். 3 ஆகமம் : அங்காகமம், பூர்வாகமம், பகு சுருதியாகமம்.
)
தவத்தோரைப் பேணிக்காத்து
வேண்டுதல் வேண்டாமையற்று
வீட்டினை அடையும்
மனதால் வீதராக பெருமானைத்
தொழுது
தவநெறிநிலை தவறுவோரை
தவநெறியில் மீண்டும் நிறுத்தி
இழிந்தவர் சேர்க்கை
நீத்தோர் பரமாகமம் அறிந்தோராவர் 842
வெஞ்சினத்தை விட்டு
நீங்கல் வேருடன் செருக்கை
அழித்தல்
அருகனின் அறத்தில்
நின்று அடியோர்க்கு இனியோனாதல்
அறத்தினை அறிந்து
கூறல் அனைத்துயிர்க்கும் அன்பு காட்டல்
அனைத்தையும் உடையோரென்றால் ஆகமம் தெளிந்தோராவர் 843
பரமாகம வழியில்
நடப்போர் விலங்குகதி என்றும் சேரார்
மனிதகதியில் பிறந்தார் எனில் மங்கையராய்
பிறவார் என்றும்
கீழான முத்தேவர்
ஆகார் கடும் நரகில்
வீழார் என்றும்
அருகன் அளித்த பரமாகமோஅத்தனை பலன் அளிக்குமென்றார் 844
15. சீலம் :
பதினெண்ணாயிரம் சீலாச்சாரம்
பற்றற்ற துறவிகட்ளுக்கு அறமாகும்
போரில் தம் உடலைக் காக்கும்
போர் கவசம் போன்றது சீலமாகும்
ஐம்பொறிகள் ஆசை அறுத்து நல்வினை
நல்கும் சீலம்
` தீவினையை அறவே மாய்க்கும் சீலமாம்
நெறிகள் வேண்டும் 845
பிறன்மனை பேணாதிருத்தல்
போற்றிடும் சீலம் ஆகும்
மயக்கிடும் கள்ளைத்
நீக்கல் மனிதர்கட்கு நல் சீலமாகும்
தேன் ஊன் தவிர்த்து வாழ்தல்
சிறந்தவர்கள் சீலம் ஆகும்
இல்லற நெறியில்
நிற்போர் இத்தனை சீலமும் கொள்வர் 846
16. தானம் :
நன்னிலம் பெற்ற விதை
போல் நன்றாக செழித்து
வளர்ந்து
செல்வத்தைப் பிறர்க்கு
தருதல் தலையாய தானத்தின்
இயல்பு
பாழ்நிலம் பட்ட விதை
போல் பயனின்றி வளர்ந்தோர் பலன்
மின்னல் என விரைவில் மறையும்
இடைப்பட்ட தானம் இயல்பு 847
ஐம்பொறியை ஆமையாய்
அடக்கி அத்திகாயங்கள் ஐந்தை ஆய்ந்து
ஐம்பெரும் பாவங்கள்
நீக்கி பழித்தலும் புகழ்தலும்
இன்றி
வருவது ஊழ்வினை
என்றெண்ணி ஆகம நெறியைக்
கொண்டு
தவத்தோர்க்கு அளிக்கும்
தானம் தலையாய தானம் ஆகும் 848
இந்நெறிகள் எதுவும்
இன்றி இருப்பதை அள்ளிக்
கொடுத்தால்
இல்லற வாழ்க்கையில்
அது இடைப்பட்ட தானம் ஆகும்
விலங்கினை வதைத்துக்
கொன்று ஊன் உணவு கொடுப்போரும்
அதை
உண்டிடும் பாவிகளும் அடையும்
தீவினை கூறல் அரிது 849
17. தானப்பயன் :
கொல்லன் துருத்தி உலையில் பழுத்திட்ட
இரும்பின் மீது
கொட்டிடும் நீரை உறுஞ்சும் கொதித்திடும்
அவ்விரும்பைப் போல
தானத்தின் புண்ணியத்தை
தன் உயிர்பெற்றுக் கொண்டு
தான் நின்ற உடம்பினை ஒழித்து போகபூமியில்
உயிராய் பிறக்கும் 850
தலையாய தானம் செய்தோர் போகபூமி
உயிராய் பிறந்து
தங்களின் விருப்பம்
போல இன்பத்தை நுகர்ந்து
கழிப்பர்
இடையாய தானம் செய்தோர் கர்மபூமியில்
கருவாய் தரித்து
செல்வமும் செருக்கும்
பெற்று தீவினையில் மயங்கி
கிடப்பர் 851
18. சீலப்பயன், காட்சிப்பயன்
:
சீலத்தின் பயன்கள்
பெற்றோர் ஈரெட்டு கல்பலோகத்தில்
தேவர்களாய் பிறந்து
என்றும் தேவசுகம் அனுபவிப்பர்
நற்காட்சி அமுதம்
உண்டோர் கடல் சூழ்ந்த
உலகம் தன்னை
ஒருகுடை கீழ் கொண்டுவந்து
உலகாளும்
சக்ரவர்த்தியாவர் 852
19. வீடுபேறு :
பொருளினை அறிதல் ஞானம்
பொருள் தன்மை தெளிதல்
காட்சி
ஞானமும் காட்சியும்
சேர்ந்தால் நல்லொழுக்கம் தானே வரும்
இம்மூன்று மணிகளும்
சேர்ந்து இருவினை மரத்தை
அழிக்க
இருவினை அற்ற உயிர்கள் வீடுபேறு
அடையும் என்பர் 853
கடையிலா அறிவினோடும்
கடையிலா காட்சியோடும்
கடையிலா வீரியத்தோடு
கடையிலா இன்பம் கொண்டு
நாமமும் கோத்திரம்
இன்றி ஆயுளற்ற அழியா இயல்பால்
எண்குணம் பெற்றதாலே விண்ணவர் தொழ வீட்டை அடையும் 854
20. பிறவிகள் அறவுரை
:
சாரணர் கூறிய அறவுரைகளை சிந்தையில்
பதித்த சீவகன்
முற்பிறப்பில் தன் நிலையும் முடித்து
வைத்த பாவத்தையும்
ஐயமற எடுத்துரைத்து
அடியேனுக்கு சொல்லுங்கள் என்றான்
மாதவச் சாரண முனிவரர் மன்னனுக்கு
உரைக்கலானார் 855
அலை காற்று தென்றலாகி
அகிற்புகையை சேர்த்தணத்து
மழைமுகிலாய் காடெல்லாம்
மணம் பரப்பி சூழ்ந்திருக்க
ஞாயிறோடு திங்களும்
சேர்ந்து தங்கள் வழி மறைந்த
போதும்
கேடற்ற நாடாய்
மிளிரும் தரணி போற்றும் தாதகீ நாடு 856
}
தாதகி நாட்டின்
தனி அரசன் தங்கக்
கழலோன் அணிந்த பவணதேவன்
பவணனனின் பட்டத்து ராணி தேவரும் இமையசைக்கும் சயமதிதேவி
காமனின் கணைகள்
கொண்டு களித்திருந்த அவர்களுக்கு
அரிமா நிகர் மகன் பிறந்தான் அசோதரன் என பெயர் கொண்டான் 857
கல்விக் கேள்விகள் கற்று காளையாய் வளர்ந்த
அசோதரன்
பெற்றோர்கள் மனங்குளிர பெண்களை மணம்
புரிந்தான்
மனைவியர் உடன் சூழ மலர் ஒத்த பஞ்சணையில்
காமனின் ஐங்கணைகளுடன்
காதல் போர் புரியலானான் 858
அன்னங்கள் தன் குஞ்சுகளுடன் அலையும்
தாமரைப் பொய்கையிலே
அசோதரன் மனைவியருடன்
அங்கு நீர் விளையாடச்
செல்ல
அஞ்சிய அன்னக்கூட்டம்
அலறி எழுந்து மேல் பறந்து
செல்ல
வானம் என்னும் நங்கை மேனி வெண்துகில் போல் மூடியதங்கு 859
வின் பறக்கா அன்னக்குஞ்சுகள் விழ்ந்தன தாமரை மலர்களில்
அஞ்சிய குஞ்சுகளில்
ஒன்றை அவன் மனைவியர்
விரும்பி கேட்க
காஞ்சுகிக்கி கட்டளையிட
அவன் கைபற்றிய குஞ்சைத் தர
அசோதரன் மனைவியுடன் அரண்மனையை
வந்தடைந்தான் 860
அன்னத்தின் மழலைகளை
அன்போடு மார்பில் அணைத்து
பால்
அமுதம் பலவும் ஊட்டி பாதுகாத்து வருகையிலே
பவணமாதேவன் ஒருநாள்
பங்கஜம் போன்ற குஞ்சுகளை
தாயினை விட்டுப்
பிரித்தது தன் மகன் என்று அறிந்தான் 861
அசோதரனை அன்புடன்
அழைத்து அறவுரைகள் கூறலானான்
தன்
மகவுகள் இல்லை என்று தாய் அன்னம்
பதறும் நிலையில்
அன்னத்தின் மழலையைப்
பிரித்தல் அதை சிறை போல் வைத்து காத்தல்
இவ்விரண்டு தகாசெயல்களும் வினை விளைக்கும் வித்துகளாகும் 862
உயிர்வதை செய்யதிருத்தல் உயர்ந்த
தலையாய அறம்
பொய்யுரை கூறாதிருத்தல்
பொன்னுலக வாழ்வைத்தரும்
களவினை களைந்து எறிந்தால் கடும் நரகம் விட்டுப்
போகும்
பிறன்மனை சேரல் என்பது
பெருந்துன்பத்தில் ஆழ்த்தும் 863
மிகுபொருள் விரும்பாநிலை
மேல் உலகுக்கு ஏணியாகும்
ஐம்பொறிகள் மகிழ்ந்து சேர்ந்தால்
அருளுடன் புகழும் போகும்
எண்வினைகள் அறுத்து
விட்டு எண்குணங்கள் முழுதும்
பெற்ற
அருகன் அடி தொழுதல்
ஒன்றே அனல் நரகை தவிர்க்கும் வழி 864
தரணிவாழ் உயிர்கள்
எதையும் தாயைவிட்டு பிரித்து வைத்தல்
மறுமையில் தன் உறவை
இழந்து மற்றவரால் சிறைவக்கப்படுவர்
தந்தையின் அறிவுரைக்கேட்டு தன் ஆடை பற்றிய
நெருப்பாய் பதறி
அன்னத்தின் மழலைகளை அதன் தாயிடம் சேர்த்தான் அசோதரன் 865
முன்பிறவி எதிலும்
நீங்கள் என் சுற்றமாய்
இருந்ததில்லை
வரும் பிறவிகளிலும்
நீங்கள் உறவுகளாகப் போவதில்லை
தந்தைக்கு எடுத்து
சொன்னான் தான் துறவு கொள்வேன் என்று
பாசமென்னும் தளை அறுபட பவணதேவன் பிறப்பை விட்டான் 866
ஐம்புலன் வேட்கை
வென்று அருகன் நெறி சிரமேற்
கொண்ட
நாற்கதியில் பிறக்க
அஞ்சி நல்தவம் நாடி ஏற்றதனால்
இந்திரனாய் விண்ணுலகம் சென்று ஈடில்லா இன்பம்
தூய்த்து
இவ்வுலகில் மீண்டும் பிறந்தாய் ராசமாபுர சீவகன் பெயரில் 867
21. தாயத்தீவு :
சாரணர்கள் அனைத்தும்
கூறி தம் வழியே சென்ற பின்
சீவகன் செவ்வரி
கண்கள் சிந்தின மண்டிய
கண்ணீரை
எண்பெருந்தேவியர் வருந்த
இன்னுரைகள் ஏதும் இன்றி
அவ்விடம் விட்டு
அகன்று அரண்மனை வந்து அடைந்தான் 868
கொண்டவன் சென்ற பின்பு கடும் வெப்ப மூச்சி
விட்டு
சீவகனின் செல்ல உரையன்றி வேறேது
கேளா நெஞ்சால்
வேந்தன் தோள் தழுவா
நிலையில் வேதனையில் மேனி வாடி
சரிய
பால் நுரை மென்மையான பஞ்சணையில் வீழ்ந்தனர் கொடியாய் 869
இளஞ்சிங்கம் நந்தட்டனிடம்
இடிமுழக்கம் போல் முழங்கினான்
ஏமாங்கத நாட்டின்
பொறுப்பை ஏற்றிட்டு ஆள்வாய்
என்றான்
அண்ணலே அரசு வேண்டேன் அண்ணன்
அடி விரும்பி வாழ்வேன்
என் தலைவன் ஏற்கும் துறவை ஏற்று நான் தொடர்வேனென்றான்
870
தத்தை மகன் சச்சந்தனுக்கு தனிமையில்
அறிவுரை சொன்னான்
செங்கோல் வளையாமல்
காத்து செழிப்புடன் நடத்தி
செல்ல
நல்லமைச்சர் காட்டும்
வழியில் நல் அறம் காத்து நடந்தால்
நெடுநிலப் பரப்பை
நீயும் நின் குடை நிழலில் ஆளலாம் 871
முற்றிய நெல் கதிர்
அறுத்து முழ்ச்சோற்று கவளம் ஆக்கி
யானைக்கு உணவாய்
தரலாம் எவ்வித சேதமும் இராது -
அதுபோல்
முறையான வரிகள்
விதித்து முறையே வரி வசூல் செய்தால்
மன்னனின் ஏவல் கேட்பர் மலைபோல
செல்வம் கொழிக்கும் 872
தேர் ஓட்டும்
வல்லான் ஒருவன் தேறாதை
நிலத்தில் செலுத்தினால்
அச்சோடு தேரும்
முறியும் தேரோட்டி தானும்
வீழ்வான் – அதுபோல்
அரசர்கள் அறமிழந்தாண்டால் அந்நாடே
அழிவதும் இன்றி
மக்களும் துன்பங்கொள்வர் மன்னனும்
ஓர் நாள் அழிவான் 873
பகையினை நெஞ்சில்
வைத்து கருவிடும் களிறு போலின்றி
அருளொடு ஆய்ந்து
சினம் விடல் அரசர்க்கு நன்பொருளாகும்
மக்களால் புகழப்பட்டு
மாய்த்திடும் பொய்மை நீக்கி
மந்திரியை மதித்தானானால் மன்னர்கள் உன் அடியில் கிடப்பர் 874
சச்சந்தனை மன்னன்
ஆக்கி சுதஞ்சணனை இளவரசாக்கி
மற்ற
மகன்கள் மனம் மகிழ முறைப்படி அனைத்தும்
செய்து
தம்பி நந்தட்டன் மகனை தனி நாட்டு குறு மன்னனாக்கி
நண்பர்கள் குடும்பம்
எல்லாம் சச்சந்தனை காக்கச்
செய்தான் 875
22. துறவு உணர்தல்
:
செம்பொன் தகடுகள்
வேய்ந்த சிறந்த மணிகள் சிரம் வைத்து
பகலவன் விலகிச்
செல்ல பெருமாடக் கூடம் வந்து
எழில் தேவியர்கள் எண்மரையும் தன் இருப்பிடம் வருவதற்கு
ஏவலர்க்கு ஆணையிட்டு
எதிர்பார்த்து சீவகன் இருந்தான் 876
மென்னிடை நொந்து
வருந்த மேகலை மௌனமாய்
ஒலிர
சிலம்பொலி சோர்ந்து
ஒலிக்க சீவகனை வணங்கிய
தேவியரை
மணமிகு கூந்தலை உடையீர்
மது சொட்டும் செவ்விதழோரே
அலைந்திடும் மனதை நிறுத்தி அடியேன் உரை
கேட்பீர் என்றான் 877
வலம்புரி சங்குகள்
என்றும் வடிந்திடுங் குளத்தில் இல்லை
அருங்கொடை தானமும்
தவமும் வறுமையில் அமைவதில்லை
குன்றில் தான் வைரம் தோன்றும்
குளத்தில் தான் குவளை மலரும்
பண்பினை உடையோர் அன்றி பகுத்துண்வோர் யாருமில்லை 878
வறியோர்க்கு செய்யும்
தானம் மா மேரு பலனைக்
கொடுக்கும்
கொலை நீக்கி ஊன் தேன்
விட்டால் மண்ணோடு விண்ணும் தொழும்
மன்னனாய் இருப்போர்ரெல்லாம் முற்பிறப்பில்
கள்ளுண்ணாதோர்
கையேந்திபிச்சையில்பிழைபோர்மும்மையில்
கொடுத்துண்ணாதோர் 879
வேடனிடம் தப்பும் கலைமான்
காலனிடம் உயிரை விடும்
வேடுவரிடம் சிக்கிய பறவை நல்வினை
பயனால் தப்பும்
பிறப்பு இறப்பு வளந்து
தேய்தல் உடல் கொண்ட இயற்கையாகும்
நல்லறம் நாம் ஏற்றல் ஒன்றே நல்வினைப் பயனைத் தரும் 880
அறம் ஒன்றே தொடர்ந்து வரும் அடுத்த பிறவி எடுத்த பின்பும்
அனிச்சமலராய் மனது வாடும் அறுவினைத்
தொடரும் போது
இளமையில் ஆடும் ஆட்டம் முதுமையில்
முடங்கிப் போகும்
நிலையாமை மனதில் தோன்ற நிலைப்பது நிலையாமை ஒன்றே 881
23. அந்தப்புர விலாவினை.
( துன்பம் ) :
இல்லறத்தின் தருமம்
ஏற்று இன்பத்தைத் தூய்த்தோம் அன்று
அறவுரைகள் கேட்ட பின்பு
அயலராகி நின்றோம் இன்று – என
சீவகன் சொல்லிய
மொழிகள் தேவியர்கள் செவியைத்
தாக்க
மலை விட்டு விழும்
அருவியாய் மங்கையர் விழிகள் கொட்டின 882
அயலார் என்னும்
அக்னி மொழியை அரண்மனை ராணிகள் கேட்டு
புயலிடை சிக்கிய
பூங்கொடிகள் பூக்களை உதிர்ப்பது போல
சீவகன் காலடியில்
வீழ்ந்து சிந்திய கண்ணீர்
எல்லாம்
அரண்மனை கலங்கள்
நிறைய அழுதனர் அரண்மனை மக்கள் 883
நம்பியின் திருப்பாதங்களே நாங்கள்
செய்த பிழைதான் என்ன
எமைத் தாங்கி சுமந்த
துடைகளே எவ்விடத்தில் இனியாம் தங்குவது
திண்ணிய தோள்கள் அணைக்க
திணறிய எங்கள் தேனுடல்
அயலார் என ஆன பின்பு
ஆவி பிரிந்த மேனி என்றழுதனர் 884
அன்னமே மயிலே மகரயாழே ஆராய்ந்த இனிய
இசையே – என
செவ்விய வாய் உதிர்த்த நாவே யாம் செய்த
குற்றம் எதை கண்டாய்
பொன்மணி முத்துக்கள் மின்னும் போர்களம்
போல் பரந்த மார்பே
இன்று எங்கள் உறவை விட்டு நீங்குதல் நற்குணமா
என்றழுதனர் 885
24. கோயில் விலாவினை ( அரண்மனைத் துன்பம் ) :
முழவுடன் கொம்பொலி முடங்கி
மகர யாழ் தன்னிசை
மறக்க
துணையோடு கூடிய குழலும் துக்கத்தால்
ஒலியினை துறக்க
தாளமும் இசையும்
தளர்ந்திட சிலம்பொடு மேகலை ஒலி நீங்கி
வலம்புரி சங்கொலி
அழிந்து வாடியது அரண்மனை
அங்கு 886
கழுத்தினில் மணிகள்
கொண்டு கண்களில் செந்நிறம்
படர
தூண்களாய் பருத்த
காலும் துருத்திபோல் உப்பிய கன்னமும்
பிறையென் அழகிய கொம்புகளும் வண்டுகள்
மொய்க்கும் மதமுமாய்
பட்டத்து யானையும் பரிகளும் பதறியே துவண்டன துறவால் 887
காதணிந்த குண்டங்களும் கரம் இழந்த வளையல்களும்
நவமணிமுத்து மாலைகளும்
மணம் மிக்க சந்தனமும்
நற்சுண்ணப் பல பொடிகளும் நவமணிகளும் சிதறி கிடக்க
விண் வெறுத்த வான்மீன்கள் மண் நாடி வந்தது போலாயின 888
25. நகர
விலாவினை. ( நகர துன்பம் ) :
கோயில்களில் கூட்டம் இல்லை
சாலைகளில் ஆட்கள் இல்லை
கறிவகையும் கனியும்
ஏற்க விரும்பியவர் வீதியில் இல்லை
மணிமுத்து மாலைகள் இருந்தும் மன்னனின்
துறவறத் துக்கம்
மங்கையர்கள் நெஞ்சம் பரவ மாதவத்துறவி போல் இருந்தனர் 889
ஆடலுடன் பாடல்கள்
இல்லை அதற்கு மத்தளம்
யாழ் இசை இல்லை
மதவேழங்கள் பிளிரல் இல்லை மழலைகள் சிரிப்பொலி
இல்லை
கூகையும் குயில்களும்
கூவிட மஞ்சையின் நடனம் இல்லை
மலையென அலையை எழுப்பும் மாபெரும்
கடலொலி இல்லை 890
வேள்வித்தீ புகையும் இல்லை வளர் குழல் அகிற் புகையுமில்லை
ஆடைக்கு இடும் புகையுமில்லை
மாலைக்கு இடும் புகையும் இல்லை
எல்லாவகைப் புகைகளும்
இங்கு ஈயாதார் புகழைப்
போல
தோன்றாமல் மறைந்து போயின சீவகன் ஏற்கும்
துறவை எண்ணி 891
வண்டுகள் மலரைத்
துறந்தன தத்தைகள் உணவை மறந்தன
வானவர் பூஜைகள்
நின்றன வேழங்கள் கன்னல்
வெறுத்தன
மக்களின் எண்ணங்களெல்லாம் மனதிற்குள்
மங்கி கிடந்தன
ஏமாங்கத பெருநாடே இன்று எழிலிழந்து காரிருள் மலர்ந்தது 892
26. துறவு வலியுறுத்தல்
:
நற்தவத்தையும் இவ்வுலகத்தையும் நன்கு ஆராய்ந்து பார்த்தால்
குற்றமற்ற தவத்தின்
முன்னே குறுங்கடுகு உலகம் ஆகும்
அகப் புறப் பற்றை நீக்கி
அருந்தவம் செய்தோமானால்
வீடென்ற மோட்சம் சென்று விலகுவோம்
நால் கதியை விட்டு 893
சினங்கொண்ட களிறை உண்ண
சுண்டெலி காத்திருத்தல் போல்
நல்வினை தந்த பொருளை நுகர்ந்து வினை வெள்ளம்
கடத்தலாகும்
தவம் சிறிதும்
இல்லையாயின் பொன்னோடு பொருளும்
போகும்
நற்தவம் மனம் ஏற்று
புரிந்தால் நால்கதி வென்றூ
நாடலாம் 894
இருவினைக் கடலைக்
கடந்து நால்கதி பிறப்புகள்
தவிர்த்து
உயிர்களுக்கெல்லாம் காவலான
உன்னத மோட்சம் செல்ல
துறவினை ஏற்றுக்
கொண்டேன் துறந்திடுங்கள் பற்றுகள்
தனை – என
சீவகன் செப்பிய
மொழிகளால் தேவியரும் துறவுக்கு துணிந்தனர் 895
27. தேவியர் துறவு :
தன் தேவியர் எண்மரையும்
சேர்த்திட்டான் விசையையிடம்
அணிகலங்கள் அத்தனையும் அவர்களே
களைந்து நின்றனர்
கார்குழல் அனைத்தும்
நீக்கி பால்நிற வெண்ணாடை போர்த்தி
அருகனின் அறத்தை ஏற்று அனைவரும் துறவியாயினர் 896
28. பெரிய யாத்திரை
:
மன்னனின் கரங்கள்
இரண்டும் சங்கநிதி பதுமநிதியை ஒத்து
வறியவர்கள் அனைவருக்கும் பொன்மணி பொருள்கள் தந்து
தவத்தையே சிரமேற்
கொண்ட தவச்செல்வி விசையை
வணங்கி
சிவிகையில் சீவகன்
அமர தேவர்கள் சுமந்துச்
சென்றனர் 897
29. சமவசரண வருணனை :
அகிர்புகை மணந்து
வீச அழகிய முழவுகள்
முழங்க
குழலோடு யாழும்
சேர்ந்து குளிர்ந்த நல்லிசை எழுப்ப
கற்பகமாலைகள் ஒளிர்ந்து
கையிலே சுண்ணம் ஏந்தி நிற்க
அண்ணல் பல்லக்கில் செல்ல அருகன் கோயிலைக்
கண்டனர் 898
அருகனின் திருவடி
தொழுதனர் அவன் புகழைப் பாடி நின்றனர்
அன்பிலே மெய்யது தளர ஆடினர் அவனைப்
போற்றி
பல்வகை இன்னிசை
எழுப்பி பரமனின் பாதம் பணிந்தனர்
அவ்வொலி அனைத்தும்
சேர்ந்து ஆழ்கடல் அலையாய் ஒலித்தது 899
ஐயாயிரம் வில் உயரத்தில் ஆறிரண்டு
யோசனை அளவில்
சௌதர்ம தேவர்கள் சேர்ந்து செதுக்கி கட்டிய ஜினாலயத்தில்
இருபதினாயிரம் படிகள்
கொண்டு நாற்திசை வாயில்களோடு
சமவசரண பூமியை
நெருங்க ஸ்ரீ வர்தமானர் தோன்றினாரங்கு 900
இருவினை அற்றவர்
தோற்றத்தை இருகரம்கள் குவித்து வணங்க
நம்பியின் இருவினை கெட்டன நடுக்கத்தில் மெய்மலர் சிளிர்த்தது
இருவிழிகள் கண்ணீர்
சொரிய இளங்குரல் விம்மித்
தழைய
அடைமழையாய் மலர்கள் தூவி ஆலயத்தை வணங்கி
தொழுதான் 901
திவ்வியன் மகாவீரரைச் சுற்றி தென்றலென
சாமரங்கள் வீச
நவமணிகள் பதித்த முக்குடை நாற்புறமும்
ஒளியினை சிதற
புனிதமாம் அசோகநிழலில்
புண்ணியன் பொன்னாசனம் அமர
அறமாகிய அமுதம் உண்பீர் என அசரீரி குரல் ஒலித்தது அங்கு 902
சீவகன் நெருங்கிச்
சென்றான் சுற்றியுள்ளோர் சொல்லலானார்
குருகுலத்தில் தோன்றிய சீவகன் கோத்திரத்தில்
காசிபனாவான்
மணிமுடி மண்ணில் பதிய தொழுது
யான் துறவேற்பேன் என்று கூற
நின் மனம் துறவில்
வீழ்ந்தது துறத்தலே மாண்பென கூறினார் 903
30. சீவகன் துறவு :
தூயவன் திருவடி வணங்குவோர் துன்பத்தை துறப்பார் என்றும்
மாலவன் அருளில்
நின்றால் மறைந்தொழியும் எண்வினைகள்
அருகனின் அறங்கள்
ஏற்றால் அருந்துயர் பிறப்பைத் தவிர்ப்பர்
மோட்சமாம்
வீட்டை அடைய முழுமையாய் துறப்பதே என்றான் 904
செவியணி பொன் தோடுகளும் செம்பொன்
அணிகலங்களும்
மணிமுத்து மாலைகளும் மணக்கும்
மலர் கண்ணிகளும்
கால்தவழும் வீரக்கழலும்
கையணிக் கடகங்களும் துகிலுடன்
மண்ணிலே தவழ்ந்து அசைய மலரடியை வணங்கினான்
சீவகன் 905
முழுமதி நாணும்
பேரொளியும் மண்ணுயிர்
காக்கும் அன்பும்
பசி பகை பிணியைப் போக்கும் பல்கிய
நல்ளருளுடனும்
பாற்கடல் போல் ஞானம் கொண்ட பாரீசனாம்
குணக் கடலை
விண்ணவர் வியக்கும்
வண்ணம் சீவகன் வணங்கிச் சென்றான் 906
அருகனின் அறத்தையேற்று
அனைத்தையும் துறப்பேன் என்று
கணதரர் கோட்டம்
சென்றான் கடுந்தவம் கைமேல் கொள்ள
கீழ்திசை நோக்கி அமர்ந்து கருநிற சுருள்
குஞ்சை நீக்கி
வெறுங்கையில் சிகையைப் பெற்று வெள்ளித் தட்டிலிட்டான் நம்பி 907
(கணதரர் கோட்டம்
: கௌதமர், வாயுபூதி,
அக்னிபூதி, சுதன்மர், மௌரியர்,
மந்தரர், புத்திரர், மைத்ரேயர்,
அகம்பனர், அசேலர், பிரபாசர்.
கணதரர் இருக்கும் இடம். )
சிகைத் தட்டை கையில் ஏந்தி சுதஞ்சண தேவன் சென்றான்
ஈராறு கடலைத்
தாண்டி பாற்கடல் வந்தான்
தேவன்
நமோ என்ற சொல் உதிர்த்து
பாற்கடலில் தட்டை வைக்க
நடுக்கடலில் அந்த தட்டு வெண்மதியாய்
போய் நின்றது 908
நந்தட்டனும் தோழர்களும்
பூவுலகின் பந்தம் நீக்கி
படநாகம் தோலுரித்தாற் அகப் புறப் பற்று போக்கி
உள்ளத்தில் அஞ் ஞானம்
போக சிந்தை சுருத ஞானம்
ஏற்க
சீவகசாமியின் குழுவில்
தவத்திற்கு தாமும் சேர்ந்தனர் 909
31. சேணிகன் வரவு :
கயல்கள் இனம் எம்பிப் பாய கண்டு அஞ்சிய குறு முயல்கள்
இனத்தினை விட்டு
பிரிந்து இளம்பசுவின் கன்றுடன் ஓடும்
கன்னலும் செந்நெல்லும்
தழைத்து கண்கட்டும் பசுமை கொண்ட
வளமிக்க ஒரு நாடாம் மகதம் என்னும் பெரு நாடாம் 910
மகத நாட்டின் தலைநகரம்
மாளிகைகள் நிறைந்த ராசமாகிருகம்
இந்திரன் நகர் அமராவதிக்கு இணையான
அழகிய நகரம்
அந்நகரின் அரசன் பெயர் அரிமா நிகர்
சேணிகன் என்பான்
அசோக
நிழல் அருகதேவனுக்கு அபிஷேகத்திற்கு
முரசறைந்தான் 911
மணக்கும் மலர் மாலை கொண்ட மாணிக்கச் செப்புகளும்
மென்மணச் சுண்ணம்
கொண்ட பொன்னால் செய்த செப்புகளும்
புலனறியா மணம் கொழிக்கும் பவழ சந்தனச் செப்புகளும்
வேழத்தின் மேல் ஏற்றி வைக்க விரைந்தன ஜினாலயத்திற்கு 912
மணிமுடி மன்னர்கள்
திரண்டு மறுமையில் வீடுபேறடைய
இருவினை அறுத்த
தேவன் ஸ்ரீ வர்த்தமானர் அறிவுரை ஏற்க
பாரினில் பறை முரசு அறைந்து பொன்மதில் புறத்தே தங்க
சேணிகன் பொருளுடன்
வந்து சேவித்தான் ஸ்ரீ வர்த்தமானரை 913
வர்த்தமானரின் வடியோளி
அழகால் வான் வாழும் தேவர்கள்
மங்கிட
வின்முகில் கிழித்த
மதி போல் முனிவர் குழாம்
கண்ட சேணிகன்
கடுந்தவம் ஏற்று நிற்கும் தவமுனி
சீவகனைக் கண்டு
ஞாயிறு போல் திகழும்
இவர் யாரென சுதன்மரைக் கேட்டான் 914
திருமகள் தங்கி வாழும் திரண்ட
மார்பன் சீவகசாமி
இவன்
அழகுக்கும் புகழுக்கும் இணை அவனியில் யாருமில்லை
கண் இமை அசைத்துப் பார்க்க
சீவகன் அல்ல என்பார்
சிலர்
கண்
உற்று நோக்கினாலோ கண் தெறித்து போகும்
என்றார் 915
32. சேணிகன் வினா. ( சேணிகன் வேண்டுகோள். )
பற்றற்ற முனி சீவகசாமியின்
பிறப்புப் பற்றி சேணிகன்
வேண்ட
சூழ்ந்த தவமுனிகள்
சேர்ந்து கை கூப்பி அறிய விழைய
கார்முகில் சுதன்மர்
தன் கேவலக் ஞானம் கொண்டு
பிறப்பொடு தவத்தைக்
கூற பக்தியில் கேட்டனர் எல்லாம் 916
33. கேவலக்
ஞானம் அடைதல் :
கவரியோடு முயலும்
மேயும் காடு சூழ் மலையுச்சி சென்று
நாலிரண்டு கர்மங்களும்
நல்லுயிரை விட்டுப் பிரிந்து
தூய்மையாம் சிந்தை
கொண்டு அருந்தவத்தில் நின்ற சீவகன்
நீலமணிக் கல்லின் மீது நிலைத்த மாணிக்கம்
ஆனான் 917
ஞானம் என்ற யானை ஏறி நாட்டியப் பொன் தூணைப்
போல
ஆறுகாலமும் அசைவின்றி
நின்று அருந்தவம் செய்த சீவகனுக்கு
நந்தட்டன் தோழரும்
தேவியரும் நல்லுணவு அளிக்க
வேண்டி
மலையினை நாடிச்
செல்ல மறுத்திட்டான் உணவினை நம்பி 918
மெய் ஞானத் தேரில்
ஏறி உயிர் என்னும்
குதிரைப் பூட்டி
நற்சிந்தை களிறுகளோடு
நல்லொழக்க கவசம் ஏற்று
கருணையாம் சீலத்தோடு
மெய்ப்பொருள் வாள் கேடயத்தோடு
வினைகள் என்னும் பகைவனை விரட்டிட முற்றுகையிட்டான் 919
அருந்தவன் சீவகன்
நடத்திய ஆன்மீகப் போரினை
கண்டு
எழுவரும் கலங்கிச் சிதற
ஈரெட்டோர் போரிட்டு மாய
நற்சிந்தைக் களிறுகள்
காலில் நாலிரண்டு எதிரிகள்
நசுங்க
மும்மணிச் சக்கரத்தினால் மூவிரண்டு துவர்ப்பும்
அழிந்தன 920
( எழுவர் : மித்யாத்துவம், சம்யக்த மித்யாத்துவம், சாம்யக்துவ பிரகிருதி, அனந்தானபந்த குரோதம், மானம்,
மாயை, லோபம். எண்மர் : அப்பிரத்யாக்கியான குரோதம்,
மானம், மாயை, லோபம்,
பிரத்தியாக்கியான குரோதம், மானம்,
மாயை, லோபம். ஈரெட்டோர் : இருகதி, நாற்சாதி,
ஈராது பூர்வி, வெய்யில், விளக்கு,
நிற்றல், நுணுக்கல், பொது உடம்பு,
நித்தாதி மூன்று. 6 துவர்ப்பு : சிரித்தல், வேண்டுதல்,
வேண்டாமை, துயரம், பயம், அருவருப்பு.
)
மோகனீய கர்மம்
என்னும் பகைவனின் படைகள்
அழிய
ஐம்பொறி எதிரிகளையும்
கன்னல் போல் துண்டுகளாக்கி
அருகனின் ஆகம நெறியில்
நின்று அனைத்துலகையும் ஒன்றாய் வென்று
கடையிலா நாலும்
பெற்று கேவலக் ஞானம் அடைந்தார் 921
வானுலக தேவர்கள்
சேர்ந்து வலம்புரி சங்கொலிக்க வந்தனர்
நிறைகடல் விஞ்சை வேந்தர்கள்
கற்பகமாலைகள் ஏந்தி வந்தனர்
நீள்நில மன்னர்கள்
எல்லாம் நறுமணச் சந்தனம்
கொணர்ந்தனர்
மண்ணுலக மாந்தர்கள் கூடி மாலவன்
திருவடி தொழுதனர் 922
34. மணியரும்பதம் :
இருவினை தொலைத்தார்
குழல் நறுமணம் நாற்புறமும்
வீசும்
எண்வினை களைந்தார்
மேனி எண்திக்கும் மணந்து வீசும்
இயல்பினை கொண்ட உடலோ
இருகோள்கள் சுடரை அணைக்கும்
அனைத்தயும் அறிந்த தேவர்கள் அவரடி சிரமேல் கொண்டனர் 923
( இரு கோள்கள் : ஞாயிறு, திங்கள். )
மனைவியர் எண்மரும்
தொழுது மனக்குற்றம் போக்கிக்
கொண்டனர்
மதிநிறைந்த ஞானத்தாலே
மலர்கள்தூவி அடி தொழுதனர்
தாமரை மேல் நடக்கும்
செல்வா பிறவி அச்சம்
அற்றோம் நாங்கள்
பொருள்களின் தன்மை கூறும்
அநேகாந்தவாதா என வாழ்த்தினர் 924
( அநேகாந்தவாதம் : பொருளின் உண்மைத்
தன்மையை பல கோணங்களில் ஆய்ந்து
முடிவெடுத்தல். ஏகாந்தவாதம் : ஒரே கோணத்தில் நின்று
முடிவு கூறுதல். பிறசமயத்தவர் கொள்கைகள்.
)
35. பரிநிர்வாணம் :
தேவர், தவசியர், தேவியர்
கூடி திக்கொலிக்க தோத்திரம்
பாடி
பரமாகங்கள் நெறியை
அறிய அறமொழி அருள்க என
வேண்ட
அகப் புறப்பற்றை அறவே நீக்கி
அருகனின் நெறியை அணைத்து
தூயவன் அடியே துணையென
பற்றிட வீடுபேறுண்டென கூறினார் 925
தன்னுயிர் காத்தல்
போல் பிறவுயிர் போற்றிடச்
செய்தால்
மண்ணுயிர் நீங்கிச்
சென்று பொன்னுயிர் பெறுவான்
அங்கு
அருகன்நெறி ஏற்ற சிந்தை அணூகாது வேறு நெறி என்றும்
மாலவன் மலரடி ஒன்றே மண்ணுயிரைக்
காக்கும் என்றார் 926
விண்ணிலே துகிற்கொடிகள்
அசைய வானவர் தேவதுந்தூபிகள் ஒலிக்க
விண்ணவர் தம் ஊர்தியில் வந்து வான்மழை
போல் பூ பெய்ய
சந்தனம், புனுகு, அகிற்புகையோடு
தூப தீபங்கள் ஒளியாய்
ஏற்ற
வைகாசிப் பிறைத்திங்களன்று வீடுபேறடைந்தான் சீவகன் 927
36. தேவியர் நோற்றுயர்வு :
சீவகசாமியின் அறவுரை கேட்டு
சீரிய தவத்தினை ஏற்ற மகளீர்
மேனியெல்லாம் மாசுகள் படிந்து மேலும் பெண் பிறவி கெடுகவென்று
நால்கதியை தவிர்க்க
வேண்டி நற்காட்சியை சிந்தையில்
போற்றி
நல்ல தவம் செய்த பயனால் ஞானத்தில் சொர்க்கம் சென்றனர் 928
37. நந்தட்டன் தோழர்கள்
நோற்றூயர்வு :
நந்தட்டனும் அவன் தோழர்களும் நாள்தோறும்
நற்றவம் புரிந்து
ஐம்பொறியை அடக்கியாளும்
ஆற்றலை மனதினில் கொண்டு
ஈரெட்டு சோடசபாவனைகளுடன் இறைவனை வணங்கி நின்று
உணவினை நஞ்சாய்
தள்ளி உயர் தவம் செய்யலுற்றனர்
929
கருவுருவான காலத்திலேயே
நிர்ணயத்த இறப்புவரை
கடுந்தவத்தில் பொருந்தி
கற்சிலை போல் அசைவின்றி
விண்ணவரும் வியந்து
நோக்கும் வீரிய நல்ல தவத்தினாலே
மண்ணுலக உடலை விட்டு விண்ணுலகில்
தேவர் ஆயினர் 930
38. ஓம் படை . ( நூல்
பயன் ) :
பிறர் குற்றம் கூறக் கேட்டு பொருந்திய
பொருளின் அழகை
மூவொன்பது மாணிக்கத்தையும் முத்துவடம்
போல் கோர்த்த
சீவக சிந்தாமணி இந்நூலை
படித்தோறும் அதை செவியுற்றோரும்
இந்திரனாய் பிறந்து பின் இணையற்ற மனிதனாய் பிறப்பர் 931
39. தேவர் முடிவுரை
:
நல்வினை என்னும் கடலில்
தீவினை என்னும் குற்றம்
நீக்கி
அறிவு என்னும் முழுமதியாலே
அழகியச் செய்யுள் மலரை
செறிந்த வினை இருளை நீக்கும் செவ்விய
முக்குடையான் அடியில்
அர்ச்சித்து தொழுதேன்
என ஆசிரியார் தேவர் முடித்தார் 932
முக்தி இலம்பகம் முடிவுற்றது.
சீவக சிந்தாமணி நிறைவுற்றது.
என்
இனிய சொந்தங்களே,
இன்று வரை, சுமார்
186 நாட்கள், 931 சீவக சிந்தாமணி
செய்யுளை, கதையாக தொடர்ந்த
அனைவருக்கும் என் உளம் கனிந்த
நன்றி. இது முழுக்க,
முழுக்க கதை மட்டுமே.
தேவரின் கவி வளத்தையும், கற்பனைச்
சிறப்பையும் முழுதும் பருக விரும்புவோர், தேவரின்
2700 செய்யுள்களையும், இடைச் செருகளான 445 செய்யுள்களையும் உரையுடன்
படித்து ரசியுங்கள். கம்பனே
சுவைத்து, தனக்கென்று ஒரு அகப்பைப் பருகிய,
இச்சிந்தாமணி சமணம் தந்த பொக்கிஷம். தமிழ்த்
தாய்க்கு தந்த பெருங்கொடை.
இதைத் தொட நினைத்தது என் அறியாமை.
தொட்டு இடையில் பல தவிர்த்தது என் இயலாமை. கதை மட்டும் சொல்லியது
என் பேதமை. கவி முழுக்க கற்றவர்க்கு
இது சிறுமை. தனிச் சிறப்பு இந்நூலின்
தமிழ் வளமை. தமிழ்த்
தாய்க்கு சமணம் தந்த தனிப் பெருமை.
தமிழ்ச் சான்றோரே பொறுத்திடுங்கள், என் தமிழ் வறுமை.
தமிழ் கற்று எழுதுவது என்
நிலைமை. தாங்கள் இதைப் படித்தது உம் பெருந்தன்மை. தமிழ் எழுதும்
தயக்கத்தில் என் புலமை. தொடர் படித்து, குறை மன்னித்தது,
உங்கள்
மேன்மை. தொடர்ந்திட்ட அனைவருக்கும்
என் தமிழ் அடிமை.
நன்றி, வணக்கம்.
அன்புடன்
உங்கள்,
முட்டத்தூர்.
அ. பத்மராஜ்.
No comments:
Post a Comment