சீவக சிந்தாமணி - 2
5. பதுமையார் இலம்பகம்
கட்டியங்காரன் படைகளால்
கைகள் கட்டி சிக்கிய
போதும்
சுதஞ்சணன் அவ்விடம்
வந்து வான் தூக்கி
சென்ற போதும்
புலம்பவும் இல்லை மாற்றி பூரிப்பும்
இல்லா மனதால்
இரண்டுமே ஊழ்வினை
என இருந்திட்டான் சீவக நம்பி 392
மந்திகள் மருவி பாயந்து மலர்களில்
மதுவாய் கொட்ட
தேனுண்ட வண்டுகளெல்லாம் தேனடை என மதியை மொய்க்க
வெள்ளியாய் அருவி கொட்டும் வெண்சங்க
மலையின் மீது
நம்பியை சுமந்து
கொண்டு சுதஞ்சணன் ஏறிச் சென்றான் 393
நன்னீரில் நம்பியை
நீராட்டி நல்ல அணிகலங்கள்
பூட்டி
வெண்குடை நிழலில் அமர்த்தி
வேல்விழியர் கவரி வீச
இசையொடு இணைந்த
கூத்தை இளம்பரிதி சீவகன்
பார்க்க
சுதஞ்சணன் துணைவியர்
கேட்டனர் தொடங்கிய நட்பை பற்றி 394
விலங்கினில் நாயாய்
பிறந்து வெந்துயரில் வாழ்ந்த
போது
அப்பிறவி நீக்கி
எனக்கு அழகிய உடல் தந்தான் என்றான்
காமனைப் போன்ற இவன் கடும் பகையை நாம் அழித்து
மண்மகளை மணக்க வைக்க சுதஞ்சணன்
தேவியர் வேண்டினர் 395
மலைகளும் காடுகளும்
மண்ணூலகின் சுந்தரங்கள்
அறிந்திடாத நாடுகளும்
அழகுமிகு பொய்கைகளும்
ஆறுகளில் இருகரை
புரள அடித்து செல்லும்
நதி நீரும்
காணுகின்ற ஆசை எனக்கு நீ சுற்றத்துடன் வாழ்க என்றான் 396
இரண்டு காத தூரத்திலே இருண்ட
ஒரு மலையைக் காண்பாய்
அரண்பாதம் மலையின்
கீழே நல் தீ வினைகள்
போக்குகின்ற
பற்றுகள் முற்றும்
துறந்திட்ட நல்சாரணர்கள் வாழ்கின்றார்கள்
அவர்கள் செவ்வடி தொழுத பின் அங்கோர் இயக்கியை
காண்பாய்397
அறுசுவை நல் விருந்தளிப்பாள் அவ்விருந்தை
உண்ட பின்பு
அரண்பாதம் மலை கடந்து ஐந்தைந்து
காதம் செல்வாய்
களிறுகள் கூட்டம்
கொண்ட கடலனைய பெருங்காடு
உண்டு
காட்டில் பல பொய்கையுண்டு கடந்து அவ்விடம் அகல்கவென்றான் 398
இரண்டு காதம் சென்ற
பின்பு இரு குன்றுகள்
கண்ணில் தோன்றும்
பூந்துகில் அணிந்த
பெண்களாய் பேய்கள் பொலிவுற்று
தெரியும்
அணைத்து மகிழும்
ஆர்வத்தோடு அவை உன்னை நெருங்கும்
போது
அவைகளிடமிருந்து தப்பி நீ அவ்விடத்தை
விட்டு அகல்வாய் 399
காத தூரம் கடந்தாயாகில் கடல் சூழ் பொன் தீவு தோன்றும்
பருவத்தால் பெய்யும்
மழையால் பல்லவநாடு செழித்து
நிற்கும்
கடுந்தூர வழி கடந்து வந்த களைப்பினை போக்கிக்
கொள்ள
இரு
திங்கள் அங்கு தங்கி ஏகிடுவாய் மேலே செல்ல 400
காட்டினை கடந்து
செல்ல கல்வழி காண்பாய்
ஆங்கு
அவ்வன வெம்மை சொன்னால் வாயது வெந்து
போகும்
இறக்கின்ற விதியைப்
பெற்றோர் ஏகுவார் அவ்வனவழியே
ஏனைய
மற்றோர் எவரும் அவ்வழியே
செல்லமாட்டார் 401
குழவிகள் உடைய பிடிகள் கொடும்
வெய்யில் தாங்காதென்று
களிறுகள் அவற்றைத்தழுவி
தாங்கிடும் வெப்பம் தன்னை
சேவல்கள் பெடைகளைச்
சேர்ந்து திரண்டதம் இறகால்
காக்க
பினைமானுக்கு நிழலை ஈந்த கலைமான்
தன் நிழலைத் தரும் 402
( பிடிகள் : பெண் யானை, பெடை : பெண் கோழி, பினை மான் : பெண்மான்
)
அறநெறி தவறியவர்களும்
ஐம்புலன் தளர்ந்தவர்களும்
அவ்வழியில் முனிவராய்
உளர் அவர் தன்மை அறிந்து செல்க
ஒரு யோசனை சென்ற பின்பு நீண்ட குளிர் நிலத்தைக்
காண்பாய்
அங்குள்ள மலைக்குப்
பெயர் அழகு தளும்பும்
சித்திரகூடம் 403
முரசு போல் இசை முழங்கி
முத்து போல் அருவி கொட்டும்
வயிரத்தோடு நவமணிகள்
கல் என ஒலி கொண்டு வீழும்
மூங்கிலோடு சந்தன கட்டைகள் மிதந்து
செல்லும் நீரினோடு
இருகரை மறைந்த
ஆற்றை அஞ்சன மா நதியென்றழைப்பர் 404
சில்லென்ற சித்திரகூட
மலை அலை தவழும்
அஞ்சன மாநதி
இடையினில் தவமுனிவர்
பள்ளி இன்பத்தால் அறிவு மழுங்கும்
கவனமாய் அக்காட்டைக்
கடந்தால் விளைநிலம் சூழ்ந்திருக்கும்
தக்க
நாட்டைக் காண்பாய் தங்காமல்
கடந்து செல்வாய் 405
செண்பக மலர்கள்
போர்த்தி தவழ்ந்திடும் ஓர் நதியை காண்பாய்
இருகரை தழுவும்
புனலை விரைவினில் நீந்தி
செல்வாய்
காய் கனி கிழங்கு தேன் ஊன் கட்டிய
உரிகள் தொங்கும்
வேடுவர் குசைகள்
கொண்ட கடலொத்த காட்டையடைவாய் 406
வனத்திற்கு எழிலை தரும் வளமான குளங்கள் நான்கு
செவ்விதழ் செந்தாமரைகள்
சேர்ந்திருக்கும் ஓர் குளத்தில்
ஒரு குளத்து
நீரினாலே இரும்பது பொன்னாய்
மாறும்
நோய்களை தீர்க்கும்
ஒன்று நல்லுயிரை கொல்லும்
ஒன்று 407
காட்டினில் வாழுகின்ற
கையில் வில் அம்பு கொண்ட
தோளினில் தோல்பை
அணிந்து தோற்றத்தில் கருணை அற்று
குளங்களை காவல் செய்வோர் குளங்களை
அணுகுவோரை
உயிரினை வதைத்து
கொன்று உடலினை எடுத்து
செல்வர் 408
குளத்தினை புறத்தே
தள்ளி குணத்திலே குளத்தை
நீக்கி
நடப்போரை வில்லேந்திகள்
நல்வினை உடையான் என்று
மலர்களை மொய்க்கும்
வண்டாய் அம்மனிதனை சூழ்ந்து
வந்து
இருகை தொழுது
செல்வர் என்றுரைத்தான் சுதஞ்சண தேவன் 409
பாடல் உண்டு யாழ் ஒலியோடு பசும்பொன் கிண்கிணியுண்டு
குறுக்கத்தி முல்லை
மலர்களை கூறையாய் வேய்ந்து
வைத்த
மகரந்த பொடிகள்
தூவி மெத்தையாய் வழி அமைத்த
ஐந்து காத வழி நடப்பாய்
அம்மலர்களை நுகர்ந்திடாமல் 410
இந்திரன் பொன்முடி
தவழும் வினைவென்ற அருகன் மொழியை
அன்றாடும் தவறுதல்
இன்றி அதில் ஒன்றி வாழும் முனிகள்
மனம் தவறும் மதனகீதம் நீக்கி
மற்றய நாதங்கள் ஒலிக்கும்
வனகிரி கடந்து
செல்ல வழிநெறி நான் உரைப்பேன் என்றான் 411
தேனுண்ட வண்டுகள்
சூழ்ந்த தேன் சுவை சுனை ஒன்றுண்டு
சுனையிருந்த இடத்தினிலே
சுற்று வட்ட பாறையுண்டு
வண்டிசைகள் முழங்குகின்ற
ஒரு வேங்கை மரம் அருகிலுண்டு
அம்மரத்தின் அருகே செல்லும் செவ்வியநெறி
என் சொல்லாகும் 412
காந்தள் மலர் மணங்கமழும் காட்டினை
கடந்த பின்பு
மத்திம தேசத்தை
அடைவாய் மன்னன் தனமித்தனை
காண்பாய்
மன்னன் மகள் கனகமாலையை மணந்து
நீ அங்கிருப்பாய்
ஊழினால் இவை நடக்கும் உன் நண்பர்கள் உனையடைவார் 413
சுதஞ்சணன் நற்கதி பெற அன்று
சீவகன் செப்பியது போல்
சீவகன் வாழ்வில்
வளர தேவன் மூன்று
மந்திரம் சொன்னான்
கன்னியரை கவரும்
குரலும் கடும் நஞ்சைப்
போக்கும் திறனும்
விரும்பிய வடிவம்
பெறும் மந்திரம் மூன்றும்
சொன்னான் 414
மந்திரம் மூன்றும்
கற்றான் மன்மதன் போன்ற சீவகன்
மலர்
வண்ணமாலை அணிந்த சுதஞ்சணை
மார்புடன் தழுவி
மனைவியர் கூட்டத்தைப்
நோக்கி மனதினால் நன்றி கூறி
விருப்படி நான் செல்வேன் விடைகொடுங்கள்
அன்றான் நம்பி 415
மனை பெருங்கிழத்தி தத்தையை
மாசற்ற மனையாள் குணமாலையை
எப்போது காண்பேன்
என்று எண்ணத்தில் நினைத்த
உடன்
சுதஞ்சணன் நகைத்து
சொன்னான் ஈறாறு திங்கள்
சென்ற பின்
இருவரையும் சேர்ந்து
மகிழ்ந்து இல்லற இன்பம்
காண்பாய் 416
ஈராறு திங்களுக்குப் பின் ராசமாபுரத்தை
அடைவாய்
கட்டியங்காரனைக் கொன்று
கடும் பகை முடித்துக்
கொள்வாய்
மணிமுடியை சூடிக்கொள்வாய் மண்ணுலகில்
விழா எடுப்பாய்
அருகனின் அறத்தினாலே
வீடுபேறடைவாய் என்றான் தேவன் 417
சொல் சூழ்ச்சி வன்மையுடைய
சுதஞ்சணன் தேவன் சீவகனுக்கு
அத்தனையும் ஆராய்ந்து
சொல்லி அவன் மலை நீங்கான் என்று
தன் தேவியர்
வழி அனுப்ப சீவகனை
கையில் ஏந்தி
சோலைகொள் நிலத்தில் விட்டு சுதஞ்சணான்
சென்றான் மீண்டும் 418
தம்பியர் நண்பர்கள் கூட்டம்
நீங்கி தத்தை குணமாலை
பிரிந்து
தனிக் களிறாய்
ஒதுங்கி வந்த தரணி புகழ் நம்பியை
கண்டு
மலைகள் மேனி கருகி வாட மலை அருவி கண்ணீர் சொரிய
மயில்களும் விலங்குகளும் தம் மேனி நடுங்க அழதனதங்கு 419
கருமையில் இருளின்
உருவம் கரடி போல் முடி செழித்தோன்
ஆடு போல் குரல் உடையோன் ஒடுங்கிடும்
மார்புடையான்
மரவுரி தரித்த
வில்லான் மனைவி பின் தொடர்ந்து வர
சீவகன் அவனைக் கண்டு கேட்டான் எம்மலைவாழ் வேடன் என்று 420
தென்மேற்கு மூலையிளுள்ள
சிறந்த மலை சிகரந்தன்னில்
திணைபுனத்தின் வேடர்கட்கு
தேர்ந்த தலைவன் நானென கூற
உண்ணுகின்ற உணவு யாது என உயர்நிலையான் நம்பி கேட்க
ஊன்
தேன் நெய் திணை வடித்த கள் உண்பேன்
என்றான் 421
ஊனோடு தேன் கள் உண்டு உயிர்களை வதைத்த
பாவம்
இப்பிறப்பில் வேடராகி
இழிந்த வாழ்வு பெற்றுள்ளீர்கள்
ஊன் உண்டு உடல் பெருக்கி
உழல்கின்ற நரகம் பெரிதா
ஊன்
தேன் கள் தவிர்த்து
தேவர் வாழ்வு சேரல் நன்றா
என்றான் 422
ஊன் தவிர்த்து
தேவன் ஆதல் உயர்நிலை
என்றான் வேடன்
நல்லதை ஆய்ந்து
சொன்னாய் நலம் பல பெறுவாய் என்றும்
ஆகம விதிகள்
கூறும் அகிம்சையை விரத்தத்தோடு
தேன் கள் தவிர்த்தாயானால் தேவகதி
உண்டென்றான் நம்பி 423
அரண்பாதம் மலையை அடைந்தான் அறமுனிகள்
அடிபணிந்தான்
அறுவினைகள் அனைத்தும்
வென்ற அருகனின் கோயில்
வந்தான்
வலம் கொண்டு
கரம் தொழுதான் வண்ணமலரால்
அர்ச்சித்தான்
இசை கொண்டு தாளத்தோடு
இறைவன் புகழ் பாடலுற்றான் 424
ஆதியாம் வேதம் தந்த அருள் நிறை செல்வன்
நீயே
அகமகிழ்வில் தூவுகின்ற
மலர் மழையில் நனைந்தாய்
நீயே
நீதி நெறிகள்
எங்களுக்கு அளித்த நிர்மல நாதன் நீயே
நிகரில்லா பேரறிவுக்கு
நித்திலத்தில் இறைவன் நீயே 425
துன்பப் பிறவியின்
தொடர்பை துறந்திட்ட தூயவன்
நீயே
திகட்டாத இன்பத்தில்
தினம் திளைத்துள்ள தீர்த்தங்கர்
நீயே
ஐம்பொறிகள் அனைத்தும்
வென்று அறம் உரைத்த
நாதன் நீயே
எண்வினைகள் துன்பம்
அகல எங்களுக்கு அருள்வாய்
நீயே 426
தேவர்கள் போற்றி
நிற்கும் தேவாதி தேவன் நீயே
திக்கெட்டும் ஒளிர்கின்ற
முக்குடை நிழலான் நீயே
காமம் வெகுளி
மயக்கம் கடந்திட்ட அருளான்
நீயே
கட்டி நிற்கும்
வெவ்வினையை சுட்டெரித்த சுந்தரன்
நீயே 427
இதயத்தால் தொழுது
நின்றான் இயக்கியவள் விருந்து
தந்தாள்
பல்லவ நாடு செல்ல பாவையரிடம்
பாதை கேட்டான்
அடர் மலர் கவிழ்ந்த அகழியும்
அஞ்சிடா வீரர் காக்கும்
மதிலும்
ஆடையாய் அகத்தில்
கொண்ட அழகிய தலைநகரடைந்தான் 428
சந்திராப நகரில்
நடந்தான் சச்சயந்தன் மகன் சீவக நம்பி
சந்தன சோலைகள்
சூழ்ந்த செண்பகப் பூம்பொழிலில்
அண்ணலை வரவேற்பது
போல் அரம்பைகள் குழல் திருத்தி
சலங்கைகள் சல சலக்க சதிராடல்
நிகழ்த்தினார்கள் 429
பல்லவ இளவல் உலோகபாலன் பூம்பொழிலில்
பொருந்தி அங்கு
பூவையர் ஆடும் ஆடலை புன்முறுவல்
கொண்டு களிக்க
வீணையும் முழவும்
குழலும் மெல்லிசை வெள்ளம்
பெருக்க
தீ
பட்ட வெண்ணெய் போல துவண்டனர் ஆடவரெல்லாம் 430
பசும்பொன் நகைகள்
பூண்ட பாவையாம் ஆடல் அழகி
நெற்றியில் பட்டம்
மின்ன நெடுங்குழல் பின்னே
அசைய
பொன் தோடு இடமாய்
நெளிய பொங்கும் தனமேல்
அணிகள் பிறழ
வளைகரத்தால் துதி செய்து
கடைவிழியில் கட்டினாள் நம்பியை 431
கண்டவள் கயல்விழிகள்
இரண்டும் கவ்வின சீவகன்
அழகை
கலைந்தன தாள லயங்கள் கண்கள்
அரும்பின ஒருதுளி நீரை
தேசிக பாவையவள்
ஆடலில் தேங்கிய இமைகள்
கண்டு
உலோகபாலன் அங்கு நோக்க உறைந்தன விழிகள்
சீவகன் மேலே 432
நம்பியை நயமுடன்
அழைத்தான் நல்லுரை ஆடி மகிழ்ந்தான்
மணிகொண்ட மன்னன்
மகனும் கழல் கொண்ட சீவகனும்
உள்ளத்தால் ஒன்றிணைந்து
உற்றதொரு நண்பர்கள் ஆக
தேசிக பாவை மகிழ்ந்து திருந்திய
தாள லயங்கொண்டாள் 433
இசையொடு நடனம் கண்டு இன்பத்தில்
ஆழ்ந்த வேளை
இடர்
என வீரன் வந்தான்
இன்னலைச் சொல்லி முடித்தான்
தனபதி மன்னன்
மகளும் தங்களின் உடன்பிறப்பாளும்
பதுமையாம் பொன் மகளை பாம்பொன்று
தீண்டியதென்றான் 434
நடந்ததை வினவுவாய்
என்று நடுங்கி உலோகபாலன்
கேட்க
பாவையவள் பதுமை பொழிலில் பலமலர்
செடிகள் வளர்க்க
இளமுல்லை கொடிக்கு
அன்னாள் அன்னையின் பெயரைச்
சூட்டி
திலோத்தமை என்றழைத்து
தினம் அதை வளர்த்து
வந்தாள் 435
கொடியது படர்ந்து
வளர்ந்து குவித்திட்ட மலரைக்
கண்டு
பூங்கொடியவள் கரங்கள்
நீட்டி பூக்களைப் பறிக்கச்
செல்ல
குக்குட நாகம் என்னும் கோழிப்
பாம்பு அங்கிருந்து
கொத்தியது கோதையவளை குரல் தந்து தரையில்
சாய்ந்தாள் 436
விபரம் அறிந்த
உலோகபாலன் விரைந்திட்டான் பதுமையை
காண
தானறிந்த மந்திரத்தோடு
விஷம் நீங்க மருந்து
தந்தான்
அவர்கள் செய்த செயலனைத்தும் அவ்விடம்
பொய்த்துப் போக
அந்நாகம் கக்கிய
விஷம் அவளுடம்பில் விரைந்து
பரவியது 437
பெற்றவன் உடல் பதைத்தான் பெற்ற தாய் உயிர் துடித்தாள்
கொடும் விஷம் நீக்குவோர்கள் குவலயத்தில்
யாரென்றாலும்
பொன்னோடு பொருளும்
நாடும் பதுமையும் மணங்கொள்வாளென
கொட்டினான் முரசு நாட்டில் குடிமக்கள்
அறியும் வண்ணம் 438
பதுமையை தீண்டியது
ஒரு சீதமண்டலி என்றார்
சிலர்
இளவரசியை கொத்தியது
ராஜநாகம் என்றார் சிலர்
நங்கையை கடித்த
உயிர் நாகப்பாம்பு என்றார்
சிலர்
மருத்துவம் பார்க்க
வந்தோர் மாறி மாறி கருத்துரைத்தார் 439
நிமித்திகன் ஒருவன்
சொன்னான் நிலமாளும் மன்னா கேட்பீர்
கோங்கு மர உச்சியில்
ஓர் ஆந்தை யாழ் இசைக்கிறது
இத்துன்பம் முழுவதும் களைய இங்கு ஓர் இளைஞன் உண்டென
கூற
உலோகபாலன் உடனே சொன்னான் சீவகனை
அழைத்து வர 440
சினம் கொண்ட பாம்பு
கடித்து விஷம் நீக்க இயலாதெனினும்
விண்ணவர் செய் சூதெனினும் வஞ்சி இவளுக்கு
மரணமில்லை
மேல் கீழ் வாய் பல்லின்
விஷம் உயிரது உடனே பிரியும்
மற்ற
பல்லால் கடிபட்டிருந்தால் உடலது துன்பம் கொள்ளும் 441
பால் அமுது மணம் வீசினால்
கடித்த நாகம் அந்தண ஜாதி
நந்தியாவட்ட மலரின்
மணம் நாட்டிய பல் அரச ஜாதி
தாழம்பூ மணத்தைக்
கொண்டால் தீண்டியது வணிக ஜாதி
அரிதார மணவீச்சென்றால் சூத்திர
ஜாதி என்றான் நம்பி 442
குவளமலரை மூன்றாயாக்கி
கருங்குழலின் மீது அழுத்தி
பதுமையின் எதிரே நின்று பஞ்சமந்திரங்கள் ஓதி
ஓங்கார மந்திரத்துடன்
ஒருமித்த தியானம் செய்து
பதுமையைப் பார்த்த நேரம் பஞ்சென
பறந்தது விஷம் 443
நயனங்கள் நிமிர்ந்து
நோக்க நேரினில் கண்டாள்
நம்பியை
கைவளைகள் நாணத்தோடு
கழன்றன கரங்களை விட்டு
பதுமையின் மேனி எல்லாம் பசலையால்
படர்ந்து போர்த்த
ஐங்கணையான் அம்புகள்
எல்லாம் அடைந்தன அவளின் உடலில் 444
செவிலித் தாயொடு
தாதியர் கூடி செப்பினர்
வாழ்த்துக்கள் நம்பிக்கு
செம்மேனியை நீ தீண்டிடயதும் தீர்ந்தது
இவள் விஷம் என கூற
காதலர் காணினும்
கேட்பினும் தீண்டினும் நின்றிடும்
நல்லுயிர் என்று
சந்தனம் பூசினார்
போல் தடவினான் பதுமையின்
உடலை 445
தனபதி ஆணையை தாதியர் ஏற்று நன்னீர்
ஆட்டினர் சீவக நம்பியை
சந்தனம் கொண்டு மேனியில் பூசி சிறந்த அகிற் புகையினை காட்டி
பசும்பொன் பேழை நிறைய பட்டுத்
துகில்களைக் கொணர்ந்து
அணிகலன்கள்
பல கொண்டு அவன் மேனியை அழகு செய்தனர் 446
பொன்கலம் வைத்து
நிரப்பி பூவையர் கைகள் பரிமாறிட
அறுசுவை உணவு படைக்க அண்ணலும்
மகிழ்ந்து உண்டிட
அணங்குகள் வெற்றிலைத்
தர அவ்வீரன் வாயது மென்றிட
தனபதி மன்னன்
வந்தான் தன் நன்றியை
நயந்து சொன்னான் 447
பஞ்சணை மேல் அமர்ந்திருந்த பரிதி ஒத்த சீவக நம்பி
பதுமையின் வடிவழகில்
பல நினைவுகள் கொள்ளலானான்
கதிரவன் களைத்துப்
போனான் கண்களில் தூக்கம் தொடங்கிட
மேல்
திசை வாயில் சென்று
மேனியில் உறக்கம் கொண்டான் 448
நம்பியின் பார்வைத்
தாக்க நங்கை நாணி நிலத்தை நொக்க
பதுமையின் தனச் சுமையாள் பைங்கொடி
இடைத் துவள
கயல்விழி கக்கும்
காதலை காளையவன் மனதில்
நிறுத்தி
படுக்கையில் நம்பி இருந்தான் பதுமையின்
நினைவால் மயங்கி 449
மென்கை வளையணிந்த
பதுமை மென்மையாம் பஞ்சணை
அமர்ந்து
நெஞ்சினில் நம்பியை
நிறுத்தி நினைவில் அவன் எழில் பரப்பி
சீவகன் செய்த செயல்கள் யாவும்
தாதியர் தத்தை போல் மொழிய
ஓராண்டாய் ராப்பொழுது நீள உள்ளத்தில்
வருந்தி வாடினாள் 450
குக்குட கோழி நாகம் கொத்திய
கொடிமலர் சூழ்ந்த சோலைக்கு
தந்தையின் மொழியை
மீறி தத்தை போல் தோழியர் சூழ
பதுமையும் பைய நடந்திட பாவையின்
நினைவில் சீவகன்
அவள்
ஆடிய இடத்தைக் காண அவ்விடம் வந்தான்
அண்ணல் 451
மாங்குயில் பாடும்
இசைக்கு மஞ்சையும் மகிழ்ந்து
ஆட
மரம்
தாவும் மந்திகள் தங்கள்
இணையுடன் ஊடலில் வாட
மண்டிய பூப்பந்தலின்
கீழ் மென்மணல் பரவிய இடத்தில்
சீவகனை சிந்தையில்
நிறுத்தி சிந்தித்து இருந்தாள்
பதுமை 452
மாதவி பூப் பந்தலின்
அழகு மங்கையின் அழகால்
கெட
நங்கையை தேடி வந்த நம்பியின்
விழிகள் நோக்க
தாமரை மலரில்
வாழும் திருமகள் தானோ இவள் என
எண்ணியே அருகில்
சென்றான் பதுமையை கண்டு மகிழ்ந்தான் 453
நங்கையின் விழிகள்
இரண்டும் நம்பியின் மேனியைத்
தழுவ
நாணமோ அவளை விட்டு நதியென
நழுவிச் செல்ல
கந்தர்வர் அமைத்து
தந்த கந்தர்வர் திருமணத்தால்
மாதவி பூப்பந்தலின் கீழ் கூடினர் சீவகனும்
பதுமையும் 454
இன்பத்தில் இமைகள்
மூடி இதயத்தில் உவகை கொண்டு
வெண்சங்கு வளைகள்
ஒலிக்க மெய்யினில் வனப்பு
கொண்டாள்
உடல் கொண்ட சுண்ணப்பொடியும் உடல் விட்டு நீங்கிச்
செல்ல
குங்கும குழம்பு
வழிய துகிலற்ற பொன்
மேனியானாள் 455
வான் ஊறும் மதியின் உள்ளே மலர்ந்துள்ள மறுவைப்
போல
உன்
மீது கொண்ட அன்பு என்
உள்ளத்தில் நிலைத்திருக்கும்
உன் தாதியர்
வருவதாலே என் தங்கமே
நீயும் செல்வாய்
தாதியர் கண்படாமல் நான் தழையிடை
மறைவேன் என்றான் 456
மன்னன் தனபதி அழைத்தான் மாசறு மந்திரி மித்திரனை
மகளின் அரிய உயிரை மீட்ட மன்மதன்
ஒத்த நம்பியை நாடி
கனியொடு மங்கலப்
பொருள்களை கைகளில் தட்டாய்
ஏந்தி
பதுமையை மணக்க வேண்டி பணிவுடன்
கூறி வா என்றான் 457
சீவகன் அச்செய்தி
கேட்டு சிந்தையில் மகிழ்ச்சி
கொண்டு
தனபதியின் செவ்விய
மகளை தன்னகத்தே ஏற்பேனென்றான்
நிமித்திகன் ஆய்ந்து
பார்த்து நல்லதோர் நாள் குறித்தான்
மங்கல மரபுகள்
செய்து மணிக்கரத்தில் காப்பு
கட்டினர் 458
மங்கல முரசுகள்
முழங்க மக்களின் வாழ்த்து
ஒலி அதிர
சந்திராப நகரம் முழுதும் சந்தோஷ விழா
என மகிழ
தனபதி தன் சுற்றம் சூழ்ந்து
தன் மகள் பதுமை அவளை
சீவகன் கையில்
பதித்து திருமணம் நடத்தி
வைத்தான் 459
காந்தர்வ திருமணத்தால் கலந்திட்டான்
பதுமையுடன் பொழிலில்
காதல் மணம் இன்று புரிந்து
கலவினான் திருமகளை மனையில்
ஈருடல் ஓர் உயிர் என இருவரும் இன்பத்தில்
திளைக்க
இருதிங்கள் கழிந்த
காலம் இருதினம் போல் கரைந்ததங்கு 460
இரு திங்கள்
கடந்த பின்பு இருள் சூழ்ந்த
நள்ளிரவில்
விரும்பிய உடலை விட்டு நல் உயிர் நீங்குதல்
போல்
பைங்கொடி பதுமையை
நீங்கி பஞ்சணையை விட்டு
இறங்கி
மற்றவர் கண்கள்
மறைந்து மாளிகையை விட்டகன்றான் 461
மதிமுகம் கொண்ட பதுமை மஞ்சத்தில்
கண் விழித்தாள்
மனம்
கவர்ந்த மன்மதனை மலர் மஞ்சில் காணவில்லை
சேவலைத் தேடி அலையும் பெண் அன்னம் போல வருந்தி
சீவகன் முகம் காணாமல் சிவந்த முகம் துயரடைந்தது 462
சீவகன் அணைத்து
தழுவ என் மெய்யின்
அணிகலங்கள்
மேனியில் பதிந்து
அழுத்த மங்கை நான் தாங்கேனென்று
நம்பியை பழித்து
தூற்றும் என் நலம் நாடும் தத்தையே
நீயும்
அண்ணலை தடுக்க
மறந்து ஆழ்துயரில் எனை தள்ளியதேன் 463
வின்முகில்கள் தழுவி தவழும் வெண்மாட
மாளிகையே
கொடிகளில் ஒரு கோடியும் கொடிநட
பண்ணும் துளைகளும்
பூசுதற்கு வெண்நிறச்
சாந்தும் பல பொருள் இன்னும் தருவேன்
அனைத்தையும் காணும்
நீ அண்ணலை கண்டு சொல்லேன் 464
கைவளைகள் கழற்றி
எறிந்தாள் கனி தனப் பூண் துறந்தாள்
மணிமுத்து மாலைகள்
நீக்கி மீன்விழிகள் கண்மை போக்க
மெல்லிடை மேகலை பயந்து மென் ஒலி எழுப்பாதிருக்க
பதுமையின் துன்பம்
கண்டு பரவியதோர் துக்கம்
அங்கு 465
சில்லென்ற அருவி கொட்டும் சிறந்த
பொன் குன்றுகளே
சிந்திடும் மதுவை உண்டு சொக்கிடும்
பூ வண்டுகளே
வான்வெளியில் நடை பயிலும்
வெள்ளி ஒளி வெண்ணிலவே
என்
கண்வன் சென்ற இடம் எனக்கு
இன்று உரையும் என்றாள் 466
பொன்னுலகில் வாழுகின்ற
வின்னுலக தேவர்களே
சீவகன் சென்ற இடம்
தெரிந்திருப்பீர் நிச்சயமாய்
சிறுமை கொண்ட மானிடரிடம் சிந்தையில்
இரக்கமின்றி
என்
கணவர் இருக்கும் இடம் எனக்குரைக்க தயங்குவதேன் 467
இளங்கொடியாள் பதுமையின்
இடைவிடாத அழுகை கண்டு
அனலிடை மெழுகு
போல நைந்துருகும் வாடலினால்
யாழி இசையாய் சொல்லுதிரும்
நல்ல ஓரு தோழி வந்தாள்
பதுமையின் துயர் போக்க பக்குவமாய்
பல சொன்னாள் 468
தெளிந்த நீர் நதிகள் எல்லாம் உவர் கடலில் சேர்வது
போல்
உண்டிடும் பழுத்த
காமம் உள்ளத்தில் பிணைத்திடினும்
பழுத்த செம்பொன்னின்
மீது பட்ட தண்ணீர்
துளியைப் போல
காதலின் தன்மை என்றும் பிறர் காணாதிருத்தல் நன்று என்றாள் 469
காமத்தால் மிகுந்து
நிற்கும் காளை நிகர் ஆடவரெல்லாம்
கன்னியர் உடல் குழைய கலவி இன்பம் தூய்த்த
பின்பு
மங்கையை விட்டுப்
பிரிய மனதினில் வருத்தம்
கொள்ளார்
பிரிவினை கண்டு வருந்தும் பேதமை உடையோர் பெண்கள் 470
பேதமை என்னும்
விதையில் தீவினை மரங்கள்
முளைத்து
ஆசை
என்னும் வேரூன்றி அடையாப்
பொருள் விருப்பத்தோடு
கிடைத்த பொருள்
உவகை என்னும் கிளைகள் பல பரந்து விரிந்து
துன்பப் பூவில் கவலைக் காயால் மரணம் என்னும்
கனியை தரும் 471
பொன்மணி அணிந்த
பெண்ணே புகல்கிறேன் மேலும்
கேளாய்
முற்பிறப்பு பெண் பிறவியில் பிரிந்து
சென்ற கணவனுக்காக
அழுத கண்ணீர்
தொடுத்து பார்க்க அது ஆழிநீர்
அளவை மிஞ்சும்
இப்பிறப்பில் மேலும்
அழுதால் எல்லையேது அழுகைக்கெல்லாம் 472
குற்றம் சூழ் மனித பிறப்பில்
இறப்பதும் பிறப்பதும் இயற்கை
இவ்வியற்கை நியதி என்றும் இமைப்பளவும்
இன்றி தொடரும்
கற்றறிந்த பெரியோர்
இதனை கயல்கண் அளவும்
கவலை கொள்ளார்
அவ்வறிவு இல்லாதவர்கள்
கவலையாம் கடலில் ஆழ்வார் 473
தனிமையில் ஓர் ஆந்தைக் கூவ வரும் துன்பம்
பாம்பினால் என்றேன்
நாகம் உனைத் தீண்டியதால் நம்பியை
நீ மணந்து கொண்டாய்
ஆண் பெண் ஆந்தை இணைந்து
கூவ அமைந்தது நற்சகுனம்
இன்று
அழுது நீ புலம்ப வேண்டாம்
அழகு சீவகன் மீண்டும்
வருவான் 474
பதுமையின் தாய் திலோத்தமை பகர்ந்திட்டாள் தன் மகளிடத்தில்
போர்
தொழில் செய்வதற்கும் பொருள்
தேடி பெறுவதற்கும்
ஆரணங்கைப் பிரிந்து
செல்லுதல் ஆடவரின் கடமை ஆகும்
அவர்
நினைவில் இறந்திடாமல் காத்திருத்தல்
கன்னியர் கடமை 475
மயக்கிடும் இசை பொழியும் மகரயாழ்
இனிய சொல்லாள்
பதுமைக்கு நேர்ந்த
துன்பம் பணியாட்கள் மன்னனுக்கு
சொல்ல
எண்திசையும் தேர்படை
அனுப்பி எழில் மன்னன்
சீவகனைத் தேட
தனபதி ஆணையிட்டான்
தாவின படைகள் எல்லாம் 476
மாசறு பொன்னைப்
போன்ற பொன்வண்ண மேனி சீவகன்
மின்னலில் பிறந்த
ஒரு மின்னல் கொடியை
ஒத்தவன்
தன் மனம் மகிழ்ந்து ஒப்பும்
தனி ஒரு வடிவம்
தாங்கி
வடதிசை நோக்கிப்
போக மனதினில் எண்ணம்
கொண்டான் 477
முழுமதி போன்ற கலைகள் முற்றிலும்
பெற்ற சீவகன்
வீரக்கழல் அணிந்த
நம்பி விரைந்து தான் செல்வதற்கு
அணிகலன் அனைத்தும்
நீக்கி அருளொடு தந்தான் ஒருவனுக்கு
வெண்துகிலை இரண்டாக்கி
ஏற்றிட்டான் மேனி தன்னில் 478
மன்னனால் அனுப்பிய
வீரர்கள் மதன் ஒத்த சீவகனைக் கண்டு
காமனை மிஞ்சும்
எழிலோன் காண்பவர் மயங்கும்
வடிவோன்
நின் முக வடிவழகும் நிறைகொண்ட
இளமைப் பொலிவும்
கொண்டதோர் ஆடவனை நீர் கண்டீரோ
வழியில் என்றனர் 479
ஈரைந்து மாத எல்லையில் ஓர் திங்கள் குறைந்த
ஒன்பதில்
உள்ளத்தில் உறைந்து
நிற்கும் உன் மன்னன்
மகளைக் காண
அண்ணலும் வருவான்
எதிரில் என் உரை பொய்த்ததிலை
என
தனபதி மன்னனுக்கும்
உலோகபாலனுக்கும் உரைப்பீர் என்றான் 480
பதுமையார் இலம்பகம் முடிவுற்றது
6. கேமசரியார் இலம்பகம்.
வான்முகில் கொடையைப்
போல வழங்கிடும் கரங்கள்
கொண்ட
மணிமுத்து மாலைகளோடு
மதுமலர் மாலைகள் சூடிய
விசையையால் பெற்ற வீரமகன் பைங்கொடி
பதுமையின் கணவன்
வெங்கனல் வனங்களின்
உள்ளே கால்நடையாய் கடந்தான் 481
பழம் நிறை வாழைத்தோப்பில் பயந்தன மந்திகள் அவனைக்
கண்டு
அருளோடு அதனை நோக்கி அச்சத்தைப்
போக்கிச் சென்றான்
மலர் மது உண்ட வண்டுகள்
மதுவற்ற மலரைத் தாக்கி
எழுப்பிடும் இன்னொலிகள்
செவிபட சீவகன் நடந்தான் 482
செல்வரின் உள்ளமாய்
உயர்ந்து திரு அற்றார் மனமாய் இருண்டு
பூக்களில் இருந்து
ஒழுகும் பூந்துகள் மழையாய் கொட்டி
நஞ்சுடை அரவம் மறைந்து கீழ்மக்கள்
நட்பாய் குறுகும்
வழியினை கடந்து சென்று வான்தொடும் மலையை அடைந்தான் 483
அருவியில் அசதி போக
ஆழ்ந்திட்டான் நன்னீராடலில்
குளிர் மலர் பிண்டி நிழலில்
துலங்கிடும் முக்குடையானை
நறுமணம் கமழும்
மலர்களை நாடியே கையில்
ஏந்தி
அருகனடி வைத்து
தொழுது அவன் புகழ் பாடலானான் 484
எண்குணத்தான் காதலாலே
எண்வினைகள் அழிந்து போகும்
எண்வினைகள் பின் தொடரும் எண்ணமதில்
அவன் மறைந்தால்
இருவினைகள் செய்தோரெல்லாம் ஏற்றிடுவார்
வினைகள் பயனை
இதையுணர்ந்த உயிர்களெல்லாம் வென்று நிற்கும்
நாற்கதிசுழலை 485
சுதஞ்சணன் சொல்லித்
தந்த சித்திரகூடம் பள்ளி செல்ல
அருகனை வணங்கி
விட்டு அடுத்த வனம் உள்ளே சென்றான்
நல்ல அரிசிகள்
பலவினோடும் நலம் தரும் பழங்களோடும்
உண்டு வாழும்
முனிவர்களின் உயர்ந்த நல்பள்ளி
சேர்ந்தான் 486
சீவகனின் நல்ல அழகும் தெளிந்த
அவன் சொல்லழகும்
சாதுக்கள் மனம் பதிய தவநூல்
தருமம் பேசலுற்றான்
கல்லினை கழுத்தில்
கட்டி கடல் கடப்பான்
பிழைப்பானாகில்
காமத்து நுகர்ச்சியோடு
காக்கும் விரதத்தோறும் பிழைப்பார் 487
கருங்குழலை சடையாக்கிக்
கொண்டு காவியை உடலில்
போர்த்தி
மண்டையோட்டை கையில்
ஏந்தி மக்களை விட்டு
பிரிந்து வந்து
வீடு பேறு அடைவதற்கு விரதங்கள்
என நினைத்து வாழ்தல்
சிறப்பு அற்ற ஒரு பிறவிக்கு
சிறந்த விதை என்றான்
நம்பி 488
முனிவர்கள் மறுத்துக்
கூற மேலும் ஓதினான்
சீவகநம்பி
காய்கனிகள் உண்பதாலே
கிடைத்திடும் மோட்சம் என்றால்
பழங்களை உண்டு வாழ்ந்து மரத்தினில்
தொங்கும் வவ்வாள்கள்
பழவினை எல்லாம்
நீங்கி பெற்றிடும் வீடுபேறு
அன்றோ 489
நீள் சடை முடியினோடு
நீரினில் குளித்து வாழ்ந்து
உடம்பினை வருத்தி
நின்றால் வீட்டினை பெறலாம்
என்றால்
குளத்தினில் குளித்து
மூழ்கி காட்டினில் வாழும்
கரடி
கதி
மோட்சம் அடைவதில்லை கைவிடுங்கள்
உங்கள் உரையை 490
எரிந்திடும் ஆடை என்றெண்ணாமல் நெருப்பினை
ஆடையில் வைத்து
மறைவிடம் வைத்து
விட்டால் நெருப்பது ஆடையை விடுமா
வீட்டினை முற்றும்
துறந்து வனமதை வீடாய்
கொண்டு
மங்கையை கலவி வாழ்ந்தால் பாவங்கள்
போகுமா என்றான் 491
காமத்தில் முதிர்ந்த
மந்தியாய் காமத்தை நுகரல் வேண்டாம்
காய்
முற்றி கனி வீழ்தல் போல காயமும் ஒருநாள்
வீழும்
காமனை வென்ற அருகனை காலடி பணிந்து நோற்றால்
கிட்டிடும் அனந்த சுகம் கிடைத்திடும்
வீடுபோறென்றான் 492
நம்பியின் சொல்லைக்
கேட்டு நங்கையை துறந்தனர்
முனிகள்
அருகனின் அறத்தை
ஏற்று அவர் மலரடி தொழுது நின்றனர்
விடியலில் குளித்து
தொழுது வழியினை முனிவர்கள்
கூற
சென்றிடும் திசையை
நோக்கி செவ்வடி பெயர்க்கலானான் 493
தாமரை நிறைந்த
பொய்கைகள் தண்மலர் சூழ்ந்த
பொழில்கள்
அகிற்புகை சூழ்ந்த
மணமும் அரிய சந்தன குழம்பின் மணமும்
தங்குதற்கு எல்லா வளமும் தன்னகத்தே
கொண்ட நாடு
தக்கநாடு எனும் பெயருடைய தனி நாட்டின் எல்லை வந்தான் 494
செண்பகமலர் காட்டின்
உள்ளே சல சலக்கும்
வண்டுகள் ஒலியும்
சந்தனம் மணக்கும்
வெளியும் சிறந்த வெற்றிலைக்
காடும்
உண்ணுதற்கரிய உணவுகள்
ஒருகுறையும் இன்றி கிடைக்கும்
விண்ணவர் உலகை ஒத்த புகழ் வளம் கொண்ட தக்கநாடு 495
மதில் செல்வி
மானம் காக்கும் மங்கல ஆடையே அகழிகள்
மணிகோர்த்த மேகலாபரணம்
அகழியில் அலையும் அரவங்கள்
இளம் தனம் போல விளங்கும்
மதிலின் மேல் உள்ள ஞாயில்
எழும்பிய கோபுரம்
அவள் எழில் கொண்ட மதிமுகம் ஆகும் 496
( ஞாயில்
: படைவீரர்கள் மறைவிடம்
)
பாற்கடல் அமுதம்
தன்னை பரிவுடன் ஊட்டினாலும்
நாடியே அமுதம்
அருந்த நகரினை விட்டு
நீங்கார்
வின்முட்டும் மாளிகைகளும்
விளைநிலம் போல் வீதிகளும்
தன்னகத்தே கொண்டு
திகழும் கேமமாபுரம் தலைநகராகும் 497
கேமமாபுரம் அரசன் நரபதி கேடற்ற
நல்லாட்சி செய்தான்
மன்னன் நரபதிக்கு
நிகராக நல்லதொரு பெருவணிகனாய்
சுபத்திரன் வாழ்ந்திருந்தான் நிப்புமதியை
கரம் பற்றி
இருவருக்கும் பிறந்த மகள் எழில் மங்கை கேமசரியாவாள் 498
கேமசரி பிறந்த
நன்நாளில் சோதிடன் ஆய்ந்து
சொன்னான்
நல்லழகு பெற்ற இவள் நற்பருவம்
அடைந்த பின்னர்
நங்கையிவள் விழி நோக்கி நாணமுற்று
தலை கவிழ்ந்தாள்
நாடு
போற்றும் அம்மகனே நல்லதொரு கணவனாவான் 499
கைபிடி சிற்றிடை
உடையாள் கனியிதழ் செவ்வாயுடையாள்
திருமகளின் பெரு அழகில் செவ்வரி
கண்ணுடையாள்
செவ்விளநீர் தனம் உடையாள் தேன் சொட்டும் சொல்லுடையாள்
நாணமுற்று தலை குனிய நல்லவனை
கண்டறியாள் 500
அவள் நாண அவ்வணிகன் விருந்தளித்தான் தினம் தினமும்
ஆயிரத்தில் ஆண்களைக்
கண்டு நாணவில்லை ஒருதினமும்
ஈராறு ஆண்டுகளும்
இப்படியே விருந்தளித்தே கழிந்ததனால்
கேமசரி முதிர்ச்சி
கண்டு தாய் துவண்டாள்
துன்பத்திலே 501
இருண்டு நீண்ட குஞ்சுடனும் ஈரடிகள்
ஆமை வடிவுடனும்
தென்திசை பிறந்த
ஞாயிறு வடதிசை நோக்கி வந்தது போல்
ஆலமரத்தின் அடியில்
அமர்ந்து அருகனை மனதில்
நிறுத்தி
தியானத்தில் திளைத்த
நம்பியை சுபத்திரன் கண்டு மகிழ்ந்தான் 502
சீவகனை தன் தேரில் ஏற்றி திருவீதியில் செல்லுகையில்
கேமசரி கையில் யாழ் எடுத்து
அருகனின் புகழ் இசைத்தாள்
இல்லம் வந்த சீவகனை இனிய மண நன்னீராட்டி
அகிற்புகை மணம் வீச ஆடை அணிகலன் தந்தான் 503
சந்தனத்தால் தரை மெழுகி சங்கு முத்தால் கோலமிட்டு
பசும் பொன் கலத்தினிலே பலசுவை
உணவளித்து
பைங்கொடி மங்கையர்கள்
பக்கம் அமர்ந்து பரிமாற
அறுசுவை உண்டியினை
அண்ணலும் மகிழ்ந்து உண்டான் 504
சீவகனை செல்வி
கண்டாள் சித்தத்தில் நாணமுற்றாள்
செங்கை வளை கொடிகள் சிதறின
அவள் சிற்றடிகளில்
ஆசையை ஒளிரும்
நெருப்பாய் அவள் மனது வளர்த்து
கொள்ள
அத்தீயால் அவள் உடலும் அனலிலிட்ட
மெழுகானது 505
தனங்கள் சுமைத்
தாங்காமல் தள்ளாடும் சிற்றிடையும்
செம்பவளம் தேர்ந்தெடுத்து
செதுக்கி வைத்த செவ்விதழும்
கடல் கயலைக்
கைகொண்டு முகம் பதித்த
கருவிழிகளும்
சிந்தையினை கலக்கி
விட சீவகனும் கண் கரித்து நின்றான் 506
சுபத்திரன் தன் சுற்றத்துடன் மன்னன் நரபதி
மனையடைந்து
மகள்
கேமசரி திருமணத்தின் மங்கல நாள் சொல்லி
வந்தான்
மங்கல பேரிக்கைகள்
மற்றும் முரசு முழவு பறை முழங்க
சீவகனும் கேமசரியும்
கரம் இணைய மனம் கலந்தனர் 507
திண்ணிய தோள்கள்
கொண்ட திருமகன் சீவகநம்பியும்
கந்தர்வரும் கண்டு காமுறும் கலைமகள்
கேமசரி மெய் தழுவி
இல்லற இன்பந்
தன்னில் இருவரும் இணைந்து
மகிழ்ந்து
நல்லறத் தம்பதிகளாய்
நாள்தோரும் இன்பம் தூய்தனர் 508
மது கொண்ட மலருள் புகுந்து
மயங்கிடும் வண்டுகள் போல்
தேன்
சுவை நாடிச் சென்று
தேனில் சிக்கிய ஈக்கள் போல்
கேமசரி என்னும்
மலரில் கிடைத்திடும் தேன் மதுவில்
சிக்கிய வண்டு ஈக்கள் போல சீவகனும் சிக்கி
மகிழ்ந்தான் 509
இரு திங்கள்
விரைந்து செல்ல இன்பத்தில்
வீழ்ந்த சீவகன்
காலையில் குழவியாய்
பிறந்து கடும் பகல் இளைஞனாகி
மாலையில் முதுமை
சேர்ந்து மேற்திசை பரிதியாய்
மறைய
அகிற்புகை சூழ்ந்திருந்த
அணங்குகள் அறையை அடைந்தான் 510
கலவியில் இன்பங்கண்டு
களித்தன இருவுடல்கள்
களைத்தன மெய்கள்
இரண்டும் கண்ணுறங்கின காமத்தின்
பின்
சிந்தையில் பிரிவை
ஏற்ற சிங்க நிகர் சீவக நம்பி
கேமசரி கண் விழிக்கும்
முன்னே கடந்திட்டான் மாளிகை
விட்டு 511
கனவினால் உறக்கம்
களைய கேமசரி கண்கள் விழிக்க
கட்டியவன் கட்டிலில்
இல்லை கலங்கினாள் நெஞ்சம்
பதற
மாணிக்க மணி இழந்த மாநாகம்
கலங்குதல் போல்
மாளிகை எங்கும்
அலைந்தும் மன்னவனை அவள் காணவில்லை 512
கைவளைகள் தானே கழல கண்களும்
நாற்புறம் மயங்க
உடலது பொன்னாய்
உருக உள்ளமோ ஆழியாய் பொங்க
மெல்லிடை துவண்டு
நெளிய மேனியில் பசலைப்
படர
பிண்டி வனப் பெண்ணாகப் பேதையும் துயரம்
கொண்டாள் 513
இளமையோ நீர்குமிழ்
ஆகும் இன்பமோ மின்னலாய்
அழியும்
பொன் பொருள் செல்வங்கள் பரிதியின்
பனியாய் கரையும்
ஊழ்வினை உடன் வருங்காலை தீவினை
வலிதாய் இருக்கும்
பிரிவினையை எண்ணி நீயும் புலம்பாதே
என்றாள் தோழி 514
சுபத்திரன் ஆட்கள்
கூடி சுற்றி தேடினர்
எண்திசையும்
சீவகன் நடந்து
சென்றான் சித்தன் போல் தன் திசையில்
எதிரினில் வந்த ஒருவன் இவன் விபரம் விரும்பி
கேட்க
துணைவியர் நால்வருண்டு
துக்கமில்லா மகனுண்டென்றான் 515
தானம், ஒழுக்கம், தவம்,
வழிபாடு நான்கும் என் மனைவியரென்றும்
நால்வரும் பெற்றெடுத்த
நல்வினையே என் ஒருமகனென்றான்
இம்மகனை பெற்றவர்
எல்லாம் இருவினையற்ற அருகனை
தொழுது
வீடென்ற மோட்சம்
பெற்று வென்றிடலாம் பிறவி என்றான் 516
கூற்றுவன் உயிரைக்
கொண்டு கொடியவழி செல்லுகையில்
நல்வினை என்னும்
உணவை நாடியே எடுத்து
செல்வீர்
காமம் தரும் இன்பத்தாலும் கள் தரும் மயக்கத்தாலும்
களிப்புடன் இருந்தாயாகில்
கடும் வினை தொடரும்
என்றான் 517
ஊனினை மிகவும்
உண்டு உடலினை பேணும்
மனிதா
மண்ணின் மேல் ஆசையாலே மதம் கொண்டு வாழும்போது
உயிர் பிரிந்த
உடலுக்காக அம்மண்ணே ஆசை கொள்ளும்
– என்ற
அறிவை நீ பெற்றாயானால் அறங்களை
விரும்பிச் செய்வாய் 518
இன்னும் பல அறங்கள் சொல்லி
எதிரில் நின்ற மனிதனுக்கு
ஒளிவிடும் மணியும்
வைரமும் உடைய நல்லணிகள் தந்தான்
வழிப்போக்கன் நம்பியை
வணங்கி வலமது சுற்றி
வந்தான்
சீவகன் தனியே சென்றான் செழித்த
பெருங்காட்டினுள்ளே 519
கேமசரியார் இலம்பகம்
முற்றிற்று.
7. கனகமாலையார் இலம்பகம்.
மனமது காமம் கொண்டு மந்தி போல் ஆட்டம்
போட
மனைவியை விட்டு
நீங்கி பரத்தையை நாடுதல்
போல
தீம்புனல் பாய்ந்து
பெருகும் தழைத்திருந்த மருதம்
விட்டு
வேழமும் வேங்கையும்
திரியும் வனத்தின் வழியுள்
சென்றான் 520
காயம்பூ மலர்கள்
மலர்ந்து கோங்குகள் படர்ந்து
விரிந்து
வெண்முகில் தவழ்ந்து
ஓடும் விண்வரை தொட்ட மலைகள்
கொட்டிடும் அருவி ஓசை கொட்டிடும்
முழவாய் ஒலிக்க
தோகையின் மயில்கள்
ஆட சொர்க்கம் போல் இருந்தது காடு 521
களிறுகளின் வெண்கொம்பாலே
கருங்கல் உரலின் உள்ளே
ஐவன
நெல்லைக் கொட்டி அவலாக இடித்து எடுத்து
தேன் அதில் கலந்து பிசைந்து
கனிந்திட்ட வாழை கனியொடு
குறவர்கள் மகிழ்ந்து
உண்ணும் குறிஞ்சி நில எல்லை கடந்தான் 522
மரகதப் பலகை மேலே செம்பஞ்சை
பரப்பியது போல்
பசுமையாம் பயிர்கள்
மேலே பசி கொண்ட புச்சிகள்
பரவ
இடையர்கள் ஊதும் குழலுடன் ஆவின் வெண்மணிகள் ஒலிக்க
இணைந்த அம்முல்லை
நிலத்தை இணையற்ற நம்பி கடந்தான் 523
நறுமண மலர்கள்
கொண்ட நல்லெழில் சோலை தன்னில்
பளிங்கென நீர் நிறைந்த பரந்த வெண் குளத்தினுள்ளே
கொட்டியும் ஆம்பலும்
குவிந்து கொட்டிடும் மதுவைப்
பருக
வண்டுகள் பாடும்
இசையை சீவகன் அமர்ந்து
ரசித்தான் 524
விண்ணிலே வலமாய்
செல்லும் விண்ணுலக ரம்பை ஒருத்தி
நம்பியின் அழகில்
மயங்கி நாடினாள் சீவகன்
அருகில்
கையினில்மலர் ஒன்றெடுத்து
காமனாம் சீவகன் மேல் வீசி
தூதாக மணக்கும் புகையை அநங்கமாவீணை அனுப்பினாள் 525
சீவகன் அவளைப்
பார்த்தான் சிந்தையில் ஆசை ஏதின்றி
அவன்
உள்ளம் அறிந்த அழகி அகமது நடுக்கம்
கொண்டாள்
எண்ணத்தில் அவனைக்
கூடும் அவள் இறுகிய
ஆசைக் கண்டு
உள்ளத்தில் எண்ணலானான்
உயர்ந்த நல் எண்ணத்தாலே 526
இளமையில் இன்பம்
நாடும் எழில் கொண்ட மங்கையர்கள்
முதுமையின் நிலையை
எட்ட மூடுவர் தம் விழிகள் தன்னை
மென்மலர் தோள்கள்
மீது மிகுதியாய் உறங்கிய
ஆடவர்
தன்
புலன்கள் குன்றி தளர தம் கண்கள்
மூடி அகல்வர் 527
குருதியை உள்ளே தோய்த்து நரம்பினால்
எலும்பைக் கட்டி
தசையினை மேலே அப்பி தோலினை
அதன் மேல் போர்த்தி
ஒப்பனை மயிரால்
மூடி ஒன்பது வாசல்கள்
வைத்து
உருவத்தை ஆக்கித்
தந்த அத்தச்சன் நல்லவன்
என்றான் 528
அநங்கமாவீணை அவனின்
கவனத்தை தன்பால் ஈர்க்க
வானத்தில் விளையாடியவளை
விஞ்சையன் கொண்டு செல்ல
அவன் மனைவி உதவியாலே அழகிய சோலையில் வீழ்ந்தேன்
நின்னை நான் நோக்கிய பின் நெஞ்சது என்னிடம்
இல்லை 529
வாதமும் பித்தமும் கொண்டு ஊனுடன் செங்குருதி சேர்த்து
சீழுடன் நிணமும்
மலமும் சேர்ந்திடும் விழியின்
பீளையும்
முடைநாற்றம் வீசும்
உடலை மோகத்தால் பேணிகாத்து
காமத்தின் சுகத்தைக்
காண கவிஞர்கள் கூறியதென்றான் 530
அநங்கமாவீணையின் மறைவு அவள் கணவன் பவதத்தனை வாட்ட
மனைவியின் பிரிவால் கொண்ட மயக்கத்தில் மனமது துவள
இயக்கியே நீதான்
என் மனைவியின் எழிலைக்
கண்டு
மறைத்த நீ அவளைத்
தந்தால் வேண்டுவதை தருவனென்றான் 531
பவதத்தன் நிலையைக்
கண்டு சீவகன் நம்பி அருகில் வந்தான்
துணைவியை காணாத் துயரை
நம்பிக்கு நவின்று நிற்க
மந்திரம் ஒன்றைச்
சொல்லி மனமது ஒன்றிக்
கூறினால்
வில்
மீண்ட அம்பு தொலைவில்
மனவியை காண்பாய் என்றான் 532
பவதத்தன் அம்மந்திரத்தை
பலமுறைச் சொல்லச் சொல்ல
அநங்கமாவீணையும் அங்கு சீவகனின்
ஆசையை
விட்டாள்
மந்திர ஒலியின்
தன்மை மனதினை தூய்மையாக்க
நெஞ்சினில் கணவனைக்
காண வஞ்சியும் நாடி சென்றாள் 533
நீலமும் நாகமும்
கோங்கும் நறுமண மலர்கள்
கைஏந்தி
அருகனின் திருவடியில்
வைத்து அவன் புகழை வாழ்த்திப்
பாடி
காமத்தின் வேரை அழித்து காதிவினைகள்
அனைத்தும் துறந்த
எம்மானே வணங்குகின்றேன் உன் நிலை பெறுவதற்கு
என்றான் 534
கருத்தினில் அருகன்
பதிய கால்களும் பரியாய்
இயங்க
காட்டினில் நடக்கலானான்
களிறை ஒத்த சீவக நம்பி
ஐம்புலன் நுகர்ந்து
மகிழும் அத்தனை அம்சமும்
கொண்ட
கன்னலில் சாறு பிரிக்கும் வளமான மத்திமதேசம் சென்றான் 535
கரும்பினை ஆலையில்
இட்டு கனியொத்த சாறு பிழியும்
ஓசையை கேட்ட மயில்கள் முகிலோசையோ
என கூவ
கமுகு மரக் காயைப் பிய்த்து
களிப்போடு மந்திகள் வீசும்
காயோடு கனிகள்
கொண்ட சோலைக்குள் நுழைந்தான்
நம்பி 536
கரியது தான் மறையும் அளவு கதிர்கள் கொண்ட செந்நெல் நாட்டை
பல
துறைகள் மேம்படுத்தி பாங்குடன்
நல்ஆட்சி செய்து
வறியோர்க்கு வாரி கொடுக்கும் வளம் பல கொண்ட நகரம்
ஏமமாபுரம் என்னும்
நகரில் ஏறு போல் நடந்தான் 537
வண்டுகள் மொய்த்து
திரியும் வனப்புடன் திகழும்
பொழில்களும்
பளிங்கென உருவம்
தெரியும் பன்னீர் ஒத்த குளக்கரையும்
அருகினில் பாங்காய்
அமைந்த அத்தாணி மண்டபம்
ஒன்றின்
அடர்ந்து வளர்ந்து
செழித்த மாமர நிழலில் அமர்ந்தான் 538
பவளவாய் பேடை அன்னம் தன் பேதமை மிகுதியாலே
நீரினில் அசைந்து
தெரியும் தன்னிழல் உருவங்கண்டு
தன் துணை ஆண் அன்னத்தை
உன் காதலியை கண்டேன்
என
சினத்துடன் ஊடல் கொள்ள திகைத்தது
அந்த ஆண் அன்னம் 539
பேடையின் ஊடல் போக்க சேவலும்
தன் இறகால் தழுவ
அன்னங்கள் ஊடல் தனை அமர்ந்திருந்த
சீவகன் கண்டு
தத்தையின் ஊடல் தன்னை தன் மனம் விரும்பி
வருந்த
தன்
பிரிவு தத்தை நெஞ்சிக்கு
தணல் வதை என எண்ணினான் 540
மத்திமதேய நாட்டின்
மன்னன் மறம் போக்கி
ஆளும் தடமித்தன்
மங்கையர் குலமே வாழ்த்தும் நளினை அவன் பட்டத்தரசி
இல்லற இன்பத்தில்
இணைந்து நல்லறம் போல் பிறந்த மகன்
விசயன் என்னும்
பெயர் சூடிய வீரப்புகழ்
கொண்டவனாவான் 541
வண்டு அலர் சோலைக்குள்ளே வருகின்ற
மணத்தை நுகர
வீரக்கழல்கள் இசை ஒலிக்க வீசும்
தென்றலாய் நடந்து – அங்கு
கல்விக் கடலான சீவகனை குறிப்பால்
கண்டு அருகில் சென்று
எந்நாட்டு அறிஞன்
நீவீர் எங்கிருந்து வருகிறீர்
என்றான் 542
சீவகன் தன் பெயரும் நாடும்
தன்னுள்ளே மறைத்துக் கொண்டு
புகழையே மிகவும்
விரும்பி பொய்யான தகவல் தந்தான்
விசயனோ அவன் சிந்தை அறிய இந்நாடு இவ்வூர்
இல்லமெல்லாம்
இன்று முதல் உன்னது என அண்ணலும் அவன் சொல்லேற்றான் 543
மன்னன் மகன் விசயன் மாங்கனி
உண்ண விரும்பி
வில்லினில் அம்பை தொடுத்து விட விட கனி விழவில்லை
சீவகன் வில்லை
வாங்கி பெருங்கனி ஒன்றைத்
தாக்க
அம்பது அக்கனியை அவன் நின்ற இடத்தில்
தந்தது 544
வில் வளம் கண்ட விசயன்
வில் படைத்த கடவுள்
இவனே
இவன்
மனம் மகிழ்ச்சியாக எதையும்
நான் செய்வேனென்று
உள்ளத்தில் உறுதி பூண்டு சீவகனை
அழைத்துக் கொண்டு
அரசனின் முன்னே
நிறுத்தி அண்ணலின் திறம் கூறலானான் 545
இராமன் எடுத்தது
கண்டனர் இற்றதை கேட்டனர்
இருந்தவர்
எய்திட்ட ஒரு அம்பால் ஏழு மரம் சாய்ந்தது
என்று
காவியம் சொன்னது
அதை கண்டவர் யாரும்
இல்லை
இவரது கைவில்லின்
திறன் இருகண்ணால் கண்டேன்
என்றான் 546
மைந்தனின் மொழியைக்
கேட்டான் மன்னனும் மகிழ்ந்து
சொன்னான்
விசயனோடு இன்னும்
நால்வர் என்மகன்கள் உள்ளார்
என்றும்
வில் பயிற்சி
எதையும் அவர்கள் முறைப்படி
கற்றார் இல்லை
துரோணராய் நீ இருந்து சொல்லித்தர
வேண்டும் என்றான் 547
அண்ணலும் அதனை ஏற்றான் அவர்களுக்கு
ஆசான் ஆனான்
பலகலைகள் அவர்களுக்கு
பக்குவமாய் பயிற்சி தந்தான்
சீவகன் நினைத்ததை
எல்லாம் சிறப்புடன் கற்றுத்
தெளிந்தனர்
நம்பியும் ஒரு நாள் தனியே அரண்மனை நந்தவனம்
புகுந்தான் 548
வேங்கை மரம் விரிந்து நிற்க வெண்துகிலாய்
செம்மரம்
பூக்க
தேர்
கொண்ட சக்கரம் போல் மகிழம் பூக்கள்
மலர்ந்து வீச
முல்லை அரும்புகள்
எல்லாம் முழுமதி போல் பூத்துக் குலுங்க
அத்தனை மலர்கள் கோர்த்து அழகிய வாகைமாலை
தொடுத்தான் 549
( வாகைமாலை
: மாலைகளில் ஒரு வகை )
வாகையை தொடுத்த
கைகள் வேறொரு மாலைத்
தொடுத்து
மாலையை பந்தாய்
சுருட்டி மணக்க சந்தன புனுகு தெளித்து
மலர் பந்து செய்யும் போது மாங்கனி போல் சொல் உதிர்க்கும்
பணிப்பெண் ஒருவள்
வந்து பணிந்து நின்றாள்
சீவகன் முன் 550
மாலையும் பந்தும்
என் தலைவி கனகமாலைக்கு
பொருந்தும் என
செம்பவள வாய் திறந்து சீவகனிடம்
தேனாய் கொட்ட
நம்பியோ அனைத்தும்
தந்தான் நங்கையும் ஏற்றுக்
கொண்டாள்
கனகமாலைக்கு எடுத்துக் காட்ட தலைவியும்
மகிழ்ந்து ஏற்றாள் 551
பெண்களின் வளரும்
மார்புகள் ஆண்களின் மார்பை
தாக்க
சூடிய மாலைகள்
நெகிழ்ந்து சுவைகொண்ட மதுவைக்
கொட்ட
வேல்விழி நடத்தும்
நாடகத்தை வாழ்க்கையில் நுகரா ஆண்கள்
வேடரின் வாழ்க்கை ஆகும் என மாலையில் எழுத்தை கண்டாள் 552
கன்னியின் பெண் மனது காமத்தீ
நோயால் வருந்த
தோள்கள் இரண்டும்
மெலிய கைவளை தோல்வரை
நீள
உடலினில் பசலைப்
பரவி உள்ளத்தில் அவனை நினைத்து
மாலையை தெப்பம்
ஆக்கி இரவென்னும் கடலைக்
கடந்தாள் 553
மாலையை எனக்கு
அளித்து என் மனதினை
இறுக்க பிணைந்த
மன்மதன் ஒத்த அவனை மாலையால்
நானும் பிணைப்பேன் என
மணிச்செப்பு மாலையை
எடுத்து அநங்கவிலாசினி கைபதித்து
அவனிடம் தந்து வா என்று அப்பெண்ணுக்கு ஆணை இட்டாள் 554
அநங்கவிலாசினி மாலையை
தந்தாள் அண்ணலும் ஏற்க மறுத்தான்
அரண்மனையில் தங்குவோர்கள்
ஐம்புலன்கள் அடக்க வேண்டும்
ஆசிரியன் பணி ஆணை எனக்கு
இது அறம் பிழை செயல் என்றான்
தலைவி வருந்துவாள்
என்றாள் தலைவனும் ஏற்றுக்கொண்டான் 555
விற்போரில் விசயன்
ஒரு பாண்டவ விசயன் ஆனான்
வேல்
போரில் கதம்பன் ஒரு வேல்முருகன் போல ஆனான்
வாள் போரில்
கனகன் ஒரு பரசுராமனுக்கு
நிகர் ஆனான்
யானை தேர் போரில் அசலகீர்த்தி சச்சந்தனின் அசலன் ஆனான் 556
( அசலன்
: சச்சந்தனின் படைத்தலைவன்
)
குதிரை போரில்
சேனன் ஒரு குற்றமற்ற நகுலன்
ஆனான்
தடமித்தன் மக்கள்
ஐவரும் தன்நிகர் அற்ற வீரனானார்கள்
சீவகன் தந்த பயிற்சிகளை சிந்தையில்
மகிழ்ந்த மன்னன்
நம்பியை தனியே அழைத்து நயம்பட
உரைக்கலானான் 557
என் மக்கள்
ஐவருக்கும் நீ கற்று தந்த
போர் கலையை
அங்கமே கண்ணாய்
கொண்டு அகம் குளிர களித்தவன் நான்
ஈடுயிணையற்ற
உனக்கு நான் என்ன கைமாறு செய்வேன்
என்
மகள் கனகமாலையை இசைவுடன்
ஏற்றுக்கொள் என்றான் 558
நங்கையின் எழில் வடிவை நம்பியின்
மனமும் விரும்ப
எண்ணத்தை உள்ளே அடக்கி இன்சொல்லில்
மறுத்து மொழிய
கனகமாலைக்கு ஏற்ற கணவன் வில்லாற்றல்
கொண்ட வீரன் – என
சோதிடன் சொல்லிய சொல்லை நெறியுடன் வேந்தன்
சொன்னான் 559
நகரது மணக்கோலம்
பூண நற்புறமும் முரசொலிக்க
சீவகனுக்கும் கனகமாலைக்கும்
சிறப்புடன் மணம் முடித்தான்
மணிக் குண்டலங்கள்
ஒளிவீச மேகலையும் சிறு ஒலி எழுப்ப
சிலம்புகள் சிணுங்கி
நகைக்க சீவகன் இன்பம்
நுகர்ந்தான் 560
இல்லறக் கடலில்
மூழ்கி இன்பமாம் முத்தை
எடுத்து
தரணி
போற்றும் கனகமாலையின் தாழ்விலா
அழகைப் பருகி
தனமித்தன் அன்பைத்
தூய்த்து சில நாட்கள்
தங்கி இருக்க
ராசமாபுரத்து நிகழ்வை
நயம்பட் தேவர் சொல்கிறார் 561
நம்பியின் தம்பி நந்தட்டன் சீவகன்
இருப்பிடம் காண
ஏமாங்கத நாடு முழுவதும் ஏக்கத்தில்
சுற்றி அலைந்து
மனம் அது மயங்கி
சோர்ந்து ராசமாபுரத்தை அடைந்து
கழலுவேகன் மகள் தத்தையை காண அவள் மனைக்கு
சென்றான் 562
ஐந்து வில் பின்னே நின்று
சிரமது தாழ்ந்து வணங்க
தத்தையோ வியந்து
நோக்கி தன் அருகில்
வரப்பணித்தாள்
மூன்று வில் தொலைவில் வந்து முகமது அவள் சிலம்பை நோக்க
என்
தலைவர் சீவகநம்பி எங்குள்ளார்
என ஏக்கத்தில் கேட்டான் 563
மதிமுகம் எனும் வித்தையாலே தத்தை ஒரு வித்தைக்
கூறி
மதி
ஒத்த தன் முகத்தை
மலர் போலத் தடவிக்
கொண்டு
கனகமாலையின் கருங்குழலில்
கற்பகமாலை சூடும் நம்பியை
எதிரில் கண்டு முறுவல் பூத்து
நந்தட்டன் வணங்கி நின்றான் 564
( மதிமுகம்
: தூரத்தில் நடப்பதை
அறியும் வித்தை )
நம்பியை கண்ட நந்தட்டன் தத்தையை
மீண்டும் வணங்கி
சீவகனின் அடியைச்
சேர அருளிட வேண்டும்
என்றான்
அரண்மனை அரசனைப்
போல் அணிகலன் அணியச்
செய்தாள்
ஆகாச
காயினி என்னும் மந்திரத்தை
ஓதி நின்றாள் 567
அகிற்புகை மணம் நிறைந்த ஆடை விரித்த படுகையில்
நந்தட்டனைப் படுக்கச்
சொன்னாள் நல்நெஞ்சாள் காந்தர்வதத்தை
நந்தட்டன் அதையே செய்ய நாடி ஒரு தெய்வம்
வந்து
ஏமமாபுர அரண்மனையில்
சீவகன் வடிவில் விட்டு
சென்றது 568
சீவகன் வடிவம்
கொண்ட நந்தட்டனைக் கண்ட வசுந்தரி
வில்லாளன் விசயனிடம் விஷயத்தை சொல்லிய பின்
விசயனும் சென்று பார்த்தான் வடிவத்தில்
ஒத்த அவனை
ஊள்ளுணர்வு ஏதோ சொல்ல உண்மையில்
நீயரென கேட்டான் 569
நந்தட்டன் மௌனம் கொள்ள விசயனும்
விரைந்தான் சீவகனிடம்
சீவகன் விரைந்து
வந்தான் இளவளோ அடி பணிந்தான்
நீண்ட நாள் பட்ட பிரிவால்
நந்தட்டன் கண்ணீர் சொரிய
தம்பியை ஆரத்தழுவி
தன் மார்பில் அணைத்துக்
கொண்டான் 570
அண்ணலும் தம்பி நந்தட்டனை அரண்மனை
அழைத்து வந்தான்
கற்புடை கனகமாலையை
தம்பி காலடி விழுந்து
தொழுதான்
மனைவிக்கு அவனைக்
காட்டி இவன் உன் மைத்துனன் என்றுரைக்க
மனமது மிக மகிழ்ச்சி கொள்ள மைத்துனனுக்கு
விருந்தளித்தாள் 571
சீவகனும் நந்தட்டனும்
சேர்ந்து செவ்விய பூம்பொழில்
வந்து
அழகிய ஓர் மண்டபத்தில் தனியே அமர்ந்து பேசலானார்
சுதஞ்சணன் கொண்டு
செல்ல சுற்றமும் பெற்றோர்களும்
அடைந்திட்ட துன்பத்தை
நான் அறிந்திட விளக்கு
என்றான் 572
பதுமுகன் பொருமிச்
சொன்னான் இனி செய்வதைச்
சிந்திப்போமென
புத்திசேனன் பொங்கி
சினந்தான் மன்னனைக் கொல்வோம்
என்று
தேவதத்தன் தெளிவுடன்
சொன்னான் சீவகன் நிலை அறிவோம் என
சீதத்தன் மனம் சீறி நின்றான் வெம்பகை வெல்வோம் என்று 573
பழம்பகை எந்த நாளும் பழகிடும்
நட்பு ஆவதில்லை
பாரெல்லாம் தேடிச்
செல்வோம் பரிதியாம் சீவகனை
காண
குணமாலை அண்ணியிடம்
சென்றேன் குமுறிய சோகத்தில்
இருந்தார்
தாங்கொணா அவர்நிலையால்
தலை குனிந்து இல்லம்
வந்தேன் 574
தத்தையை காணச் சென்றேன் தனிமையில்
யாழிசைப்பதை கண்டு
கணவனை காணா நிலையில்
களிப்பதை இழித்துரைத்தேன்
கற்புடை அந்த அண்ணி கனிமொழியில்
மந்திரம் சொல்லி
எனை
இங்கு அனுப்பி வைத்தார்
இதயத்தால் நன்றி சொன்னேன் 575
சுதஞ்சணன் எனை தூக்கி வந்தான்
சுகமதை சில நாள் தந்தான்
சென்றிடும் வழியைச்
சொல்லி செய்திடும் முறைகள்
சொன்னான்
நடந்ததை முழுதும்
சொல்லி நந்தட்டனை தெளியச்
செய்து
தடமித்தன் நகரம் வந்தேன் தம்பி உன்னை அடைந்தேன்
என்றான் 576
ராசமாபுரத்தில் உள்ள நம்பியின் நண்பர்கள்
எல்லாம்
நாடினர் தத்தை இல்லம் நண்பனின்
நிலையைக் கேட்டனர்
தத்தையும் மகிழ்ந்து
சொன்னாள் தலைவனின் நிலையைப்பற்றி
தன்னிலை மறந்து
ஆடி தாய் கண்ட சேயாய் மகிழ்ந்தனர் 577
அன்னையே நாங்கள்
அனைவரும் அவ்விடம் செல்லுகின்றோம்
அண்ணலுக்கு செய்தி
உளதோ என அன்புடன்
வேண்டி கேட்க
மற்றவர்கள் அறியா எழுத்தில் மன்னனுக்கு
ஓர் ஓலை தந்தாள்
மகிழ்வுடன் பெற்ற அவர்கள் நம்பியை
நாடிச் சென்றனர் 578
வெண்மதி ஐப்பசி
நாளில் பிறந்து வளர்ந்த
பரிகள்
இருபதினாயிரம் எண்ணிலும்
நொடிக்கு நூறுவில் ஓடும் எருதுகள்
வலிய நடையுடை
கழுதைகளும் விரைந்திடும் ஒட்டகங்களும்
பொருள்களை சுமந்து
கொண்டு புறப்படும் படையாய்
நின்றது 579
நண்பர்கள் நால்வரும்
அவரவர் நல்ஜாதி குதிரையில்
ஏறி
பறவைகள் சகுனம்
பார்த்து பிற நிமித்தம்
ஆய்ந்து அறிந்து
முரசுகள் இடியாய்
முழங்க சங்கின் சங்கநாதம்
ஒலிக்க
சமுத்திரம் போன்ற சேனை தரை அதிர புறப்பட்டது
அன்று 580
அருவிகள் கொட்டும்
மலைகளையும் நெல் விளைந்த
மருதத்தையும்
தினைப்புனம் உடைய காட்டையும் வறியவர்
வாழும் நாட்டையும்
சீவகன் இருப்பான்
என்று எங்கும் தேடியே
கடந்து சென்று
தவமுனிகள் சேர்ந்து
வாழுகின்ற பள்ளியில் படை தங்கியது 581
மங்கலம் அனைத்தும்
இழந்தும் திருமகள் போலத் திகழும்
மங்கையாம் சச்சந்தன்
மனைவி விசயை தன் மகன் நினைவால்
மறைவிடம் தன்னில்
அமர்ந்து அருகனின் அடியைப்
போற்றி
கண்களில் கண்ணீர்
பெருக கடும் தவசி போல் இருந்தாள் 582
விசயை என்று அறியாமலே
நால்வரும் அவளை வணங்கி
திருமகள் போன்ற தாயே தாங்கள்
குலம் யாதென கேட்க
என் குலம் சொல்லுதலும் என் வரவை பற்றி கூறுதலும்
இயலாது என்று சொல்லி உம் விபரம் கூறுமென்றாள் 583
சாகரன் மனைவி குருதத்தை
பெற்ற
மகன் சீதத்தன் இவன்
அசலன் துணைவி
திலோத்தமையின் அன்பு மகன் புத்திசேனன்
தனபாலன் இல்லத்தாள்
பவித்திரையின் மகன் பதுமுகன்
இவன்
விஜயதத்தன் வீட்டரசி
பிரிதிமதியின் புதல்வன் தேவதத்தனிவன் 584
கந்துக்கடன் இல்லத்தில்
சீவகன் களித்திருந்து வாழ்ந்த
நாட்களிலே
நந்தன், நபுல, விபுலர் என மூவரும் பிறந்தனர்
அங்கே
எட்டு திக்கு
யானைகள் போல் வளர்ந்து
வந்தோம் நண்பர்களாய்
எட்டெட்டு கலைகளிலும்
எதிர்ப்பாரின்றி தெளிந்து நின்றோம் 585
கந்துக்கடன் பெற்ற சீவகனை கட்டியங்காரன்
கொல்ல என்று
ஆரம்பித்த வார்த்தைக்
கேட்டு அங்கு விசயை மயக்கமுற
நண்பனுக்கு வந்த துன்பம் தன் மகனின் துன்பம்
போல
மயங்கி விழுந்த
மங்கையிவள் மாதவத்தின் பெருமை
என்றனர் 586
பாவை கொண்ட மயக்கத்தை பன்னீரால்
தெளியச் செய்ததும்
சச்சந்தன் மனைவி புலம்பலானாள் சிவந்த முகம் பாலாய் வெளிற
பொய் மயிலின்
பொறியில் ஏறி பிணம் சுடும் காட்டில்
இறங்கி
ஐயனே
உன்னைப் பெற்றேன் அடுத்தவன்
கையில் சென்றாய் 587
கந்துக்கடன் சுனந்தை
உன்னை கண்போல வளர்த்திட்டாலும்
நான்
கண்ட கனவின் பயனை நாயகன் எடுத்துச்
சொல்ல
உயிர் தாங்கி
நானிருந்தேன் உயிருடன் நீ இருப்பாய் என்று
உன்
உயிர் நீங்கிய பின் உயிர் வாழ்தல்
தீவினை என்றாள் 588
குன்றொத்த சச்சயந்தன்
மகனே குருகுலத்தில் தோன்றிய
கோவே
ஏமாங்கத நாட்டின் அரசே
என் உயிரின் இனிய உயிரே
மலர்மாலை அணிந்த
மார்பா மறம் அழிய பிறந்த சீவகா
இனி உன்னை என்று காண்பேன்
என்றழுது தரையில் வீழ்ந்தாள்
589
அரசன் சச்சந்தன் மறைந்தும்
அவன் தேவி விசயை என அறிந்து
களிப்பினில் கையை கவிழ்த்து கட்டியங்காரன்
வீழ்ந்தான் என்று
மயில் போல மண்ணில் வீழ்ந்து
மயங்கிய ராணி விசயையை
தெளிவுர செய்து
நண்பர்கள் சீவகன் உள்ளான்
என்றனர் 590
சச்சந்தன் பரணியில்
பிறந்தான் தரணியை நன்கு ஆண்டான்
என்
மீது கொண்ட அன்பால் இரணியனின்
துன்பம் உற்றான்
நான் உற்ற துன்பங்கள் எல்லாம்
நயம்பட எடுத்து சொல்லி
நம்பி மனம் வருத்தம் இன்றி நாடி என்னை
வரப் பணித்தாள் 591
சீவகநம்பி ஒருவனன்றி
செய்தி வெளியே தெரிய வேண்டாம்
எவ்விடம் நீர் சென்றாலும் யாரையும்
நம்ப வேண்டாம்
மங்கையர் தொடர்பை
நீக்கி மனதினில் உறுதி கொள்வீர் என்றாள்
நால்வரும் விசயை வணங்கி நம் படை எழுக என்றார்கள் 592
அருவிகள் கொட்டும்
மலையையும் அடர்ந்த பெருங்காடுகளையும்
இருகரை புரளும்
ஆறுகளையும் இனிய மலர்ச்
சோலைகளையும்
கடந்து சென்ற அவர்கள் படை கடைசியில் ஏமமாபுரம்
வந்து
நான்கு காத தூரத்தில் நல்ல ஆற்றங்கரையில் தங்கின 593
தோழர்கள் நால்வரும்
கூடி தூய நன் மணலில் அமர்ந்து
நம்பியை நகரில்
காண்பதற்கு நல்லதோர் உபாயம்
ஆய்ந்திட
பதுமுகன் பணிவுடன்
சொன்னான் பசுக்களைக் கவர்ந்தோமாகில்
சீவகன் இந்நகரில் இருந்தால் சீற்றத்தில் படையுடன் வருவான் 594
நால்வரால் அனுப்பப்பட்ட
ஒற்றர்கள் மூவர் வந்தனர்
நகரினில் நடந்த நிகழ்வை நயம்பட
எடுத்து உரைத்தனர்
வளையசுந்தரம் என்னும்
ஓர் வளமிக்க பட்டத்து
யானை
ஐநூறு பிடிகள்
இடையே அரும் கருங்குன்றாய்
வாழும் 595
மும்மதநீர் கண்கள்
சொரிய முழுமதம் கொண்ட மயக்கத்தில்
முகில் மோதும்
இடியைப் போல முடிமன்னன்
வேழம் பிளிர்ந்து
கட்டுத்தறிகளை நொறுக்கி
கரு உருளை நீர் தொட்டிகளை பிளந்து
கால்
சங்கிலிகளை அறுத்து கடும் சினம் கொண்டது
களிறு 596
கரியது கழுத்துக்
கயிறை பற்றி களிறின்
மேல் விரைந்து ஏறி
கரங்களால் முதுகைத்
தடவி “ அப்புது அது ஐ ஐ “ என்று கூற
வளையசுந்தரம் யானை அவனின் வாய்மொழி
சொல்லுக்கேற்ப
மகிழ்ச்சியில் பணிந்து
நிற்க மக்களும் மகிழ்ந்து
கூவினர் 597
ஒற்றர்கள் மூவரும்
சேர்ந்து ஒன்றுபோல் கூறி சொல்
ஒப்பற்ற சீவகன்
நகரில் உள்ளதை உள்ளம்
அறிந்து
ஆநிரை கவர்தல்
ஒன்றே ஐயனை காணும் வழியென
நால்வரும் நகைத்துக்
கூறி பரிகளைவகுத்து நிறுத்தினர் 598
எருதுடன் பசுக்களைக்
கவர எண்ணிய அந்த நாளில்
சிறுபறை துடியுடன்
ஒலிக்க சங்குகள் விண்வரை
முழங்க
வீரர்கள் கவசம் அணிந்து வென்றிடும் களிப்பில் மூழ்கி
அணியென திரண்டு
நின்றனர் ஆநிரையை கவர்ந்து
வர 599
அரசனின் ஆநிரை கவர அதிர்வுடன்
சென்ற படைகள்
காற்றென குதிரைகள் விரைய கார்மழையாய்
அம்புகள்
வீச
பசுக்களை வளைத்துப்
பிடித்து பாங்குடன் கவர்ந்து செல்ல
இடையர்கள் போரை விட்டு இயம்பிட
அரண்மனை சென்றனர் 600
தப்பித்த இடையர்
கூட்டம் தடமித்தன் தாள் பணிந்து
ஆநிரை அத்தனையும்
ஒரு அடங்கிடா குதிரைக்
கூட்டம்
முழுமதியை சூழ்ந்த முகிலாய்
முற்றிலும் கவர்ந்து செல்ல
மீட்டிட வேண்டும்
என்று ஆயர்கள் அலறினர்
அங்கு 601
நால்வகை படையும்
அணிவகுக்க நகரமே அதிர்ந்து
நிற்க
நம்பியும் நன்மொழி
பகர்ந்தான் நாடாளும் மன்னனிடம்
ஆநிரையை மீட்டு
வருவேன் அவர்கள் நின் அடி தொழுவார்கள்-என
திண்ணிய தேரில்
ஏறி மின்னலாய் விரைந்தான்
நம்பி 602
சீவகனின் சீரிய தேரை தூரத்தில்
பார்த்த பதுமுகன்
சச்சந்தன் மகன் சீவகனை சந்திக்க
வந்தோம் என
ஓலையில் சீட்டு
எழுதி ஒரு அம்பினில் பொதிந்து
கட்டி
சீவகன் தேரில்
விழும்படி எய்திட்டான் அந்த அம்பை 603
கடிதத்தை படித்த
சீவகன் எதிர்த்தவன் பதுமுகன் என்று
தேரினில் வெண்துகில்
கட்டி தடுத்திட்டான் தன் படையை
அரசன் மகன் என்று அறிந்த
அவன் தோழர்கள் அனைவருமே
காலடி வீழ்ந்து
வணங்கி கண்களில் நீர் சொரிய நின்றனர் 604
நண்பர்கள் அனைவரையும்
நகருக்குள் அழைத்து சென்றான்
மன்னனை கண்ட நண்பர்கள் மலரடி வீழ்ந்து வணங்க
சீவகன் எடுத்து
சொன்னான் சிங்க நிகர் நண்பர்கள் என்று
கொற்றவன் மகிழ்ந்து
சொன்னான் கனகமாலை காண்பீர்
என்று 605
வானுலகு இதுவே என்று விழியகல
நோக்கும் நகரின்
இந்திரன் ஒத்த மன்னன் மகள் எழில் மங்கை கனகமாலைக்கு
நண்பர்கள் என்று சொல்லி நால்வரையும்
அணைத்து கூற
ஆநிரை கவர்ந்த
இவர்க்கு அறுசுவை விருந்தளிப்பேன் என்றாள்
606
அந்தண நாண்பன்
புத்திசேனன் நம்பி தனித்திருந்த
வேளையில்
காந்தர்வதத்தைத் தந்த கடிதத்தை
சீவகனுக்கு தந்தான்
குண்டல முத்திரையிட்டு குழலுக்குள்
இருந்த ஓலையை
தன்
கை தவிப்புடன் பிரிக்க
தலைவன் முகம் மலர படித்தான் 607
என் தந்தை கழலுவேகன் எல்லையில்லா
பொருளனைத்தும்
தரன்
மூலம் அனுப்பி வைத்தார்
தனியே அவனிடம் நான் கூறியது
ஏழு மாதங்கள்
கழிந்த பின்னர் என்னவர்
தோழர்களுடன்
ஏமமாபுரத்தை விட்டு
நீங்கி ராசமாபுரம் வருவார்
என்று 608
கட்டியங்காரன் உங்களை
கைது செய்தான் என்னும்
பழி
வெள்ளிமலை பரவுவதற்கு
அஞ்சி வேறு பல அவனிடம் சொல்லி
என் சிரம் தொட்டு வாக்கு கேட்டு
செல்லும்படி செய்து விட்டேன்
அரசுரிமை பெறுதல்
இன்றி அணங்குகளை மணத்தல்
பழியே 609
என் தங்கை குணமாலையும் இரவெது
பகலெது என அறிந்திடாமல்
உள்ளமும் உடலும்
வருந்த உயிர் பிழைப்பாளோ
அறியேன்
என்னுள்ளே நீர் இருப்பதால் என் மனம்
வருந்தவில்லை – என
காவல் மந்திரம்
ஒன்று எழுதி கடிதத்தை
முடித்து வைத்தாள் 610
மந்திரத்தை மனனம் செய்தான் மனதிலே
பதியச் செய்தான்
சிந்தையில் மகிழ்வு
கொண்டு சிநேகிதரை நாடிச்
சென்றான்
மன்னன் மகன் நான்
தான் என்ற மறைந்திருந்த ரகசியத்தை
எப்படி நீவீர் அறிந்தீர் எனக்கு அதை கூறுவீர் என்றான் 611
தண்டகாரணியம் வனத்தில்
தவநெறி கொண்ட அம்மையார்
உள்ளத்தில் உன்னை நிறுத்தி உன் வாழ்வு சிறக்க
எண்ணி
புறத்தினில் துறவு பூண்டு புத்திர
சோகத்தில் வாழும்
சச்சந்தன் மனைவியான
விசையையிடம் வணங்கி பெற்றோம் 612
ஈன்றவள் இருக்கின்றாள்
என்ற செய்தியே நெஞ்சம்
நிறைய
பெற்றவள் இருக்கும்
திசையை பலமுறை தொழுது
வணங்கி
தீவினை இனி எனக்கு இல்லை தெய்வம் நமக்கு
அருளும் என்று
தடமித்தன் மனைக்கு
சென்றான் தாங்கொணா மகிழ்ச்சியாலே 613
குருகுலத் தலைவன்
என்ற உண்மையை அறிந்த
மன்னன்
அவன்
நிலை அறிந்து ஆய்ந்து
அனுப்பிட விழைவு கொண்டான்
நம்பியும் கனகமாலைக்கு
நயம்பட எடுத்து சொல்லி
அனைவரையும் தொழுது எழுந்து அன்னையை காண
விரைந்தான் 614
கனகமாலையார்
இலம்பகம் முற்றிற்று.
சீவகன் குதிரையில்
செல்ல நந்தட்டன் பதுமுகனை
அழைத்தான்
புழுதியில் புதைந்த
மாணிக்கத்தை புழுதி போக்கி
ஒளிரச்செய்தீர்
அவ்வொளியை மறைத்து
காப்பது அனைவரின் கடமையாகும்
அப்படி செய்தீரானால்
உம் தலைமுறை தழைத்து
வாழும் 615
வணங்கிடும் கையின்
உள்ளே வதைத்திடும் பொருள்கள்
இருக்கும்
வடித்திடும் கண்ணீர்
தன்னில் வஞ்சிக்கும் எண்ணம்
இருக்கும்
அணிந்திடும் அணிகலங்களில்
ஆவிபோக்கும் ஆயுதம் இருக்கும்
அனைத்தையும் ஆய்ந்து
அறிந்து அழிவினைப் போக்கவேண்டும் 616
சந்தனம் அணிகள்
ஆடைகளை சக்கரவாக பறவை முன் காட்டி
தூய்மையை அறிந்த
பின்னர் சுகங்கொள்ள அணிய வேண்டும்
காய் கனி உணவு நீரையெல்லாம் கருங்குரங்கிற்கு இட்டு ஆய்ந்து
கலங்கமில்லை என அறிந்து கவனமுடன்
உண்ணவேண்டும் 617
மைதீட்டும் சிறிய கோலால் மாய்ந்திடும்
சிறிய நாகம்
மலையொத்த களிறு தனை மாய்த்திடும்
தன் பற்களாலே
பஞ்சினும் மிக மெல்லிய பகையினை
அறிந்தும் விட்டால்
நீருபூத்த நெருப்பாய்
கனிந்து நம்மையே நின்று
கொல்லும் 618
நம்பியை பிரியாது
இருக்க நாம் பல்லிபோல்
பழக வேண்டும்
நாடியதை தந்து காக்க நலம் தரும் தாயாக
வேண்டும்
ஐம்புலன் அடக்கம்
முறையில் ஆமைபோல் அடங்க வேண்டும்
அறிவுரை வழங்க வேண்டின் பகைவராய்
இடித்து கூறவேண்டும் 619
சந்தன மரத்தோப்புகளும் இடையே தக்கோல மரங்களுடன்
திமிக மரங்கள்
சூழ்ந்து கற்பூரம் புனுகுடன்
கலந்து
காதம் நான்கு தொலைவு
வரை கலந்து நறுமணம்
வீசும்
காட்டினில் விரைந்து
சென்றனர் காவலர்கள் பின் தொடர 620
மலைகளில் மான்கள்
ஆட மாணிக்க மணிகள்
உடைய
சிதறிய சிறு பொடிகள் எல்லாம் செந்நிறமாய்
மரங்களில் படிய
கற்பக விருட்சம்
போல காட்டினில் மரங்கள்
ஒளிர
காட்சியை காணா நெஞ்சனாய் தாயினை
காண விரைந்தான் 621
கூகை கொடிகள்
படர்ந்து கோட்டம் குங்கும
மரங்கள் ஆட
வெண்பனி உருகி பெருக வெள்ளமாய்
நதிகள் பாய
சந்தன மரத்தின்
காற்றும் சாய்ந்தாடும் மயில்கள்
கொண்ட
துறவியர் வாழும் சோலையில்
தோழருடன் தங்கினான் நம்பி 622
விசயை மகன் என்ற விஷயம்
வெளியினில் தெரியாதிருக்க
அண்மையில் இருந்தவர்களை
அகன்றிட செய்தான் அண்ணல்
பதுமுகனை பரிவுடன்
அழைத்து பாசத்தால் தாயைக்காண
ஏற்றதொரு காலத்தை
நீ அறிந்து எனக்கு
சொல்வாய் என்றான் 623
விசயமாதேவி மனமது கண்டது விடியலில்
ஒரு நற்கனவு
இடது
கண் இமைகள் துடிக்க
இருந்த பல்லியும் பலன் சொல்ல
சீவகன் நம்பி வருவானோ என்று சித்தத்தில்
ஓர் எண்ணம் தோன்ற
சீவகன் வந்துள்ளான்
என பதுமுகன் கூறி வணங்கினான் 624
அன்னையின் விழிகள்
இரண்டிலும் ஆனந்த மகிழ்ச்சி
பொங்க
எங்குள்ளான் என்மகன்
என்று எல்லையில்லா அன்பால்
கூவ
இங்கு தான் உள்ளேன் என இருகரம் குவித்து
வணங்கி
தாயின் அடிகளில்
விழுந்தான் தாயவள் தாங்கி
அணைத்தாள் 625
வாலிப வயதை அடைந்தும் மழலையாய்
மகனை நினைத்து
மார்புடன் தழுவிக்
கொண்டாள் மயங்கிடும் தாய்மை
நெஞ்சால்
இடுகாட்டில் உன்னை விட்டேன் சூழ்ந்த
என் தீவினையாலே
எனைக் காண வந்ததனால் என் தவம் வென்றதென்றாள் 626
மயில் ஒன்று தன் சிறகுகளால் குஞ்சுகளை தழுவுதல்
போல
விசயை அவள் தழுவிக் கொண்டாள்
சீவகனையும் நந்தட்டனையும்
ஆர்த்திடும் தாய்மையுடனும்
அலையாய் பெருகும் பாசத்துடனும்
அனைவருக்கும் விருந்தளித்து
ஆறுநாளும் மகிழ்ந்தது தாய்மை 627
மக்களின் வருவாய்
தன்னில் ஆறில் ஒரு பங்கு பெறலும்
அணைந்திடா பகைமை தன்னை
அடிமனதில் பொருத்துதலும்
பகைவர்கள் இருவருக்குள்ளும் பகையினைத்
தூண்டுதலும்
பகைமுற்றி போர்செய்ய
வைத்தல் பாராள்வோர் தந்திரமாகும் 628
ஒற்றரை பிரிதோர்
ஒற்றரால் உண்மையை ஆய்ந்து
தெளிதலும்
கற்ற
நல் அமைச்சர்களை கண்கள்
போல் போற்றுதலும்
மந்திரி தந்திரி
சுற்றங்களை மலையினை போல் பெருக்குதலும்
வெற்றியை விரும்பும்
வேந்தனுக்கு வேதத்தின் நல்பாடமாகும் 629
படை வலிமை பெருகுவதற்கு பொருளினைப்
பெருக்க வேண்டும்
அப்படை பெரும்
வன்மையாலே அடையலாம் நாடுகள்
பலவும்
அந்நாட்டினால் செல்வம்
கிட்டும் நம் நாட்டின்
ஆற்றல் பெருகும்
அரசனுக்கு வெற்றி
என்றும் அறத்தோடு செல்வம் பெருகும் 630
சச்சயந்தன் பெற்ற செல்வா நம் நாட்டை நாம் இழந்தோம்
நம்
நிலை வளர்வதற்கு செல்வத்தில்
குறைந்து உள்ளோம்
குணமுள்ள அமைச்சர்கள்
இல்லை குலத்தினில் தாழ்ந்துள்ளோம்
இந்நிலையில் யாம் இருக்க நின் துணிவு யாது என்றாள் 631
கட்டியங்காரனான பாம்பு
நந்தட்டன் கருடனால் அழியும்
ஊழித்தீ போன்ற பதுமுகன் சக்கரப்
படை வெல்லும் என்றான்
சீவகா உன் மாமனைக் கண்டு துணயுடன் அவன் ஆணை கேட்டு
பகையினை கொன்று அழித்து பலன்களைப் பெறுவாய் என்றாள் 632
சீவகன் அன்னையை
தொழுது சென்றிடுவீர் மாமன் இல்லம் என
நூற்றம்பது மகளீர்
சூழ விசயை புறப்பட்டாள்
பொழிலை விட்டு
பெருகிடும் அருவிகள்
கடந்து புரண்டோடும் ஆறுகள்
தாண்டி
வயலோடு தோட்டங்கள்
சூழ்ந்த ஏமாங்கத நாட்டை
அடைந்தார் 633
மலர்கொடி மரங்கள்
நிறைந்த மணம் வீசும்
பூஞ்சோலையில்
சீவகன் படைகள்
தங்கியது சோர்வினை போக்கிக் கொண்டது
ராசமாபுரம் வளத்தை
ரசிக்க நெஞ்சத்தில் எண்ணம்
கொண்டு
ஐங்கணையான் வடிவம் தோற்க அந்நகரினில் நுழைந்தான்
நம்பி 634
மான் விழி கொண்ட மங்கை பால் வண்ண மேனி பாவை
கார்குழல் கலைந்து
பரவ மார்பணி முத்துக்கள்
ஒளிர
துடி இடை மேகலை ஒலிக்க
தொங்கிடும் குண்டலம் ஆட
ஐந்து பந்துகள்
கைகளில் சுழல ஆரணங்குகள்
ஆடினர் பந்து 635
மாலையில் மறைந்த
பந்துகள் மலர் கைகளில்
வந்து சேர
கூந்தலிடம் சென்ற பந்துகள் குளிர்ந்த
மதி முகத்தில் நிற்க
தலையிடம் வந்த பந்துகள் தன் மார்பின் மாலையை
தொட
மாலையின் மேல் உள்ள பந்துகள்
மங்கையர் விரல் கொண்டன 636
பந்தாடும் பாவை விமலையின் பந்தொன்று
எல்லைத் தாண்டி
தெருவினில் விழுந்து
ஓடி சீவகன் முன்னே
நிற்க
மின்னிடை ஒடியும்
வண்ணம் மேகலை ஒலியது
சிணுங்க
மண்ணிலே விழுந்த
பந்தை மலர்கொடியொன்று நோக்கி வந்தது 637
பந்தினை மறந்து
விட்டாள் பழம்பூ பசலைக்
கொண்டாள்
நாணத்தை நழுவ விட்டாள் நற்சிலைப்
போல நின்றாள்
அண்ணலின் அழகைக்
கண்டாள் அகம் எல்லாம்
தீயைப் பெற்றாள்
கண்ணில் அவன் வடிவம் தங்க காதல் நோய் தாக்கி
துவண்டாள் 638
அண்ணலும் அவனை நோக்க அவள் விழி அவனைத்
தாக்க
பற்றிய காதல் நோயோ பகடை போல் இடையே உருள
மாந்தளிர் போன்ற விமலை மறுபடி
பார்த்து செல்ல
சாகரதத்தன் கடையருகே
சலிப்புடன் நின்றான் சீவகன் 639
சாகரதத்தன் கடைக்குள்
தேங்கிய பொருட்கள் எல்லாம்
பசும்பொன் ஆறு கோடிக்கு புரண்டிட்ட
விற்பனை கண்டு
சீவக நம்பி அருகில்
சென்று செல்வம் தந்த திருமகனே
செல்வோம் இல்லம்
என்றான் சீவகனும் பின்னே
சென்றான் 640
ஐயனே நான் ஒரு வணிகன்
சாரதத்தன் என்பது என் பெயர்
என் இல்லத்தை இனிமை ஆக்க என் மனைவி கமலை ஆனாள்
அழகினில் திருமகள்
போல் அளித்திட்டாள் பெண் மகவை
அகத்துக்கு ஒளியைத்
தந்தாள் அவள் பெயர் விமலை ஆகும் 641
விமலை உதித்த
நாள் முதல் விற்கவில்லை
கடையில் பொருள்கள்
குளத்திலே தேங்கிய
நீராய் கொள்வாரின்றி குவிந்தது
கடையில்
ஜோதிடர் கணித்து
சொன்னார் விற்றிடும் கடை பொருளெல்லாம்
விமலைக்கு உரியவன் வந்து உன் கடை அருகில்
நின்றால் என்று 642
கணித்திட்ட நிமித்திகன்
உரைபோல் கடலளவு செல்வம்
பெற்றேன்
கன்னியை உனக்குத்
தருவேன் கனிவுடன் மணம் கொள் என்றன்
மங்கல இசைகள்
முழங்க மறையோர்கள் வேதம் ஓத
விமலையைக் கைபிடித்தான்
வீரக்கழலோன் சீவக நம்பி 643
சிலம்பது சிரித்து
ஒலிக்க சிறுயிடை மேகலை சிதறி சிலுங்க
` கார்கூந்தல் கலைந்து சரிய கனியொத்த தனங்கள்
தளர
நாற்கரங்கள் நாகமாய்
பிணைய இருவுடல் ஓர் உடலாய் காண
இசைத்திடும் படுக்கை
ஒலியில் இணைந்தனர் இருவரும்
அங்கே 644
கனிகளில் பிழிந்த
மதுவை கிண்ணத்தில் ஊற்றி எடுத்து
விமலைக்கு சீவகன்
ஊட்ட விரும்பியே அவளும்
பருக
காமத்தின் கடலில்
மூழ்கி களைத்துப் போய் கண்ணயர்ந்தாள்
சீவகன் அவளை எழுப்ப விமலையும் கண் மலர்ந்தாள் 645
விமலையின் மாலைகள்
திருத்தி சந்தனத்தால் மார்பில்
எழுதி
செங்காந்தள் அரும்பு
போன்ற விரல்களை தன் கையால்
பற்றி
சோலையில் என் தோழர்களை சந்தித்து
திரும்புவேன் என்று
சொன்னதைக் கேட்ட விமலை கொடியென
துவண்டாள் அங்கு 646
விமலையை சீவகன்
அணைத்தான் விழிநீரை தன் விரலால்
நீக்கி
கண்ணீரில் கலைந்த
மையை கரத்தினால் பொருந்தச்
செய்து
ஆறுதல் வார்த்தை
பலவும் கூறி அவளது மனத் துன்பம்
போக்கி
குன்றனைய சீவகன் சென்றான் கொடியான விமலை
சோர்ந்தாள் 647
விமலையார் இலம்பகம் முற்றிற்று
தொடர்ச்சி Click here
No comments:
Post a Comment