மேருமந்திர புராணம் பாகம் - 2
8. வச்சிராயுதன் அணுத்தரம் புக்க சருக்கம்.
சக்கராபுரத்தின் மன்னன் சாயாத கோல் உடையான்
வச்சிராயுதன் பெற்ற வலிமை கொண்ட ரத்தினாயுதன்
கமல மொட்டு தனத்துடனும் கனிசுவையின் இதழுடனும்
கன்னியர்கள் சூழ வாழும் கதை சொல்வேன் கேள் தரணேந்ரா 394
தேவ மகளீர் போன்ற திருந்திய வனப்பு கொண்டு
மேகலை இடையில் ஆட மெய் எல்லாம் மாணந்து வீச
காமமும் காதலும் கலந்த கன்னியர்கள் சூழ்ந்திருக்க
ஜின தர்மம் சொல்லக் கேட்டு தீயிடை ஆமையானான் 395
ஆட்சி செய்யும் ராஜ்ஜியமும் அருகில் உள்ள சுற்றங்களும்
பொன் பொருள் செல்வங்களும் பெண்கள் தரும் இன்பங்களும்
பொறிகளின் போகமும் மோகமும் பொருந்திய தன் ஆயுளும்
நிலையென்று நினைத்து அவன் நித்தம் நித்தம் களித்திருந்தான் 396
சம்சார பிறப்பில் வரும் பொறி புலனின் இன்பங்கள்
புண்ணியத்தின் ஊற்றாய் வந்து உதயத்தை கொடுப்பதென்று
எண்ணாத நெஞ்சத்தால் மோட்சம் ஒன்று இல்லை என்றும்
மரித்திட்ட எவர்க்கும் மீண்டும் மறுபிறவி இல்லை என்றான் 397
இவ்வுலக இன்பம் எல்லாம் இங்கு தூய்க்கமல் விட்டு விட்டு
இறந்த பெறும் இன்பம் எண்ணி இங்கு நாம் வருந்துவது
ஊன் வாயில் கொண்ட நரி நீரில் மீனைப் பிடிப்பதற்கு
ஊன் விட்டு பாய்த்த நரி ஊன் மீனை இழந்தது போல் என்றான் 398
ரத்தினாயதன் கர்மம் அவனை உயிர்நிலை அறியவிடாததால்
ஐம்புலனின் இச்சையாலும் அழியாத மோகத்தாலும்
மண்ணுலக ஆசையெல்லாம் அவன் மனதில் வேர் ஓட
வஜ்ரதந்த முனிவர் வந்தார் அவர் சங்க முனிகளோடு 99
மெய் தவ வீர்யமும் மெய் ஞானமும் கொண்டவஜ்ரதந்தன்
மாமேரு மலையைச் சுற்றி குறு மலைகள் சூழ்ந்தது போலும்
தாரகைக் கூட்டம் நடுவில் தண்மதி ஒளிர்வதைப் போலும்
பத்ராஜல வனத்தில் ஒளிர்ந்தான் பல முனிவர் சங்கத்தோடு 400
நற்காட்சி சக்தியாளும் வாலறிவன் வகுத்த அறத்தினாலும்
சம்சார கடலை கடக்கும் ஜினவறமாம் தத்துவத்தையும்
மூன்றுலக உயிர்கள் நிற்கும் முழு ஞான விளக்கத்தையும்
மாதவன் வஜிரதந்தர் வழங்கினார் தன் சங்கத்திற்கு 401
தொடு உணர்வு ஒன்றுடைய ஓரறிவு ஜீவன் கூட
ஐந்து வகை உடலெடுக்கும் ஒரு பொறியை கொண்டு வாழும்
நத்தை சிப்பி சங்குமான இரு பொறியின் ஜீவன்கள்
சுவை புலன் பொறியுடைய ஈரறிவு உயிர்கள் ஆகும் 402
எறும்பினங்கள் பட்டுப்பூச்சி மூன்றறிவு ஜீவன் எல்லாம்
கேட்டல் புலன் பொறியுடன் தொடு சுவையும் சேர்ந்திருக்கும்
தும்பிகளும் வண்டினமும் நான்கு அறிவு ஜீவனாகி
பார்த்தல் என்னும் புலனுடனே கேட்டல் தொடு சுவையும் சேரும் 403
விலங்கினமும் மனிதர்களும் நரகர்களும் தேவர்களும்
மனம் என்னும் புலனுடனே ஐம்புலனும் கொண்ட உயிர்கள்
ஐம்பொறிகள் ஆகி நிற்கும் ஐந்துநிலை ஜீவன்களிலும்
அதனதன் கர்மத்தினால் அடுத்து அடுத்து பிறப்பெடுக்கும் 404
பசுமை உடலில் வாழும் பயிர் செடி மரத்து உயிர்கள்
வெய்யிலாலும் மழையினாலும் கடுங்காற்று தீயால் அழியும்
ஆழியில் பிறந்து வாழும் வெண்சங்கு மீன் இனங்கள்
எமனுக்கு நிகரான கொலையாட்கள் கை மடியும் 405
விலங்குகதி அடைந்து விலங்கினமாய் திரியும் உயிர்கள்
வில் வாள் வலை கொண்டும் வெட்டுகின்ற பலியாலும்
பாரங்கள் மிக ஏற்றியும் பாதங்களில் கட்டு இட்டும்
தாளாத துயரடைந்து தன் உடல் விட்டு உயிர் மறையும் 406
உள்ளமும் மெய் மொழியும் ஒவ்வாத செயலினாலும்
அறச்செயலை ஒதுக்கி விட்டு மறத்தோடு பொருள் சேர்த்தும்
தேனோடு கள் ஊனை மனக் களிப்போடு உண்டவரும்
மாந்தராய் பிறந்திடினும் மறுபிறப்பில் விலங்காவார் 407
பாவவினை புண்ணியவினை இல்லை என்று உரைப்போரும்
மறுபிறவி மோட்சம் எல்லாம் மடமை என்று சொல்வோரும்
அரசநீதி அழித்து ஆளும் அரசர்களும் மந்திரிகளும்
அந்நியரை புணரும் பெண்ணும் விலங்குகதி எடுத்துழல்வர் 408
மனோகரம் பெயருடைய மலர் வனத்தில் இருந்த முனி
விலங்குகதி வாழ்க்கையினை விரிவாக சொல்லுகையில்
இரத்தினாயுதன் பட்டத்து யானை மேகவிஜயம் என்னும் வேழம்
உரைகேட்டு ஊன் கவளம் உண்ணாமல் பெருமூச்சி விட்டதங்கு 409
களிறு காக்கும் பாகர்கள் யானை கவளம் கொள்ள நிலைதன்னை
அரசனுக்கு செய்தி சொல்ல ரத்தினாயுதன் அவ்விடம் வந்தான்
மருத்துவர்கள் துணையுடனே மலை போன்ற வேழத்தை
சோதித்து சொன்னார்கள் நோய் ஏதும் இல்லை என்று 410
முற்பாவ பிறப்பு தனை யானை முழுதுணர்ந்த காரணத்தால்
பெருமூச்சி விட்டு கொண்டு பெருங்கவளம் மறுக்கிறது
ஊன் கலவா தூய்க்கவளம் உண்பதற்கு தந்திட்டால்
தன் பிறப்பை அறிந்த வேழம் தடையின்றி உண்ணுமென்றார் 411
அரசனும் ஆணையிட்டான் ஊன் இல்ல உணவு தர
யானையும் மகிழ்ந்து உண்ண மன்னனும் மயங்கி நின்றான்
மனோகரம் சோலை சென்று மாமுனி வஜ்ரதந்தை வணங்கி
வேழத்தின் நிலையை கூறி விளக்கத்தை உரையும் என்றான் 412
அஸ்தினாபுரத்தை ஆளும் பெரும் அரசன் பிரதிபத்திரன்
அவன் ராணி கற்பரசி வனப்புள்ள வசுந்தரி ஆவாள்
தம்பதிகள் இருவருக்கும் தனையனாக பிறந்தவன் தான்
பிரித்திங்கரன் என்னும் பெயர் கொண்ட இளவரசன் 413
பிரதிபத்திரன் மன்னனுக்கு சித்திரமதி அமைச்சன் ஆவான்
அமைச்சனவன் கை பிடித்தாள் அழகுமகள் கமலை என்பாள்
இவ்விருவர் இன்பத்திலே விசித்திரமதி மகன் பிறந்தான்
பிரித்திங்கர குமாரனுக்கு பிரியமான நண்பனானான் 414
மன்னன் பெற்ற மைந்தனும் மதி அமைச்சர் குமாரனும்
மனம் ஒத்த நண்பர்களாய் ஐம்புலங்கள் வழி நடந்து
மண்ணுலக இன்பம் எல்லாம் மட்டின்றி அனுபவிக்க
புலன்வழி போகம் எல்லாம் ஓர்நாள் பெரும் வெறுப்பாகியது 415
புலனாசை வெறுப்படைந்து போகம் விட்ட இருவரும்
தருமருசி என்னும் ஒரு தவமுனியின் அடி பணிந்து
அருகன் அறம் எங்களுக்கு அறிவுரைக்க வேண்டுமென
அகம் சுருக்கி கரம் தொழுது அருகதீட்சை வேண்டி நின்றார் 416
சிறு வயதில் போகம் நீக்கி ஜினதீட்சை கேட்டவர்க்கு
மாதவத்தார் தருமருசி தபோ தீட்சை விதிகள் படி
முத்து மலர் மாலைகள் நீக்கி முகம் மறைக்கும் குஞ்சு போக்கி
அருந்தவத்தை செய்வதற்கு ஆசியுடன் அனுப்பி வைத்தார் 417
ஜினதீட்சை தன்னுடன் பெற்ற விசித்திரமதி நண்பனுடன்
மன்னன் மகன் பிரீதிங்ககரன் மதுர சொல் முனிவனாக
அயோத்தி நகர் வெளியில் உள்ள அகம் மகிழும் மலர் வனத்தில்
துறவரத்தின் பற்றுடனே இளங்களிறாய் இருக்கலானார் 418
சரிகை என்னும் நியமத்துடன் சாந்த முனி பிரீத்திங்கரன்
மண்ணில் ஊறும் சிறு உயிர்கள் தன்னடையில் சிக்காமல்
பிறை வளரும் சந்திரனாய் இல்லம் தோறும் தினம் நடந்து
நோய் தீர மருந்துண்ணும் நியமத்தில் நகர் புகுந்தான் 419
(சரிகை முனிவர்கள் தங்கியுள்ள இடத்தில் இருந்து, ஏதேனும் ஒன்றை
உறுதியேற்று நகரினில் உணவு ஏற்க செல்லுதலை சரிகை, சரியை,
சர்ய மார்க்கம் என்பர் )
கண்கவர் கணிகை புத்திசேனை வீட்டின் முன் சென்ற முனியை
எதிர்கொண்ட அம்மகளோ இறைவா என கைதொழுது
உத்தமர்க்கு உணவுதரும் உயர்குலத்தில் பிறப்பதற்கு
உண்மையான நல்வழியை உரைத்திடுவீர் என்று கேட்டாள் 420
தன் மனம் நிந்தனை நீக்கி தவத்தோர்கள் குணங்கள் போற்றி
தேன் ஊன் மதுவைத் தள்ளி தெள்ளிய விரதம் ஏற்று
சம்சார உயிர்களைத் தன் கருணையால் ஓம்பி காத்து
ஆகமம் பயின்று வந்தால் அடையலாம் நற்குலத்தை என்றார் 421
அவ்விளம் முனிவர் சொன்ன அறிவுரையை கேட்டுணர்ந்து
விலைமகள் புத்திசேனை விலக்கினாள் தேன் ஊன் மதுவை
செய்தக்க சீலங்கள் எல்லாம் தெள்ளிய விரதமாய் ஏற்க
முனிவனோ மலர்வனம் புகுந்தான் முட்டாகி போனதாலே 422
விசித்திரமதி முனி கேட்டறிந்தான் விபரங்கள் அத்தனையும்
காமத்தின் மோகம் கொண்டான் கணிகை புத்திசேனை மீது
முன் கர்ம பாவவினை விசித்திரமதி பின் தொடர
விலைமகள் வீட்டை நோக்கி விரகத்தில் சென்றான் முனி 423
பொய் ஒழுக்கம் பொய் துறவு பூண்ட அந்த முனிவனிடம்
கணிகை அவள் வினயத்துடன் காலடி வணங்கிய பின்
தான் ஏற்ற விரதத்தை முனிவனிடன் முறையிட்டு
பயன் தரும் தன்மைகளை பகர்ந்திடுங்கள் என்று நின்றாள் 424
கள்ளமுனி சொல்லுகின்ற காமவார்த்தை அத்தனையும்
புத்திசேனை புத்தியிலே இவன் பொய் முனிவன் என்று உறுத்த
மோகத்தில் நரகடைந்த கதைகளை கணிகை சொல்லியும்
காமவேகம் தணியாத கபடன் மேல் வெறுப்பு கொண்டாள் 425
எலும்பும் தோலும் ஈறலும் எண்ணற்ற நரம்புகளும்
ஒன்பது வாயில்களில் புழு அரும்பும் கழிவுகளும்
மூளையும் ரத்தமும் கொழுப்புகளும் ஒன்று இன்றி தனித்துப் பார்த்தால்
காறித்துப்பி வெறுத்திடுவோம் காமம் கொள்ளும் உடலின் மீது 426
ஊன் உண்ணும் பறவைகள் உண்ண பிணமாகும் இவ்வுடலை
மோகனீய கர்மத்தால் முடை நாற்ற மேனியின் மேல்
காமத்தால் மூழ்கி போற்றி கலவிக்கு நாடும் மனதால்
காத்திடும் தவத்தை விட்டு களங்கத்தில் வீழ்ந்தான் முனிவன் 427
அதிமணம் கொண்ட மலரை அகிற்புகை குழலில் இட்டு – பின்
சிரசினை விட்டு நீக்கி தெருவினில் எறிவதைப் போல்
தவநிலை கொண்டு ஒழுகும் தவமுனி என்று தொழுதவள்
அவன் நிலை அறிந்த பின்னே இகழ்ந்திட்டாள் புத்திசேனை 428
கணிகையின் தாழ்ச்சியாளும் கனிந்து விட்ட மோகத்தாளும்
கந்தமித்திர அரசனுக்கு ஊன் உணவு சமைத்து தந்து
வேந்தனின் ஆணை பெற்று விலைமகள் புத்திசேனையை
விசித்திரமதி கலவி கொண்டு விரகதாபம் தணித்துக்கொண்டான் 429
மாபெரும் தவத்தை நீக்கி மன்னனுக்கு ஊன் சமைத்து
மோகனீய கர்மத்தாலே கணிகையை கட்டி மகிழ்ந்து
காலத்தால் ஆயுள் முடிய ஆன்மாவின் கர்மத்தாலே
மேகவிசய வேழமாகி இன்று அருகனறம் கேட்டது யானை 430
நிலையில்லா சம்சார வாழ்வில் புலன் இன்பம் மேவி நிற்றல்
விலையில்லா ரத்தினத்தை குணம் நீங்கி வீசி விட்டு
கண்ணாடி மணிகளையெல்லாம் கருவூலத்தில் வைப்பது
தனையனாய் தாயை ஒதுக்கி தன் மனைவியை ஓம்பலாகும் 431
கடலனைய கானல்நீரை தண்ணீர் என நினைத்த மான்
தாகத்தில் தாவி ஓடி தன்னுயிரை இழப்பது போல்
புலன்வழி இன்பம் எல்லாம் பூமியில் நிலையென்றெண்ணி
அருகனின் அறம் அறியா அறிவிலி என்றான் ரத்தினாயுதன் 432
விளக்கொளி கண்டு மகிழ்ந்து வீழ்ந்திடும் விட்டில் போலும்
இளம்பெண் யானை மதநீரில் மொய்த்திடும் வண்டு போலும்
தூண்டில் புழுவை விழுங்க துடித்திடும் மீனைப் போலும்
மயக்கத்தில் நுகர்ந்த இன்பம் மறந்து நான் தவத்தை ஏற்பேன் 433
மணிமுடி கிரீடம் தன்னை மகனுக்கு மகிழ்ந்து தந்து
புலி கண்ட எருதினைப்போல் புலன் வழிப் பற்றுக்கஞ்சி
மெல்லிடை மங்கையரின் பொய்நிலை இன்பம் நீக்கி
மனோகரவனம் நோக்கி வந்து முனியிடம் சரணடைந்தான் 434
கார்மேகம் கொட்டுகின்ற கார்கால மழையைப் போல
தானங்கள் செய்து செய்து தன் கைசிவந்த ரத்னாயுதன்
வஜ்ரதந்த முனிவரனின் வாகைமலர் பாதம் தொழுது
ஜினதீட்சை ஏற்ற செயல் முரசொலித்து செய்தியானது 435
வச்சிராயுத வேந்தன் அன்று துறவு கொண்டு செல்லும் போது
மகன் மேலுள்ள பாசத்தால் ரத்னமாலை உடன் இருந்தாள்
மைந்தனும் துறவு ஏற்க மாறிய உள்ளம் கொண்டு
ஆர்யாங்கனை தீட்சை ஏற்று அணுவிரதம் நோற்றாள் அரசி 436
பூங்கொடி மங்கையர் மேல் புலன்வழி தூய்த்த ஆசை போல்
தவத்தின் மேல் மிகுதியாகி வெய்யில், பனி, மழையில் நின்று
ஆர்யாங்கனை ரத்னமாலையும் அவன் மகன் ரத்னாயுதனும்
அச்சுதகல்பம் என்னும் அமரலோகம் சென்றடைந்தார்கள் 437
பங்கைப் பிரபை என்னும் நரகத்தில் உழன்ற அரவம்
பத்துக் கடல் காலம் நான்காம் நரக ஆயுள் நீங்கி
நால்வகை ஆழிகாலம் இயங்குயிர் நிலையுயிர் பிறவி சென்று
கச்சைநகர் அருகே உள்ள குறிச்சியுள் வேடனானான் 438
தாருணகிரணன் வேடன் தன் மனைவி மங்கிக்கு
மகனாய் பிறந்த மழலைக்கு அதிதாருணன் என பெயரிட்டான்
கரிக்கட்டை நிறத்துடனும் கடுங்கனல் விழியுடனும்
பாவமே மனித உரு கொண்டது போல் வளர்ந்து நின்றான் 439
கொலை வதை செய்வதிலே கொண்டிருக்கும் மகிழ்ச்சியிலும்
உலகத்து ஜீவன்கட்கு உயிர் நடுக்கம் தருவதிலும்
வில்லோடும் அம்போடும் திரிகின்ற அவ்வேடன்
மலையுச்சி ஏறி சென்றான் வச்சிராயுத முனியை கண்டான் 440
முஞ்ஜென்ம வைரபாவம் முழுவதும் விழியில் கொண்டு
முனிவரனை அழிப்பவன் போல் முனிவன் முன் வந்து நின்றான்
கூர் அம்பை செவி நுழைத்தான் வில்லெடுத்து சிரம் அடித்தான்
முள்ளொத்த ஈட்டி கொண்டு முனிவரின் தொடை துளைத்தான் 441
காட்டுக் கொடி கொண்டு இடையினை கடைந்திட்டான்
கால் பாதம் இரண்டினிளும் கடும் முளை கொம்படித்தான்
முள்கொத்துக் கரண்டியாலே முனிவரின் முதுகறைந்தான்
முழுநீள ஆணி கொண்டு தலை மீது அடித்து இழுத்தான் 442
நெருப்பணைய செய்கைகளால் நேரிட்ட துன்பமெல்லாம்
வச்சிராயுத முனிவர் மனம் வலி மறந்து தவம் செய்தது
சிந்தையில் நல்தருமத்தோடும் தெளிந்த நல்தவத்தினாலும்
சர்வார்த்த சித்தி விமானத்தில் அகமிந்திர லோகம் சென்றார் 443
கொடும்பாவம் பல செய்த அந்த கொடும்பாவி அதிதாருணன்
சிலநாளில் உயிர் துறந்து ஏழாம் நரகம் அடைந்தான்
மகாதமப் பிரபை என்னும் ஏழாம் பெரு நரகத்தில்
தலை கீழாய் அவன் தொங்கி நரகத்தின் அடியில் வீழ்ந்தான் 444
புது நரகன் அப்பூமியில் புதிதாக வந்ததனால்
பழைய நரகர்கள் தடி கொண்டு தாக்கினார்கள்
செம்புக் குழம்பில் இட்டு செந்நெருப்பில் தீயவைத்து
செக்கிலிட்டு உடல் நொறுங்க சித்திரவதை செய்தார்கள் 445
சிம்மசேன பேரரசன் அசனிகோடம் யானையானான்
அவன் அமைச்சன் ஸ்ரீபூதி அடுத்தடுத்து நரகம் சென்றான்
பவணலோக தரணேந்திரா பகை நமக்கு வேறில்லை
விருப்பு வெறுப்பு ஒன்றேதான் வினைகளுக்கு பொறுப்பாகும் 446
வச்சிராயுதன் அணுத்தரம் புக்க சருக்கம் நிறைவுற்றது.
9. பலதேவன் சுவர்க்கம்
புக்க சருக்கம்.
சீயபுர
மன்னன் சிம்மசேனனும் அந்நகர
அமைச்சன் ஸ்ரீபூதியும்
குணங்களில் எதிரெதிராய்
மோட்ச நரககதி அடைந்து
அவ்விருவர்
மறுபடியும் இந்த அவனிக்கு
வருவதற்குள்
ஆதித்யாபன்
கூறினான் ராமதத்தை பூர்ணச்சந்திரன் பிறப்பு தனை 447
மலரெல்லாம்
பூத்துக் குலுங்கி மனம் வீசும் மலர் வனங்கள்
வண்டோடு புல்லினங்கள்
வலம் வந்து பாடிசைக்க
தாதோடு
தேன் சொரியும் தாதகி மரங்கள் சூழ்ந்த
தாதகிசண்டத்தீவு தனி அழகு கொண்டத்
தீவு 448
( தாதோடு
: பூந்தாதுக்களோடு )
மந்திர
மலைகள் இரண்டு மேல் ஒன்று கீழ் ஒன்றாக
ஈராறு குலமலைகள்
பக்கத்துக்கு ஆறாறாக
நாலேழு
மா நதிகள் இருபக்கம்
பெருகி ஓட
சிதோதர நதி வடகரையில் அமைந்தது
தான் கந்திலைநாடு 449
வெண்பனியாய்
கொட்டும் அருவி வேழத்தின்
மும்மத நீரும்
மலை அடைத்தேன்
துளியும் மற்ற நறுமணங்கள்
கொண்டும்
ஆற்றினில்
புனலாய் வர சாஞ்சலம்
சங்குகள் எல்லாம்
காதலரை கண்ட கன்னியாய் களிக்கும்
நீர்வளம் கந்திலையில் 450
( மும்மத நீர் : காது, கர்ணகபோலம்,
பீஜம்களில் ஒழுகும் நீர் )
வாழையின்
வலிய தார்கள் தரையினை
தொட்டு நிற்க
வளைகரம் கொண்ட மகளீர் செங்கனி
பறித்தெடுத்து
செம்பொன்
தூண் மாடத்தில் சிறு மழலைக்கு ஊட்டுகின்ற
அயோத்தி மாநகரம்
தான் கந்திலை நாட்டின்
மூதூர் 451
ஆற்றலில்
ஆதவன் போல் அழகினில்
மன்மதன் போல்
அயோத்தியின் மாமன்னன்
அருகதாசன் பெயெருடையான்
கரும்
சுருள் குழலுடனும் கொவ்வை
வாய் இதழுடனும்
ஆண் மயிலின்
சாயலிலே அவன் பட்டத்தரசி
சுவ்விரதை 452
இல்லறத்தை
நல்லறமாய் ஏற்று வாழ்ந்த
இருவருக்கும்
பூர்வஜென்ம ரத்தினமாலை
புதல்வனாக பிறப்பெடுத்தான்
வீரமகன்
பிறந்ததனால் வேந்தன் வறியவர்க்கு
வாரி தந்தான்
வீதபயன் என பெயர் சூட்டி
விழா எடுத்து மகிழ்ந்திட்டான் 453
விற்புருவம், வேல் விழியும்
விரல்கடை சிற்றிடையும் கொண்ட
அருகதாசன் மனைவி
ஜினதத்தை ஆண் மகவை ஈன்றிட்டாள்
கடந்த
ஜென்ம ரத்தினாயுதன் கல்பலோக தேவனாகி
கால ஆயுள் முடிந்ததனால் ஜினதத்தை
மகனாய் பிறந்தான் 454
அரசனும்
அரசியும் சேர்ந்து விபீடணன்
என பெயெரிட்டார்
வீதபயனும் விபீடணனும்
வீரர்களாய் வளரந்து வந்தார்
நீல வானில் தவழுகின்ற
நிறை ஒளி சந்திரன்
போல்
விபீடணனும் வீதபயனும்
ஒன்றிணைந்து வளரந்தார்கள் 455
பால்
வண்ணன் வீதபயன் பலராமனை
ஒத்திருந்தான்
நீல நிற விபீடணன் வாசுதேவன்
போலிருந்தான்
பௌர்ணமி
தினத்தன்று பொங்கி வரும் ஆழியை போல்
புதல்வர்கள் இருவருமே
புகழ் தருமம் போல் இணைந்தார் 456
அருகதாசன்
இரு மகன்கள் வீதபயனும் விபீடணனும்
பயத்திற்கே பயத்தை
தரும் பலம் கொண்ட வீரனானார்
இந்த
இரட்டையரின் ஒரு எதிரி பிரதி வாசுதேவன்
ஆவான்
அவன் படையும்
அயோத்தி சேனையும் அலைகடலாய் மோதியன 457
கடல்
சீற்றம் கொண்டதனால் கரைமோதும்
பேரலை போல்
காலாட் படைகள்
இரண்டும் கடும் சினத்தில்
மோதியன
புயல்
ஒத்த வேகத்தோடு புரவிப்
படைகள் இரண்டும்
புழுதியை எழுப்பியதால்
பகல் பொழுது இரவானதங்கு 458
மலைகள்
நகர்வது போல் மதங்கொண்ட
களிறு சேனை
வாள் வேல் கைகொண்டு வான்மழையாய்
பொழிந்தார்கள்
காண்டீபம்
கைகொண்டு கணை கொட்டும்
ரதப்படையால்
கதிரவன் கண் மறைக்க காரிருள்
சூழ்ந்தது அங்கு 459
கடுங்காற்று
வீசியதால் கதலித் தோப்பு
வீழ்ந்தது போல்
கணைகளின் தாக்குதலால்
கொடி குடையும் சாய்ந்திட்டது
வேல்
கொண்டு தாக்கியதால் வேழத்தின்
குருதி அங்கு
புனல் பெருகும்
பெரும் ஆறாய் செங்குருதி
ஓடியது 460
வாயு
தேவன் வெஞ்சினத்தால் பனங்கனிகள்
உதிர்வது போல்
படைவீரர் சிரங்கள்
எல்லாம் பூதேவி மடியில் வீழ
மங்கையரின்
கடைவிழியில் மயங்கிவிட்ட மாந்தராக – வீரர்கள்
உடல் பட்ட காயத்தினால் உணர்வின்றி
மயக்கமுற்றார் 461
குற்றுயிரில் சாய்ந்து
விட்ட குன்றொத்த களிறுகளின்
நெட்டநெடும் பெருமூச்சி
பேரரவம் சீறல் ஆச்சி
கடல்
தாவழும் கப்பல்கள் கரைதட்டி
நின்றார் போல்
கரை மோதும்
அலை போல தேர் முறிந்து நின்றது
அங்கு 462
அருகதாசன்
மகன்கள் சேனை அச்சமுடன்
பின் செல்ல
வீதபயன் விரைந்து
வந்தான் எதிரி படையை வேரறுத்தான்
பிரதிவாசுதேவன் படை பின்னடைந்து பதறி ஓட
வீதபயன் விபீடணன்
சேனை வெற்றி முரசு கொட்டியது 463
பின்னடையும்
படையை கண்ட பிரதிவாசுதேவன் அங்கு
பேராற்றல் சக்கராயுதத்தை
பறக்கவிட்டான் விபீடணன் மேல்
படை நடுவே பிளந்து
வர படைகள் புறமுதுகு
காட்ட
விபீடணனை கண்ட சக்கராயுதம் வலம் வந்து வணங்கியது 464
சரணடைந்த
சக்கராயுதத்தை கரம் கொண்ட விபீடணனும்
சாஸ்திர விதிகள்
ஓதி திரும்ப விட்டான்
எதிரியின் மேல்
பிரதிவாசுதேவன் தலை தெறிக்க பிணமாகி
மண்ணில் சரிய
கேசவனின் திருக்கரத்தில் திக்கொளிக்க திரும்ப நின்றது 465
போர்
அது முடிந்த பின்பு
புரோகிதன் அழைத்து செல்ல
முனிவர்கள் தவம் இயற்றும் கோடிசிலை
மலை அடைந்தான்
மலையினை
வலமாய் சுற்றி வலக்கரம்
மலையை துக்கி நிற்க
மன்னர்கள் திறை செலுத்தி இருவரையும்
வணங்கி நின்றார் 466
மலரென
தூக்கிய மலையை மறுபடியும்
கீழே வைத்து
சக்கராயுதத்தை செலுத்தி
அது சென்றிடும் வழி பின் சென்று
எதிர்படும்
நாடுகள் எல்லாம் தன் திக்விஜயம்
ஆக்கிக் கொண்டு
வீதபயனும் விபீடணனும்
அயோத்தியின் அரசர்கள் ஆனார் 467
பட்டத்தை
சூடியபின் பதினாராயிரம் தேவியருடனும்
ஏழாயிரம் வியந்திர
தேவர்கள் இரவு பகல் காவல் செய்ய
நாற்பத்திரெண்டு லட்சம்
யானைகளும் ஒன்பது கோடி குதிரைகளும்
நாற்பத்திரெண்டு கோடி வியந்தரர் கொண்ட படையினானார் 468
எழில்
கூந்தல் ஏந்திழைகள் எண்ணாயிரம்
தேவியருடன்
இல்லற இன்பத்தில்
இந்திர சுகத்தை அடைந்து
வாசுதேவனான
அந்த நீல வண்ணன்
விபீடணன்
ஆயுள் முடிந்ததனால்
அடைந்திட்டான் நரகம் தன்னை 469
நாகமணி
தலை அகன்ற நாகத்தை
ஒத்த வீதபயன்
சம்சார வாழ்க்கையிலே சலிப்படைந்து
பயத்தினாலே
பொன்
பொருள் கிரீடம் தன்னை புத்திரர்கள் வசம் கொடுத்து
அருகனறம் ஏற்றுக்கொண்டு
ஜினதீட்சை பெற்றுக்கொண்டான் 470
பலதேவனான
அந்த வெண்மை நிற வீதபயன்
நல்லறிவு நற்காட்சி
நல்லொழுக்க பாவனையால்
லாந்தவ
கல்பம் தன்னில் தேவேந்திரனான
நானே
சஞ்சயபட்டாரகர்க்கு பூஜைகள்
செய்ய வந்தேன் என்றார் 471
தரணேந்திர
தேவனே நீயும் அதற்கு
தான் இங்கு வந்தாய்
ஐம்புலன் நுகர்ச்சியாளும் சம்சார
ஆசையாளும்
நரகத்தை
அடைந்து வாழும் விபீடணன் நரகம் மீள
அறம் உரைக்க
செல்லுகின்றேன் அறிந்திடு தரணேந்ரா
என்றார் 472
பலதேவன் சுவர்க்கம்
புக்க சருக்கம் நிறைவுற்றது.
10. நிரையத்துள்
( நரகத்தில் ) அறவுரைச் சருக்கம்.
சம்சார வாழ்க்கையிலே
பொருள் பற்றால் சேர்ந்த
கர்மத்தால்
சர்க்கராப்பிரபை என்னும்
இரண்டாம் நரகில் வீழ்ந்த
நரகனைக் கண்டு நாடி நடந்ததை
சொல்வதற்கு
நரகனின்
அருகில் சென்று அறிவாயா
என்னை என்றார் 473
ஆதித்யாபனாகிய நான் உனக்கு அறம் உரைக்க வந்துள்ளேன்
சிலபிறவிக்கு
முன் நான் மதுரை என்னும் பெண்ணானேன்
என் வயிற்றில்
வாருணியாய் என் மகளாய்
பிறப்பெடுத்தாய்-பின்
ராமதத்ததையாய்
பிறக்க என் மகன் பூர்ணச்சந்திரனானாய் 474
நல் அறங்கள் கடைபிடித்து
நல்வினைகள் சேரப் பெற்று
மகாசுப்ர
கல்பம் என்னும் தேவலோகம்
சென்றடைந்தேன்
தேவ ஆயுள் முடிந்த பின்பு
வியந்தர உலகம் தன்னில்
சீதரையாய்
நான் பிறக்க நீ யசோதரை என் மகளானாய் 475
ஆர்யாங்கனையாக அருகன்
அறம் ஏற்றுக் கொண்டோம்
காபிஷ்ட
கல்பத்தில் இருவரும் தேவனாக
பிறப்பெடுத்தோம்
தேவர்களான
நம் ஆயுள் தேய்ந்து
முடிந்த பின்பு - மண்ணுலகில்
ரத்தினமாலை
அரசியானேன் என் மக ரத்தினாயுதனானாய் 476
தவத்தோடு தருமம்
ஏற்று தவறாத அணுவிரதம்
கொண்டு
அச்சுத
கல்பம் என்னும் தேவலோகம்
சென்று அடைந்தோம்
அச்சுதகல்ப ஆயுள் அனைத்தும் அனுபவித்து
முடிந்த பின்பு
பூமியில்
நான் வீதபயனானேன் நீ என் நண்பன் விபீடணனானாய் 477
அருகன் அறம் ஏற்றுக்கொண்டு அனைத்துயிரில்
கருணை கொண்டு
பலதேவன்
ஆன நான் இலாந்தவ
கல்பம் சென்றேன்
புலன்வழி செய்கையாளும்
போகாத மோகத்தாலும்
வாசுதேவனான
நீ வீழ்ந்திட்டாய் இரண்டாம்
நரகில் 478
ஆதித்யாப தேவனான
நான் அவதிக் ஞானத்தால்
அறிந்தேன்
உனக்கு
அறம் உரைத்து தெளிய உன்
அருகில் நான் வந்தேன்
தன் பிறப்பின்
பிறவிகளை தான் அறிந்து
கொண்டதனால்
என்னை வணங்கி அவன் என் முன்னே
மூர்ச்சித்தான் 479
நரகனைத் தெளியச்
செய்து நான் மேலும்
கூறலானேன்
சம்சார
வாழ்க்கையிலே தேர்ந்த சுகம் என்றாலும்
நிலையாக அனுபவித்து
நின்றவர்கள் யாருமில்லை – அதுபோல்
வெந்தணல்
நரகம் தன்னில் வீழாத உயிரும் இல்லை 480
மாறிடும் நான்கு
கதியில் சுழன்றிடும் உயிர்களெல்லாம்
சேர்ந்திடும்
செல்வம் பின்னே சுழல்வது
இயல்பே ஆகும்
மனித தேவ கதியில் அன்று அனுபவித்த சுகத்தை
எண்ணி
நரகத்தின்
வேதனையால் மனதிலே வருந்த
வேண்டாம் 481
ஒன்றாம் நரகம் ரத்தினப்பிரபை இரண்டில்
நிற்பது சர்க்கராப்பிரப்பை
மூன்றாய்
வருவது வாலுகப்பிரபை நாலில்
உள்ளது பங்கபிரபை
ஐந்தில் அமைந்தது
தூமப்பிரபை ஆறை அடைவது
தமப்பிரபை
7 ஆம் நரகம் மகாதமபிரபை
நரகங்கள் ஏழென அறிந்திடுவாயே 482
இயல்பு மரணம் என்றும் இயல்பில்லா
மரணம் என்றும்
இருவிதமாய்
மரணம் வரும் நான்குகதி சுழற்சியிலே
ஆயுள் முடிந்து
வரும் மரணம் அதுவே இயல்பினதாகும்
மற்ற மரணமெல்லாம் அகால இயல்பில்லா மரணமாகும் 483
இயல்பில்லா மரணம் வரும் மனிதர்கட்கும்
விலங்குகட்கும்
போகபூமி
மனிதர் விலங்கு தேவர் நரகர் விதிவிலக்காகும்
முன் செய்த பாவ வினை முடிவு செய்யும்
மரணம் தன்னை
நரகத்திற்கும்
சொர்க்கத்திற்கும் அவ்வினையே வழி நடத்தும் 484
துவர்பசை திரவிய வினை
துன்பங்கள் கொடுப்பதனால்
அறிவுரையோ
ஆறுதலோ சொல்ல யாருமில்லை
இந்நரவுலகில்
கீழுலக பவண தேவர்கள் வந்து கீழ்மையான நரகர்களிடம்
முற்பிறப்பின் பொல்லாங்கு கூறி மூட்டிடுவார் கலங்கந்தன்னை 485
முற்பிறப்பின் விபீடணனே
உன் மோகனீய கர்மத்தால்
இரண்டாம்
நரகடைந்தாய் என் நண்பனாய்
நீ இருந்தும்
நற்குலம் தர்மம்
ஞானம் கன்னிகள் காமத்தால்
கலைய
தீக்குழியில்
வீழ்ந்திட்டு கூக்குரலிட்டு அழுகிறார்கள் 486
தருமத்தை அறியா உள்ளம் தன் மனதில் கொடியராகி
ஊனினை விரும்பி உண்டு ஊனுக்கு வேட்டையாடி
வில் அம்பு கையில் கொண்டு
கொலை தொழில் புரிவோரெல்லம்
முள்ளிலவ
மரத்தில் ஏறி மறுபடியும் நரகில் வீழ்வார் 487
இல்லற அறத்தை
மறந்து அவையிலே நீதியரசர்
ஆகி
பெருங்குடி
மக்கள் சேர்த்த பெருஞ்செல்வம்
அத்தனையும்
முறையற்று கவர்ந்தவர்கள்
முள் கொண்ட சமட்டியாலே
உடல் நசுங்க அடி பெறுவார் உள் வீழ்ந்த நரகத்திலே 488
வினையுற்ற உயிர்கள்
மாண்டு மறுபடியும் பிறப்பெடுக்கும்
அதை மறுக்கும் ஆன்மாவெல்லாம்
மோகத்தால் நரகடையும்
செம்பினை கொதிக்க
காய்ச்சி கொட்டுவார் அவர்கள்
வாயில்
வெப்பத்தை
தாங்கா நரகர்கள் துன்பத்தில்
துடித்து உழல்வர் 489
பொய்யாக புகழ்ந்து
கூறி பிறர் பொருள்
கவர்ந்தோரையும்
மெய்யான
தவமுனியை புறஞ்சொல்லி தூற்றினோரையும்
நெருப்பிலிட்ட ஊசி கொண்டு நகங்களில்
குத்தச் செய்தும்
நஞ்சுடன்
குருதி காய்ச்சி வாயிலிட்டு
வதைக்கச் செய்வர் 490
நிறைந்திடும் கோபத்தாலே
நெருப்பிட்டு ஊர் எரிப்போரையும்
அரசினால்
செல்வம் சேர்த்து பின் அறத்தினை மறந்தோரையும்
கற்செக்கில் உடலையிட்டு
கடுமையாய் நொறுங்கச் செய்து
துடித்திடும் ஆன்மா தன்னை துன்பத்தில் உழலச் செய்வர் 491
உயிர்வதை களவு பொய்யும் பொருள்
கொண்ட ஆசையாளும்
கற்புடை
மகளீர் ஒழக்கம் கெடும்படி
செய்ததாலும்
மலையுச்சி மேலிருந்து
மெய் வலிக்க உருட்டித்
தள்ளி
கொதியிரும்பு
தட்டின் மேலே புழக்களாய் பொறித்தெடுப்பர் 491
தோலினை உரித்தெடுத்து
ஊனினை உண்ணுவோர்கள்
மன்னனை
கபடத்தாலே வஞ்சித்த மந்திரிகள்
நெருப்பினை மழையாய்
பெய்து தோலினை கருகச்செய்து
கழுமரம்
ஏற்றி வைத்து கடுந்துயர்
கொள்ளச்செய்வர் 492
எண்ணரிய கடுந்துன்பங்கள் ஏழ்நரகில்
நிறைந்திருக்கும்
நீ செய்த வினைப்
பயனால் இரண்டாம் நரகடைந்தாய்
இதிலிருந்து உன்னை மீட்க அருகன்
முனிகட்கு அரியதான
அறங்களெல்லாம்
நானுரைப்பேன் அறிந்துகொள் விபீடணனே 493
ஐம்பொறி புலனாசைகளை
அறவே வெறுத்து ஒதிக்கி
ஆழி சூழ் மன்னனாக
அவதரித்து சுகம் அடைந்தாய்
மறத்தோடு மலிந்துள்ள
புலன்வழி இச்சைகளை
மனசுகம்
புணர்ந்ததாலே இவ்வுலாக நரகனானாய் 494
அறத்தோடு நீ சேர்ந்து அமரலோகம்
செல்வாயோ
மறத்தினில்
நீ திளைத்து மறுபடியும்
இங்கு வீழ்வாயோ
நீ சிந்தித்து
முடிவெடுத்தால் இத்துன்பம் நீங்குதற்கு
கர்மத்தின்
தத்துவத்தை நான் உனக்கு
கூறுகிறேன் 495
உனை துன்புறுத்தும்
நரகர் மேல் வெஞ்சினம்
நீ கொள்ளாமல்
முன் பிறப்பின் வினையென்று
தியானத்தை கொள்வாயோ- இல்லை
குரோதத்தை நீ கொண்டால் குறையாத
வினை பெருகி
விலங்குகதி நீ சென்று வெந்துயரம் அடைந்திடுவாய் 496
விலங்குகதி நீ சென்று வெந்துயரம் அடைந்திடுவாய் 496
பஞ்சபரமேட்டிகளின் திருப்பாதம்
சரணடைந்து
சிந்தித்து
தியானித்தால் சம்சார சுழற்சி
நீங்கும்
அகப் புறப்பற்றுகளை
அறவே நீ நீக்கி
விட்டு
சம்யக்
தரிசனத்தில் தலை நின்று
நடந்திடுவாய் 497
இன்றிருக்கும் நரககதி
எப்போது நீங்கும் என்று
சித்தத்தில்
கவலை கொண்டு சிந்தனைகள்
செய்யவேண்டாம்
கர்மத்தின் கட்டெல்லாம்
காய்ந்த இலையாய் உதிர்கையிலே
இக்கதியும்
நீங்கிவிடும் மறுகதிக்கு கொண்டு
செல்லும் 498
கடந்திட்ட பெரும்
ஆயுளால் இருக்கும் உன் குறு ஆயுள்
கடுந்துன்பம்
நரக நிலை கடந்துவிடும்
விரைவாக
ஜினவரனின் அறநெறியில்
செயல்பட்டு நீ நடக்க
எண்வினையும்
கெட்டுவிடும் இந்நரகம் விட்டுவிடும் 499
மூவுலக அதிபதியான
அரகந்தர் பதவி கிட்ட
சம்சார
பிறவி போக்கி மோட்சத்தின்
நிலை அடைய
நல்லறம் ஒன்றே துணை நாடிடு
ஜினவறத்தை
ஆதித்யாப
தேவனான நான் அறம் உனக்கு
உரைத்திட்டேன் 500
என் மன ஆசையாலே இந்நரகம்
வந்து சேர்ந்தேன்
உறுதியான
நல்லறத்தை உரைத்திட்டீர் இன்றெனக்கு
அவ்வறத்தை நான் ஏற்பேன் என்று அவன் அடிதொழுதான்
நல்லாசி
நான் தந்து இலாந்தவ கல்பம் சென்றன் 501
நிரையத்துள்
( நரகத்தில் ) அறவுரைச் சருக்கம்
நிறைவு பெற்றது.
11. பிறவி முடிச் சருக்கம்.
பொறுமையும் சாந்த குணமும் மன நிறைவு பெற்ற நரகன்
சம்சார
வாழக்கையிலே சுக துக்கம்
நிலையற்றதென்று
அருகன் திருவடி
நினைத்து ஆழ்மனதில் தியானித்து
அந் நரகம்
விட்டு நீங்கி அரசமகனாய்
பிறந்தான் 502
நாவலந் தீவினிலே
ஐராவத திரு நாட்டில்
அயோத்தி
நகர் ஆளும் அரசன் பெயர் ஸ்ரீ வர்மன்
ஸ்ரீ வர்மன் இதயத்தாள்
சிந்தைகவர் சித்திரத்தாள்
சுசீமா
என்னும் சுந்தரியே ஸ்ரீ வர்மன்
இடப்புறத்தாள் 503
ஸ்ரீ வர்மன் சுசீமாவின்
சீர்மை பெற்ற இல்லறத்தால்
அரசகுலம்
தழைத்தோங்க அவள் அடிவயிறு
நிரம்பியது
சுசீமா பெற்றெடுத்தாள் குலமலைகள்
விளக்கு போல
ஸ்ரீ தாமா
பெயர் சொல்லும் சிங்கம்
நிகர் மழலை ஒன்றை 504
( குலமலைகள் : அரசகுலங்கள் என்னும் ஆறு மலைகள். இமவான், மகாஇமவான், நிசதம், நீலி, ருக்மி, சிகரி )
( குலமலைகள் : அரசகுலங்கள் என்னும் ஆறு மலைகள். இமவான், மகாஇமவான், நிசதம், நீலி, ருக்மி, சிகரி )
முனிவனின் வணக்கத்தோடும்
முடிமன்னன் வித்தைகளோடும்
பகைவர்கள்
பதுங்கி வாழ பல்லுயிர்க்கும் பாசம் ஈந்து
தாமரை மொட்டின்
தனமும் தண்மதி முகமும்
கொண்ட
தேவியர்
தரும் சுகத்தில் திளத்திருந்தான் ஸ்ரீ தாமன் 505
வெஞ்சுடர் நரகம் தன்னில் செஞ்சுடர்
துன்பம் நீங்கி
நிழலிலே
நிற்பதை போல் நரகத்தின்
துயரம் போக
குழலிசை மொழியை
கொண்ட தேவியர் இன்பம்
தூய்த்து
முன் வினை முற்றும்
உதிரும் குணமது உதித்த
நாளில் 506
முடிவிலா வினைகள்
போக்கி மும்முழு ஞானம் கொண்ட
முழுதவம்
ஏற்ற ஒரு முனிவரன்
பாதம் தொழுது
சம்சார இயல்பை
எல்லாம் அத்தவன் சொல்லக்
கேட்டு
ஸ்ரீ தாமன்
ஜினதீட்சை ஏற்று துறவுக்கு
அரசனானான் 507
மனம் வாக்கு
காயம் மூன்றை மாபெரும்
தியானத்தால் வென்று
மோகனீய
கர்மந்தன்னை முதுகு காட்டி
ஓடச் செய்து
வானுலக தேவர் எல்லாம் நடுங்கிடும்
தவத்தை ஏற்று
வர்ணிக்க
வார்த்தை இல்லா பிரம்ம
கல்பத்தை அடைந்தான் 508
ஆன்மனில் தீவினைகள்
நின்றால் அவ்வான்மா நரகம் துய்க்கும்
ஆன்மாவில்
சேரும் அறத்தால் ஆன்மா விண்ணுலகம் செல்லும்
ஆன்மனில் கூடும்
நல்தீவினைகள் நான்குகதி சென்று
உழலும்
ஆன்மாவின்
நல்யோகத்தால் வினையொழிந்து சித்தராகும் 509
இந்த ஆகம விதிக்கு ஏற்ப பிறவிகள் எடுத்து
வந்தோம்
இதை செவியுற்று தெளிந்த
பின்னும் ஜினவறம் தெளியாதவர்கள்
அறியாமை இருளில்
மூழ்கி மோகனீய கர்மம்
ஏற்பர் – என
பவணலோக
அதிபதியே தரணேந்திரா அறிந்து
கொள்வாய் 510
பஞ்சாணுத்தரம் என்னும்
அகமிந்திர உலகத்திற்கு
சர்வார்த்தசித்தி விமானம்
ஏறி சிம்மசேன மன்னன்
சென்றான்
தேவன் ஆயுள் முடிந்த பின்பு
வச்சிராயுதன் பிறப்பெடுத்து – பின்
சஞ்சயந்தன்
பிறப்பெடுத்து தவ வலியால் வீடு பெற்றான் 511
சீதாம அரசன் அவன் பிரம்ம
கல்ப தேவனாகி
மண்ணுலகில்
மறுபடியும் மன்னன் மகன் சயந்தனாக
சம்சார மோகத்தாலே
சம்யக்தரிசனம் நீங்கி போக
பவணலோக
தலைவனான தரணேந்திர தேவன் நீயே 512
தீவினைகள் கொண்ட அதிதாருணன் சிக்கினான்
ஏழம் நரகில்
ஆயுள் முடிந்த பின்பு
மண்ணுலகில் அரவமாகி
தீமையின் தீவிரத்தால்
மூன்றாம் நரகம் சென்று
- பின்
கோசிருங்கன் மகனாக மிருகசிங்கன்
பெயரில் பிறந்தான் 513
கற்களின் மேல் படுத்தும் ஆணிப் பலகையில் உறங்கியும்
ஐவகைத்
தீயில் நின்றும் அடைமழையில்
நனைந்தும்
மோகத்தின் கர்மத்தாலே
காமத்தைத் தழுவி சேர்ந்து
மிருகசிங்கன்
ஆயுள் முடிய வித்துதத்தனாய் பிறந்தான்
புவியில் 514
ஸ்ரீ பூதி செய்த வினையால் அகந்தனன்
அரவம் ஆகி
அடுத்தடுத்து
சமரீமான் கோழிப்பாம்பாய் மூன்றாம்
நரகடைந்து
மலைப்பாம்பு பிறவிகொண்டு
ஏழாம் நரகம் சென்று – பின்
பாம்பாகி
நரகனாகி மண்ணுலகில் வித்துதத்தனானான் 515
சிம்மசேனன் செய்த வினை அசனிகோடம்
வேழம் ஆகி
அருகன்
அறம் கேட்டதாலே கல்பத்து
தேவன் ஆனான்
தேவகாலம் முடிந்த
பின்பு கிரணவேகன் அரசனாகி
மலைப்பாம்பு
விழுங்கிய பின் காவிட்ட
கல்ப தேவனானான் 516
ஆயுள் முடிந்த
தேவன் முன் பிறப்பு
கிரணவேகன்
சக்கராயுத
மன்னனுக்கு மண்ணாளும் மகன் ஆனான்
வச்சிராயுதன்
என்ற பெயரில்
ஜினதீட்சை அறம் ஏற்று
அகமிந்திர
தேவனாகி புவியில் அவதரித்தான்
சஞ்சயந்தனாய் 517
இருவரில் ஒருவருக்கு
வைரபாவம் உண்டு பண்ணி
இருவரும்
பிறவிதோறும் இன்னல்களை ஏற்றுக் கொள்ள
இவ்விருவருமே சாட்சியாகி
நிற்க வேறொருவர் சான்று
வேண்டாம்
வித்துதந்தனை
நண்பனாக்கி அருள் புரிவாய்
தரணேந்திரா 518
ஆதித்யாபன் மொழி அனைத்தும் கேட்டு
நின்ற தரணேந்திரன்
என் நரகத்துள் வந்து எனக்கு நல்லறங்கள் உபதேசித்தீர்
பிறப்புகள் அனைத்தும்
கூறி ஜினதர்மம் தெளியச் செய்தீர்
என் குருவான உங்களிடம்
ஒன்று கூறுவேன் கேட்பீரா
என்றான் 519
வித்தைகள் வலிமையாலே
வான்வழி விமானம் சென்று
மேதகு குணம் கொண்டோரை
வெஞ்சிறையில் அடைக்கும்
வித்துதந்தன் குலத்தாரை
எல்லாம் சிறகொடிந்த பறவை போல
இந்த வித்யாதர வம்சத்தாரை
அவர் நகரில் அடங்க வைப்பேன் 520
வெவ்வினைகள் செய்யும்
இந்த வித்யாதரரை எல்லாம்
கொல்லாமல்
விட்டேனாகில் கோபம் தணியாதென்றான்
தரணேந்திரனின் தணியா சினத்தை தணித்திட்டான்
ஆதித்யாபன்
அருகன்
அருளிய தருமத்தாலே அமைதியுடன்
அவன் தொழுதான் 521
கொடுங்கோரைப் பற்களுடனும்
கரும் பூத உடலுடனும்
எளிய மனிதர்கட்கு எண்ணிலா
துன்பம் செய்து
களிப்புடன் மகிழ்ந்து
திரியும் கீழான குணம் கொண்டோர்க்கு
தண்டனை
தந்திடாவிடில் வருங்காலம் இதுபோல்
தொடரும் 522
மண மலர் அணிந்த
குழலார் மதிமுகம் கொண்ட மகளார்
சஞ்சய பட்டாரகரின் செங்கமலர்
ஒத்த செவ்வடி தொழுது
வஞ்சனை பொறாமை
நீங்கி அருகனின் பூஜை செய்தால்
வித்தைகள்
எல்லாம் தங்கள் வசப்படுத்தி
வாழ்வார் என்றார் 523
மங்கல அணிகள்
பூண்ட மான்விழி மங்கையர்க்கு
பிரம்மரி
வித்தை சேர வித்துதத்தன்
குலமும் தாழ
சஞ்சயந்தர் மோட்சம்
பெற்ற இரிமந்தம் மலையின்
மீது
சஞ்சயந்தபட்டாரகர்க்கு சமைத்திட்டான்
ஜினாலயத்தை 524
பவணலோக தரணேந்திரன்
இரிமந்தமலை ஆலயத்தில்
நவரத்தின
மணிகள் கொண்டும் நல் பசும்
பொன்னினாலும்
சஞ்சயபட்டாரகரின் திருமேனி
உருவம் செய்து
பிரதிமையை
உள்ளே வைத்து பிரதிஷ்டை
செய்து வைத்தான் 525
மத்தள இசை ஒலியும் பேரிகை
இடி ஒலியும்
வலம்புரி
சங்கு ஒலியும் வீணை குழல் மென் ஒலியும்
ஓர்கட் பறை வன்னொலியும் ஓங்கார
தாள வெண்கல ஒலியும்
ஒரு சேர ஒலித்தது
அன்று பிரதிஷ்டை நாளின்
அன்று 526
கின்னர தேவர்களின்
கிரங்கிடும் இசைக்கு ஏற்ப
உடுக்கை
இடையுடைய ஊர்வசிகள் நடனம் ஆட
தாங்கொணா பக்தியினால்
தரணேந்திர தேவன் அவன்
தாமரை மொட்டாய்
குவித்து தலைவணங்கி துதிக்கலானான் 527
அனைத்தும் அறிந்த
அமலன் நீ அணிகலன்
அணியா அழகன் நீ
ஆனந்த மோட்ச அண்ணல்
நீ ஆராய்ந்து அறியும்
பொருளும் நீ
நிலையாத நிலையை
உடையோன் நீ மாறுதல்
இல்லா மாயவன் நீ
என்னுள்
இருக்கும் இறைவன் நீ கேவலக்
ஞான கேசவன் நீ 528
மலமில்லாத மனதினன்
நீ அனைத்துக்கும் உரிய அமலன் நீ
சலனம் இல்லா சத்தியன்
நீ சகலமும் தெரிந்த
சத்துவன் நீ
அனந்த வீர்யம்
பெற்றவன் நீ அகப் புறபற்று அற்றவன்
நீ
அனந்த சுகத்தை அடைந்தவன்
நீ அனந்த ஞான ஆசானும் நீ 529
கர்மங்கள் முற்றும்
நீங்கிய கடவுளாம் சஞ்சயந்தபட்டாரகரை
பவணர் கோமான் தரணேந்திரன்
பாடித்துதித்தான் இதையெல்லாம்
நான்கு வணக்கத்துடன்
மாண்புடன் கரங்கள் கூப்பி
மும்முறை
கரத்தைச் சுற்றி வணங்கி
தன் இடத்தை அடைந்தான் 530
( நான்கு வணக்கம் : அருகர், சித்தர்,
சாது, தர்மம் )
ஆதித்யாப தேவனும்
வித்துதத்தன் வெஞ்சினம் நீங்க
அருளினை
மனதில் கொண்டு அறத்தினை
சொல்லி அருள
மறத்தினால் நரகில்
வாழும் வியந்தர வித்துதத்தன்
ஜினவறம்
முழுதும் கேட்க சிந்தயை
பதித்து நின்றான் 531
அழிந்திடும் உடலும்
ஆன்மா அடைந்திட்ட மனிதர்
எல்லாம்
பாகனின்
ஏவல் கேட்டு பணிந்திடும்
மதகரியைப் போல
தீவினை வசத்தால்
தாழ்ந்து செய்வார்கள் பாவந்தன்னை
நற்காட்சி
உடையோரெல்லாம் ஞானத்தால் பொருந்தி
நிற்பர் 532
கோபத்தீ மிகுதியாக
உன் உள்ளத்தில் எரிந்து
நிற்க
பலமுறை
நரகம் தன்னில் பல்வேறு
துன்பம் கொண்டாய்
வெய்யிலின் கடுமை தன்னை தணிக்கின்ற
நிழலைப் போல
அருகன்
அறம் ஏற்று நீயும்
ஆன்மசுகம் அடைவாய் என்றார் 533
சம்சார துன்பம்
தன்னில் அடைந்திட்ட இன்பம்
எல்லாம்
நெருப்பிடை
மலையை ஏந்தி மலை நிழலில் பெற்ற இன்பம்
சூழ்ந்திட்ட புலிகள்
நடுவில் துளிர் உண்ணும்
மானின் இன்பமாய்
விலங்குகதியில் அடையும்
இன்பம் நிலையற்ற இன்பம்
ஆகும் 534
பொருட்செல்வம் இல்லாதோர்க்கு
பூமியில் சுகங்கள் இல்லை
உயிர்களிடம்
அருள் இல்லார்க்கு இப்புவியில்
இன்பம் இல்லை
பொன் குணம் அறியா நெஞ்சான்
பொன் வாங்கி பயனும்
இல்லை
நற்காட்சி
இல்லா ஆன்மா நாடாது
மோட்சம் தன்னை 535
இந்த சஞ்சயபட்டாரகர் தான் முன் பிறப்பில்
சிம்மசேனன்
அவன் அமைச்சனாய் இருந்தாய்
அப்பிறப்பில் ஸ்ரீபூதியாய்
சிம்மசேனன் ராணியாக
நானிருந்தேன் ராமதத்தையாய்
பிறப்புகள்
மாறி மாறி இன்றிருக்கும்
நிலையடைந்தோம் 536
ஆதித்யாப தேவன் சொன்ன அறத்தை
கேட்ட வித்துதத்தன்
ஆன்மாவில்
பகைமை நீங்கி தேவனை வாழ்த்தி வணங்கி
சிம்மசேனன் மேல் வெஞ்சினத்தால் பிறவிதோரும்
துன்பமுற்றேன்
இத்தீமை
நீங்கும் வழியை எனக்கு
அருள வேண்டும் என்றான் 537
மூவுலகும் தொழுது
ஏற்கும் சஞ்சயந்த பட்டரகரின்
மலரடி தொழுது வணங்கி
மனதார துதி செய் என்றார்
இருகையில் மலர்கள்
ஏந்தி அவ்விறைவன் பாதம் வைத்து
தீமைகள்
பொருத்தருள வித்துதத்தன் வேண்டி
சென்றான் 538
குரோதம் கொண்ட ஸ்ரீ
பூதி பல
தடவை நரகம் சென்றான்
பொறுமை
கொண்ட சிம்மசேனன் பலதடவை
தேவனானான்
பகையாலும் பொறுமையாலும் பயன் தரும் பலனைக்
கண்டு
பொறுமையை
கைகொள்ளாதோர் புல்லறிவு மனிதர்
ஆவர் 539
பிறவிமுடிச் சருக்கம்
நிறைவு பெற்றது.
12. ஸ்ரீ விஹாரச் சருக்கம்.
சிம்மசேன மன்னன்
வீடடைந்து சஞ்சயந்தன் பிறவி கொண்டு
காதிவினை
முழுதும் கெட்டு திரவிய
மோட்சம் சென்றடைந்தார்
ஸ்ரீ பூதி அமைச்சனின்
தீவினையால் விலங்குகதி உழலச் செய்து பின்
வித்துதத்தன்
பிறவி பெற்று வித்யாதரர்
அரசனானான் 540
சிம்மசேனன் ராணியான
பூங்குழலால் ராமதத்தை
இலாந்தவ
கல்பத்திலே ஆதித்யாப தேவன் ஆனாள்
அவள் மகன் பூர்ணச்சந்திரன் பவணலோக
தரணேந்திரனாக
இவ்விரு
தேவர்களின் பிறப்புதனை இனி இயம்புகிறேன் 541
முப்புறமும் கடல் சூழ்ந்த விஜயார்த்த
மலை நடுவில்
வில்லெடுத்து
நாணேற்றியதாய் விளங்குகின்ற பாரதத்தில்
மலர் தளிர்ந்த
மலர்வனமும் தேனிசைக்கும் வண்டுகளும்
தோப்புகளும்
சூழ்ந்திருக்கும் சுந்தரமாம் வடமதுரையில் 542
துகில் கொடிகள்
பறக்கும் ஒலி முகில்
மோதும் முழக்கம் என
மயில்கள்
தோகை விரித்தாடும் மனம் கவர்ந்த நடனங்களும்
பொற்கதிரோன் வழிமறிக்கும்
பொன் இழைத்த மாளிகைகளும்
சிற்றிடை
கொண்டொளிரும் சித்திரபாவைகள் கொண்ட நகரம் 543
மன்மதன் தான் வருத்தம் செய்வான்
மதகரிகள் விலங்கு கொல்லும்
வாடுவது
மலர்கள் மட்டும் கலப்படமும்
வண்ணத்தில் மட்டும்
நீர் நிறைக்கு
அணை தான் காவல் தீத்தொழில் யாகத்தில்
மட்டும்
வசியமோ
மகளீரால் தான் வஞ்சனைகள்
வேறில்லா நகரம் 544
வடமதுரை ஆளும் அரசன் வலிமை கொண்ட அனந்தவீர்யன்
பகைவர்களின்
இரவுகளில் பயம் தெளித்த
பெரிய வீரன்
மன்மதன் மயக்கம்
கொள்ளும் வடிவம் கொண்ட பேரழகன்
மாரி போல் அள்ளித்தந்து
கரம் சிவந்த தர்மவேந்தன் 545
கற்பக மரத்தை
சேர்ந்த பவழக்கொடிக்கு ஒப்பாவாள்
கன்னியர்கள்
அனைவருமே காமுறும் வடிவம்
கொண்டாள்
பாற்கடல் அள்ளித்
தந்த அமிர்த மொழி சொல்லுடையாள்
அனந்தவீர்யன்
கைபிடித்த முதல் மனைவி மேருமாலினி 546
மேகங்கள் மோதலில்
ஒளிரும் மின்னல் கொடி வடிவு கொண்டாள்
மெல்லிடை
ஒடிந்துவிடும் பொன் அன்னம்
நடையுடையாள்
அனந்தவீர்ய மாமன்னன்
மணந்த வடமதுரை இளைய ராணி
அமிர்தமதி
பெயர் கொண்ட அழகு கொஞ்சும் ஆரணங்கவள்
547
ஆண் மகரமீன்
ஒன்று அதன் இரண்டு
செதில்களுடன்
ஆழ்கடலில்
ஆனந்தத்தில் ஆட்டமிட்டு திரிவதைப்
போல்
அரசன் அனந்தவீர்யனும் அவன் இரண்டு அரசிகளுடன்
இல்லறக்
கடலில் மூழ்கி இன்பம்
என்னும் முத்தெடுத்தான் 548
இலாந்தவ கல்ப தேவன் இராமதத்தை
காலம் முடிய
முதல் அரசி மேருமாலினியின் மணி வயிற்றில் வந்துதித்தாள்
பவணலோக தேவன் ஆன பூர்ணச்சந்திரன் ஆயுள் முடிய
அமிர்தமதி
அடிவயிற்றில் அரசமகனாய் வடிவெடுத்தான் 549
மேருமாலினி பெற்று
தந்த வடமதுரை மன்னன்
மகனுக்கு
மேரு என்று பெயர் வைத்து மெய் மகிழ்வு கொண்டார்கள்
அமிர்தமதி இளையராணி
ஈன்று தந்த இளம் மழலைக்கு
மந்திரன்
என்று பெயர் சூட்டி
வடமதுரை மகிழ்ந்ததன்று 550
இளவரசர்கள் இருவருமே
இளங்கலை போல் வளர்ந்தார்கள்
வில், வாள், வேல் கையாளும் வீரக்கலை
பயின்றார்கள்
யானை ஏற்றம்,
குதிரை ஏற்றம், தேரோட்டம்
கற்றறிந்து
மன்மதனின்
மலர்கணைக்கு மாய்கின்ற வயதானார்கள் 551
புருவத்தின் வில்லெடுத்து
விழியென்ற வேல் பொருத்தி
கடைக்கண்
பார்வையாலே கணை தொடுக்கும்
கன்னியரால்
இளங்களிறு போல் இருக்கும் இரண்டு
இளவரசர்களின்
மனம் கெடுத்து வசமாக்க
மன்மதனும் காத்திருந்தான் 552
காமத்து இச்சைதனை கணை கொண்டு எழுப்பி
விட
மலர் அம்பு பொழிந்து
நின்றான் மன்மதனும் பகைவனைப் போல்
தொடுத்த அம்பு அத்தனையும் தூள் தூளாய் ஒடிந்து
விழ
ஐங்கணையான்
முதுகு காட்டி அவர்களை
விட்டு அகன்றான் 553
உடல் தேடும்
இச்சை இன்றி காமத்தின்
மோகம் அற்று
நிலையற்ற சம்சாரத்தில் ஐம்புலன்
நுகர்ச்சி நீக்கி
நிறை பொருள்
செல்வம் எல்லாம் நீர் கொண்ட நுரை போலும்
வாலிபமும்
உடலழகும் வானவில் போன்றது
என்றனர் 554
உடல் செல்வம்
அத்தனையும் ஒருபோதும் நிலைப்பதில்லை
உறவினரும்
பெரும் பொருளும் உடன் வந்து காப்பதில்லை
துணையென்று ஒன்றிருந்தால்
நமக்கு நாமே துணையாவோம்
அருகனின்
அறிவுரைகள் அனைத்துயிர்க்கும் நன்மை என்றனர் 555
ஈராறு சிந்தனையில்
இருவரும் இல்லறத்தில் செல்லுங்கால்
மூவுலகும்
தோன்றுகின்ற வாலறிவு ஞானத்தோடு
தேவர்கள் மலர் சொரிய பூவில்
கால்பதியா சாரணத்தில்
விமலநாதர்
ஸ்ரீ விஹாரமாகி வடமதுரை வனம் வந்தார் 556
செந்தாமரை மலரிதழில்
தேவதைகள் நடனமாட
பவ்வியர்கள்
பாவவினை பழத்த இலை போல் உதிர
எண்வினைகள் அறுத்தொழித்த
எழில் கொண்ட விமலநாதர்
ஸ்ரீ விஹாரம் செய்வதற்கு தேவர்கள் வழி சமைத்தார்கள் 557
ஸ்ரீ விஹாரம் செய்வதற்கு தேவர்கள் வழி சமைத்தார்கள் 557
நறுமணம் வீசுகின்ற
நன்மலராம் செந்தாமரை மேல்
நான்கு
அங்குலம் மேல் பொருந்தி
ஸ்ரீ விஹாரம் செல்வாரென
மூன்று யோசனை அகலத்தில் முத்துகளால்
தெரு அமைத்து
இரு யோசனை அகலம் ரத்தின மண்டபம்
அமைத்தார்கள் 558
( ஒரு யோசனை :
9 மைல் )
வாயுதேவன் நறுமணத்தில்
இளம் தென்றலாய் வந்து
பூவுலகில்
படிந்துள்ள தூசி நீக்கி
தூய்மை செய்தான்
வருணதேவன்
மேகமாகி வான்வெளியில் உலா வந்து
மணங்கமழும்
நீர் தெளித்து அவ்விடத்தை
குளிரச் செய்தான் 559
சௌதர்மேந்திரனும் வானவரும்
எண்வகை தேவர்களும்
ஸ்ரீ விஹாரம்
எழுந்தருளும் விமலநாதர் எதிரில்
வந்து
வீதராக பகவானின்
செவ்வடியை வணங்கி நிற்க
ஸ்ரீ விஹாரமும் சிம்மாசனமும்
எண்சிறப்பில் இயல்பானதன்று 560
இடியொத்த பேரிகைகளும்
பம்பையுடன் பெருமணியோசையும்
வலம்புரி
சங்கொலியும் உடுக்கையுடன் மத்தள இசையும்
உறுமி மேள நாதத்துடன் சேமகல வெங்கல ஒலியும்
ஸ்ரீ விஹாரம்
செய்கையில் திக்கெட்டும் ஒலித்தது
அங்கு 561
கின்னர தேவர் எல்லாம் கிளை கிளையாய் கூடி நின்று
வீணையுடன்
யாழ் எடுத்து விண்மயங்கும்
இசை இசைத்து
நிலமடந்தை தன் நிலையில் பொன் வைர நவ மணிகளுடன்
நன்னீர்
எல்லாம் வழங்கி நாயகனை
தொழுது நின்றார்கள் 562
விண்ணகத்து தேவ மகளீர் விண்வெளியில்
நடனமிட
மண்ணுலக
மங்கைகளும் கல்பலோக கன்னிகளும்
தேவர்களால் அமைக்கப்பட்ட
சுந்தர அரங்கம் தன்னில்
பாட்டிசைக்கு
பாங்குடனே பரவசத்தில் ஆடினரே 563
ஜினேந்திர தேவர் அவர் செல்லுகின்ற
வீதிகளில்
இந்திரலோக
தேவர் கூடி மலர் மழையைப் பொழிந்தார்கள்
தீவினைகள் ஒழிந்திடவும்
புண்ணியங்கள் பெருகிடவும்
ஜினதேவன்
நாமங்களை இசை கொண்டு
பாடினார்கள் 564
தேவர்களால் அமைக்கப்பட்ட
செந்தாமரை மலரின் மீது
செங்கமலம்
நிற்பதை போல் ஜினேந்திரன்
அடி பதிகையிலே
திங்கள் ஒத்த முக்குடையும் யட்சர்களின்
வெண்சாமரையும்
ஒருங்கிணையும்
நேரத்திலே தேவர்கள் பூ சொரிந்தார்கள் 565
மா தவ முனிவர்
எல்லாம் மாலவன் மலரடி தொழுதார்கள்
எண்வகை
மங்கலங்கள் ஏந்தி எழில் பூர்ண
கும்பத்துடன்
தேவ மாந்தர்
பின் தொடர திருமகளும்
வரும் போது
இரு நிதிக்கு தேவர்களும்
எழுந்து நின்றார் முன்னும்
பின்னும் 566
பவணலோக தேவர் எல்லாம் ஜினேந்திரரின்
திருவடி பணிந்து
தீவட்டிகள் கையில் ஏந்தி தேர் வடம் போல் முன்
நடந்தார்
அக்கினிகுமாரர் எல்லாம்
அவர் சிரசில் கலசம் தாங்கி
விமலநாதர்
அடி தொழது வீதிகளில்
பாடி சென்றார் 567
ஆதவனின் அதியொளியும்
வெண்மதியின் தண்ணொளியும்
ஒன்றிணைந்த
பேரொளியான விமலநாதர் மேனி எழிலை
பரிதி பார்த்த
குமுதமென மதி கண்ட அல்லி போல
மனிதர்கள்
முகம் மலர மலர்ச்சியுடன்
தொழுதார்கள் 568
வெண்குடையும் அலைகொடியும்
மின்னலென ஒளிர்ந்து நிற்க
வீங்கு
எழில் வைசயந்தை கொடி முன்புறம்
அணியாய் செல்ல
மங்கல வாழ்தொலியால்
இடி முழக்கம் கரைந்து
போக
மறம் அறுக்கும் தர்மச்சக்கரம்
முன்னிடத்தில் சென்றதங்கு 569
செங்கமல மலரின்
மீது ஜினேந்திரரும் ஏறி நிற்க
எட்டு திக்கும் விழிபறிக்கும்
எழில் ஒளியாய் மின்னலிட
திசைக்குரிய கன்னியர்கள்
பூ மாரி பொழிந்து
வர
காசினியின்
வறட்சி வெள்ளம் வடிந்து
செழிப்பு ஓங்கியது 570
ஊமைகள் வாய் மொழிந்தார் செவிடர்கள்
செவியுற்றார்
முடவர்கள்
காளையாய் நடக்க விழியற்றோர்
பார்வை பெற்றார்
துன்பத்தோர் சுகம் அடைந்தார் குரோதத்தோர்
சினம் அழிந்தார்
விமலநாத
வாலறிவன் ஸ்ரீ விஹாரம் சென்ற போது 571
எதிரிகளாய் பிறந்திட்ட
எல்லா எதிர் விலங்கினமும்
அண்ணல்
பாதம் பட்டதினால் அன்பினால்
இணைந்ததங்கு
அதிசயங்கள் அத்தனையும்
அங்கிருந்து பார்த்த மக்கள்
மேரு மந்திரர்களிடம் மென் மொழியில் கூறி நின்றார் 572
எழுந்து
ஏழடி எடுத்து வைத்து இறைவனை துதித்து
வணங்கி
செய்தியை
சொல்லியோர்க்கு செம்பொன் தானங்கள்
கொடுத்து
ஏழுலகமும் நிறைந்துள்ள
பொய்காட்சி இருள் அகல
விமலரின்
பாதம் தொழ வேழத்தில்
முரசறைந்தார்கள் 573
சங்க வாத்தியங்கள்
சப்தமாய் ஒளி எழுப்ப
ஏழுவகை
மலர்கள் கொண்டு யானை பரி மேல் அமர்ந்து
நிலமங்கை முதுகு
அதிர ஆன்மனின் தீமை நீங்க
பரிவாரங்கள்
தொடர பரமனின் இடம் வந்தார்கள் 574
சந்தன குழம்பு
கொண்ட சந்திரகாந்த செப்புகளும்
குங்கும
குழம்பு குலுங்கும் சூர்யகாந்த
செப்புகளும்
அகிற்புகை பெருகுகின்ற
இந்திரநீல கலசங்களும்
கையிலேந்திய
கன்னியர்கள் சூழ்ந்து நின்றார்
மேரு மந்திரரை 575
விண்வரை மணந்து
வீசும் நல் மலர் மாலைகளும்
பொன் வைர ரத்தினங்கள்
ஒளிரும் பெரும் தட்டுகளும்
பின் தொடரும்
கூடத்துடன் பிளிரும் களிர்கள்
மேலமர்ந்து
மேரு மந்திரர் இருவரும்
இரு மேகமற்ற பரிதியானார் 576
ஸ்ரீ
விஹார சருக்கம் முடிவுற்றது.
13. சமவ சரணச் சருக்கம்.
ஈராறு யோசனை அளவில் அமைந்த
சமவசரண முதலிடத்தில்
நான்கு
திசை வீதிகளின் நடு அமைந்த மானஸ்தம்பங்கள்
அழகினை விளக்கிச்
சொல்ல வார்த்தைகள் மொழியிலில்லை-அதை
காண்பவர்
மனதில் உள்ள கர்மங்கள்
அழிந்து போகும் 577
வீசும் வெண் சாமரைகள் வெளிப்படும்
அரசு சின்னங்கள்
அனைத்தையும்
துறந்து விட்டு அரசன் மக்கள் மேரு மந்திரர்
ஜினேந்திரரின் சமவசரணம்
ஜினாலயத்தை அடைந்து
மூவுலக
அதிபதியை முழுமனதில் தொழுது
நின்றார் 578
பன்னிரண்டு யோசனைகள்
பரப்பளவில் வட்டமாகி
தேவர்கள்
எல்லாம் கூடி சுவர்ணமணிகளால் அமைத்த
இருபத்து ஆயிரம்
படிக்கு மேல் சமவசரண
மண்டபம் கொண்ட
பிரதம பூமியாகும் பிராசாத
சைத்யபூமி 579
வேழத்தின்
அம்பாரி
விட்டு தரை தொட்ட மேரு மந்திரர்
தூளிசாலம்
மதில் கடந்து பிராசாத
சைத்திய பூமியையும்
இரண்டு காதம் அகலம் கொண்ட நான்கு திக்கு
வீதிகளின்
மார்பளவு
முதல் பீடத்தில் மலர்கள்
வைத்து வணங்கினார்கள் 580
நான்கு காத உயரத்தில்
பன்னிரண்டு யோசனை தெரியும்
திக்குக்கு
ஒன்றாக நான்கு திக்கும்
உயர்ந்து நின்று
காண்பவர் மன கர்வம்
கலங்கத்தில் அழிந்து போக
தோரண மதில் வரிசையிலே
மங்கலம் எட்டும் சூழ்ந்திருந்தன 581
இரண்டு காதம் உயரம் நடுவில்
படிக ரத்தினமும்
ஒரு காதம் உயரம் மேலே
வைடூரியம் பதித்திருக்க
ஒரு காதம் உயரம் கீழே வைரத்தின் கல் ஒளியும்
அடி பாகம் நாற்புறமும்
அமைந்தன சித்தர் உருவங்கள் 582
( 1 காதம் :
2.5 மைல், 1 யோசனை
: 9 மைல் )
மானஸ்தம்பத்தின் மேலே நான்முகம் கொண்ட பூதம்
சிரத்தினில்
செங்கமலம் போல் செம்பொன்
கலசம் மீது
திருமகள் உருவம்
நிறுவி வெண் நிற வேழம்
கொண்டு
சொரிந்திடும்
பாலின் ஒளி ஒளிர்ந்திடும்
இருபத்து யோசனை 583
திருமகள் வீற்றிருக்கும் செம்பொன்
பலகையின் பக்கங்கள்
நான்கிலும்
தொங்குகின்ற நாலிரண்டு மங்கலங்களும்
நால் திசை மானஸ்தம்பங்கள் நளினத்தின்
அழகு கண்டு
மேரு மந்திரர் இருவரும்
வலங்கொண்டு தொழுது வந்தார் 584
மனதினில் மாலவன்
பதிய மார்பளவு மதிலைக் கடந்து
இந்திர
நீலம் கொண்ட ரத்தின
நிலத்தை உடைய
கண்கவர் அகழிகளில்
தளும்பிடும் நீர் நிறைந்த
காதிகை
பெயரைக் கொண்ட இரண்டாம்
பூமியை கண்டனர் 585
அகழியின் ஆழமும்
நீரும் ஆழ் கடல் ஒத்திருக்க
கரை தொடும் அலையை போல்
காதிகை அலையும் வந்து
ஜினேந்திரனின் மலரடி தனை மலர் போன்ற பட்டுடையால்
போர்த்தியது
போல் தோன்றும் என போற்றிப் புகழ்ந்தார்கள் 586
ஆழியின் நீலம் போல அகழியின்
நீரும் நீலம்
பாற்கடல்
அமுதம் போல பருகினால்
நீரும் சுவைக்கும்
ஆழமோ அதிகம்
என்று இறங்கினால் முழங்கால்
அளவே
மேடுகள்
பள்ளம் இன்றி அகழியோ
சமதளம் ஆகும் 587
இரண்டு குரோச காதிகா பூமியில்
அரை காதம் அகழிகளாகும்
நான்கு
திக்கு வீதிகளில் உதயதர பிரதம கோபுரங்கள்
கோபுரத்தின் அங்கங்கள்
செம்பொன்னால் செதுக்கி இருக்க
ஒரு காதம் பரப்பளவுள்ள
வல்லிபூமியை அடைந்தனர் 588
ஒரு காதம் மைல் அகலம் மூன்றாம் பிரகார
வல்லிபூமி
பூப்பந்தல்
தோட்டங்களும் பொன்னிழைத்த மண்டபங்களும்
மலர்களில் சொட்டும்
மதுவால் மயங்கிடும் வண்டுகள்
கூட்டம்
ஒலித்திடும்
ஓசையின் ஒலி சுவாமியை
துதிப்பது போலாகும் 589
மல்லிகை முல்லை
மலர்கள் மணம் தூவும்
செண்பகப்பூவும்
வனமல்லி
குறுக்கத்தியும் கருமுகை குறிஞ்சிகளும்
வெட்சியும் இன்னும்
பிறவும் நெருக்கத்தில் மலர்ந்து
நிற்க
அத்தனை
பூவும் கொண்டு அடைந்தனர்
கோபுரத்தை 590
மூன்று காதம் உயர்ந்து நின்று
இரண்டு காதம் நீளம் கொண்டு
உதயதரம்
பெயரில் கோபுரம் உள்ளத்தைக் கவர்ந்து நிற்கும்
ஒரு காதம் அகலத்தில் ரத்தின
வாயில் கொண்டு
எண்வகை
மங்கலத்துடன் மூன்றுநிலை கொண்டதாகும் 591
நிலைக்கொரு படிமையாக
மூன்று ஜின பிரதமைகள்
வாயிலின்
இருபுறமும் வடிவழகில் துவார பாலகர்கள்
துவஜக் கொடிகள்
கொண்ட உதயதர கோபுரத்தை
கை கொண்ட மலர்கள்
தூவி காலடி வைத்தார்
நாலில் 592
( 1 குரோசம் :
2.25 மைல் )
நான்காம் பிரகாரம்
ஆன வனபூமி என்னும்
நிலம்
பலவகை நிறங்கள் கொண்டு
இரண்டு காத அகலத்தில்
பிரீதிதரம் சுற்று
மதிலும் நால் மூலையில்
மேடை தாங்கி
மரங்கள்
பலவும் சூழ்ந்த மண் அழகு கொண்ட பூமி 593
அமைந்திட்ட மேடை ஒன்றுக்கு அழகிய இரு தூபைகளும்
அதனுடன்
அமைந்திருக்கும் முக்குடையுடன் இரு சோதிமரமும்
ஆதிமுதல் தளிர்த்திருக்கும் கற்பக விருட்சம் இரண்டும்
அழகுடன்
விளங்குகின்ற அரிய வன பூமியாகும் 594
நான்கு திசை வீதி பிரிந்து
மேடைக்கு செல்லும் வழியில்
இருபக்கம்
அமைந்திருக்கும் கோண வட்ட சதுர குளங்கள்
மூவெட்டு எண்ணிக்கையில்
முறைபடி அமைந்திருக்கும்
முறைபடி
குளித்து பல் துலக்கி வாய்த்தூய்மை
செய்வாரகள் 595
நான்காம் பிரகாரத்தின்
நான்கு பெரும் வீதிகளின்
இருபுறமும்
அமைந்திருக்கும் இசையொலிக்கும் நடனகூடம்
ரத்தின தூபைகளும்
நயம் பொன் எண் மங்கலமும்
தேவலோக
போகபூமி சேர்ந்தது போல் மனித கூட்டம் 596
குயில் இசைக்கும்
ஓசையது மத்தளத்தின் நாதமாக
கொம்பு
பூவின் வண்டினங்கள் பாடிசையின்
தாளமாக
வண்ணமயில் தோகையுடன்
வான் மழைக்கு நடனமாட
வஞ்சியர்கள்
கொஞ்சும் விழி கண்டவர்கள்
கிரங்கிடுவார் 597
தீவினைகள் ஏதும் சேரா மேரு மந்திர இளவல் இருவரும்
வனபூமி
விதியின் படியே வாவியை
கடந்து சென்று
நன் மலர் கையில் ஏந்தி ஜினபிம்பை பூஜைசெய்து
மென் அடி எடுத்து
வைத்தார் பிரகாரம் ஐந்தில்
செல்ல 598
துவஜ பூமியான ஐந்தாம்
பிரகார பூமி
கோபுரத்தின்
இருமருங்கும் பவணேந்திர தேவர்கள்
கூடி
ஜினேந்திரரின் அருங்குணத்தை
ஜினதுதியாய் பாடி நிற்க
மாங்கொத்து
கொடிகள் கொண்ட மாபெரும்
வீதிகளாகும் 599
சிங்கம், பெரிய யானை,
பூமாலை, மயில், அன்னம்,
கருடனாகி
எருது,
மகரமீன், சக்கரம், செங்கமல
பூவும் கொண்டு
பத்து வித லாஞ்சனங்கள் பதிந்திட்ட
தம்பத்தின் நிற்கும்
ஜினேந்திரரின்
ஜினாலய மதில் கல்யாணதாரம்
என்பதாகும் 600
மூன்று குரோசம்
அடி அகன்று ஒன்றரை
குரோசம் மையத்துடன்
முக்கால் குரோசம் தலைப்புடன்
உயர்ந்து நிற்கும் கல்யாணதாரம்
பசும் பொன்னால்
இழைத்து கட்டி ரத்தினங்கள்
பதிய வைத்து
ஏழ் நிலை வட்டாலயங்கள்
எழில் கொண்டு அமைந்தது
அங்கு 601
( ஒரு குரோசம் :
2.25 மைல் )
செம்பொன் கோபுரங்கள்
நான்கு தேவலோகம் போல் இருக்கும்
ஐந்து காத உயரத்துடன்
கோபுர வாயிலின் இருமருங்கும்
அகப்பற்றின் விருப்பத்தில்
வரும் ஏழ் பாவத் தொடர்ச்சிகளை
நுழைபவர்கள்
காணும்படி கண்ணாடிகள் பதிந்திருக்கும் 602
கல்பவாசி தேவர்கள்
துவார பாலகராய் காவல் செய்ய
ஏழ்நிலை
நடனசாலையில் எழில் மகளீர்
நடனம் ஆட
நான்கு வீதி கிளைகளிலும் சித்த திருவுருவங்கள் துலங்க
திருவுருவ
சிரசின் மீது சித்தாயதன
மரம் மலர் சொரியும் 603
ஆறாம் பிரகாரம் ஆன கல்பவிருட்ச பூமியிலே
கல்யாணதார
கோபுரங்கள் சூழ்ந்திருக்கும் இடத்தினிலே
வாலறிவனை தரிசித்து
வணங்குகின்ற ஜினாலயமும்
வானினை
தொட்டு நிற்கும் வனப்புடைய
தூபிகள் உண்டு 604
கல்ப விருட்ச பூமியிலே
திக்குக்கொரு தடாகம் உண்டு
கீழ் திசையில் நந்தை என்றும் தென் திசையில்
பத்திரை என்றும்
மேல் திசையில் ஜயந்தை
எனவும் வட திசையில்
பூரம் எனவும்
பெயர்களால்
அறியப்பட்ட பேரெழில் குளங்களாகும் 605
நத்தையின் நீர் தெளித்தால் முன் பிறப்பை அறிந்து
கொள்வர்
பத்திரை
நீர் மேனி தொட்டால்
முன் ஏழு பிறவி அறிவர்
சயந்தையின் தண்ணீர்
பட்டால் நினைத்ததை நேரில்
காண்பர்
பூரத்தின்
புனித நீரால் புத்கல
நோய்கள் நீங்கும் 606
நான்கு காதம் பரப்பிலுள்ள ஆறாம் பிரகாரம் தன்னில்
மூவுலக
தேவர் மனிதர் விலங்குகள்
வந்து சேரினும்
மனித மன ஆசை போல பரந்து விரியும்
பூமியாகி
ரத்தின
மரங்கள் சூழ்ந்த கற்ப விருட்ச
பூமியாகும் 607
பூஜைப் பொருள்கள்
கொண்டு இச்சமவசரண பூமி சேர்ந்தால்
தேவரும்
மறந்து நிற்பார் தங்கள்
தேவலோகம் தன்னை
மலையென நிமிர்ந்து
நிற்கும் மாளிகைகள் ஒருபுறமும்
ஞாயிறின்
ஒளி மங்கிடும் மண்டபங்கள்
நிறந்திருக்கும் 608
கன்னலின் சுவை கொள் நீரால்
கரை புரலும் நதிகள்
உண்டு
வண்டுகள்
படை போல் திரளும்
மலர்வன தடாகம் உண்டு
ரத்தின தளங்கள்
கொண்டு ஒளிர்ந்திடும் மண்டபங்கள்
உண்டு
கற்ப விருட்ச
பூமியில் கண்கவர் பசும்பொன்
மதில்கள் உண்டு 609
மாறிடா சிந்தை
கொண்டு மாதவம் செய்யும்
முனிவோர்
மறுபிறப்பை
ஒழித்து நீக்கும் உபாத்தியாய
குணத்தையுடையோர்
மறம் போக்கி
தர்மம் காக்கும் மௌனத்தைக்
கைகொண்டோர்கள்
முக்கால
யோக நிலையோர் நாற்புறமும்
அமர்ந்து இருப்பார் 610
ஐந்தவம் ஏற்ற சான்றோர் அமர்ந்துள்ளார் ஒரு பக்கத்தில்
மன வாக்கு காய பலத்தோர் இருந்தனர்
ஒரு பக்கத்தில்
உபவாச விரதம்
கொண்டோர் ஒரு பக்கம்
இருக்கை கொண்டார்
உடல் துன்பம் துறந்த
தவத்தோர் உறைந்தனர் ஒரு பக்கத்தில் 611
( ஐந்தவம்
: உக்கிர, தீப்த,
தப்த, மாதவ, கோர தவம் )
உடல் பிணி நீங்குதற்கு மருந்து
அளிக்கும் முனிவர்களும்
நறுமண நெய் பால் அமுது வழங்கிடும்
தர்மத்தோரும்
ஆகம நூல்களிலே
முதல் இறுதி நடுவண்
கொண்டு
முழுநூலும்
அறிந்த ஞான கோஷ்ட புத்தி புலவர்கள்
உண்டு 612
முதல் பதம் துவக்கம் சொல்ல முதல்
நடு முடிவு அறிந்து
முழுநூலும்
அறிந்து சொல்லும் பீஜபுத்தி
மாமுனிகளும்
ஈராறு யோசனையில்
உண்டாகும் மொழிகளை அறிந்துணரும்
சம்பின்ன
மதிகள் கொண்ட தவமுனிகள்
அமர்ந்திருப்பர் 613
ஆறாம் பிரகார
பூமியின் நான்கு பெரும்
வீதிகளின்
இருபுறமும்
இத்தகைய இறை ஞான முனிவர்களை
மேரு மந்திர
மாமன்னர்கள் மனம் உருக துதிகள் பாடி
ஏழாம் பிரகாரமான கிருஹாங்கண
பூமி சென்றார்கள் 614
பொன் மணி ரத்தினத்தால் பொழுதெல்லாம்
ஒளிர்கின்ற
கனகமணி
மதில் கடந்து ஜயாஸ்ரயம்
மண்டபம் அடைந்தார்
ஒரு குரோசம்
அகலத்துடன் ஒரு யோசனை உயரம் கொண்டு
ஒரு காதம் நீளமாக
ஜயாஸ்ரயம் மண்டபம் நிற்கும் 615
முத்து மணி பவழங்கள் தனித்தனியாய்
தரை பதிய
முழுமதியின்
ஒளிக்கதிரும் பரிதி கக்கும்
பளிங்கொளியும்
ஒன்று சேர இங்கு வந்து ஒளிர்வதை பார்கையிலே
மணல் பாதை அமைந்ததை
போல் மண்டப தரையுள்ளது 616
குங்கும குழம்பினாலும்
சந்தன குழம்பு கொண்டும்
மண்டப கூரையுள்ளே வண்ணமாய்
ஞாயிறு திங்கள்
ஆன்மனின் தீய நல்வினைகளாலே சம்சார
துக்கம் தன்னை
உரைக்கின்ற
சிற்பங்கள் உப்பரிகைகளில் உள்ளதங்கு 617
செம்பொன்
பீடம் ஒன்றும் இந்திர துவஜ
கம்பம் நடுவில்
அன்னம்
போல் ஆகாயத்தில் ஆடிடும்
கொடிகள் மேலே
அசைந்திடும் கொடிகளாலே
எழுந்திடும் மணிமாலை ஓசை
பரிதியின்
பரிகள் ஓட தேர்மணிகள்
ஒலிக்கு ஒப்பாம் 618
அமலனின் ஆலயம் முன் ஆயிரங்கால்
மண்டபமும்
அம் மகோதய மண்டபத்தில்
வெண்கமல தேவி பீடம்
எண் திசையும்
மேருமலை போல் எழில் மிகு மண்டபங்கள்
தாண்டியே
உள்ளே சென்றால் தங்கத்தில்
பலி பீடம் உண்டு 619
மலர் கொண்டு
அர்ச்சிக்கும் மணி பீடம் தாண்டி சென்றால்
இருபுறமும்
இடர் இன்றி தரும் நவநிதி குபேரர்களும்
அக் கொடைக்கர
மண்டம் கடந்தால் குபேரர்களின்
தேவியர்கள்
மின்னலென
நடனமாடும் நவமணிகள் நடனசாலை
காணும் 620
ஏழாம் கிருஹாங்கண
பூமி எண் திசை கோணங்களிலும்
ஏழ்வகை
தூபைகளிலும் நவமணிகள் பதிந்து
நிற்க
வானவர் கோன் இந்திரன் விழியகன்று
வியந்திருக்க
உரைப்பதற்கு
வார்த்தை இல்லா பேரெழிலை
கொண்டதாகும் 621
( 7 வகை துபை
: மத்திய உலக தூபை, மந்திர
தூபை, சுவர்க்க தூபை, கிரய வேயக தூபை, சர்வார்த்த
சித்தி தூபை, சித்த தூபை, பவ்ய தூபை )
இரண்டு குரோசம்
பரப்புடைய பிரசாத சைத்ய பூமியையும்
இரண்டு
குரோசம் நிலப்பரப்பில் காதிகா
பூமியையும்
நான்கு குரோசம்
அகலத்தில் வனவல்லி பூமியையும்
எட்டு குரோசம் உத்யான
பூமி நான்காம் பிரகாரமாக 622
ஈராறு குரோசம்
கொண்ட கொடி ( துவஜ ) பூமியையும்
ஈரெட்டு
குரோசத்தில் எழில் கற்பவிருட்ச
பூமியையும்
மூவாறு குரோசம்
பரப்பில் கிருஹாங்கண பூமி கடந்து
திருநிலய
ஆலயத்தை மேரு மந்திரர்
சென்றடைந்தார்கள் 623
ஏழு பூமி கொண்டிருக்கும் சமவசரண
நடுஇடத்தில்
திருமகளின்
பெயர் கொண்ட இலட்சுமி வர மண்டபமும்
எண் வினைகள்
வெற்றி கண்ட ஜினனின்
இருக்கை கொண்ட
பொற்றாமரை
ஸ்ரீ நிலையமும் பொருந்திய அழகை கண்டார்கள் 624
இவ்விடம் இவ்வண்ணம்
இருக்கும் என நினைக்கையிலே
அவ்விடம்
அவ்வண்ணம் ஆகி அங்கு காட்சி தரும்
இவ்விடத்தை விட எழில் பெருகும் இவ்விடம் என நினைத்தால்
அவ்விடம்
அவ்விடத்தை விட அழகு பொங்க அமைந்திருக்கும் 625
மேலான தன்மை குணம் தாழ்ந்திடும் தன்மையாகி
தாழ்ந்திடும்
நிலைமை எல்லாம் மேலானதாகிவிடும்
அவரவர் உள்ளத்தில்
எழும் ஆசைகளுக்கு ஏற்றபடி
எங்கெங்கும்
தோன்றி நிற்கும் அவரவர்
இச்சைக்கு ஏற்றபடி 626
ஈரேழு காதங்கள் அகலத்தை
கொண்டிருக்கும் ஸ்ரீ நிலயம்
இரு மூன்று யோசனையில்
கோபுரம் உயர்ந்திருக்கும்
பதினாறு குற்றம்
நீக்கி பசும்பொன் ரத்தினம்
கொண்டு
இல்லறத்தார்
ஆசையை போல் எல்லையின்றி
ஒளிரும் அது 627
ஜகதீ தலங்கள்
என்னும் மூன்று மா மேடைகளும்
மார்பளவு
உயர்ந்துள்ள மண்டபத்தின் விளிம்புகளில்
வாய்விட்டு எண்ண இயலா வரண்டகஜ
துவஜங்களுடன்
ஸ்ரீ நிலையம்
ஜொலிக்கிறது செங்கதிரோன் ஒளியை போல 628
ஒவ்வொரு ஜகதீயிலும்
சதுர்முக ஆலயங்கள்
முக்கால
தீர்த்தங்கர்கள் திருப் பெயரை பொறித்திருக்கும்
மழைகால முகிலைப்
போல் முழங்கிடும் முரசு சங்கோடு
பொன்கயிறு
நுனியினிலே சேமங்கலம் ஒலியெழுப்பும் 629
ஒவ்வொரு நாழிகைக்கு
பின் ஜயகண்டி ஒலி கொடுக்கும்
ஒரு ஜாமம் முடிவினிலே
சங்கொலி இசை இசைக்கும்
பதினைந்து நாழிகையில்
ஜாம சந்தி நேரத்திலே
மூன்றும்
முழங்கும் இசை மூபத்து
யோசனைகள் கேட்கும் 630
வானவர் சொரியும்
மலர்கள் வழியெங்கும் நிறைந்திருக்கும்
வாத்திய
இசைப் பொருட்கள் வருவோரை
கவர்ந்திழுக்கும்
எண் மங்கலங்கள்
வரிசை எழில் கொண்டு
இருபுறமும்
தோரணத்
தொங்கலுடன் காண்போரின் கண் மயங்கும் 631
துவர்பசை துறந்து
விட்ட தொண்மை சமவசரணம்
தன்னில்
சுற்றுச்
சுவர்கள் பெரிதாய் சுந்தர
கைவண்ணத்தில்
நான்கு காத உயரத்துடன் மூன்று
யோசனை அகலத்துடன்
இலட்சுமி
வரமண்டபம் அதன் நடுவில்
அமைந்திருக்கும் 632
முன்னூற்று எழுபத்தைந்து
நிலையுடைய ஸ்ரீநிலைய கோபுரத்தில்
ரத்தினத்தால்
கட்டிய மேடை நிலைக்கு
ஒன்றென அமைத்து
மேடையின் நான்கு
பக்கம் பெரிய சிறிய தூபைகள் இரண்டுமாய்
மேலுலகோர்
கிரங்கி நிற்கும் விழி மயங்கும் ஸ்ரீ நிலையம் 633
ஜினாலயத்தில் அமைந்துள்ள
தர்மசக்கரம் பீடம் ஒன்று
ஜினேந்திரரின்
உயரத்திற்கு செவ்வனே அமைந்ததாகி
நான்கு பக்க வீதிகளில் பசும்பொன்னால்
இழைத்திட்ட
பதினாறு
படிகள் கொண்டு பார்ப்பவரை
கவர்ந்திழுக்கும் 634
ஜினேந்திர தேவன் இருக்கும் கந்தகுடி
மண்டபம் அது
ஒருகாத
அகலத்தில் ஒளி கொண்டு
திகழ்ந்திருக்கும்
பக்கத்துக்கொன்றாக வெண் பளிங்கால் செய்த தூண்கள்
நவமணி மாலைகள் தொங்க நாற்புறமும் தாங்கி
நிற்கும் 635
மூன்று வில் உயரம் கொண்டு
அதற்கொப்ப அகலமாகி
நடுவினில்
அமைக்கப்பட்ட நவமணி பீடம் தன்னை
அரிமாக்கள் இரண்டு
தாங்க அதன் மேல் பட்டு மெத்தை
கொண்டு
அனைத்தும்
வென்ற அமலனின் ஆசனம் ஆதவனாய்
ஒளிர்ந்தது 636
கணதரர்களும் மாமுனிகளும்
கல்பவாசி தேவ தேவியரும்
கடுந்தவம்
நிலையில் உள்ள துறவுற்ற
ஆர்யங்கனைகளும்
பவணலோக தேவ தேவியர்களும் வியந்தர
தேவர்களும்
வரிசையில்
நின்றிருந்தார்கள் ஈராறு கோட்டங்களில் 637
சோதிஷ்க தேவர்களும்
சௌதர்மேந்திர தேவர்களும்
மண்ணுலக
அரசர்களும் அறம் கேட்கும்
விலங்குகளும்
பன்னிரண்டு கணங்களும்
வலங்கொண்டு சூழ்ந்திருக்க
ஜினேந்திரரின்
ஜினாலயத்தை மேரு மந்திரர்
வந்தடைந்தார்கள் 638
மேருவை சூழ்ந்து
போகும் மாசிலா பரிதி இரண்டு
பரிதியின்
வட்டத்திற்கொப்ப வலங்கொண்டு நடந்து
வந்து
கை நிறைந்த
மலர்களாலே கார்கால மழையைப்
போல
பூக்களை
சொரிந்து தொழ தோன்றினார்
ஜினேந்திரன் அங்கு 639
இருகரம் குவிந்து
தொழ இரு விழிகள் நீர்
சொரிய
உடல் ரோமம் கூச்செரிய
ஊமை போல் சொல் குழற
உள்ளமது சிலிர்த்து
போக வைத்த அடி குழைந்து நிற்க
இரவி முன் இருளைப் போல எண்வினைகள் கெட்டு உதிர்ந்தன 640
சமவ சரண ஞானக்காட்சி
ஞாயிறு போல் பிரகாசிக்க
அறவாழி
அமர்ந்திருக்கும் தருமசக்கரம் பீடம் ஏறி
நல்லறிவு நல்லொழுக்கம்
ஆன்ம குண ஜினேந்திரர்
முன்
எட்டங்கம்
படிய தொழுது எழுந்து
நின்று துதி பாடினர் 641
காமம் வெகுளி
மயக்கம் வென்று வாலறிவு
மாதை மணந்தும்
தேவர்கள்
பூமழை பொழிய செங்கமலம்
மேல் நின்றும்
ஸ்ரீ விஹார செயல் செய்தும்
சிம்மசனம் மேல் அமர்ந்தும்
மூவுலகும் பணிந்து தொழும் முதல்வா உம் குணங்கள்
வேண்டும் 642
திவ்யத்தொனியாம் உம் திருமொழி
ஈரொம்பது மொழியில் ஒளிக்க
உலகத்து
உயிர்கள் எல்லாம் உள்ளத்தால்
அறிந்து உருக
மனம் வாக்கு
காயம் மூன்றில் மாசின்றி
பொருந்தி நிற்க
விருப்பு
வெறுப்பற்ற உயிர்க்கு மூவுலகிற்கும்
கடவுளானாய் 643
விலங்கரசன் ஆற்றல்
உடனும் வியர்வை மலம் மூத்திரமின்றி
வெண்குருதி
உடலில் ஓட ஆயிரத்தெட்டு
மருவுகள் தாங்கி
செப்புதற்கரிய நறுமணம்
செம்மானே உம் உடல் எழுப்ப
செவிக்கினிய
மொழியில் தரும் திருவறம்
உமது தானே 644
நிழல் பசி இமைத்தலின்றி உம் முகம் நால்திசையோர்
நோக்க
நின் முடி நகம் வளர்ச்சி இன்றி நல் கலைகட்கு
அரசனாகி
பகை பசி பஞ்சம் நீங்க பார்வையால் கொடும்
தீமை விலக
எவ்வுயிர்க்கும் தலைவனான
திவ்ய ஒளி திருமூர்த்தி
நீயே 645
பல மொழி பேசும் மக்கள்
உம் திருமொழி புரிந்து
கொள்வர்
பகை கொண்ட உயிர்கள்
கூட உம் பார்வையில்
பகை நீங்கும்
இரு மூன்று
பருவ சேர்க்கையில் இப்பூமி
செழித்து விளங்கும்
இரு நான்கு மங்கலங்கட்கு
ஏற்றமிகு ஜினேந்திரன் நீயே 646
ஆன்மனில் ஆண்டாண்டு காலம் கட்டிய
காதி வினைகள்
ஆதவன் கண்ட பனியாய்
ஆன்மாவை விட்டு அகலும்
மாமலை உச்சி தவழும் முகில்
தரும் முழக்கத்தோடு
ஸ்ரீ விஹாரமாகி சமவசரணம்
வந்து அமர்ந்த தேவா 647
செங்கமல மலரின்
மீது பதிந்த உன் செவ்வடி தன்னை
தீவினை
அகல மனதால் உன் இயல்பினை அறிந்து
தொழ
முக்தியாம் திருமகளின் முழுச்செல்வம் பெற்ற பின்பு
எக்கொடையும்
பெரிதில்லை இவ்புவியில் எங்களுக்கு 648
அருள் நீங்கி
சினமுற்று உன் இயல்பறியா
மனம் எல்லாம்
துன்பத்தில்
தோய்ந்து மூழ்கி துடித்திடும்
தவிப்பறிந்து
சினமுற்று எழுதல்
இன்றி சிந்தையில் அருள் கொள்ளும்
அவரவர்
தன்மையென்று விருப்பு வெறுப்பற்ற
தேவா 649
முதலும் முடிவும்
இல்லா முழு குணம் பெற்ற தேவா
சம்சார
துக்கம் நீக்கி ஐம்புலன் நுகற்சி போக்கி
ஆன்மாவின்
இயல்பு குண மதி சுருத அவதி அற்று
அனைத்தும்
தன் அகத்தே கொண்ட அழகிய அமலன் நீயே 650
மூன்று ஜோதிகள்
உடைய தேவா மற்ற ஜோதிகளற்ற இறைவா
சுருக்கம்
பெருக்கமற்ற தூயவா தோற்றம்
மறைவற்ற மாதவா
மாறிடும் நீதிகள்
நீக்கிய நிர்மலா நல்தீவினை
வென்றிட்ட நாயகா
எங்களுக்கு இறைவனாய் அறம் தந்த சொரூபன்
நீயே 651
நறுமண மலர்களின்
பெருமழை பொழிந்திட
வெண்நிற
சாமரைகள் தண் தென்றல்
வீசிட
தேவ துந்தூபிகள் தேன் இசை முழங்கிட
முக்குடை
ஒளியுடன் சிம்மாசன செல்வன்
முன் 652
துதிகளைப் பாடினர்
தோய்ந்தனர் பக்தியில்
கிரீடங்கள்
போக்கினர் கருங்குழல் நீக்கினர்
மேகலை மேலணி அரை
ஞான் ஆடைகள் துறந்தனர்
அத்தனை
பொருள்களும் விளக்கின்றி ஒளிர்ந்தன 653
துவர்பசை நான்கை
நீக்கி ஈரைந்து மாசு போக்கி
அகப்புற
பற்றுதனை அருகநெறி நீரால்
கழுவி
நல்லொழுக்க நதியில்
குளித்து ஆகாயத்தை ஆடையாக்கி
மாதவ சந்தனத்தை மேனியில்
பூசி நின்றார் 654
வினைகளின் அரசரை எல்லாம்
வென்றிட்ட ஜினவரனின்
இளவரசராய்
இருவரும் சுருதகேவலி பட்டம்
சூடி
இறைவனை தொழுதெழுந்து
உயிர் பொருள் தன்மைகளையும்
சம்சார
சுழற்சிகளையும் அருளிட வேண்டி
நின்றார் 655
பேரிகை முழங்கும்
இசை இடரின்றி தொடர்வது
போல்
திவ்யத்தொனி
எழுந்து கேவலக் திருமகளின்
தூது செல்லும்
தாதியாக சரஸ்வதி மனதில்
அமர்ந்தாள்
மேரு மந்திரர் இருவரும்
கணதரர் பதவி பெற்றார் 656
முன் ஒரு பிறப்பில் மதுரையாகப் பிறந்தவள், அடுத்த பிறப்பில் ராமதத்தை ராணியாய் பிறந்து, செய்த புண்ணியத்தால் பாசுகரப்பிரப தேவனாகி, பின் சீதரையாக மண்ணுலகில் பிறந்து, செய்தவத்தால் காபிஷ்ட கல்ப தேவனாகி, மறுபடியும், இரத்தினமாலை அரசியாய் பிறந்து, நல்லறத்தால், அச்சுத கல்ப தேவனாகி, மறுபடியும் வீதபயன் (பலதேவன்) என்னும் அரசனாய் பிறந்து, மும்மணி ஏற்றதாலே, லாந்தவ கல்ப ஆதித்யாப தேவனாகி, பின் மேரு என்னும் அரசகுமாரனாய் பிறந்து, பகவான் விமலநாதரின் கணதரராய் பதவி அடைந்து, இனி பிறப்பிலா திரிலேக பூஜ்யனான நிலையான பதவி அடைந்தார்.
முன் ஒரு பிறப்பில், மதுரையின் மகள் வாருணியாய் பிறந்து, மறுபிறப்பில், ராமதத்தை மகன் பூர்ணச்சந்திரனாய் பிறந்து , புண்ணியத்தால் வைடூரியப்பிரப தேவனாகி,, சீதரை வயிற்றில் யசோதரையாய் பிறந்து, பின் தேவனாகி, இரத்தினமாலை மகன் இரத்தினாயுதனாய் பிறந்து, தவநெறி கொண்டு, அச்சுத கல்ப தேவனாகி, மண்ணுலகில் விபீடணனாய் ( வாசுதேவன் ) பிறந்து, மோகனீய கர்மத்தாலே இரண்டாம் நரகம் சென்று, அருகனறம் ஏற்றதாலே, சீதமா அரசனாகி, நல்லற தருமத்தாலே பிரம்ம கல்ப தேவனாகி, இப்பூவுலகில் மறுபடியும் ஜயந்தன் என்னும் அரசகுமாரனாகி, பின் பவணலோக தரணேந்திரனாகி, பின் மந்திரன் என்னும் அரசகுமாரனாய் பிறந்து, பகவான் விமலநாதரின், கணதரராய் பதவி அடைந்து, பின், இனி பிறப்பிலா திரிலோக்கிய பூஜ்யனான நிலையான பதவி அடைந்தார்.
ஆக்குவது ஏதெனில்
அறத்தை ஆக்குக
போக்குவது ஏதெனில்
வெகுளி போக்குக
நோக்குவது ஏதெனில்
ஞானம் நோக்குக
காக்குவது ஏதெனில்
விரதம் காக்கவே.
(மேரு : 1406.)
சமவசரணம் சருக்கம்
நிறைவு பெற்றது.
பின் குறிப்பு :
ராமதத்தை கணவன் சிம்மசேனன், தீவினையால்
அசணிகோடம் யானையாய் பிறந்து,
அருகன் அறம் கேட்டதாலே
ஸ்ரீ தர தேவனாய் பிறந்து,
பின் மண்ணுலகில் கிரணவேகனாய்
பிறந்து நல்வினையால், மறுபடி
தேவனாகி, காலம் முடிந்து,
புவியில் வஜ்ராயுதன் மன்னனாய்
பிறந்து, நல்லறத்தால் தேவனாகி,
சஞ்சயந்தனாய் பிறந்து, மாதவத்தால்
சித்தப் பதவி அடைந்தார்.
வணிகன்
பத்திரமித்திரன், மறுபிற்ப்பில் சிம்மச்சந்திரன் என்ற அரசகுமாரனாய் பிறந்து,
பிரீத்திங்கர தேவனாகி, பின் சக்கராயுதன் என்னும்
அரசனாகி, நல்லறத்தால் தேவனானான்.
சிம்மசேனன் மந்திரி
சத்தியகோடன் ( ஸ்ரீ பூதி ), மிகு பொருளாசையினால் கருவூலத்தில்,
அகந்தனன் என்னும் பாம்பாய்
பிறந்து, வைரபாவத்தால் கோழிப்பாம்பாய் பிறந்து,
மறுபடியும், வெஞ்சினம் தீராததால்,
மலைப்பாம்பாய் பிறப்பெடுத்து, மறுபடியும்,
மனிதகதியில் வேடனாய் பிறந்து,
கொலை வதையால் ஏழாம் நரகம் அடைந்து,
பின் செய்வினை கர்மத்தால், பாம்பாகி,
மூன்றாம் நரகம் சென்று,
மறுபடியும் மிருகசிங்கன் என்னும்
வேடனாகி, வித்யாதரன் வித்துதத்தன்
பிற்பெடுத்து, பின் நரகம் சென்றான்.
No comments:
Post a Comment